Posts Tagged ‘உலகத் தமிழ் மாநாடு’

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது- ஆரம்பம் முதல் முடிவு வரை அரசியல் தான்! (3)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்ததுஆரம்பம் முதல் முடிவு வரை அரசியல் தான்! (3)

திருமா வளவன் தமிழ் தேசிய பேச்சு, எதிர்ப்பு: இம்மாநாட்டை கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள் திருமாவளவனுக்கு மட்டும் கொடுக்கும் முக்கிய்த்துவம் அல்லது விளம்பரம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அந்த செய்திகள் அலசப்படுகின்றன. இவ்விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருந்தார்[1]. வழக்கம் போல திருமா வளவன், தமிழ் தேசியம், சனாதனம் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்[2]. அதாவது ஏகபட்ட அரசியல்வாதிகள் அழைக்கப் பட்டுள்ளதில், இவரும் ஒருவர். “மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான்[3]. அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது,” என்று கூறினார்[4].

Thiruma honoured for his “wonderful” speech…………

இஸ்லாம்கிறிஸ்தவம் ஒப்பிட்டு இந்து மதத்தை விமர்சித்துப் பேசியது: தத்துவம்-சமத்துவம் என்று விளக்கம் கொடுத்த போது, இஸ்லாத்தில், கிறிஸ்துவத்தில் சமத்துவம்-சகோதரத்துவம் இருக்கிறது ஆனால், இந்து மதத்தில், சனாதனத்தில், அந்த தத்துவத்தின் படி சமத்துவம் இல்லை, சகோதரத்துவம் இல்லை என்றெல்லாம் பேசினார். இஸ்லாம்-கிறிஸ்தவம் என்றால் மதம், மசூதி-சர்ச் என்றால் இன்ஸ்டிடுஷன். ஆனால், இந்துமதத்தில் அப்படியில்லை. அப்பொழுது மேடையில் அவர் தமிழ் தேசியம் குறித்து பேசினார்[5]. அதில் தமிழ் தேசியம் என்ற பெயரில் மதவாதம், இனவாதம் கூடாது என்று கூறியிருந்தார்[6]. அப்படி அவர் பேசி முடித்து மேடையை விட்டு இறங்கிய சில நொடிகளில் ‘டேய் நிப்பாட்ரா’ என்று திருமாவளவனுக்கு எதிராக சிலர் குரல் எழுப்பினர்[7]. ‘நீ பேசிய தலைப்பே சரியில்லை’ என்று அவரை சத்தம் போட்டு பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது[8]. அதன் பின்னர் விழா ஏற்பாடு செய்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்த முற்பட்டார்கள்[9]. பின்பு திருமாவளவன் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியே சென்றனர்[10]. சிறிது சலசலப்புகளுடன் மாநாட்டின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் திருமாவளவன்.

22-07-2023 சனிக்கிழமை: நாளை நடைபெறுகின்ற மாநாட்டின் இரண்டாம் நாள் (22.7.2023) நிகழ்வில் மலேசியப் பிரதமர் தொடங்கி வைத்திட உள்ள அமர்வில் சிறப்பு அழைப்பாளராகவும் வீரமணி பங்கேற்றார், என்று தமிழக ஊடகங்கள் தவறாகக் குறிப்பிடுகின்றன.. அவருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச்செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், பெரியார் பன்னாட்டமைப்புப் பொறுப்பாளர்களும்   மாநாட்டில் கலந்துகொள்கின்றனர் என்று “விடுதலை” கூறுகிறது. அதனால், திக-போன்ற கட்சியினர் அதிக அளவில் கலந்து கொண்டனர் என்று தெரிகிறது. ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. முன்பே குறிப்பிட்டபடி, 500 கட்டுரைகள் வந்திருந்தாலும், சுமார் 20-25 கட்டுரைகள் தான் ஆராய்ச்சி நெறிமுறைகளுடன் இருந்தன. மற்றவை ஏதோ மாநாட்டிற்கு என்று அவசர-அவசரமாக தயார் செய்து கொண்டு வந்தது போன்று தான் இருந்தது.

Malaysian PM officially inaugurated the Conference and spoke on the occasion….

PM appreciated that different politicians had come together there at the conference….

23-07-2023 ஞாயிற்றுக் கிழமை: மலேசிய பிரதமர் மாநாட்டணதிகாரப் பூர்வமாகத் துவக்கி வைத்தார். அதாவது, முடிவுநாளில், துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நிதியுதவியை அறிவித்து, தமிழ் இலக்கியங்களை மலேசிய மொழியில் மொழிபெயெற்க வேண்டும் என்றார். மாநாட்டிற்கு 10 லட்சம் ரிங்கெட்டை மானியமாக அறிவித்தார். 2000 பேர் கலந்து கொண்டனர்[11].  மொத்தம் 550 கட்டுரைகள் வாசிக்கப் பட்டுள்ளதாகவும்[12], அவை ஓம்ஸ் அறக்கட்டளை, மலேசிய பண்பாட்டுக் கழகம் மற்ற சமூக அமைப்புகள் ஆய்ந்து அவற்றை வெளியிடுவதைப் பற்றி ஆலோசிக்கும் என்று சொல்லப் படுகிறது[13]. அரசியல், மொழிப்பற்று [வெறி], இனம், போன்ற காரணிகளால், கட்டுரைகள் வேறுவிதமான விளக்கங்களால் விலகிச் சென்றிருப்பதை கவனிக்கலாம். அரசியல்வாதிகளின் பேச்சு, ஆராய்ச்சி ரீதியில் இல்லாமல், மக்களைப் பிரிக்கும் போகில் தான் உள்ளது. அவை அச்சில் ஏறினால், அவர்களது உண்மைத் தன்மையினையும் தெரிந்து கொள்ளலாம். 21ம் நூற்றாண்டிலும் இத்தகைய கட்டுக்கதைகளான மொழி, இனம், ஆரியன், திராவிடன் என்றெல்லாம் பேசிக் கொண்டு காலம் தள்ளும் ஆட்கள் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான சிவகுமார் உரை: மலேசிய அரசு மற்றும் ஏற்பாட்டுக் குழு சார்பாக, 11ஆவது உலகத் ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றியை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ சிவகுமார் தெரிவித்தார்[14]. “இந்த வருடம் மலேசிய நாட்டில் 11 ஆம் உலக ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதை எண்ணி நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இதற்கு முன்பு நடந்த மாநாடுகளைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கும். அதே வேளையில், ஒரு புது சகாப்தத்தையும் தொடக்கி உள்ளது. சுமார் 3,000 தமிழறிஞர்கள் பங்கேற்று, 501 ஆராய்ச்சியின் படைப்புகள் இந்த அரங்கில் சமர்பிக்கப்பட்டன. இதை தவிர்த்து, இலட்சக்கணக்கான ஒன்லைன் பார்வையாளர்கள் இந்த மாநாட்டை கண்டு களித்தனர். இதுவே இந்த மாநாட்டின் மிக பெரிய வெற்றியாகும். இது மாநாட்டின் கடைசி நாள் என்றாலும், மாநாட்டு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சில படிகள் செய்யப்பட வேண்டும். இம்மாநாட்டின் மையக் கருப்பொருளானஇணைய யுகத்தில் தமிழ்என்ற தலைப்பில், இலக்கியவாதிகள், மொழியியலாளர்கள் மற்றும் பலர் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் நாகரிகம் குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளை ஆய்வுக் கட்டுரைகளில் சமர்ப்பித்தனர். ஆய்வாளர்கள் அறிவுபூர்வமாக சமர்ப்பித்த கட்டுரைகளை அனைத்தும் உங்கள் செவிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்,” என்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்[15].

இனி வரும் மாநாடுகளில் அரசியல் இல்லாமல் இருப்பதாக: மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கஷ்டப்பட்டு குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் திருப்திகரமாக செய்துள்ளனர். அப்படியே தமிழ், தமிழாராய்ச்சி, ஆராய்ச்சி-நெறிமுறை என்று சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அரசியல் கலப்பினால், மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், அவர்களுக்குள் இருக்கும் அரசியல்வாதிகள், வரவேற்கப் பட்ட அரசியல்வாதிகள், என்று எல்லோருமே ஒவ்வொரு நிலையில் பிரச்சினையைக் கிளப்பியுள்ளனர். பிரதமர் பேசும் பொழுது, எல்லா மாறுபட்ட கட்சியினர் ஒன்றாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, அரசியல்வாதிகளாள் சலசலப்புகள், பிரச்சினைகள், கைகலப்புகள் முதலியவை உண்டாகின. இருப்பினும் அனைவற்றையும் அடக்கிக் கொண்டு மாநாடு நடந்து முடிந்துள்ளது. இனிமேல், அடுத்த மாநாடுகளிலிருந்து அரசியல், அரசியல்வாதிகள், கட்சிகள் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால், எல்லாவற்றிற்கும் நல்லது, உன்னதமானது.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] தினமலர், திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, பதிவு செய்த நாள்: ஜூலை 22,2023 01:45

[2] https://m.dinamalar.com/detail.php?id=3382814

[3] நியூஸ்.7.தமிழ், தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்! – உலக மலேசிய தமிழ் மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5] திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு: மலேசிய உலக தமிழ் மாநாட்டில் சலசலப்பு!, Manikanda Prabu, First Published Jul 23, 2023, 3:29 PM IST;  Last Updated Jul 23, 2023, 3:29 PM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/uproar-at-malaysian-world-tamil-conference-counter-stand-to-thirumavalavan-speech-ry8uel

[7] பாலிமர்.செய்தி, மலேசியாவில் திருமா பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்….! தமிழ் தேசிய சர்ச்சை……!, ஜூலை 23, 2023 08:53:44 காலை.

[8] https://www.polimernews.com/dnews/205989

[9] தமிழ்.ஸ்பார்க்.காம், டேய் நிப்பாட்ராநீ பேசுறதே சரியில்ல., திருமாவளவனுக்கு எதிராக மலேசியாவில் வெடித்த குரல்.!!, Sun, 23 Jul 2023 11:14:37 IST Author by Priya

[10] https://www.tamilspark.com/tamilnadu/voice-rise-against-to-thirumavalavan-in-malaysia

[11] பெர்னாமா.காம், 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை பிரதமர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார், 23-07-2023, 12.10 மாலை.

https://www.bernama.com/tam/news.php?id=2208933

[12] பெர்னாமா.காம், 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழா, 23-07-2023, 07:19 PM

[13]  https://www.bernama.com/tam/news.php?id=2209142

[14] தினத்தந்தி.மலேசியா, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தது புதிய சகாப்தமாகும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம் , Updated: July 23, 2023; July 23, 2023; https://thinathanthi.my/?p=5697

[15] https://thinathanthi.my/?p=5697

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-public-lecture-political.jpg

உள்ளூர் அறிஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்: முதல் நாளில், மலேசியாவில் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் பாப்பாவின் காவலர் கவிஞர் முரசு நெடுமாறன் உரையாற்றினார். குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே கவிதை மூலம் எப்படி தமிழை வளர்த்திருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்[1]. கவிஞர் முரசு நெடுமாறன், சிலாங்கூர் மாநில முன்னாள் க. முருகன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப் பட்டனர். மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், மாநாட்டிற்கான செயலாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொது மக்களும் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்[2]. உள்ளூர் ஊடகங்கள் இவற்றைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிறகு பேசியவர்கள் தமிழ் இலக்கியம், வைணவம், சைவம் பற்றியெல்லாம் பேசினர். ஆனால், அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்த போது, மாநாட்டின் போக்கு திசைத் திரும்பியது எனலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-thiruma-speaking-1.jpg

பிரிவினைவாதம் பேசப் பட்டது: மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள திருமாவளவன் பேசியதாவது[3]: மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது என்று கூறினார்[4]. இம் மாநாட்டின் பொது அரங்கில் மலேசிய நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல்நாள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-audience.jpg

கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை: ஆய்வு அமர்வுகள், ஆய்வு கட்டுரைகள், விவரங்கள், வாசிப்புகள் பற்றிய செய்திகளைக் காணவில்லை. கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றி மூச்சுக் கூட விட காணோம். மாநாட்டிற்குச் சென்றவர்களும், சமூக ஊடகங்களில் “நான் மாநாட்டிற்குச் சென்றேன்,” என்று புகைப்படங்கள் போட்டுக் கொண்டாலும், கட்டுரைப் படித்தேன், கேள்விகள் கேட்டார்கள், நான் பதில் சொன்னேன் என்றவாறு இல்லாமல், ஏதோ சுற்றுலா சென்றேன் பாணியில் தான் இருந்தது. ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய பட்டியல், தலைப்புகள், விவரங்களைக் காணோம் கலந்து கொண்டவர்களும் அவ்விவரங்களைப் பகிர்வதாகத் தெரியவில்லை. பெர்ணாம் என்ற இணைதளம் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலரின் வாசிப்புகள் தான் பதிவாகியுள்ளன (சைவம், வைணவம், சித்த மருத்துவம், பிள்ளைத் தமிழ், தோல்சீலை முதலியன).  சில கட்டுரைகள் நன்றாக இருந்தன. மற்றபடி, பெரும்பாலான மற்ற ஆய்வுக்கட்டுரைகள் அரைத்த மாவை அரைக்கும் என்பார்களே அந்த பாணியில் தான் இருந்தன.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia.more-politicians.2.jpg

அரசியல்வாதிகளை அழைத்து அரசியல் இல்லாமல் பேசுங்கள் என்று சொல்லப் பட்டது:. ஆனால், அவர்கள் எல்லோருமே அரசியல் தான் பேசினர், வீடியோவும் உள்ளது. அரசியல் மாநாடாக மாறிய நிலையில், தமிழ் தேசியம் போர்வையில், பிரிவினைவாதம் தான் பேசப்பட்டது. வேல்முருகன், தாமஸ், திருமாவளவன், ஶ்ரீகாந்த் [பீஜேபி], சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், இலானி, நிறைமதி [சீனர்], கடைசியாக கே.வீரமணி, என்று அதிகமாக, அரசியல் தான் நிறைய பேசப்பட்டது. தமிழ் தேசியம், பார்ப்பனியம், வர்ணம், தமிழ்-சமஸ்கிருதம், சமஸ்கிருத ஆதிக்கம், ஆரியன்–திராவிடன் பண்பாட்டு படையெடுப்பு, என்றெல்லாம் பேசப் பட்டது. வெண்பா, ஆசிரியபா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா முதலியவற்றிற்கு திரிபு விளக்கமும் கொடுக்கப் பட்டது. இதனால், தமிழுக்கு, தமிழ் ஆராய்ச்சிக்கு, தமிழ் மேன்பாட்டிற்கு எந்த பிரயோஜனும் இல்லை. பெரும்பாலான நேரம் இவ்வாறு அரசியல், பேசியதையே பேசியது, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் என்று தான் சென்றது. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர், அவரவர் வேலைகளுக்கு சென்றனர். சாப்பிடும் நேரதிற்கு வந்து விடுவர்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-velmurugan.jpg

மொழி, தேசம், தேசியம், நாடு, ஒன்றியம் என்று குழப்பவாதங்களை வைக்கும் குழப்பவாதிகள்: வேல்முருகன் தமிழ் தேசியம் என்று, பிரிவினைவாதம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முன்பு, கம்யூனிஸவாதிகள், பிறகு தமிழீழ ஆதரவாளர்கள், அதற்கும் பிறகு தமிழக பிரிவினைவாதிகள், மொழியை வைத்து, மொழிவாறான தேசிய இனங்கள் என்று பேசி குழப்பி வந்தார்கள். அதாவது ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தேசம் உள்ளது, அந்தமொழிவாரி தேசம் போற்றப் பட வேண்டும். அந்த தேசியம், இந்திய தேசியம் வேறு. எப்படி பலமொழி பேசும் தேசியங்கள், இந்திய நாட்டில் ஒன்றியத்தில் சேர்ந்திருக்கின்றனவோ, அதே போல சுயநிர்ணய உரிமையோடு, ஒவ்வொரு தேசமும் பிரிய உரிமை உண்டு என்றெல்லாம் குழப்பவாதங்களில் ஈடுபட்டனர். நாடு, தேசம், தேயம், இடம் போன்ற சொற்கள், ஒரு இடத்தைத் தான் குறிப்பிட்டன. அதை அறிந்தும் இவர்கள் திரிபுவாதம் செய்து வருகிறார்கள். அவையெல்லாம் கருணாநிதி போன்றோரே அடக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இப்பொழுது, மறுபடியும் திமுக ஒன்றியம், திராவிட மாடல், திராவிட ஸ்டாக் என்றெல்லாம் பேசி வருவதால், இந்த குழப்பவாதிகளுக்கு தைரியம் வந்து, அவ்வாறே முன்பு போல, பிரிவினைவாதம் பேச ஆரம்பித்து விட்டனர். ஆக இந்து வேல்முருகன் போன்றோருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth.jpg

வலதுசாரிகளின் பலவீனம், ஒற்றுமையின்மை மற்றும் பழமைவாதம்: ஶ்ரீகாந்த் என்ற பிஜேபி இந்தியதேசத்துடன் பேசினாலும், மற்றவர்கள் கொஞ்சம் பேசினாலும், எடுபடவில்லை. இவரும் கி.ஆ.பே.வின் பெயரன் என்ற முறையில் இருக்கிறார். நக்கீரன் கோபாலுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடதுசாரிகள், திக-திமுகவினர் ஒன்றாக வந்திருந்த நிலையில், வலதுசாரிக்கள் இங்கு வாய்கிழிய பேசினாலும், அங்கு யாரையும் காணோம். “இந்திய தேசியமும், தமிழ் தேசியமும்” என்று பேசி, அவர்களின் முகத்திரையைக் கிழிக்க ஆளில்லை; “தமிழ் தேசியமும், திராவிட தேசியமும்,” என்று கட்டுரை வாசிக்கவும் திராணி இல்லை. ஆனால், இங்கு, திராவிட மாயை, பெரியாரின் ம்ச்றுபக்கம் என்றெல்லாம் பேசுவார்கள், எழுதுவார்கள், புத்தகங்களும் போடுவார்கள். ”முகநூலில் கம்பு சுற்றுவதோடு சரி, இம்மாதிரியான, கருத்துருவாக்கும், தாக்கம் கொண்ட அல்லது ஏற்படுத்தும் கருத்தரங்களில் கலந்து கொள்வதில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth-next-to-gopal.jpg

வலது சாரிகளின் ரகசிய கருத்தரங்கங்கள்: மத்திய அரசு ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் நடத்தப் படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள் என்று இவர்களே கலந்து கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய விழா என்று கொண்டாட ஆரம்பித்தாலும், ஏதோ ரகசியமாக நடத்துவது போல நடத்துகிறார்கள்[5]. எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. சுமார் 50-100 என்றிருந்தால், அவர்களுக்குள் அகிர்ந்து கொண்டு, கூடி விலம்பரப் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற படி, பொது ஊடகங்களில் அதைப் பற்றி எந்த தகவலும் வருவதில்லை. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும், சித்தாந்த ரீதியில் ஆட்களுக்கு பயிறிசி அளிப்பதில்லை, தயார் செய்வதும் இல்லை. அனுபவம் கொண்ட, ஆராய்ச்சியாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தெரிந்தும் ஓரங்கட்டுகிறார்கள் இதனால் தான், தங்களது பலத்தையுமிழந்து, எதிர்சித்தாந்திகளின் பலத்தை மறைமுகமாக வளர்க்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

24-07-2023


இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-senator-saraswati.jpg

[1] வணக்கம் மலேசியா, பேராளர்கள்பார்வையாளர்கள்திரளாககலந்துகொண்ட 11-வதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு, 21-07-2023.

[2]https://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

[3] நியூஸ்7தமிழ், தேசியஇனஅடையாளத்தைவலுப்படுத்தவேண்டும்! – உலகமலேசியதமிழ்மாநாட்டில்தொல்.திருமாவளவன்பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5]  பாண்டி-லிட்-பெஸ்ட் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கே தெரியாத அளவில் கூட நடக்கிறது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-vips.jpg



11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

இரும்பு காலம் பற்றிய கருத்து: ஆய்வரங்கத்தின் முதல் அமர்வில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜன் பேசியதாவது[1]: “இந்தியா முழுக்க பிராகிருத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன், தமிழகத்தில் தமிழி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான், தமிழகத்தில் பிராகிருத கல்வெட்டுகள் இல்லை. தமிழர்களின் வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது. காரணம், சங்க இலக்கியத்தில் அனைத்து கூறுகளும் சொல்லப்படவில்லை. அகழாய்வில் பயன்படா பொருட்களே அதிகளவில் கிடைக்கின்றன. கல்வெட்டு, காசுகளும், பொதுமக்களின் வாழ்வியலை முழுமையாக சொல்லவில்லை. என்றாலும், உலகின் முன்னேறிய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை, இந்த ஆய்வுகளால் அறிய முடிகிறது. தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகம் சிறந்திருந்தது. இங்கு, எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்திருந்தது. நெல்லை நாற்றுவிட்டு நடும் பழக்கம், 2,700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, உலகத்திற்கே இரும்பை அறிமுகம் செய்தவன் தமிழனாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கன்குடியில் கிடைத்த இரும்பு வாள் நிரூபித்துள்ளது. அதாவது, சிந்துவெளியில் செம்பை பயன்படுத்திய காலத்தில், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான தரவுகளை சேகரிக்கும் வகையில், சிந்துவெளி மற்றும் தமிழ் நிலத்தில் கிடைத்துள்ள குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” இவ்வாறு அவர் பேசினார்[2].

அரைத்த மாவை அரைக்கும் பாணியில் ஆய்வுக்கட்டுரைகள்: பட்டியலிடப்பட்ட தாள்கள் தாள்களின் தரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான தாள்கள் மறுவடிவமைக்கும் வகையைச் சேர்ந்தவை, அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் பாணியில் கூறுகின்றன.

  • தொல்காப்பியர் நோக்கில் வள்ளுவம்
  • திருக்குறள், திருவள்ளுவர் முதலியன… – தற்போதைய வாழ்க்கை முறைக்கான நடைமுறை வழிகாட்டி, இது போன்ற திருக்குறள் பற்றிய பல ஆவணங்கள்.
  • தனிநாயகம் பிள்ளை……
  • தமிழை விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வது எப்படி
  • திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி (அவர் மீது பல ஆவணங்கள்) முதலியன,
  • சங்க இலக்கியம்……..பற்றி…
  • சிலப்பதிகாரம் பற்றி – பல தாள்கள்
  • சங்க இலக்கியம்
  • சித்த, சித்த மருத்துவம்

இதில் புதியதாக எந்த விசயத்தையும்சொல்ல காணோம்.

எப்படியாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற வெறியில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன: ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, தலைப்பை ஆராய்ச்சி செய்தல், திட்டமிடல் மற்றும் எழுதுதல் என்பது இல்லை. வலைத்தளங்கள், கல்வி கட்டுரைகள், புத்தகங்கள், கலைக்களஞ்சியம், நேர்காணல்கள், இணையத்தில் தனிப்பட்ட கட்டுரைகள் (வலைப்பதிவுகள்) என்பதெல்லாம் இல்லாமல், “கட்-அன்ட்-பேஸ்ட்” முறையிலேயே செல்கின்றனர். கட்டுரையின் வடிவத்தில் தர்க்கரீதியான விமர்சன வாதங்களை முன்வைப்பதில்லை, தீர்மானமாக முடிவை வைத்துக் கொண்டு இந்த வேலை நடக்கிறது. பகுப்பாய்வு கட்டுரைகள், என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும் போக்கில் விசயங்களைச் சொவ்தில்லை. ஆராய்ச்சியின் பொருள் சர்ச்சைக்குரியதாக இருப்பதும் இல்லை, அந்த அளவுக்கு கஷ்டப்படுவதும் இல்லை, உழைப்புடன் முனைவதும் இல்லை. சொந்த கருத்துக்களைத் தெரிவித்து, ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரையாளர்கள் சிலரே. நேரடி மேற்கோள்கள், நீண்ட மேற்கோள்களைத் தவிர்க்காமல், அவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்றனர்.

எந்த ஆராய்ச்சிநெறிமுறையும் பின்பற்றப் படுவதில்லை: இப்பொழுதைய ஆராய்ச்சிநெறிமுறை, தரக்கட்டுப்பாடு, விதிகள், மென்பொருளால் சரிபார்க்கும்முறை முதலியவற்றை வைத்து சரிபார்த்தால், எத்தனை ஒழுங்கானவை என்று தீர்வாகும் என்பதும் நோக்கத் தக்கது. இருப்பினும், இவர்கள் தலைப்புகளை மாற்றி, சில வர்களை வெட்டி-ஒட்டி கட்டுரை என்று தயாரித்து, வாசிக்க வந்து விடுகின்றனர். கட்டுரைகளை தேர்வு செய்பவர்களும் எந்த தரத்தையும் சரிபார்ப்பதில்லை, தெரிந்தவர்களா, நண்பர்கள் பரிந்துரைத்தார்களா என்று பார்த்து தேர்வு செய்கிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்டபடி, பெயர்களை வைத்துக் கொண்டு கூட, சில கட்டுரைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

09-07-2023 அன்று அவசரஅவசரமாக முடிந்த மாநாடு: குதிரை முன் வண்டிகல்வி அமர்வுகள் நிறைவடையும் முன் விழா நடைபெற்றது: ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் முடிவடைவதற்கு முன்பு நிறைவு விழா நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதி, ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் தங்கள் நிலையைக் கேட்டறிந்து காத்துக் கொண்டிருந்தனர், காலை 9.00 மணி முதல் அறைகள் காலியாக இருந்ததாலும், யாரும் சரியாக பதிலளிக்காததாலும், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கரவர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பு / கல்வி அமர்வுகள் குறித்து முற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், முதலில் பாராட்டு விழா நடைபெறும் என்றும், பின்னர் காலை 10.30 மணி 11 மணிக்கு தாள் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர், நேரம் கடந்துவிட்டதால் ஆய்வுக்கட்டுரை வழங்குபவர்கள் கவலையடைந்தனர். பின்னர், பிரிவுத் தலைவர்கள் அறைகளுக்குச் சென்று அமர்வுகளைத் தொடங்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் வாசிப்பவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதித்தனர். மேலும், 10-15 நபர்கள் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் கட்டுரை வழங்குபவர்களாக இருந்தனர். வழக்கம் போல கட்டுரை வாசிப்பவர் ஆசிட்டுவிட்டு போய்விட்டார்கள்.. நிச்சயமாக, அமர்வுகளைத் தொடங்க அமைப்பாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தரப்பில் இரண்டு மணி நேரம் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டது. எப்படியோ, பேப்பர் வாசிப்பு அமர்வுகள் முடிந்து, மதிய உணவுக்குப் பிறகு பிரதிநிதிகள் நகரத் தொடங்கினர். இதனால், மூன்று நாள் சர்வதேச தமிழ் மாநாடு மேலே விவரிக்கப்பட்டபடி இரண்டரை நாட்களில் முடிக்கப்பட்டது.

மலேசியாவின் போட்டியாளர் கூற்று: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், கடந்த 7, 8, 9ம் தேதிகளில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது[3]. அடுத்த மாநாட்டை, 2025ல் சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்[4]. 1968ல் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை விட, 11வது மாநாடு செம்மஞ்சேரியில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு கல்வி நிகழ்வாக நடைபெற்றது, என்று பொன்னவைக்கொ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ஏதோ நடத்த வேண்டுமே என்று நடத்தியாகி விட்டது. இதே ஜூலையில் இரண்டாவது சந்திப்பு. பெரும் ஆரவாரத்துடனும், பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடனும் நடைபெறும் என்று சொல்லப் படுகிறது. இந்த மாநாட்டுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஐஏடிஆர் உறுப்பினர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அரசர் அருளாளரையும் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் என பேராசிரியர் டி.மாரிமுத்து தலைமையிலான மற்றொரு குழு அறிவித்துள்ளது. அவர் இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என்கிறார்.

© வேதபிரகாஷ்

11-07-2023

.


[1] தினமலர், சிந்துவெளி காலத்திலேயே இரும்பு பயன்பாட்டில் இருந்தது, பதிவு செய்த நாள்: ஜூலை 08,2023 01:54.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3369634

[3] தினமலர், நிறைவு பெற்றது உலக தமிழாராய்ச்சி மாநாடு, Added : ஜூலை 11, 2023  04:37

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3372482

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

அதிரடிகளுடன் ஆரம்பித்து அமைதியாக முடிந்த மாநாடு: சென்னையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி 3 நாட்கள் மாநாடு 7ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நடக்கிறது. இதில், 20 நாடுகளிலிருந்து 200 தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றதாக சொல்லப் படுகிறது. ஆனால், வந்துள்ளவர்கள் ஏற்கெனவே பரிச்சயம் ஆனவர்கள் தாம். ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல வந்துள்ளனர்.. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் 7ம்தேதி தொடங்கி 9ம் தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடக்கிறது. இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது[1]: “மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2]. ஆனால், முதலமைச்சர் வரவில்லை. பொதுவாக, இந்த மாநாடு நடப்பதே தெரியாமல் தான் இருக்கிறது.

ஆய்வுக்கட்டுரை வாசிப்பு பற்றிய விவரணம்: வழக்கம் போல[3], “உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாக உள்ளது. தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் .சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி.ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி, டாக்டர் பத்மினி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்,” என்று ஊடகங்களுக்குக் கொடுக்கப் பட்ட குறிப்பு கூறுகிறது[4].

பொன்.வைகோமாரிமுத்து பிரச்சினை: பொன்.வைகோ-மாரிமுத்து பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லை போலிருக்கிறது[5]. “2019ல் சிகாகோவில் நடந்த 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, நான் ஐஏடிஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், முந்தைய தலைவர் மாரிமுத்து தான் தலைவர் என்று கூறிக்கொண்டு மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார். அது செல்லாத ஒன்றாக இருக்கும்,” என்று பொன்னவைக்கோ மேலும் கூறினார்[6]. ஆக இங்கும் பதவி-போட்டி முதலியன இருக்கிறது போலும். இருப்பினும், இம்மாநாடு சிக்கல்களுடன், முராபாடுகளுடன் தான் நடக்கிறது. ஏற்கெனவே, ஜான் சாமுவேலுக்கும, ஜான் ஜேக்கப் என்பவருக்கும் பிர்ச்சினை இருக்கிறது[7]. சென்னையைச் சேர்ந்த, தாம்சன் ஜேக்கப் என்பவர், “பல குற்றங்களில் சிக்கியுள்ள ஜான் சாமுவேல் எப்படி இம்மாநாட்டை நடத்த முடியும்,” என்று சென்னை பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்[8]. இதைப் பற்றியெல்லாம் தனியாக ஏற்கெனவே விளக்கி பிளாக் போட்டுள்ளேன். இப்படி, எல்லா நிலைகளிலும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, கல்வி-நெறிமுறை, ஆராய்ச்சி முதலிய கோணங்களில் இவர்களால் எப்படிகவனத்தைச் செல்லுத்த முடியும். மேலும் கூட அரசியலையும் வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

07-07-2023 – அரசியல்வாதிகள் அரசியல் பேசியது: துவக்க விழாவில், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ”பைபிளில் வரும், சங்கீதக்காரர்களின் பண்புகள், தமிழர்களின் பண்புகளுடன் ஒத்து போகின்றன. எழுத்தாளர் டால்ஸ்டாய் தமிழ் மொழியை நேசித்தார். ”மதம் பரப்ப வந்த கிறிஸ்துவர்கள் கூட, தமிழை படித்து, வியந்து, தமிழுக்காக தொண்டு செய்துள்ளனர்,” என்றார். இவர் இப்படி ஏதோ கிருத்துவ பிரசங்கி போல பேசியது, பலருக்கு திகைப்பாக இருந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என். ‘சிலர்’ தமிழ் மொழியின் பெருமையை இழிவுபடுத்துகின்றனர் என்று ரவி முதலியோரையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் தமிழை போற்றுவது போல, தூற்றுகிறார்கள் என்றார். “தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தமிழ் மொழியை சொந்தம் கொண்டாடுவதும், தமிழ் மொழிக்கு ஆதரவாக உயிர் தியாகம் செய்தவர்களை இழிவு படுத்துவதும் மாற்றுக் கருத்துகளை கூறி, இது போன்ற மாநாடுகள் (உலகத் தமிழாராய்ச்சி) அவசியம். இதுபோன்ற சதிகாரர்களிடம் இருந்து தமிழ் மொழியைக் காக்க மாநாடு நடத்தப்படும்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அழைப்பிதழ்-1

மோடி எதிர்ப்பு- முதலியன இம்மாநாட்டிற்குத் தேவையா?: இரண்டு வருடங்களாக சண்டை, சச்சரவு, முரண்பட்ட அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரை சேகரிப்பு, பறிப்பு, முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்-என்ற பெயரில் மொழிப்பற்றையும் தாண்டிய நிலையில் செயல்பட்டு, பல ஆய்வுக் கட்டுரைகள் நிராகரிக்கப் பட்டன. ஆராய்ச்சி நெறிமுறை, தரம் எல்லாம் காற்றில் பறக்க விடப் பட்டன. முதலில் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு, முழுகட்டுரையும் பெறப் பட்டு, பிறகு, “நேரமில்லை” என்று நிராகரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த மூன்று நாட்களில் வாசிக்கப் பட்ட பெரும்பான்மையான கட்டுரைகளில் விசயமே இல்லாமல், அரைத்த மாவையே அரைத்துள்ளார்கள். இதற்குத் தான் இவ்வாளவு ஆர்பாட்டம் செய்துள்ளர்கள். போதாகுறைக்கு மைனாரிட்டி மந்திரி, கமிட்டி உறுப்பினர் என்றெல்லாம் அழைக்கப் பட்டு, அவர்கள் பிரதமந்திரி-கவர்னர் பற்றி பேசி, அரசியலாக்கினர். மாநாட்டின் தன்மையினையே கெடுத்தனர் எனலாம். இருப்பினும், மத அடிப்படைவாதியான ஜான் சாமுவேல் போன்றோர் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய அரசியலால் இவர்களுக்கு என்ன பயன் கிட்டப் போகிறது என்று தெரியவில்லை.

மாநாட்டில் ஆராய்ச்சி போக்கு: உண்மையிலேயே தமிழுக்காக பாடுபடுகிறார்கள் என்றால், சரித்திர ஆதாரமில்லாத பழங்கதைகளை பேசாமல், ஆரிய-திராவிட இனவாத கட்டுக் கதைகள், முதலியவற்றை விடுத்து, ஆதாரங்களுடன் கட்டுரைகள் எழுதப் படவேண்டும். பாரதம் / இந்தியாவிலிருந்து ஏதோ தனியாக தோன்றியது போன்ற பொய்மைவாதங்களை விடுத்து, சங்க இலக்கியங்கள் சொல்வதையாவது வைத்துக் கொண்டு ஆராய வேண்டும். பெரியாரிஸம், நாத்திகம், இந்துவிரோதம், இந்தியவிரோதம், பிரிவினைவாதம் என்ற போக்கிலேயே ஆராய்ச்சிகள் நடந்தால், “குமரிக் கண்டம் போன்று” குறுகிய வட்டத்தில் அடைக்கப் பட்டு, மறைந்து விடும். இறையனாரு, நக்கீரரும், அப்பாதுரையும் கூட காப்பாற்ற முடியாது. இப்பொழுது கூட ஆய்வுக்கட்டுரை தொகுப்பு கொடுக்காமல், “குமரிக் கண்டம்” என்ற சிறு புத்தகம் கொடுக்கப் பட்டுள்ளது.     

© வேதபிரகாஷ்

11-07-2023


[1] மாலைமலர், சென்னையில் ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது: 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, By மாலை மலர், 6 ஜூன் 2023 12:53 PM.

[2] https://www.maalaimalar.com/news/state/7th-july-11th-world-tamil-research-conference-begins-in-chennai-618795

[3] தினகரன், 7ம்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு: 200 தமிழறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்பு, July 5, 2023, 1:30 am

[4] https://www.dinakaran.com/3_days_from_7th_research_conference_participation_of_poets/

[5] Times of India, 55 years on, Tamil research conference returns to city, A Ragu Raman / TNN / Updated: Jul 7, 2023, 09:16 IST

[6] “During the 10th World Tamil Research Conference in Chicago in 2019, I was elected as the president of IATR. But, the previous president Marimuthu is still claiming that he is the president and trying to conduct the conference. It will be an invalid one,” Ponnavaikko added.

https://timesofindia.indiatimes.com/city/chennai/55-years-on-tamil-research-conference-returns-to-city/articleshow/101558597.cms?from=mdr

[7] தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: Added : ஜூன் 13, 2023  00:33; https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? தாம்சன் ஜேக்கப் ஜான் சாமுவேல் பற்றி எழுதிய புகார் கடிதம் மற்றும் சதி என்று பின்னவரின் அறிக்கை (5)

ஜூன் 13, 2023

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? தாம்சன் ஜேக்கப் ஜான் சாமுவேல் பற்றி எழுதிய புகார் கடிதம் மற்றும் சதி என்று பின்னவரின் அறிக்கை (5)

தாம்சன் ஜேக்கப் என்பவர், இந்த மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், அவதுாறு கருத்துகளை பரப்புகிறார்: உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி நடப்பதாக, மாநாட்டின் பொறுப்பாளர் ஜான் சாமுவேல் கூறி உள்ளார்[1]. இதுகுறித்து, அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை[2]: “சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், அடுத்த மாதம், 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில், 25 நாடுகளைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை பொறுப்பேற்று நடத்தும் நான், அரை நுாற்றாண்டாக தமிழ் பணி புரிகிறேன். ஆசியவியல் நிறுவனம், 42 ஆண்டுகளாக தமிழாய்வு பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், தாம்சன் ஜேக்கப் என்பவர், இந்த மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், அவதுாறு கருத்துகளை பரப்புகிறார்[3]. இதை முறியடிக்க வேண்டும்,” இவ்வாறு, ஜான் சாமுவேல் கூறியுள்ளார்[4].

ஜான் சாமுவேல் யார், தாம்சன் ஜேக்கப் யார்?: ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எல்லாம் எப்பொழுதுமே சர்ச்சைகளில் ஊறிவைகளாகத் தான் இருக்கின்றன. இப்பொழுது மாநாட்டை எங்கே நடத்துவது பிரச்சினை, போட்டி, முதலியவை சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் என்றெல்லாம் சென்ற பிறகு, செம்மஞ்சேரிக்கு வந்து சேர்ந்துள்ளது. என்ற ஆசியவியல் நிறுவனத்தின் மீது எழுந்துள்ள சர்ச்சைகளால், 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு சிக்கல் எழுந்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மைய நிர்வாகக்குழு, 11ம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடத்த உள்ளதாக, கடந்த ஜூன் 3ம் தேதி, சென்னை பல்கலையில் அறிவித்தது. இப்பொழுது தாம்சன் ஜேக்கப் என்று ஒருவர் கிளம்பியுள்ளார். இவர், யார் என்று தெரியவில்லை, ஆனால், ஜான் சமுவேலுக்கு நன்றாகத் தெரியும் போலிருக்கிறது. அவருக்கும் இவரை நன்றாகவேத் தெரிந்திருக்கிறது. பழைய விவரங்களை அப்படியே கூறுகின்றார்.

தாம்சன் ஜேக்கப் ஜான் சாமுவேல் பற்றி எழுதிய புகார் கடிதம்: இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த, தாம்சன் ஜேக்கப் என்பவர், சென்னை பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்[5]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[6]: “ஆசியவியல் நிறுவனத்தில், 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளதாக, சென்னை பல்கலையில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம், சரியான ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்காததால், சென்னை பதிவுத் துறை தலைவர் மற்றும் சங்கங்களின் பொறுப்பாளர் அதன் பதிவை ரத்து செய்துள்ளார். அது, தற்போது செயல்பாட்டில் இல்லை. மேலும், மாநாட்டு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் சாமுவேல் என்பவர், மத்திய அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டு, செங்கல்பட்டு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சிறைத்தண்டனை பெற்றவர். அதாவது, மாநாட்டை நடத்தும் நபர் மீதும் மற்றும் இடத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவாகிவுள்ள நிலையில், எந்த அடிப்படையில், இந்த மாநாட்டுக்கான கூட்டத்துக்கு அனுமதி அளித்தீர்கள். இதுகுறித்து, உயர்கல்வித் துறை செயலரோ, அமைச்சரோ ஒப்புதல் அளித்துள்ளனரா? அப்படி இருந்தால், அதன் விபரங்களை சமர்ப்பிக்கவும்,” இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடிதத்தின் நகல்களை கவர்னர், உயர்கல்வி துறை அமைச்சர், செயலர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

தமிழ், தமிழ் மாநாட்டின் பெயரால் ஏன் இந்த புகார், முதலியன?: ஊழலுக்கு மேல் ஊழல், புகாருக்கு மேல் புகார், பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள், அறிக்கைகள் இவையெல்லாம் இத்தகைய பெரிய பண்டிதர்களிடம், மேதைகளிடம், புலவர்களிம் ஏன் இருக்கின்றன. சாதாரண மாணவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள். ஒரு பக்கம் தமிழ்-தமிழ், தமிழ் தான் உயிர் போன்ற பேச்சுகள், கூச்சல்கள், கோஷங்கள்…, இன்னொரு பக்கம் அதே தமிழின் பெயரால் வசவுகள், திட்டுகள், தூற்றுதல் முதலியனவும் வாடிக்கையாக இருக்கின்றன. ஏற்கனவே, அண்ணா பல்கலையில், அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தால் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் குறித்தும், அதில் முன்னாள் நீதிபதி பங்கேற்றது குறித்தும், துணைவேந்தர் மீது குற்றச்சாட்டும், சர்ச்சையும் எழுந்த நிலையில், தற்போது, சென்னை பல்கலையிலும், அதுபோன்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டம்…………………………….

நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை[7]: 1974ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10 வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது. இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒன்பது அல்லது பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர். காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின.

© வேதபிரகாஷ்

13-06-2023


[1]. தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: Added : ஜூன் 13, 2023  00:33; https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[3] தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: ஜூன் 13,2023 05:10

[4] https://m.dinamalar.com/detail.php?id=3346432

[5] தினமலர்,ஆசியவியல் நிறுவன சர்ச்சையால் உலகத்தமிழ் மாநாட்டுக்கு சிக்கல், மாற்றம் செய்த நாள்: ஜூன் 11,2023 00:36;

[6] https://m.dinamalar.com/detail.php?id=3344344

[7] நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை, https://ta.wikipedia.org/wiki/1974_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? – புதிர்கள், மர்மங்கள் முதலியன விலகுமா? (4)

மே 24, 2023

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? – புதிர்கள், மர்மங்கள் முதலியன விலகுமா? (4)

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை?: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய நாட்களில் 11– ஆவது உலகத்தமிழ் மாநாடு நடக்கவுள்ளது[1]. இதை திராவிடச் சிந்தனையாளர்கள் சீர்குலைக்க முயல்வதாக தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அவியனரசு குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:- “தமிழ்ப் பேரறிஞர் ஈழத்து தனிநாயகம் அடிகளின் சீரிய முயற்சியாலும் சாலை இளந்திரையன் போன்ற தமிழறிஞர்களின் ஒத்துழைப்பாலும்உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்கடந்த காலங்களில் முறையாகத் தமிழ் அறிஞர்களிடம் ஆய்வு கட்டுரைகளைப்  பெற்று, உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்க வைத்து தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வந்தது. அரசியல் கலப்பற்ற அந்நிறுவனத்தைத் சில வேளைகளில் திராவிட கட்சிகள் கையகப்படுத்த எண்ணி அதில் தோல்வி அடைந்தன.

தமிழுக்கு முன்திராவிடம்என்ற பொய்யான கருத்தியலை முன்வைத்தால் தமிழை சிறுமைப் படுத்துவதாகுமா?: அவியனரசு தொடர்ந்து கூறியது, “சென்னையில் நடை பெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரைக் கூட முறையாக அழைக்கவில்லை. அது போல் 1980–இல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது தனித் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அழைக்கப் பெற்றும் அவர் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்ட கசப்பான நிகழ்வுகளும் உண்டு. தமிழறிஞர் என்று திராவிட கட்சியினரால் சொல்லப்படும் சிலர் எப்போதும்தமிழ் பேரறிஞர்களாகதங்களை தாங்களே விளம்பரப் படுத்திகக் கொள்வார்கள். தமிழுக்கு முன்திராவிடம்என்ற பொய்யான கருத்தியலை முன்வைத்து தமிழை சிறுமைப் படுத்துவதே அவர்களின் தொடர்ச்சியான வேலையாக உள்ளது. அவ்வாறான நிகழ்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் உள்ளது அரசியலா?: அவியனரசு தொடர்ந்து கூறியது, “உலகத் தமிழாராச்சி நிறுவனத்தை கைப்பற்ற நினைத்த திராவிட கட்சிகளின் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. இச்சூழலில் எதிர்வரும் ஜூன் 16, 17, 18, 23 ஆகிய நாட்களில், 11–ஆவது உலகத் தமிழ் மாநாட்டை சிங்கப்பூரில் நடத்துவது என உலகத் தமிழாராச்சி நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டது. மாநாட்டில் திராவிட சிந்தனையாளர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்பதை அறிந்து கொண்ட தமிழ்நாட்டிலிருக்கும் திராவிட சிந்தனையாளர்கள் சிலர் 70 ஆண்டுகளாக இயங்கிவரும் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தை பிளந்து, அவர்கள் தாங்களே உலகத் தமிழ்மாநாட்டை தனியாக நடத்தப் போவதாக அறிவித்தனர்.

ஷார்ஜாசிங்கப்பூர்கோலாலம்பூர்: அவியனரசு தொடர்ந்து கூறியது, “முதலில் சிங்கப்பூர் என்றும் பின்னர் சென்னை என்றும் மாநாட்டு இடங்களையும் அறிவித்த நிலையில் இடையில் என்ன நடந்தனவோ தெரியவில்லை மீண்டும் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு தாங்களும் இணைந்து உலகத்தமிழ் மாநாட்டை நடத்த விரும்புவதாக உலகத் தமிழாராச்சி தலைவர் மலேசிய ஐயா. மாரிமுத்துவுக்கு மடல் எழுதினார்கள். இவர்களின் சூது திட்டத்தை அறிந்த உலகத் தமிழாராச்சி நிறுவனத் தலைவர் மலேசிய ஐயா மாரிமுத்து, மீண்டும் அவர்களை மாநாட்டு குழுவில் சேர்க்க முடியாது என மறுத்துவிட்டார். இப்போது உலகத் தமிழாராச்சி நிறுவனம் முற்றிலும் திராவிட கலப்பற்ற தூய தமிழர்களின் முழுகட்டுப்க்பாட்டில் வந்துள்ளது. மாநாட்டு குழுவில் குழப்பங்களைத் தோற்றுவிக்க நினைத்த தமிழ்ப் பகைவர்கள் புறக்ககணிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரத்தால் அரசு நடத்துவதை தமிழர் அறிவர்: அவியனரசு தொடர்ந்து கூறியது, தற்போதைய சூழலில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து வருகின்றனர். தமிழ் அமைப்புகளில் பிறமொழியாளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப் பட்டுவருகின்றனர். திராவிடக்  கட்சிகளின் 56 ஆண்டுக்கால ஆட்சியில், 1956 ஆம் ஆண்டு தமிழ்ஆட்சி மொழிச் சட்டத்தை இன்னமும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை, தமிழ் மொழியைப் பயிற்றுமொழியாக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற  வேண்டுமென்ற தமிழர்களின்க கோரிக்கையை ஏற்க மறுப்பது, உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க இயலாத திராவிடர்களின் கையறு நிலைபோன்ற  பொறுப்பற்ற உண்மையான அக்கறையற்ற போக்கோடு வெறும் ஆரவாரத்தாலும் விளம்பரத்தாலும் மட்டுமே அரசை நடத்தி வருகிற நிலைகளை உலகத் தமிழர்கள் அறிந்தே உள்ளனர்.

சித்தாந்த மோதல் எதில் ஆரம்பம்முடிவு: அவியனரசு தொடர்ந்து கூறியது, 11–ஆவது உலகத் தமிழ்மாநாட்டை மலேசியதலை நகர் கோலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர் நிலத்தையும் மொழியையும் பாதுகாக்கவும் உண்மையான தமிழ் ஆய்வு கட்டுரைகள் மூலம் அடுத்த உலகலாவிய வளர்ச்சிக்குரிய மொழி தமிழ் என்பதை நிறுவிடவும் தமிழராகிய நாம் பலரும், இந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குத் தமிழ்நாட்டில் இருந்து மெய்யான தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், தமிழ்தமிழர்நல இயக்கங்களின் தலைவர்கள் என அனைவரும் பெரும் திரளாக போய் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் வேண்டிக் கொள்கிறேன்,” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறியப் படதோர், உதிரிகள் ஆர்பாட்டம் செய்வது ஏன்?: தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி, அதன் தலைவர் அவியனரசு யாருக்கும் தெரிந்ததாக இல்லை. ப்பொழுது மாலைமுரசு வெளியிட்ட செய்தியிலிருந்து தான் தெரிகிறது. இவரது முகநூலிலிருந்து அறியப் படுவதாவது, இவர் ஒரு இந்திய-தேசியவிரோத கொள்கைக் கொண்ட சித்தாந்தியாகப் புலப்படுகிறது. முன்பு, பாமக போன்றவர் கூட தன்னுரிமை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மாநாடுகள் நடத்தியுள்ளனர்.பிறகு, சட்டரீதியிலான பிரச்சினை புரிந்து அடங்கி விட்டனர். அவ்வப்பொழுது, எங்கிருந்தோ ஆதரவு கிடைக்கிறது என்றால், தமிழ், தமிழ் தேசியம், வடவர், ஆரியர், வந்தேறி என்றெல்லாம் பேசிக் கொண்டு கலந்தள்ளிக் கொண்டிருப்பர். இப்பொழுது, “உலக தமிழ் மாநாட்டவர்” இவ்வாறு நடந்து கொண்டால், அதில் ஆராய்ச்சி, ஆய்வுத் தன்மை, உண்மைத் தன்மை முதலியவை நீர்த்து, குறைந்து, உணர்ச்சிப் பூவமான கூப்பாடுகள், அரைத்த மாவை அறைக்கும் ஆய்வுக் கட்டுரைகள் என்று “கட்-அன்ட்-பேஸ்ட்” வகையறாக்கள் தான் மிஞ்சும். “”அரசியல் கலப்பற்ற நிறுவனம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். நிச்சயமாக அரசியல் கட்சிகளின் ஆட்கள் தான் எல்லா நிறுவனங்களிலும் நியமிக்கப் பட்டுள்ளார்கள், வேலை செய்து வருகிறார்கள். “ரிடையர்ட்” / ஓய்வு பெற்ற பிறகும் வேலை செய்து வருகிறார்கள்.    

தமிழ் பேரறிஞர்களாகதங்களை தாங்களே விளம்பரப் படுத்திகக் கொள்வார்கள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். அதனால் தான் தமிழைக் காப்போம் என்று 1970லிருந்து கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், இன்று வரை ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. மேடைகளில் கத்திக் கொண்டும், மாநாடுகளில் ஜாலியாக மூன்று நாட்கள் காலத்தைக் கழித்தும், கிடைத்த லட்சங்கள்-கோடிகளை செலவழித்து, கமிஷன் அடிப்பதில் போட்டிகளும் நடக்கின்றன. அது இப்பொழுது வெளி வந்து விட்டது. “தமிழ் அமைப்புகளில் பிறமொழியாளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப் பட்டுவருகின்றனர்,” என்பதிலும் போலித்தனம் வெளிப்படுகிறது. இம்மாநாடுகளில் ப்பங்கு கொண்டவர்கள், பதவுகளில் உள்ளவர்களில் நிறைய பேர் தமிழர்களே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். “திராவிட கலப்பற்ற தூய தமிழர்……….” என்றெல்லாம் பேசுவதையும் கவனிக்கலாம். ஒருபக்கம் திராவிட இனம் என்றும், இன்னொருப் பக்கம் தமிழர் இனல் என்றும் உளறிக் கொண்டிருப்பர். இவர்களுக்கு விஞ்ஞான ரீதியில், மொழிவிய்ல், மானுடவியல் போன்றவையும் ஒழுங்காகத் தெரியாது, ஆராய்ச்சி நெறிமுறைகளும் தெரியாது. கூட்டமாக, வெறிபிடித்தது போல, வன்முறைகளுடன் செயல் பட்டுக் கொண்டிருந்தால், நிச்சயமாக மற்றவர் ஒதுங்கி விடுவார்கள். இவர்கள் தான் “குண்டு சட்டியில் குதிரை” ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

23-05-2023.


[1] மாலைமுரசு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய நாட்களில் 11– ஆவது உலகத்தமிழ் மாநாடு, சென்னை, 23-05-2023, பக்கம்.

இலக்குவனின் கடிதம் தொடர்கிறது……………………….

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து சென்னை என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (3)

மே 3, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து சென்னை என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (3)

02-05-2023 ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப் பட்ட ஈ-மெயில்:

அன்புள்ள அறிஞருக்கு,  

வணக்கம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மய்ய நிர்வாகக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க காத்திருந்தமைக்கு நன்றி.

நாம் முன்னர் அறிவித்த படி பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஏற்ற பல்வேறு இடங்களை பார்வையிட்டோம். அதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைவரும் எளிதாக வந்து செல்லும் வகையிலான இடத்தினை கண்டறிந்துள்ளோம். மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தினை உறுதி செய்யும் இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகிறோம். வருகின்ற வாரத்தில் தேர்வு செய்த இடத்தையும் மேலும் விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.   மாநாட்டிற்கு தொடர்ந்து உங்கள் ஆதரவையும் பங்கேற்பையும் எதிர்பார்க்கிறோம்.

மாநாடு ஏற்பாடுகள் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு organizing-committee@icsts11.org என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.  

நன்றி .  

அன்புடன்

ஆய்வுக்குழு,
பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  

தமிழறிஞர்களுக்குள் சச்சரவு ஏன்?: தமிழ் பெயரில் உண்மையில் ஆராய்ச்சி, போன்றவை விடுத்து, எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்று தமிழகம் மட்டுமல்லாது அயல்நாடுகளில் வாழும் “தமிழர்களும்மரசியல் செய்வது தெரிகிறது. இதனால், உண்மையான தமிழ் வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர் மற்றும் விற்பன்னர்களுக்கு சங்கடம், பிரச்சினை ஏன் குழப்பமும் ஏற்படுகிறது. அரசியலோடு, சித்தாந்தம், எல்லை கடந்த மற்ற விருப்பு-வெறுப்புகள் முதலியவையும் இவற்றுடன் சேர்கின்றன.  “தமிழறிஞர்களுக்குள் சச்சரவு” என்று குறிப்பிடுவதே[1] தகுதியற்றது, தேவையற்றது மற்றும் விலக்கத் தக்கது எனலாம்[2]. அதிகாரம், செல்வாக்கு, வியாபாரம், அரசியல் முதலியவை இல்லை என்றால், மாநாடு நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனலாம். கருணாநிதி காலத்திலேயே, இத்தகைய மாநாடு நடத்தும் விவகாரம் பிரச்சினை, சர்ச்சை மற்றும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. நொபூரா கராஷிமா போன்றோர், தமிழகத்தில் அரசியல் ரீதியில் நடத்தப் படும் மாநாடு, “உலகத் தமிழ் மாநாடு” இல்லை மற்றும் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்தனர்.

மாரிமுத்து வெர்சஸ் பொன் வைக்கோ போட்டி ஏன்?: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சென்னையில் நடத்த திட்டமிடப்படுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில், இதுவரை பத்து மாநாடுகள் நடந்துள்ளன. பத்தாவது மாநாடு, சிகாகோவில் நடந்தது. அதில், 11வது மாநாட்டை, சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் பொன்னவைக்கோ தலைமையில் ஒரு குழு சிங்கப்பூரிலும், முன்னாள் தலைவர் மாரிமுத்து தலைமையில் ஒரு குழு மலேஷியாவிலும், 11வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதாக அறிவித்து, பணிகளை செய்து வருகின்றன. இது, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது[3]. இந்நிலையில், பொன்னவைக்கோ தலைமையிலான குழு, ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில், சென்னை, கிண்டி, அண்ணா பல்கலை வளாகத்தில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டு, அரசின் அனுமதியை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது[4].

தமிழக அரசு உயர் அதிகாரிகள், இரு குழுக்களையும் இணைந்தது, ஒரே மாநாடாக நடத்தும்படி அறிவுரை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, இரண்டு இடங்களில் நடத்த திட்ட மிட்டுள்ள குழுக்களை இணைக்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, பொன்னவைக்கோ தலைமையிலான குழு, ஜூன், 16, 17, 18ம் தேதிகளில் சென்னையில் நடத்தவும்; டான் மாரிமுத்து தலைமையிலான குழு, ஜூலை, 20, 21,22 ஆகிய தேதிகளில் மலேஷியாவில் நடத்தவும் தயாராகி வருகின்றன[5]. இதுகுறித்த செய்தியும், ஒரே மாநாடாக நடத்த வேண்டிய அவசியம் மற்றும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தினமலர் நாளிதழில் கடந்த மாதம் ஏப்ரல் செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழக அரசு உயர் அதிகாரிகள், இரு குழுக்களையும் இணைந்தது, ஒரே மாநாடாக நடத்தும்படி, பொன் வைக்கோ தலைமையிலான குழுவினரிடம் அறிவுறுத்தினர்[6].

பொன் வைக்கோ, மாரிமுத்துவுக்கு எழுதியுள்ள கடிதம்: இதையடுத்து, பொன் வைக்கோ, மாரிமுத்துவுக்கு எழுதியுள்ள கடிதம்: “உலகத் தமிழ் ஆராய்ச்சி 11வது மாநாட்டை, ஒரே குழுவாக இணைந்து நடத்த, தமிழக அரசு விரும்புகிறது. அதனால், எங்களின் குழு, உங்கள் தலைமையை ஏற்று மாநாட்டை நடத்த சம்மதிக்கிறது. எங்களிடம் இதுவரை, 1,057 ஆய்வுச் சுருக்கங்களும், 450 ஆய்வுத் தாள்களும் வந்துள்ளன. அவற்றில், 200 ஆய்வுத் தாள்களை பேராசிரியர் மருதநாயகம் தேர்வு செய்துள்ளார். அந்த ஆய்வாளர்கள், கட்டுரைகளை வாசிப்பர். அவர்களுக்கும், எங்களின் நிர்வாக குழு உறுப்பினர்கள், 10 பேருக்கும், மலேஷியாவில் உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களைக் காணும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆறு கூட்ட அரங்கங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், நாங்கள் மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்,”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது சுமார் 250 பேருக்கு “மலேஷியாவில் உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களைக் காணும் ஏற்பாடுகளை செய்தால்” பொன் வைக்கோ, “ மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு ” தருவார், இல்லையென்றால், “இல்லை,” அதாவது, சென்னையில் நடத்தப் படும்.

மாநாடு சென்னையிலா, மலேசியாவிலா?: இதில் இடம் மட்டுமல்லாது, ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை. சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்று ஆய்வுக் கட்டுரைகளை வாங்கி வைத்துளளனர்.ளாந்த ஈ-காபிகளை வைத்திருப்பவர்களுக்குக் கொண்டாட்டம் தான். இப்பொழுதெல்லாம், இதுதான் பெரிய வியாபாரமாகி விட்டது. மாநாடு பெயரில் போலி வெசைட், பணம் வசூல், ஆய்வுக் கட்டுரைக்கு ஆயிரம்-இரண்டாயிரம் வசூல் என்றெல்லாம் நடத்தும் கூட்டங்களும் இவர்களது ஆசியோடு உலா வருகின்றன. அத்தகைய அறிவுக்கொள்ளை கூட்டங்கள், இவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையும் இணைதளத்தில் போட்டு, தூண்டில் போட்டு வளைத்து வருகின்றனர், வசூல் செய்கின்றனர். ஆய்வுகட்டுரை விசயத்தில், பொன் வைக்கோ குழுவினர் பாரபட்சத்துடன் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வந்த கட்டுரைகளை காப்பி அடித்து உபயோகப் படுத்தவும் கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், சிலர், வெளிப்படையாகவே இ-மெயிலில் அத்தகைய பிரச்சினையை எழுப்பியுளளனர். ஆனால், தமிழாராய்ச்சியாளர்களுக்கு “பிளாஜியாரிஸம்” என்பது, டீ-காபி குடிப்பது போன்றது. டீ குடித்துக் கொண்டே காபி குடிப்பதில் வல்லவர்கள். இதனால் தான், தரமும் குறைந்து வருகிறது. குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

03-05-2023


[1] தினமலர், தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?, Added : ஏப் 05, 2023  06:57

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3285547

[3] தினமலர், சென்னையில் உலகத் தமிழ் மாநாடு?, பதிவு செய்த நாள்: ஏப் 07,2023 05:50

[4]  https://m.dinamalar.com/detail.php?id=3287252

[5] தினமலர், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குழுக்களை இணைக்க அரசு முயற்சி, பதிவு செய்த நாள்: மே 02,2023 01:49; https://m.dinamalar.com/detail.php?id=3309489

[6] https://m.dinamalar.com/detail.php?id=3309489

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

சிங்கப்பூருக்கு மாறியது ஏன்?: இந்த உலகத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளதை 2022 இல் நியூஸ் 7 தமிழ் முதலாவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது[1] என்று பிப்ரவரி 2023ல் செய்தி வெளியிட்டாலும், இச்செய்தி ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன்னரே தினமலரில் வெளிவந்து விட்டது[2]. அதாவது, இதைப் பற்றி அத்தனை பரபாரப்பு, தாக்கம் ஏற்படுத்த வேண்டும் போன்ற முயற்சிகளும் நடந்து கொன்டிருக்கின்றன. சென்னை-உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18 வரை, சிங்கப்பூரில் நடக்க உள்ளது[3]. மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது[4]. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஶ்ரீ மாரிமுத்து சென்னையில் நேரில் சந்தித்து மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்[5]. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது[6]. ஆக மலேசியவில் நடத்தப் படுவது உறுதியானது என்று தெரிகிறது. பிறகு, மறுபடியும் அது சிங்கப்பூருக்கு ஏன் மாறியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

அரசியலா, ஆதரவா, சித்தாந்தமாநடப்பது என்ன?: அரசியல் அல்லது அரசு நிறுவனங்களின் ஆதரவில் நடைபெற்ற கடந்த சில மாநாடுகளைப் போலன்றி, இந்த மாநாட்டை ‘மில்லேனியல் தமிழ்’ அமைப்பும் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமுமே நடத்தும் என்று திரு பொன்னவைக்கோ கூறினார். இம்மாநாட்டின் ஆய்வுக்குழு ஆலோசகராகவும் ஏற்பாட்டுக்குழு உதவியாளராகவும் உள்ள முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, ஆய்வு நோக்கில் அமைந்த கட்டுரைகளே தேர்வுசெய்யப்படுகின்றன என்றும் இளையர்களுக்கான அங்கங்களும் இம்மாநாட்டில் இடம்பெறும் என்றும் சொன்னார்.இந்நிலையில், இத்தகைய ஆய்வு மாநாட்டைத் தமிழ் அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒத்த நோக்குடன் ஒரே இடத்தில் நடத்துவதே சிறப்பு என்று சிங்கப்பூர் பெருமக்கள் கருதுகிறார்கள்.சிங்கப்பூரில் அரசாங்கம், தமிழ்ப் பட்டக்கல்வி பயிற்றுவிக்கும் இரண்டு பல்கலைக்கழகங்கள், கிட்டத்தட்ட 40 தமிழ் அமைப்புகள், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் துணையும் ஆதரவும் இல்லாமல் சிங்கப்பூரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த முடியாது[7]. நாளடைவில் ஒரு திருவிழாவாக மாறி, அதன் உச்சமாக தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து போட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது தமிழ்மொழியின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும் என்று சிங்கப்பூரின் கல்வியாளர்கள், தமிழ் செயல்பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்தனர்[8]. தமிழ்… இந்த மூன்றெழுத்து இல்லாமல் நாம் இல்லை. அந்த மூன்று எழுத்து இல்லாமல் தமிழக அரசியலே இல்லை. அந்த அளவுக்கு பாமரனில் இருந்து பார்லிமென்ட் வரை மொழி உணர்வின் தாக்கம் ஏதோ ஒருவிதத்தில் இன்றும் இருந்து கொண்டுதான் வருகிறது[9]. அதன் தாக்கத்தின் எதிரொலிப்பாகத்தான் 300க்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்களை எதிர்த்து “தமிழ் வாழ்க” என்று நாடாளுமன்றத்தில் நம்மால் குரல் கொடுக்க முடிந்திருக்கிறது[10]

தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?: தமிழறிஞர்களுக்குள் புதுப்புது சச்சரவுகள் கிளம்புவதால், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[11]. அமெரிக்காவின் சிகாகோ நகரில், 2019 ஜன., 29 முதல் பிப்., 1 வரை, பத்தாவது உலகத்தமிழ் மாநாடு, டத்தோ மாரிமுத்து தலைமையில் நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளில், அடுத்த மாநாட்டை, 2023 ஜூலையில், ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் சார்ஜாவில், பொன்ன வைக்கோ தலைமையில் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து, பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் தமிழ் மொழி, இலக்கணம், கலை, பண்பாடு, கணினி உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சார்ஜாவுக்குப் பதில், மலேஷியாவில் நடத்தப் போவதாக, டத்தோ மாரிமுத்து உள்ளிட்டோர் அறிவித்து உள்ளனர். இதை ஏற்காத பொன்னவைக்கோ தலைமையிலான அணியினர், சிங்கப்பூரில் நடத்தப் போவதாக அறிவித்து கட்டுரைகள் பெறுகின்றனர். மாநாடு நடத்துவோர், இரண்டு குழுக்களாக இருப்பது தெரியாத ஆய்வாளர்கள், இரண்டு குழுவிடமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டுரைகளை அனுப்பி உள்ளனர்[12]. இதுகுறித்து, தமிழறிஞர்கள் கூறியதாவது: பல நாடுகளில் உள்ள தமிழர்களை உணர்வால் இணைத்து, உயர்த்துவதற்காகத் தான், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழறிஞர்களுக்குள் ஒற்றுமை இல்லை. கட்சி சார்ந்தும், ஆட்சி சார்ந்தும் முடிவெடுக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிட்டதை, அப்போதைய உலகத் தமிழாராய்ச்சி மன்ற பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. இதனால் தான், அவர் ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ என, கோவையில் நடத்தினார்.

ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில் குளறுபடிகள்: சென்ற ஆண்டிலிருந்து சார்ஜா, மலேசியா என்று அறிவித்துக் கொண்டு, பல்லாயிரக் கணக்கில் ஆய்வுக்கட்டுரைகள் பெறப் பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவித்துப் பெற்றதால், அவை பல இடங்களில் பதிவாகி உள்ளன.  இருப்பினும் ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில், பலநிலைகளில் குளறுபடிகள் நடந்துள்ளன. முதலில் சிறந்த கட்டுரையாளர்களுக்கு சிங்கப்பூர் சென்றுவர இலவசம் என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால், பல்கலைக்கழகங்களிருந்து ஆராய்ச்சியாளர்கள் மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகளை அனுப்பியுள்ளனர். முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, இப்பொழுது நிராகரிக்கப் பட்டுள்ளது. அதாவது “பார்வையாளர்களாக” வந்து கொள்ளல்லாம் என்று நிராகரிப்பு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால், அத்தகைய மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகள் மற்றவர்கள் உபயோகப் படுத்துவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது மாநாடு நடத்துவதில் இம்மோசடி பெருமளவில் நடக்கின்றது, மாணவி-மாணவியர்களுக்கு அக்கட்டுரைகள் விற்கப் படுகின்றன. இதனால், “பிளேஜியாரிஸம்” என்ற ஞானத் திருட்டு, விசயக் கொள்ளை, படிப்புத் திருட்டு அதிகமாகி வருகிறது. ஆகவே, இத்தகையோர் அவ்வாறான மோசடிகள் நடக்காது என்று வாக்குறுதி கொடுக்கவேண்டும்.

நிதிபெறுதலும், செலவழித்தலும், தமிழ் வளர்த்தலும்: இதுபோல், பல முரண்பாடுகள் நீடித்த நிலையில், தற்போது, பல கூறுகளாக அறிஞர்கள் பிரிந்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்த மாநாட்டை, மத்திய அரசின் கீழ் செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் இருக்கைகள் அமைந்துள்ள உலகப் பல்கலைகள், தமிழ் பல்கலை உள்ளிட்ட, தமிழக அரசு நிறுவனங்கள் இணைந்து நடத்த வேண்டும். அப்போது தான், அயல்நாடுகளில் மாநாடு நடத்துவதற்கான அனுமதியும், நிதியும் கிடைக்கும். மேலும், தமிழ் இருக்கைகள், தமிழ் பல்கலை, செம்மொழி நிறுவனத்தில் பல ஆய்வாளர்கள் உள்ளதால், உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதும் எளிதாக இருக்கும். இந்தாண்டு, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸாமில் உள்ள கவுஹாத்தி பல்கலையில் மாநாட்டை நடத்தலாம். இதனால், அங்குள்ள தமிழ்த் துறையும் வளரும். இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தமிழறிஞர்களுடன் பேசி, புதிய அமைப்பை ஏற்படுத்தி, மாநாட்டுக்கான பணிகளைத் துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினமலர், உலக தமிழாராய்ச்சி மாநாடு 2023ல் சிங்கப்பூரில் நடக்கிறது, மாற்றம் செய்த நாள்: செப் 25,2022 03:01; https://m.dinamalar.com/detail.php?id=3130639

[2] https://m.dinamalar.com/detail.php?id=3130639

[3] தினபூமி, மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு சனிக்கிழமை, 4 மார்ச் 2023

[4] https://www.thinaboomi.com/2023/03/04/194601.html

[5] கல்கி, உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற உள்ளது!, கல்கி டெஸ்க், Published on : 22 Feb, 2023, 7:22 pm

[6] https://kalkionline.com/news/world/the-world-tamil-conference-will-be-held-in-malaysia-in-july

[7] தமிழ்.முரசு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: சிறந்த கல்வியாளர்கள் சேர்ந்து நடத்துவதே சிறப்பு, லதா 31 Oct 2022 13:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Oct 2022 15:42

[8] https://www.tamilmurasu.com.sg/singapore/story20221031-98833

[9] நக்கீரன், உலகத் தமிழ் மாநாடுகளும்அது கடந்து வந்த பாதையும்..., சுதாகர், Published on 05/07/2019 (12:12) | Edited on 05/07/2019 (12:43).

[10] https://www.nakkheeran.in/special-articles/special-article/10th-world-tamil-conference

[11] தினமலர், தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?, – நமது நிருபர் –பதிவு செய்த நாள்: ஏப் 05,2023 06:57; https://m.dinamalar.com/detail.php?id=3285547

[12] https://m.dinamalar.com/detail.php?id=3285547

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, முதலியன:தமிழ்-தமிழ் என்று பேசிக் கொண்டும், தமிழைக் காப்பேன் என்று அரற்றிக் கொண்டும், தமிழ் எங்கள் உயிர், தமிழின் உயிர், உயிரின் மூச்சு, மூச்சின் உச்சம் என்றெல்லாமும் கத்திக் கொண்டும் காசிருந்தால் மேடைப் போட்டு, புத்தகம் போட்டு, விழா நடத்தி, காலம் தள்ளிக் கொண்டே இருக்கலாம். திக-திமுக மற்ற திராவிட வகையெறாக்களில் இதைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம், பாடமும் படிக்கலாம். ஏதாவது விமர்சனம் செய்தால், “தமிழின் எதிரி, தமிழர்களின் துரோகி, தமிழனத்தின் கோடாரிக் காம்பு,” போன்ற வசைகளும் எழும். இப்படியாக உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று பல சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள், கூட்டங்கள், குழுக்கள் கிளம்பியுள்ளனர்.

  • உலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,
  • அனைத்துலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழர் மாநாடு,
  • உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு,
  • இன்னும் பல இருக்கின்றன……

பிறகு திருக்குறளை வைத்து ஏகப்பட்ட கூட்டங்கள் கிளம்பி விட்டன. இவற்றில் 90% ஊரைச் சுற்றிப் பார்க்கும் கூட்டம் தான். மூன்று முதல் ஐந்து-ஆறு நாட்கள் இருக்க இடம், மூன்று வேளை சாப்பாடு கட்டாயம் கிடைக்கும் என்ற போர்வையில் தான் சுற்றுலா திட்டம் போடப் பட்டு, ஆட்கள் கூட்டம் சேருகிறது. இதில் பல நிலைகளில் பலர் வியாபாரமும் செய்து, பணம் சம்பாதிக்கின்றனர். விசா, விமான டிக்கெட் வாங்குவது, உள்ளூர் சுற்றிப் பார்ப்பது என்று பலவழிகளில் வியாபாரம் நடந்து வருகிறது. ஏனெனில் ஏஜென்டுகளுக்கு, ஏஜென்டாக செயல்படுகிறவர்களுக்கு எல்ல நிலைகளிலும் கமிஷன் கிடைக்கிறது. இப்படி மாநாடுகள் நடத்துகிறவர்கள் அல்லது சம்பந்தப் படுபவர்கள் சுற்றுலா ஏஜென்டாகவே மாறி வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார்.

மாநாடுகள் சுற்றுலாவுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வியாபாரமாகின்றது: ஹோட்டலில் தங்கி, குளித்து சாப்பிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவர். மதியம் உணவுக்கு வந்து விடுவர். தூரமாக இருப்பின், இரவு உணவுக்குக் கட்டாயம் வந்து விடுவர். அந்த ஏஜென்டே எல்லாம் செய்து விடுவார். ஆக, தமிழுக்காக, மாநாட்டில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்பவர் 10 பேர் கூட் இருக்க மாட்டார்கள். இதில் என்ன வேடிக்கை அல்லது வருத்தப் படவேண்டிய விசயம் என்றால், அத்தகைய, முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்தால், அவற்றை ஒதுக்கி விடுவர். பிறகு, அவற்றை காப்பி அடிக்காமல் இருந்தால் சரி. ப்பொழுதெல்லாம், இதற்கும் “எதிக்ஸ்” என்றெல்லாம் பேசப் படுகிறது. ஆனால், அதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் ஆயிரகணக்கில் மின்னஞ்சல்களில் பெறப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சேகரிப்பவர்கள் என்ன செய்கிறார்கள், செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒழுங்காக, ஒழுக்கமாக, ஆராய்ச்சி தர்மத்தைப் பின்பற்றுவார்களா, இல்லை, ஜாலியாக-தாராளமாக “கட்-அன்ட்-பேஸ்ட்” அல்லது “காபி-அன்ட்-பேஸ்ட்” செய்து பிழைப்பார்களா, வியாபாரம் செய்வர்களா என்பதெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், அவர்கள் தமிழ்-தமிழாராய்ச்சி முதலியவற்றில் என்ன-எதனை சாதித்தார்கள் என்று தெரியவில்லை. மென்பொருளின் சாதனை நடந்துள்ளது, இல்லையென்றா இப்படி தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. இப்பொழுது, அதற்கும் கூகுள் டிரான்ஸ்டேட் வந்து விட்டது. முரட்டுத் தனமான மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.

1966 முதல் 2023 வரை: உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் 2023 நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது. இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், இவை அரசியல் சார்ந்து நடந்ததாகவே அறியப் படுகின்றது. மேலும், “மொழிப்பற்று” போர்வையில், உணர்ச்சிப் பூர்வமான உபன்யாசங்கள், பாஷணங்கள் மற்றும் கதாகாலக்ஷேபங்கள் புரிந்ததும் தெரிகிறது. கல்வி, படிப்பு மற்றும் போதனை போன்றவற்றிற்குப் பதிலாக சித்தாந்த உச்சங்களின் எல்லைகளில் அவை பலியானதும் புரிகின்றது.

மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் ரூபாய் 25 கோடி செலவு: இந்நிலையில், 11ஆவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தால் 1966 முதல் நடத்தப்பட்டு வரும் உலகத் தமிழ் மாநாடு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரிசியசிலும் நடைபெற்றுள்ளது. இந்த உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். சுமார் ரூபாய் 25 கோடி செலவில் நடைபெறவிருந்தது.  இப்பொழுது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மாறியுள்ளது. சரி இவ்வாறு கோடிகளில் செலவு செய்து தமிழுக்கு என்னவாகப் போகிறது? இதுவரை 10 மாநாடுகள் நடந்திருப்பதால் 200 கோடிகளும் செலவாகி இருக்கலாம். ஆனால், கடந்த காலங்களில் தமிழ் புலவர்கள், பண்டிதர்கள் கவிஞர் போன்றோர் செய்ததில் 1% ஆவது தமிழுக்கு சேவை செய்திருப்பார்களா? அல்லது அவ்வாறு செய்தேன் என்பதற்கு எதையாவது காண்பிர்ப்பார்களா?

சார்ஜாவிலிருந்து மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரை: இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் 2023 ஜூலையில் நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது[1]. இணைதள குழுக்களில் அதிகமாகவே பேச-பகிரப் பட்டன. இதற்கான மாநாட்டு விவரங்கள் அடங்கிய அழைப்பிதழ், அமைப்புகள், அமர்வுகள், அதற்கான அறிக்கைகள் எல்லாம் தயாராகியது[2]. ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் மின்னஞ்சல்கள் மூலம் ஏற்கப்பட்டன. சென்னையில் ரு நிறுவனம், இதே போல பலருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து, ஆய்வுக்கட்டுரை ஏற்க பணம் கட்ட வேண்டும் என்று கூட ஆரம்பித்தார். ஆனால், சார்ஜாவில் நடத்த முடியாமல் போனது அல்லது இயலவில்லை அல்லது காரணம் அறிவிக்க முடியவில்லை என்பது அமைதியாகி விட்டது[3]. தயார் செய்யப் பட்ட, அச்சிடப் பட்ட / வெளியான எல்லா ஆவணங்களும் வீணாகின[4]. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களினால் சார்ஜாவுக்கு பதிலாக மலேசியாவில் ஜூலை 21 – 23 வரை மலேயா பல்கலை வளாகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது[5]. இங்கும் “அதிகார பூர்வமான அறிவிப்பு” என்பதனைக் கவனிக்கலாம். ஏற்கனவே மூன்று உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடைபெற்றுள்ளது[6]அப்படியென்றால் ஆன்காவது முறை ஏற்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினகரன், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும், June 7, 2022, 5:25 pm.

[2] https://www.dinakaran.com/11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[3] வீரகேசரி, சார்ஜாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, Published By: VISHNU, 23 JUN, 2022 | 02:41 PM; https://www.virakesari.lk/article/130046

[4] https://www.virakesari.lk/article/130046

[5] தமிழ்.நியூஸ்.7, மலேசியாவில் 11-வது உலகத்தமிழ் மாநாடு; ஜூலை மாதம் நடைபெறுவதாக தகவல், by Yuthi, February 22, 2023 04.78

[6] https://news7tamil.live/11th-world-tamil-conference-in-malaysia-it-is-reported-to-be-held-in-july.html