103 பேர் கைது – தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது தீர்வு எப்படி? (3)
70 ஆண்டுகளாக மருத்துவர்களாக செயல்பட்ட மருத்துவர் அல்லாதவர்: போலி டாக்டர், மருத்துவர் என்பது தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக மோசடி நடந்து வருகிறது. எப்படி அரசியல் ரீதியில் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு பவனி வருகிறார்கள் மற்றும் பவனி வர ஆசைப் படுகிறார்களோ, அதே போல, பலர், டாக்டராக ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்துவ வேலை செய்ய தயாராகி விடுகிறார்கள். முன்னர் டாக்டரிடம் “கம்பௌன்டர்” ஆக வேலை பார்த்தவர்களும், பிறகு, நர்ஸ் அல்லது ஓரளவுக்கு அனுபவம் உள்ள நர்ஸ் போன்றவர்கள் தாங்களே டாக்டர் போன்று செயல்பட்டது, செயல்படுவது தெரிந்த விசயமே. அவசரத்திற்கு என்று சில நேரங்களில் அவ்வாறு செய்தது, பிறகு, நிரந்தரமாக அதே வேலையை செய்வது என்று தொடர்கின்றனர். டாக்டரை விட, இவர்கள் பீஸும் குறைவாக வாங்குவதால், கண்டு கொள்ளாமல் காலம் ஓடுகிறது. புதியதாக வருபவர்களுக்கு, இந்த விவரமும் தெரியாது, எம்.பி.பி.எஸ் என்று போட்டுக் கொண்டால், உண்மையான டாக்டர் என்று நம்பித்தான் சிகிச்சைப் பெற்று செல்கிறார்கள். யாராவது அவர்களது சான்றிதழ்களைக் கேட்டு ஆராய்ந்தால் மாட்டிக் கொள்வார்கள். அதுவரை தொழில் அமோகமாகத்தான் சென்றுக் கொண்டிருக்கும். பெரும்பாலாக, கதை அப்படித்தான் ஓடியுள்ளது.
கொரோனா காலத்தில் போலி டாக்டர்கள் அதிகமானது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது[1]. கரோனா காலத்தில் டாக்டர்களுக்கும் கிராக்கி ஜாஸ்தியாகியது. டாக்டர்களுக்கே கொரோனா வந்து இறந்த போது, மக்கள் மற்றவர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அதாவது, சித்தா, ஆயுர்வேதம் எனும் மற்ற நாட்டு வைத்தியர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களிடம், சித்தா-ஆயுர்வேத படிப்பு சான்றிதழ் கூட இருக்காது. இருப்பினும், மருத்துவத்தை கரைத்துக் குடித்ததைப் போல பேசி, சொற்பொழிவு செய்து, விளம்பரங்கள் மூலம் வியாபாரம் செய்து, பிறகு ஒரு நிலையில், ஹீலர்-மருத்துவர், இயற்கை வைத்தியர் என்றெல்லாம் போர்ட் போட்டுக் கொண்டு, ஒரு நிலையில், டாக்டராகி விடுகிறார். டிவி செனல்களில் சுயவிளம்பரம் செய்துகொள்ளும் அளவிற்கு பணத்தையும் சம்பாதிக்கின்றனர்.பணம் சேர-சேர, கிளிக் வைத்து, நடை-உடை மாறி, எல்லாமே மாறி விடுகின்றன. இதனால், அரசு அமைப்புகளுக்கும் போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க கஷ்டமாகிறது.
ஒரு தனிமனித புகாரிலிருந்து பிரச்சினை கிளம்பியதா?: சமீபத்தில் எலும்பு முறிவு சிகிச்சை விவகாரத்தில், பொகழ் பெற்ற மருத்துவ மனையில், சிலர், படிப்பு-பட்டம் இல்லாமல் மருத்துவம் பார்த்ததால் பிரச்சினை ஏற்பட்டது என்று புகார் செய்யப் பட்டது. ஆனால், இரண்டு தரப்பிலும் முரண்பட்ட புகார்கள் எழுந்தன. இருப்பினும், எம்பிபிஎஸ் பட்டம் இல்லாமல், மற்ற படிப்பு படித்து, சிகிச்சை செய்தது அறியப் பட்டது. தவிர, வெளிநாடுகளில் படித்து அவை இந்திய எம்பிபிஎஸ் பட்டத்திற்கு சமமானதல்ல, ஏர்புடையது அல்ல என்று முடிவு செய்யப்பட்டது. அந்நிலையிலும், பல மருத்துவப் படிப்புகளுக்கு, இந்தியாவில் அங்கீகாரம் இல்லாமல் போயின மற்றும் சிகிச்சைக்கு வருபவர் எண்ணிக்கையும் மிக கணிசமாக குறைந்தது. இருப்பினும், தேவை என்ற நிலையில் அப்போலி வைத்தியர் இருக்கத்தான் செய்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் படி, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது: போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது[2]. பிராக்டிஸ் செய்யும் சந்தேகத்திற்குள்ளான, மருத்துவ்ர்களின் சான்றிதழ்கள் மறைமுகமாக மற்றும் நேரிடையாக பரிசோதிக்கப் பட்டது. அப்பொழுது தான், போலி மருத்துவர்கள் பலர் அடையாளம் கண்டறியப் பட்டனர். தமிழகம் முழுவதும் 18 நாட்கள் நடைபெற்ற சோதனைகளில், முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்து வந்த 103 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[4].
போலீஸ் நடவடிக்கையும் சேர்ந்தது: இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்[5]. அதன்படி, கடந்த 18 நாட்களாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[6]. இதில், 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[7]. மேலும், உரிய அனுமதி இல்லாமல் மருத்துவம் பார்த்து வருவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்[8]. இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[9].
கைது செய்யப் பட்ட விவரங்கள்: அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்தியமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில், மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அணைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, அவர்கள் உத்தரவிட்டிருந்தார்[10]. இதனையடுத்து. கடந்த 18 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[11]. திருவாரூரில் 12 பேரும், தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், பெரம்பலூரில் 8 பேரும், திண்டுக்கல்லில் 6, தேனி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது[12].
© வேதபிரகாஷ்
25-4-2023
[1] தமிழ்.ஏபிபி.லைவ், Doctors Fradulence : கடந்த 18 நாட்களில் மட்டும் இத்தனை போலி மருத்துவர்கள் கைதா..? காவல்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!, By: முகேஷ் | Updated at : 24 Apr 2023 09:03 PM (IST).
[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/police-informed-103-fake-doctors-have-arrested-in-tamil-nadu-in-the-last-18-days-113557
[3] தினத்தந்தி, 18 நாட்கள் 103 போலி டாக்டர்கள் கைது – தொடரும் டிஜிபியின் எச்சரிக்கை, By தந்தி டிவி, 25 ஏப்ரல் 2023 7:03 AM
[4] https://www.thanthitv.com/latest-news/18-days-103-fake-doctors-arrested-continued-dgps-warning-182154 – :~:text=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88,%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.
[5] மாலைமலர், தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது எண்ணிக்கை 103 ஆக உயர்வு, Byமாலை மலர்25 ஏப்ரல் 2023 8:33 AM
[6] https://www.maalaimalar.com/news/district/fake-doctors-arrested-increased-across-tn-600916
[7] தினமலர், போலி டாக்டர்கள் 103 பேர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 25,2023 08:06
[8] https://m.dinamalar.com/detail.php?id=3303534
[9] பத்திரிக்கை.காம், தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது, APR 25, 2023
[10] https://patrikai.com/103-fake-doctors-arrested/
[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், போலி டாக்டர்களை பொறி வைத்து பிடித்த போலீஸ்.! 103 பேர் கைது–எந்த மாவட்டத்தில் அதிக போலி மருத்துவர்கள் தெரியுமா?, Ajmal Khan; First Published Apr 25, 2023, 8:50 AM IST; Last Updated Apr 25, 2023, 11:01 AM IST
[12] https://tamil.asianetnews.com/tamilnadu/103-fake-doctors-arrested-across-tamil-nadu-rtnimi