Archive for the ‘தொற்று’ Category

103 பேர் கைது – தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டு பிடிப்பது, தீர்வு எப்படி? (3)

ஏப்ரல் 26, 2023

103 பேர் கைதுதமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது தீர்வு எப்படி? (3)

70 ஆண்டுகளாக மருத்துவர்களாக செயல்பட்ட மருத்துவர் அல்லாதவர்: போலி டாக்டர், மருத்துவர் என்பது தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக மோசடி நடந்து வருகிறது. எப்படி அரசியல் ரீதியில் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு பவனி வருகிறார்கள் மற்றும் பவனி வர ஆசைப் படுகிறார்களோ, அதே போல, பலர், டாக்டராக ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்துவ வேலை செய்ய தயாராகி விடுகிறார்கள். முன்னர் டாக்டரிடம் “கம்பௌன்டர்” ஆக வேலை பார்த்தவர்களும், பிறகு, நர்ஸ் அல்லது ஓரளவுக்கு அனுபவம் உள்ள நர்ஸ் போன்றவர்கள் தாங்களே டாக்டர் போன்று செயல்பட்டது, செயல்படுவது தெரிந்த விசயமே. அவசரத்திற்கு என்று சில நேரங்களில் அவ்வாறு செய்தது, பிறகு, நிரந்தரமாக அதே வேலையை செய்வது என்று தொடர்கின்றனர். டாக்டரை விட, இவர்கள் பீஸும் குறைவாக வாங்குவதால், கண்டு கொள்ளாமல் காலம் ஓடுகிறது. புதியதாக வருபவர்களுக்கு, இந்த விவரமும் தெரியாது, எம்.பி.பி.எஸ் என்று போட்டுக் கொண்டால், உண்மையான டாக்டர் என்று நம்பித்தான் சிகிச்சைப் பெற்று செல்கிறார்கள். யாராவது அவர்களது சான்றிதழ்களைக் கேட்டு ஆராய்ந்தால் மாட்டிக் கொள்வார்கள். அதுவரை தொழில் அமோகமாகத்தான் சென்றுக் கொண்டிருக்கும். பெரும்பாலாக, கதை அப்படித்தான் ஓடியுள்ளது.

கொரோனா காலத்தில் போலி டாக்டர்கள் அதிகமானது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது[1].   கரோனா காலத்தில் டாக்டர்களுக்கும் கிராக்கி ஜாஸ்தியாகியது. டாக்டர்களுக்கே கொரோனா வந்து இறந்த போது, மக்கள் மற்றவர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அதாவது, சித்தா, ஆயுர்வேதம் எனும் மற்ற நாட்டு வைத்தியர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களிடம், சித்தா-ஆயுர்வேத படிப்பு சான்றிதழ் கூட இருக்காது. இருப்பினும், மருத்துவத்தை கரைத்துக் குடித்ததைப் போல பேசி, சொற்பொழிவு செய்து, விளம்பரங்கள் மூலம் வியாபாரம் செய்து, பிறகு ஒரு நிலையில், ஹீலர்-மருத்துவர், இயற்கை வைத்தியர் என்றெல்லாம் போர்ட் போட்டுக் கொண்டு, ஒரு நிலையில், டாக்டராகி விடுகிறார். டிவி செனல்களில் சுயவிளம்பரம் செய்துகொள்ளும் அளவிற்கு  பணத்தையும் சம்பாதிக்கின்றனர்.பணம் சேர-சேர, கிளிக் வைத்து, நடை-உடை மாறி, எல்லாமே மாறி விடுகின்றன. இதனால், அரசு அமைப்புகளுக்கும் போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க கஷ்டமாகிறது.

ஒரு தனிமனித புகாரிலிருந்து பிரச்சினை கிளம்பியதா?: சமீபத்தில் எலும்பு முறிவு சிகிச்சை விவகாரத்தில், பொகழ் பெற்ற மருத்துவ மனையில், சிலர், படிப்பு-பட்டம் இல்லாமல் மருத்துவம் பார்த்ததால் பிரச்சினை ஏற்பட்டது என்று புகார் செய்யப் பட்டது. ஆனால், இரண்டு தரப்பிலும் முரண்பட்ட புகார்கள் எழுந்தன. இருப்பினும், எம்பிபிஎஸ் பட்டம் இல்லாமல், மற்ற படிப்பு படித்து, சிகிச்சை செய்தது அறியப் பட்டது. தவிர, வெளிநாடுகளில் படித்து அவை இந்திய எம்பிபிஎஸ் பட்டத்திற்கு சமமானதல்ல, ஏர்புடையது அல்ல என்று முடிவு செய்யப்பட்டது. அந்நிலையிலும், பல மருத்துவப் படிப்புகளுக்கு, இந்தியாவில் அங்கீகாரம் இல்லாமல் போயின மற்றும் சிகிச்சைக்கு வருபவர் எண்ணிக்கையும் மிக கணிசமாக குறைந்தது. இருப்பினும், தேவை என்ற நிலையில் அப்போலி வைத்தியர் இருக்கத்தான் செய்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் படி, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது: போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது[2].  பிராக்டிஸ் செய்யும் சந்தேகத்திற்குள்ளான, மருத்துவ்ர்களின் சான்றிதழ்கள் மறைமுகமாக மற்றும் நேரிடையாக பரிசோதிக்கப் பட்டது. அப்பொழுது தான், போலி மருத்துவர்கள் பலர் அடையாளம் கண்டறியப் பட்டனர். தமிழகம் முழுவதும் 18 நாட்கள் நடைபெற்ற சோதனைகளில், முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்து வந்த 103 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[4].

போலீஸ் நடவடிக்கையும் சேர்ந்தது: இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்[5]. அதன்படி, கடந்த 18 நாட்களாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[6]. இதில், 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[7]. மேலும், உரிய அனுமதி இல்லாமல் மருத்துவம் பார்த்து வருவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்[8]. இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[9].

கைது செய்யப் பட்ட விவரங்கள்: அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்தியமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில், மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அணைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, அவர்கள் உத்தரவிட்டிருந்தார்[10].  இதனையடுத்து. கடந்த 18 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[11]. திருவாரூரில் 12 பேரும், தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், பெரம்பலூரில் 8 பேரும், திண்டுக்கல்லில் 6, தேனி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது[12].

© வேதபிரகாஷ்

25-4-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Doctors Fradulence : கடந்த 18 நாட்களில் மட்டும் இத்தனை போலி மருத்துவர்கள் கைதா..? காவல்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!, By: முகேஷ் | Updated at : 24 Apr 2023 09:03 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/police-informed-103-fake-doctors-have-arrested-in-tamil-nadu-in-the-last-18-days-113557

[3] தினத்தந்தி, 18 நாட்கள் 103 போலி டாக்டர்கள் கைதுதொடரும் டிஜிபியின் எச்சரிக்கை, By தந்தி டிவி, 25 ஏப்ரல் 2023 7:03 AM

[4] https://www.thanthitv.com/latest-news/18-days-103-fake-doctors-arrested-continued-dgps-warning-182154 – :~:text=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88,%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.

[5] மாலைமலர், தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது எண்ணிக்கை 103 ஆக உயர்வு, Byமாலை மலர்25 ஏப்ரல் 2023 8:33 AM

[6] https://www.maalaimalar.com/news/district/fake-doctors-arrested-increased-across-tn-600916

[7] தினமலர், போலி டாக்டர்கள் 103 பேர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 25,2023 08:06

[8] https://m.dinamalar.com/detail.php?id=3303534

[9] பத்திரிக்கை.காம், தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது, APR 25, 2023

[10] https://patrikai.com/103-fake-doctors-arrested/

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், போலி டாக்டர்களை பொறி வைத்து பிடித்த போலீஸ்.! 103 பேர் கைதுஎந்த மாவட்டத்தில் அதிக போலி மருத்துவர்கள் தெரியுமா?, Ajmal Khan; First Published Apr 25, 2023, 8:50 AM IST; Last Updated Apr 25, 2023, 11:01 AM IST

[12]  https://tamil.asianetnews.com/tamilnadu/103-fake-doctors-arrested-across-tamil-nadu-rtnimi

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டு பிடிப்பது, தீர்வு எப்படி? (2)

ஏப்ரல் 12, 2023

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது, தீர்வு எப்படி? (2)

கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சொற்பம்தான்[1]: டாக்டர் டி.முஹம்மது கிஸார் என்பவர் ழுதிய கட்டுரை கீழே அப்படியே கொடுக்கப் பட்டுள்ளது. தலைப்புகள் மட்டும் சில சேர்க்கப் பட்டுள்லன. அவ்வப்போது `போலி டாக்டர் கைது’ என்ற செய்திகளைக் கடந்து செல்வோம். மருத்துவமே படிக்காமல் `டாக்டர்’ எனக் கூறிக்கொண்டு சிகிச்சை அளிக்கும்போது பாதிப்பு ஏற்படும் நிலையில், அவர்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சொற்பம்தான். இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன[2]. மருத்துவமே படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து, அனுபவ அடிப்படையில் மருத்துவம் பார்ப்பவர்கள். `பாராமெடிக்கல்’ என்னும் மருத்துவம் சார்ந்த பணிகளைச் செய்யும் நர்ஸ்கள், ஆயாக்கள், மருந்தாளுநர்கள் போன்றோரும் சிகிச்சையளிக்கின்றனர்.

டாக்டர் படிப்பு படித்து, ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்தபிறகே டாக்டராக முடியும்: மருத்துவர் என்று சொல்லப்படுபவர், நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன், நோயின் தன்மையைக் கண்டறிந்து பலவழிகளில் ஆய்வு செய்வார். அத்துடன் அந்த நோயைக் கண்டறிந்து (Diagnose) உறுதிப்படுத்தியபிறகே மருந்துகளைப் பரிந்துரைப்பார். குறிப்பாக, மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்குமுன், அவை உடலில் எப்படிச் செயல்படும், மருந்து உடலுக்குள் சென்றதும் எப்படி வினை புரியும், பக்கவிளைவுகள் இல்லாமல் எப்படி மருந்து கொடுப்பது என்றெல்லாம் ஆராய்வார். இதுபோன்று மருந்து அறிவியல் சார்ந்த விஷயங்களை நன்றாக அறிந்தபிறகே ஒரு மருத்துவரால் நோயாளிக்கு மருந்துகளைப் பரிந்துரைக்க இயலும். இவையெல்லாம் அனுபவத்தில் வர வாய்ப்பில்லை. மருத்துவக் கல்லூரிகளில் படித்து ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்தபிறகே, இந்த மருத்துவ அறிவைப் பெறமுடியும்.

அலோபதி மருத்துவம் படிக்காதவர் (ஆயுர்வேதம்) முதலியன, அம்முறை பின்பற்றலாகாது: இதேபோல் மாற்று மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற துறைகளில் படித்துப் பட்டம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பதும்கூட ஒருவகையில் போலி மருத்துவத்தின் கீழ்தான் சேரும். ஆம், இவர்களுக்கு அலோபதி முறை மருத்துவம் பற்றித் தெரியாது. அதுபோல, அலோபதி மருத்துவர்கள் மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதும்கூட குற்றமே. காரணம், அலோபதி மருத்துவர்களுக்கு மாற்றுமுறை மருத்துவம், அதுபற்றிய மருந்து அறிவியல் தெரியாது. இவைதவிர அலோபதி மற்றும் மாற்று மருத்துவமுறை எதுவும் பயிலாமல், அனுமதி பெறாத நிறுவனங்களில் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ படித்துச் சான்றிதழ் (சர்டிஃபிகேட் கோர்ஸ்) பெற்றுவிட்டு, தானும் ஒரு மருத்துவர் என்று சிகிச்சை அளிப்பதும் போலி மருத்துவமே. இன்றையசூழலில் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.

பதிவு செய்த பிறகே மருத்துத் தொழில் பின்பற்ற முடியும்: அதேநேரத்தில் எத்தகைய படிப்பு படித்தாலும், ஒரு மருத்துவர் என்பவர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே அவரால் சிகிச்சை அளிக்கமுடியும். அலோபதி மருத்துவர்கூட படித்து விட்டு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், பதிவு எண் பெறாமல் மருத்துவச் சிகிச்சை செய்வது குற்றமே. உதாரணமாக ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவத் தொழில் செய்வார்கள். அவர்கள், இந்தியாவில் எப்.எம்.ஜி.ஈ (Foreign Medical Graduate Screening Exam-  FMGE) என்னும் ஸ்கிரீனிங் தேர்வு எழுதி அதில் தேர்ச்சிபெற்று, அதன்பிறகு ஒரு வருடம் அரசு அங்கீகாரம்பெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி எடுக்கவேண்டும். அத்துடன் மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் பெற்றபிறகே இந்தியாவில் மருத்துவம் செய்யமுடியும்.

ரஷ்யா போன்ற நாடுகளில் படித்து, அங்கீகாரம் இல்லாத படிப்புகளை போட்டுக் கொண்டு மருத்துவம் செயலாகாது: ரஷ்யா போன்ற சில நாடுகளில் எம்.டி (MD) பட்டம் பெற்றாலும் அவர்கள் இங்கே எம்.பி.பி.எஸ் மருத்துவராகவே கருதப்படுவார்கள் என்ற நிபந்தனையுடன்தான் மருத்துவ கவுன்சில் அவர்களைப் பதிவு செய்கிறது. காரணம், அவர்கள் எம்.பி.பி.எஸ் முடிக்காமலே எம்.டி படிக்கும் வசதி சில நாடுகளில் உள்ளது. அலோபதி மருத்துவப் பட்டமான எம்.பி.பி.எஸ் பெற்ற மருத்துவர்கள்கூட தன் பெயருக்குப் பின், தேர்ச்சி பெறாத அல்லது மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம் இல்லாத டிகிரிகளைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் போலி மருத்துவமே, இதுவும் குற்றமே.

போலி மருத்துவர்களை எப்படி அடையாளம் காண்பது?: போலி மருத்துவர்களில் பெரும்பாலானோர் தங்களது லெட்டர்பேடிலோ அல்லது கிளினிக் போர்டிலோ தங்கள் பெயரைப் பயன்படுத்தாமல் கிளினிக் பெயரை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒருவேளை அதில் தங்கள் பெயரைப் போட்டால், பெயருக்குப் பின்னால் மருத்துவக் கவுன்சில் பதிவு எண் மற்றும் படித்த டிகிரியைப் போட மாட்டார்கள். ஒரு சிலர் இறந்துபோன மருத்துவர்கள் அல்லது இந்தியாவில் பல  ஆண்டுகளாக இல்லாத மருத்துவர்களின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலி மருத்துவம் செய்கிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்குத் தெரிந்த,வேறு இடத்தில் பணிபுரியும் மருத்துவர்களின் பெயர்களையும், மருத்துவ கவுன்சில் பதிவு எண்ணையும் பயன்படுத்தி, மருத்துவத் தொழில் செய்கின்றனர். இது தண்டனைக்குரிய ஆள்மாறாட்ட கிரிமினல் குற்றமாகும்.

கண்டுபிடிக்க எளிய வழிகள்!: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி மருத்துவர்களை அடையாளம் காண எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் இருக்கும் மருத்துவரின் லெட்டர்பேடிலோ அல்லது பெயர்ப்பலகையிலோ உள்ள மருத்துவ எண், பதிவு எண், மருத்துவர் பெயர், படித்த பட்டங்கள் ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு உங்கள் மொபைல்போனிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புங்கள். மெசேஜ் அனுப்பும் பகுதிக்குச் சென்று `TNMC (Space) REGNO (Space) பதிவு எண்’ டைப் செய்து `56767′ என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உடனடியாக மருத்துவ கவுன்சிலிலிருந்து அந்தப் பதிவெண்ணைக் கொண்ட மருத்துவர் மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் பெற்ற பட்டங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு பதில் வரும். உதாரணமாக, `TNMC REGNO 53065′ என்று டைப் செய்து `56767′ என்ற எண்ணுக்கு அனுப்பினால் `Doctor Name: MOHAMED KIZHAR IRSHATH DOWLATH M.B.B.S., D.C.H’ என்று பதில் வரும். அதை வைத்து அவர் உண்மையான மருத்துவரா, அவர் தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும் படிப்புகள், அவர் படித்த படிப்பு மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டப் படிப்புதானா என்பதை அறிந்து அந்த மருத்துவரின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம். சில உண்மையான மருத்துவர்கள்கூட `MBBS’ மட்டும் படித்துவிட்டு தங்களை பல்வேறு துறையின் சிறப்பு மருத்துவர் என்று போலி மருத்துவம் செய்வார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களை இந்தக் குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்து விடலாம்.

டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு (Smart Board) முறை: போலி மருத்துவர்களில் சிலர், வேறு மருத்துவரின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்துவதை இந்தமுறை மூலம் கண்டுபிடிக்க முடியாது. இதற்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் புதிய வழிமுறையைக் கொண்டுவரவிருக்கிறது. அதாவது டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு என்னும் முறையைக் கொண்டுவருகிறது. பதிவு பெற்ற மருத்துவர்கள், குறிப்பிட்ட தொகை செலுத்தி இந்த போர்டைப் பெற்று தங்கள் கிளினிக்கில் வைக்க வேண்டும். அதில் மருத்துவரின் பெயர், பதிவு எண், அவரது டிகிரி, மருத்துவரின் புகைப்படம் போன்றவை இருக்கும். இதன்மூலம் ஆள்மாறாட்டம் செய்து போலி மருத்துவம் செய்பவர்களைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த போர்டில் ஒரு ஹோலோகிராம் (Hologram) இருக்கும். நமது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து இந்த இந்த ஹோலோகிராமுடன் ஒப்பிட்டுப் போலி மருத்துவரைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த ஸ்மார்ட் போர்டு திட்டம் மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம்பெற்ற மருத்துவருக்கு மட்டுமே கொடுக்கப்படும். இது இன்னும் முழுஅளவில் நடைமுறைக்கு வராவிட்டாலும் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இதுபற்றி மேலும் விவரம் அறிய http://tnmedicalcouncil.org என்ற இணையதளத்துக்குச் சென்று பார்க்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பட்டப் படிப்புகள் பற்றிய விவரங்களை அறிய http://www.mciindia.org என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

போலி டாக்டர்களால் ஏற்படும் ஆபத்துகள்!: போலி மருத்துவர்களுக்கு மருத்துவத்தின் அடிப்படை அறிவியலான உடல் கூறியல் (Anatomy),  உடல் செயலியல் (physiology), உயிர் வேதியியல் (Bio Chemistry), மருந்தியல் ( (Pharmacology), நோய்க்குறியியல் (Pathology),  நுண்ணுயிரியல் (Micro Biology) போன்றவை அறவே தெரியாது. அத்துடன் மருத்துவ அறிவியல் படிப்புகளின் அடிப்படைகளும் அவர்களுக்குத் தெரியாது. இவை எதுவும் தெரியாமல் அனுபவ அடிப்படையில் மட்டுமே மருத்துவம் செய்வதால் நோயாளிகளின் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் கொடுக்கும் தவறான மருந்துகளால் நாள்பட்ட நோய்களான சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சிலநேரங்களில் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேதபிரகாஷ்

12-04-2023


[1] விகடன்,   போலி மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்! , டாக்டர் டி.முஹம்மது கிஸார், Published: 04 Dec 2018 12 PM; Updated:04 Dec 2018 12 PM.

[2] https://www.vikatan.com/health/medicine/143756-how-to-find-fake-doctor

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? (1)

ஏப்ரல் 12, 2023

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? (1)

போலி டாக்டர்கள் கைது: தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நன்னிலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்[1]. இந்த சோதனையில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்களை கண்டறிந்தனர்[2]. இது தொடர்பாக மாப்பிள்ளைகுப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில், கொல்லுங்மாங்குடியைச் சேர்ந்த சிவக்குமார், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், நாச்சிகுளம் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்[3].

தொடர்ந்து நடவடிக்கை; இதுபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் மருத்துவம் படிக்காமலே ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்[4]. இதனிடையே, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக வரும் பொது மக்களுக்கு அதிக அளவு உள்ள டோஸ் மருந்து செலுத்துவதாக மருத்துவதுறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ஊரக மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் சாந்தி கொட்டாயூரில் உள்ள கொட்டாயூர் கிராமத்தில் முனுசாமி என்பவரது கிளினிக்கில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றியும், முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் முனுசாமியை கைது செய்தனர்.

10 நாட்களில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது: தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 10 நாட்களில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. கேரளா, ஆந்திராவில் மருத்துவராக பயில்வதற்கான விதிகள் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் மருத்துவராக பயில்வதாக புகார்கள் வந்துள்ளன[6]. மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு, காவல்துறை உதவியுடன் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவம் பயிலாமல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், மருத்துவத் தொழில் செய்து வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, தேனி உட்பட எல்லையோர மாவட்டங்களில் இதுவரை 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்த மருத்துவர் அல்லோபதி மருத்துவம் பார்ப்பது: சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகாவில் தின்னப்பட்டி ரயில் நிலையம்  உள்ளது. இந்த ரயில்வே நிலையம் அருகில் போலி மருத்துவர் ஒருவர் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக சுகாதாரத்துறையினருக்கு புகார் வந்தது[7]. தகவலின்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்[8]. அப்பொழுது சித்த மருத்துவம் படித்துவிட்டு ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆண்டரஸ் கிளினிக் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்து மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

உதவியாளராக வேலை பார்த்து மருத்துவர் ஆனது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு ராஜபாண்டி 39. மதுரை மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரரான இவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் 27 ல் வில்லாபுரத்தில் சிவா வர்மா கிளினிக்கிற்கு சென்றார். அவருக்கு சிவசுப்பிரமணி சிகிச்சை அளித்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராஜபாண்டி மயங்கினார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் இறந்தார். சிவசுப்பிரமணி மீது நடவடிக்கை கோரி ராஜபாண்டி மனைவி கண்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். சிவசுப்பிரமணி தனது பெயருக்கு பின்னால் எம்.டி., என்று குறிப்பிட்டிருந்ததால் அவரது மருத்துவ சான்றுகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய மருத்துவ துறைக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பரிந்துரைத்தார். மருத்துவக்குழு ஆய்வு செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த இவர் 9ம் வகுப்பு தேர்வில் இருமுறை தேர்ச்சி பெறாமலும், பிறகு பிளஸ் 2 தொழிற்பாடப்பிரிவில் சேர்ந்து படித்து திருத்தணி, திருவள்ளூரில் எலக்ட்ரீசியனாக வேலை செய்ததும் தெரிந்தது. அதில் போதிய வருமானம் கிடைக்காததால், மதுரை பகுதியில் தலைச்சுமையாக ஜவுளி விற்றார். அதிலும் வருமானம் கிடைக்காத நிலையில், சித்த வைத்தியம் பார்த்த ராமலிங்க சுவாமி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் ‘எடுபிடி’ யாக வேலைக்கு சேர்ந்து, சிகிச்சை அளிப்பதை பார்த்து பார்த்து தொழில் கற்றுக்கொண்டார். பின்னர் போலியாக பீகாரில் சித்த வைத்தியத்திற்கு சான்று பெற்று 10 ஆண்டுகளாக வில்லாபுரத்தில் மருத்துவ தொழில் செய்து வந்துள்ளார். இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த ஒருவரின் அங்கீகார எண்ணை பயன்படுத்தி கிளினிக் நடத்தி வந்துள்ளார்[9]. போலீஸ்காரர் ராஜபாண்டி இறந்த வழக்கில், மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சிவசுப்பிரமணியை 07-04-2023 அன்று இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கைது செய்தார்[10].  10-04-2023 அன்று, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தில் வீட்டில் 12ஆம் வகுப்பு படித்து, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் பெரியசாமி என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்[11].

தீர்வு என்ன – என்ன செய்ய வேண்டும்? முன்பெல்லாம் மருத்துவ சிகிச்சை இலவசமாகத்தான் இருந்தது. இந்திய ராஜாக்கள் ஆண்ட போது, எல்லாமே இலவசமாகத்தான் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் அம்முறை மாற்றப்பட்டபோது, மாறியபோது, பல சீர்கேடுகள் ஏற்பட்டதில், இதுவும் ஒன்று எனலாம். இப்பொழுதுள்ள முறையில் மருத்துவ படிப்பு முதல் சிகிச்சை வரை பணம் தான் பிரதானம் என்ற நிலையுள்ளது. இந்நிலையை மாற்ற வேண்டும்.

  1. மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கப் படவேண்டும். நூற்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இல்லை, உணவு சுத்தமாக ஆரோக்யமாக இருக்க வேண்டும். உணவு கலப்படம் முதலியவற்றைப் போக்க வேண்டும்.
  2. மருத்துவர்கள் தங்களது பொதுநல சேவை, தார்மீக எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. பணம் சம்பாதிக்க வேண்டும், ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்ற லாபநோக்கில் இருக்கும் போது, அவர்களால் நிச்சயமாக தங்களது மருத்துவத் தொழிலை நியாமாக செய்ய முடியாது.
  4. அரசு / பொது மருத்துவ மனைகள் அதிகமாக்கப் பட வேண்டும். நகரங்களைத் தவிர, நகர் புறங்கள், கிராமங்களில் மருத்துவ மனைகள் அதிகமாக்கப் படவேண்டும்.
  5. டாக்டர்கள் மாதத்திற்கு ஒருதடவை அங்கு சென்று மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும். கம்பெனிகள் அதற்கு “ஸ்பான்சர்” செய்ய வேண்டும்.
  6. மருந்துகள், பரிசோதனைகள், சோதனைகள் முதலியவற்றின் விலை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது அரசு அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டும். இதில் ஏகப்பட்ட ஊழல்கள் / மோசடிகள் / வரியேய்ப்புகள் நடந்து வருகின்றன. அவற்றை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.
  7. ஆயுர்வேத, சித்தா, யுனானி முறைகளிலும் நவீனமுறைகளைப் பின்பற்றி, மக்களுக்கு உபயோகமாக செயல்படுத்த வேண்டும். “கிளினிகல்” முறைகள் பின்பற்றப்படவேண்டும். நோயாளிகளின் “மருத்துவ சிகிச்சை சரித்திரம்” (கேஸ் ஹிஸ்டரி) பாதுகாக்கப்படவேண்டும்.
  8. முதலில் மருத்துவப் படிப்பு என்பது பணக்காரர்களுக்கு அல்லது லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் தான் சீட் கிடைக்கும் என்ற நிலையினையும் மாற்ற வேண்டும்.
  9. படிக்க வேண்டும் என்ற ஆசை, மனப்பாங்கு, தகுந்த பாவம் உள்ளவர்களை நுழைவு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படலாம். அப்பொழுது அந்த பணபலம் குறையும்.
  10. சேவை எண்ணம் இல்லாமல், மருத்துவத் தொழில் செய்ய முடியாது, ஆகவே, அத்தகைய எண்ணம் இல்லாதோர், மருத்துவத் தொழிலுக்கு வராமல் இருப்பதே நல்லது.

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், Thiruvarur: திருவாரூரில் ஷாக்.. ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் அதிரடி கைது!, Karthikeyan S, 08 April 2023, 12:34 IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/10-fake-doctors-arrested-in-thiruvarur-131680936986089.html

[3] தமிழ்.நியூஸ்.18, 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைதுதமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை…!, NEWS18 TAMIL, First published: April 11, 2023, 19:11 IST, LAST UPDATED : APRIL 11, 2023, 19:11 IST.

[4] https://tamil.news18.com/tamil-nadu/72-fake-doctors-arrested-in-last-10-days-by-tamil-nadu-police-936421.html

[5] தினத்தந்தி, தினத்தந்தி, 10 நாளில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது, By தந்தி டிவி, 12 ஏப்ரல் 2023 7:24 AM.

[6] https://www.thanthitv.com/latest-news/71-fake-doctors-were-identified-and-arrested-in-10-days-179511

[7] நியூஸ்7தமிழ், சேலம் அருகே போலி மருத்துவர் கைது!, —கோ. சிவசங்கரன், by Web Editor, April 10, 2023

[8] https://news7tamil.live/omalur-duplicate-doctor-arrest.html

[9] தினமலர், பார்த்த அனுபவத்தில் வைத்தியம் பார்த்த போலி மருத்துவர் கைது: சுளுக்கு எடுத்த போலீஸ்காரர் இறந்த வழக்கில் திருப்பம், பதிவு செய்த நாள்: ஏப் 08,2023 00:02

[10]  https://m.dinamalar.com/detail.php?id=3287827

[11] தமிழ்.ஏபிபி.லைவ், கரூர்: குளித்தலை அருகே கிராமத்து வீட்டில் மருத்துவம்போலி மருத்துவர் கைது, By: பிரபாகரன் வீரமலை | Published at : 11 Apr 2023 02:11 PM (IST), Updated at : 11 Apr 2023 02:11 PM (IST)

https://tamil.abplive.com/crime/karur-news-medicine-at-karur-village-house-fake-doctor-arrested-tnn-111254

ஹீலர் பாஸ்கர், சித்தர் தணிகாசலம் மற்றும் மருந்து தயாரிப்பாளர் சிவநேசன்: தமிழகத்தில் மருந்து, சிகிச்சை மற்றும் நோய்-தீர்ப்பு போர்வையில் நடப்பது என்ன? உண்மை நிலை என்ன?

மே 9, 2020

ஹீலர் பாஸ்கர், சித்தர் தணிகாசலம் மற்றும் மருந்து தயாரிப்பாளர் சிவநேசன்: தமிழகத்தில் மருந்து, சிகிச்சை மற்றும் நோய்தீர்ப்பு போர்வையில் நடப்பது என்ன? உண்மை நிலை என்ன?

Baskar, Thanikachalam, Sivanesan

ஹீலர் பாஸ்கர், சித்தர் தணிகாசலம் போன்றவர்கள் போல் அல்லாது, பரிசோதனையில் இறங்கிய மருந்து உற்பத்தியாளர்கள்: தமிழகத்தில் எப்பொழுதுமே, எந்த நோய் வந்தாலும், அதனை தீர்க்க முடியும் என்று மருந்தை சொல்ல ஆரம்பித்து விடுவர். ஏதாவது ஒரு கஷாயத்தைக் குடி என்பவர். இதற்கெல்லாம் கிளினிகல் பரிசோதனை உள்ளதா, செய்யப் பட்டதா, இந்திய மருத்துவம் மற்றும் மருந்தியல் ரீதியில் [Clinical results] அத்தாட்சி சான்றிதழ் [IP] பெற்றுள்ளதா என்பது போன்ற கவலையே இல்லை. ஊடகங்களும் அதற்கு பெரிதாக விளம்பரம் கொடுக்கும், உடனே குறிப்பிட்ட நபர்கள் வியாபாரத்தை ஆரம்பித்து விடுவர். கடந்த மார்ச் மாதத்தில், இதே விவகாரத்தில் ஹீலர் பாஸ்கர் கைது எய்யப் பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார். இதே விவகாரகத்தில், சென்ற புதன்கிழமை 06-05-2020 அன்று காலையில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் போலி மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அந்நிலையில், அதே கொரோனாவுக்கு மருந்து கண்டு பிக்கும் முயற்சியில், பரிசோதனை செய்யும் முயசியில், ஒருவர் இறந்துள்ளது திகைப்பாக உள்ளது. முன்னர் இருவர், சோதனை, பரிசோதனை பற்றி கவலைப் படவில்லை.

ஸுஜத இஒடெச்

சுஜாதா பயோடெக் நிறுவனத்தின் சிவநேசன் ஆராய்ச்சியில் இறங்கியது: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சுஜாதா பயோடெக் நிறுவனம், பிரபல மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளராகவும் மருந்தாளுனராகவும் பணியாற்றி வந்தவர் சிவனேசன் (வயது 47)[1]. இந்த நிறுவனம் இயற்கை மற்றும் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம்தான், நிவாரண் 90 என்ற பிரபல மருந்தை தயாரிக்கிறது. வெல்வெட் ஹெர்பல் ஷாம்பு, மெமரி விட்டா போன்றவையும், இந்த நிறுவன தயாரிப்புதான். 20 ஆண்டுகளுக்கும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவனேசன் பல்வேறு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்[2]. பெருங்குடியைச் சேர்ந்தவர். வேதியியல் துறையில், முதுகலை படிப்பு முடித்தவர். சுஜாதா நிறுவனத்தில் இவர் 27 ஆண்டுகளாக பணியில் இருந்தவர்[3]. நிவாரண் 90 தயாரிக்கும் தொழிற்சாலை, உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ளது[4]. பொதுவாக அங்குதான் சிவநேசன் இருப்பார்[5]. ஆனால், சென்னை வந்த சிவநேசன், ஊரடங்கால், காசிப்பூர் நிறுவனத்திற்கு திரும்ப முடியவில்லை[6]. இந்த நிலையில்தான், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என நிறுவன உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் முடிவு செய்து, அதை சிவநேசனிடம் கூறியுள்ளார்.

Dr Rajkumar with Rosaiah-Sujatha Biotec

சோடியம் நைட்ரேட் வைத்து கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடித்தது: இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சிவனேசன் ஈடுபட ஆரம்பித்தார்[7]. ஆய்வில், வெடி பொருட்கள் தயாரிக்கவும் இறைச்சி, பொருட்களை பதப்படுத்தவும் பயன்படுத்தப்படும் சோடியம் நைட்ரேட் உடன் சில மூலக்கூறுகளைச் சேர்த்தால் அதன் மூலம் கிடைக்கும் கரைசல் ரத்த உற்பத்தியைப் பெருக்கும் என்று இருவரும் நம்பியதாக கூறப்படுகிறது[8]. சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்தும், அதை மருந்தாக மாற்றினால், மருந்து கிடைக்கும் என்று நம்பினர்[9]. இதற்கான பாரிஸ் கார்னரிலிருந்து சோடியம் நைட்ரேட் வாங்கி வந்து, அதை கலந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மருந்தை உருவாக்கி உள்ளார்[10]. இதற்கான மூலக்கூறுகள் வேதியியல் நிபுணர் சிவநேசன் கண்காணிப்பில் தான் நடக்கும். இதன் அடிப்படையில் ஏற்கனவே உள்ள மூலக்கூறுகளை வைத்து மேலும் சில மருந்து பொருட்கள் சேர்த்து கொரோனாவுக்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக சோடியம் நைட்ரேட் வாங்கி வந்து அதன் மூலம் புதிய வேதியியல் கரைசலை உருவாக்கியதாக கூறப்படுகிறது[11]. இந்நிறுவனத்தில் எந்த மருந்து தயாரித்தாலும், அதை சிவநேசன் தான் முதலில் உட்கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபடுவார்[12].

K. Sivanesan, The pharmacist-cum-production manager

08-05-2020 அன்று மருந்தை உட்கொண்டு, சுயபரிசோதனை செய்து கொண்டது: இதையடுத்து 08-05-2020, வியாழக்கிழமை அன்று அந்த மருந்தை நிறுவன உரிமையாளரான டாக்டர் ராஜ் குமாரின் ஜி.என். செட்டி சாலையில் உள்ள வீட்டில் வைத்து சோதனை செய்ய முயற்சித்துள்ளனர். சமைல் அறையில் தயாரித்த அந்த கலவையை சோதிக்க முயன்றனர். முதலில் டாக்டர் ராஜ் குமார் மருந்தை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். ஆனால், 10 நிமிடங்களில் அவர் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார். இந்த மருந்து கரைசலை குறைவாக உட்கொண்டதால், ராஜ்குமார் சிகிச்சைக்கு பிறகு நலமடைந்துள்ளார். இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது, மருந்தை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. சிவனேசனும் மருந்தை உட்கொண்டுள்ளார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். ஆனால் அவர் மயக்க நிலையில் இருந்து மீளவில்லை. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவனேசன் உயிரிழந்தார்.  இன்னொரு செய்தி, இருவரையும் மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றனர், அங்கு முதலில் ராஜ்குமார் நினைஉக்கு வந்தார், ஆனால், சிவநேசன் இறந்தார் என்று கூறுகிறது.

Sujatha biotech killed, DM, 09-05-2020

போலீஸ் வழக்கு பதிவு முதலியன: இந்நிறுவனத்தில் எந்த மருந்து தயாரித்தாலும், அதை சிவநேசன்தான் உட்கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபடுவது வழக்கமாம்[13]. எனவே இந்த மருந்தையும் உட்கொண்டு, ராஜ்குமாருக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது[14].கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க உலகமெங்கும் பல நாடுகளில் விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். சரியான வழிமுறை இல்லாத காரணத்தாலும் ஆர்வ மிகுதியாலும் உயிரிழப்பு நடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருந்தாளுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்து தயாரிப்பில் சிவனேசனுடன் டாக்டர் ராஜ் குமாரும் இணைந்து செயல்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. சிவனேசனுக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகும். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

How pharmacist died Tamil Hindu, 09-05-2020

மருந்து, சிகிச்சை போன்றவற்றில் உண்மை இருக்க வேண்டும்: 06-05-2020 அன்று போலி மருத்துவர் கைது, 08-05-2020 அன்று உண்மையான மருத்துவ ஆராய்ச்சியாளர் தானே தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு இறந்தது, முன்னர், ஹீலர் பாஸ்கர் கைதாகி வெளியே வந்தது முதலியன, ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். தமிழகத்தில், வெறும் தமிழ்-தமிழ் என்றோ, சித்த வைத்தியம் என்றோ சப்தம் போட்டுக் கொண்டிருந்தால் போறாது. மருத்துவ முறையில் பரிசோதித்து, ஆய்ந்து, ஒப்புதல் பெற்று மருந்தை விற்பனைக்கு எடுத்து வரவேண்டும்.  ஆகையால், வெற்றுப் பிரச்சாரம் அல்லது அளவுக்கு மீறிய ஆர்வ மிகுதி முதலியன மருந்து கண்டுபிடிப்புகளுக்கு, நோய் தீர்க்கும் சிகிச்சைகளுக்கு உதவாது.  படிப்படியாக, ஆய்ந்து, சோதித்து, மருந்தை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் அது ஏற்புடையதாக இருக்கும். மக்களுக்கு உதவும். ஆர்பாட்டத்தால், மேடை பேச்சுகளால், டிவி-போன்ற கவர்ச்சிகளால் மருந்து வேலை செய்யாது, குணம் ஆகாது. என்றாவது, ஏமாற்றும் முறைகள் வெளிப்படும். எனவே உயிரோடு விளையாடும் போக்கில், போலிகள் எந்த விதத்திலும் நுழையக் கூடாது. இங்கு எத்தகைய உணச்சிகளுக்கும், இடம் கொடுக்கலாகாது.

© வேதபிரகாஷ்

09-05-2020

K. Sivanesan killed, Sujatha Biotech, Chennai - 24

[1] மாலைமலர், விபரீதத்தில் முடிந்த பரிசோதனைகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற மருந்தாளுநர் பலி, பதிவு: மே 09, 2020 10:08 IST

[2] https://www.maalaimalar.com/news/district/2020/05/09100828/1500343/GM-of-top-Chennai-biotech-firm-consumes-drug-he-invented.vpf

[3] தமிழ்.முரசு, சோதனை முயற்சி: ஒருவர் பலியானார், 9 May 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2020 09:53.

[4] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20200509-43740.html

[5] தினமலர், கொரோனா மருந்து ஆராய்ச்சி: சோகத்தில் முடிந்த பரிதாபம், Updated : மே 08, 2020 19:57 | Added : மே 08, 2020 19:54.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2535676

[7] தினத்தந்தி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி: ‘சோடியம் நைட்ரேட்கரைசலை குடித்த தனியார் நிறுவன மேலாளர் சாவு, பதிவு: மே 09, 2020 04:45 AM.

[8] நியூஸ்.18, கொரோனாவுக்கான மருந்து ஆராய்ச்சி: ரசாயனக் கலவையை குடித்த மருத்துவ வல்லுநர் உயிரிழப்பு..!, NEWS18 TAMIL, LAST UPDATED: MAY 9, 2020, 12:51 PM IST.

[9] https://tamil.news18.com/news/coronavirus-latest-news/coronavirus-chennai-based-ayurvedic-pharmacist-dies-after-drinking-concoction-of-his-own-preparation-289247.html

[10] https://www.dailythanthi.com/News/Districts/2020/05/09043038/Trying-to-find-medicine-for-the-corona-Drinking-sodium.vpf

[11] தமிழ்.சமயம், கொரோனாவுக்கு மருந்து? – சுய பரிசோதனை செய்த தனியார் நிறுவன அதிகாரி பலி!!, Giridharan N | Samayam Tamil, Updated: 09 May 2020, 02:21:00 AM.

[12] https://tamil.samayam.com/latest-news/chennai-news/man-dies-in-chennai-who-trying-to-develop-vaccine-for-coronavirus/articleshow/75629039.cms

[13] தமிழ்.ஒன்.இந்தியா, கொரோனாவுக்கு மருந்து தயாரித்து குடித்து பார்த்த பிரபல மருந்து நிறுவன மேலாளர் பலி.. சென்னையில் சோகம், By Veerakumar, Updated: Saturday, May 9, 2020, 1:14 [IST]

[14] https://tamil.oneindia.com/news/chennai/general-manager-of-a-pharmaceutical-company-in-chennai-take-self-medicine-for-corona-died-384959.html

தணிகாசலம் கைது: சித்த மருத்துவம், நோய்மூலம் அறியாத் தன்மை, நெடுங்கால சிகிச்சை முதலியவை ஆபத்து காலங்களில் உதவாது! [2]

மே 8, 2020

தணிகாசலம் கைது: சித்த மருத்துவம், நோய்மூலம் அறியாத் தன்மை, நெடுங்கால சிகிச்சை முதலியவை ஆபத்து காலங்களில் உதவாது! [2]

Corona clinical test and medicine

அல்லோபதி அல்லாத மருத்துவர்களின் சிகிச்சை தெளிவற்றது, முடிவு அறியாதது: மேலே அல்லோபதி அல்லாத மருத்துவர்கள், கூறியுள்ளதை ஒன்றோன்றாக பட்டியல் இடப் பட்டு அலசப் படுகிறது.

பாரம்பரிய மருத்துவர்களின் சரத்துகள்

விளக்கம், விமர்சனம்

1.       நிரூபிக்க வேண்டுமானால், விருப்பமுள்ள கொரோனா நோயாளிகளுக்கு, பாரம்பரிய சிகிச்சையை, முதன்மை சிகிச்சையாக அளிக்க வேண்டும்.

இப்பொழுதுள்ள அபாயகரமான உயி போகும் நிலையில், சீக்கிரமாக குணம் அடைய வேண்டும், உயிர் பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருப்பான். இருப்பத்துடன், காலதாமதமாகும் சிகிச்சைக்கு உட்பட விரும்ப மாட்டான்.
2.       நோயாளிகள், அரசு விதிகளின் படி, மருத்துவ மனைகளில் அலோபதியின் ஆதரவு சிகிச்சையை பெற்று வரலாம்.

பிறகு, எந்த சிகிச்சையில் பிழைத்தான் என்று சொல்ல முடியும்?

3.       பாரம்பரிய மருத்துவ முறையில், ஒவ்வொரு புதிய கிருமிக்கும், தனித்தனியாக மருந்து கண்டறியப்படுவதில்லை.

அப்படியென்றால் கிளினிகல் முறையே இல்லை என்றாகிறது. அதாவது குருட்டாம்போக்கு சிகிச்சை என்றாகிறது.

4.       மாறாக, உடலில் அந்த கிருமி பல்கி பெருகாமல் இருக்க தேவையான சூழலை ஏற்படுத்துவதே முக்கியநோக்கம்.

கிருமி, அதன் குணாதசியங்கள் தெரியாத நிலையில், அவ்வாறு சூழல் என்பது எல்லாம் யேஸ்யமே தவிர, குறிப்பானது ஆகாது.

5.       அதனால், பொதுவாக ஒரு சில மருந்துகளை, ஒரு நோய்க்கு பரிந்துரை செய்ய முடியும் என்றாலும், ஒவ்வொருவரின் உடல் நிலையையும் பொருத்து, மருந்தின் அளவு, கூட்டு மருந்துகள் என, சில மாற்றங்கள் தேவைப்படும்.

அலோபத்தியில் குறிப்பிட்ட நோயுக்கு, குறிப்பிட்ட மருந்து, சிகிச்சை என்றுள்ளது. தனிமனித வேறுபாடுகள், பொதுவாக குறுக்கில் வருவதில்லை.

6.       அதற்கான சுதந்திரத்தை அரசாணை பறிக்கிறது. பாரம்பரிய மருந்துகள் காலம்காலமாக புழக்கத்தில் உள்ளவை. அவற்றால், உயிருக்கு எந்த தீங்கும் வராது.

எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான, பொதுப்படையான மருந்துகள், காலம் நீட்டிக்கும் சிகிச்சை, முடிவு தெரியாத தெளிவில்லாத பிரயோகங்கள் உதவாது.

7.       அலோபதியில், கொரோனாவிற்காக உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள், என்னென்ன எதிர்பாரா விளைவுகளை உருவாக்கும்; நீண்டகாலத்திற்கு பின் அவற்றால் பாதகம் வருமா என்றெல்லாம் தெரியாது.

இது தெரிந்த விசயம் தான், தெரிந்து தான் மருந்து கொடுக்கப் படுகின்றன. நோய் தீரும் வெற்றியைப் பொருத்து மருந்து சிறப்பைப் பெருகிறது. உடனடி பலன் அதை மெய்ப்பிக்கிறது.
8.      பாரம்பரிய மருத்துவத்தை, கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என, நாங்கள் கூறவில்லை. எங்களுக்கு சிகிச்சை சுதந்திரம் அளித்து, உரிய முறையில், நோயாளிகளின் முன்னேற்றம் பற்றிய தரவுகளை அரசு சேகரிக்கட்டும்.

நோயின் மூலம் தெரியாது, மருந்து தெரியாது, சிகிச்சை மற்றும் முடிவும் தெரியாது. அந்நிலையில், மருந்துகள் கொடுத்து பரிசோதனை செய்வது போன்ற நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது. நீண்டகால சிகிச்சையும் பலனில்லை.

9.       எங்களுக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால், உயிர்களை காக்க ஓர் அரிய வாய்ப்பு நம்மை விட்டு விலகிவிடும்.

கொரோனா நோய்கொல்லி, லட்சக் கணக்கான உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கிறது, அந்நிலையில், மிரட்டல்கள் பலனளிக்காது.

இதிலிருந்து, இம்மருத்துவர்கள் இன்னும் எல்லா நோய், சிகிச்சை, மருந்து முதலிவற்றைப் பற்றிய முழுமையான முறையமைத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஏதோ, நோயாளிகளை வைத்து சோதனை, பரிசோதனை, ஆராய்ச்சி செய்யும் நோக்காக அவர்களது அணுகுமுறை உள்ளது.

Corona clinical test and approval

பாரம்பரிய மருத்துவர்கள் சோதனை, பரிசோதனை, ஆராய்ச்சி கூடங்களில் சோதனை, பரிசோதனை, ஆராய்ச்சி வேலை செய்யவேண்டும்: அல்லோபதி முகமூடி அணிந்து, இங்கிலீஸ் சோதனைக் கூடங்களை பயன்படுத்திக் கொண்டு, அதன் அடிப்படையில் விவரித்து, தமிழில் பேசி, சித்தர்-சித்தர் என்ரு சொன்னால், சித்த மருத்துவம் ஆகி விடும் போன்ற போக்கைக்கடைப்பிடிப்பது சரியில்லை. கீழ்கண்டவற்றை கவனித்து, அம்முறையில் சிறக்க வேண்டும்.

  1. மருந்து என்றால் அதற்கு ஒரு ஃபார்முலா [formula], அதாவது ரசாயன மூலங்கள்-சேர்மங்களின் இணைப்பின் சூத்திரம் இருக்க வேண்டும்.
  1. அவையெல்லாமே, இந்திய பார்மகோபியா கமிஷன் [Indian Pharmacopoeia Commission (IPC)] பரிந்துரைக்கப் பட்ட தரநிர்ணயங்களுடன் இருக்க வேண்டும்
  1. அது படிப்படியாயக, விலங்குகளுக்குக் கொடுத்து சோதனை நடத்தி ஒரு மாதம், ஆறு மாதங்கள், ஒரு வருடம் என்று காலகட்டங்களில் எந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது, பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதையெல்லாம் ஆராய வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.
  1. இடையில் சரியில்லை என்றால், அந்த மருத்துவக் கலப்பு, மருந்து சேர்மங்கள் மாற்றப் படும். மறுபடியும் பரிசோதனை ஆரம்பிக்கும்.
  1. அதாவது, மேற்படி மறுபடியும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இது, பலமுறைக் கூட ஏற்படலாம்.
  1. பிறகு, மனிதனின் நோய் தீர்க்க, மனிதனுக்குக் கொடுக்க முடியும் என்று முடிவுக்கு வர வேண்டும். கொடுக்க வேண்டும்.
  1. அத்தகைய மருத்துவ, மருந்து மற்றும் ஆராய்ச்சிக் கூட, (clinical testing) சொதனைகளுக்குப் பிறகு அது இந்தியன் பார்மகோபியா [Indian Pharmacopoeia (IP)/ Indian Pharmacopoeia Commission (IPC)] நெறிமுறைகளுக்கு ஏற்றப்படி இருக்க வேண்டும்.
  1. இந்திய மருந்து மற்றும் இதர ரசாயனங்கள் சட்டம் மற்றும் விதிமுறைகள் [the Drugs and Cosmetics Act, 1940 and Rules 1945 there under] கீழ் பதிவு செய்ய வேண்டும்.
  1. பிறகு, விற்பனைக்குரிய மருந்தாகும். உற்பத்தி முறையில், உற்பத்தி செய்யலாம், கடைகளுக்கு அனுப்பி விற்கலாம்.
  1. இவையெல்லாம் செய்யாமல், எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது, என்று மணிக்கணக்கில் டிவியில், விடியோவில் பேசினால் போதாது!

© வேதபிரகாஷ்

07-05-2020

Corona clinical test and research

தணிகாசலம் கைது: சித்த மருத்துவம், நோய்மூலம் அறியாத் தன்மை, நெடுங்கால சிகிச்சை முதலியவை ஆபத்து காலங்களில் உதவாது! [1]

மே 8, 2020

தணிகாசலம் கைது: சித்த மருத்துவம், நோய்மூலம் அறியாத் தன்மை, நெடுங்கால சிகிச்சை முதலியவை ஆபத்து காலங்களில் உதவாது! [1]

Tamil Siddhar Thanikachalam challenge - allow me as ward boy, I cure all -4

ரத்னா சித்த மருத்துவமனைமருத்துவர் தணிகாசலம்: சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர், இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார்[1]. தனக்கு அதிகமாக பணம் வந்ததால், தொலைகாட்சிகளில் பேட்டி போன்ற விளம்பரங்கள் கொடுத்து, நோயாளிகளை இழுத்து வந்தார். நோயாளிகளில் சிலர் இவர் மீது, புகாரும் கொடுத்துள்ளனர். சாதாரண நோய்களுக்கு அதிகமாக பீஸ் வாங்குகிறார், மருந்துகளை அதிகமாக விற்று காசைப் பிடுங்குகிறார் போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார்[2]. தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால், தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்[3]. இது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு அரசில் உள்ள பலருக்கும் சவால் விடுத்தார் தணிகாசலம்[4]. ஐநா, சீன அரசாங்கம் தன்னை அணுகியது என்றெல்லாம் வீடியோக்களை சுற்றில் விட்டதாகத் தெரிகிறது. தன்னை வார்ட் பாயாக உள்ளே விட்டால், எல்லா கொரோனா நோயாளிகளையும் குணப்படுத்தி விடுவேன் என்றேல்லாம் சவால் விடுத்துள்ளார்.

No clarity in frecommending Siddha medicine, Dinamalar, 25-04-2020-1

கொரோனா நோய்க்கு தீர்வு காணும் வகையில், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, யோகா, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி என, ஆயுஷ் மருத்துவ முறை வல்லுனர்கள் அடங்கிய குழு: தமிழக அரசின், ஆரோக்கியம் திட்டம் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு, உரிய வாய்ப்பு தருவதாக அமையவில்லை’ என, ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். கொரோனா நோய்க்கு தீர்வு காணும் வகையில், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, யோகா, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி என, ஆயுஷ் மருத்துவ முறை வல்லுனர்கள் அடங்கிய குழுவை, தமிழக அரசு அமைத்தது[5]. அந்த குழுவின் பரிந்துரைகளை, தமிழக அரசு, ‘ஆரோக்கியம்’ என்ற பெயரில் திட்டமாக அறிமுகம் செய்தது[6]. அதன்படி, கொரோனா வராமல் தடுக்கும் வகையில், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு, சில ஆயுஷ் சிகிச்சைகள்; கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து, வீடு திரும்பியோர் உடல் நலம் மேம்பட, சில ஆயுஷ் சிகிச்சைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிகுறி இல்லாமல் லேசாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு, கூடுதல் சிகிச்சையாக சித்த மருந்துகள் கொடுக்க அனுமதி உள்ளது. அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும், கூடுதல் சிகிச்சையாக நேச்சுரோபதி வைத்தியங்கள் மற்றும் யோகா பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை, பாரம்பரிய மருத்துவ முறைகளை, அலோபதிக்கு பக்கவாத்தியமாக ஆக்குவது போல் உள்ளது என, ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், வல்லுனர் குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், ஆரோக்கியம் திட்டத்தில் முழுமையாக சேர்க்கப்படவில்லை என்றும் பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

No clarity in frecommending Siddha medicine, Dinamalar, 25-04-2020-2

இதுகுறித்து, அல்லோபதி அற்ற மருத்துவர்கள் கூறியதாவது: ஆரோக்கியம் திட்டத்தின் அரசாணை, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அரசாணைக்கு முரண்பாடாக உள்ளது.மத்திய அரசின் ஆணைப்படி, உரிய தகவல் அளித்துவிட்டு, ஆயுஷ் மருத்துவர்கள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். இதுவரை, அலோபதியில் இந்த நோய்க்கு மருந்து இல்லை என, அந்த துறையினர் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர். மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோருக்கு, ஆதரவு சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், இதை பூரணமாக போக்க வைத்தியம் உள்ளது. இதை நிரூபிக்க வேண்டுமானால், விருப்பமுள்ள கொரோனா நோயாளிகளுக்கு, பாரம்பரிய சிகிச்சையை, முதன்மை சிகிச்சையாக அளிக்க வேண்டும். நோயாளிகள், அரசு விதிகளின் படி, மருத்துவ மனைகளில் அலோபதியின் ஆதரவு சிகிச்சையை பெற்று வரலாம். சிக்குன் – குனியா மற்றும் டெங்கு நோய்களுக்கு, அலோபதி கைவிரித்த போதிலும், பாரம்பரிய மருத்துவம் தான் தீர்வு கண்டது. அதன்படி ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை திட்டம் தான், இன்றுவரை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

Govt notice on Thaniksachalam

பாரம்பரிய மருத்துவ முறையில், ஒவ்வொரு புதிய கிருமிக்கும், தனித்தனியாக மருந்து கண்டறியப்படுவதில்லை[7]: “சீனாவிலும், அவர்களுடைய பாரம்பரிய மருத்துவம் தான், இறப்புகளை கட்டுப்பத்த உதவியது. மாறாக, அலோபதியை மட்டுமே நம்பியுள்ள மேற்கத்திய நாடுகளில் இறப்புகள், பல மடங்கு அதிகமாக உள்ளன. பாரம்பரிய மருத்துவ முறையில், ஒவ்வொரு புதிய கிருமிக்கும், தனித்தனியாக மருந்து கண்டறியப்படுவதில்லை. மாறாக, உடலில் அந்த கிருமி பல்கி பெருகாமல் இருக்க தேவையான சூழலை ஏற்படுத்துவதே முக்கியநோக்கம். அதனால், பொதுவாக ஒரு சில மருந்துகளை, ஒரு நோய்க்கு பரிந்துரை செய்ய முடியும் என்றாலும், ஒவ்வொருவரின் உடல் நிலையையும் பொருத்து, மருந்தின் அளவு, கூட்டு மருந்துகள் என, சில மாற்றங்கள் தேவைப்படும். அதற்கான சுதந்திரத்தை அரசாணை பறிக்கிறது. பாரம்பரிய மருந்துகள் காலம்காலமாக புழக்கத்தில் உள்ளவை. அவற்றால், உயிருக்கு எந்த தீங்கும் வராது. அலோபதியில், கொரோனாவிற்காக உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள், என்னென்ன எதிர்பாரா விளைவுகளை உருவாக்கும்; நீண்டகாலத்திற்கு பின் அவற்றால் பாதகம் வருமா என்றெல்லாம் தெரியாது.பாரம்பரிய மருத்துவத்தை, கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என, நாங்கள் கூறவில்லை. எங்களுக்கு சிகிச்சை சுதந்திரம் அளித்து, உரிய முறையில், நோயாளிகளின் முன்னேற்றம் பற்றிய தரவுகளை அரசு சேகரிக்கட்டும். எங்களுக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால், உயிர்களை காக்க ஓர் அரிய வாய்ப்பு நம்மை விட்டு விலகிவிடும்,” இவ்வாறு, அவர்கள் கூறினர்[8].

Thanikachalam started propaganda in Jan 2020 itself

ஜனவரி 2020ல் ஆரம்பிக்கப் பட்ட பிரச்சாரம்: இதற்குள், “சித்தர்” என்ற போர்வையில், நிறைய மருத்துவர்கள் கிளம்பினார்கள். முன்பு எய்ட்ஸ், பன்றி காய்ச்சல் போன்று, கொரோனா நோய்தீர்க்க மருந்து உள்ளது என்று ஆரம்பித்தனர். டிசம்பர் மாதத்தில் சீனாவில் தாக்கம் ஆரம்பித்தவுடன், ஜனவரி இறுதியில், தணிகாசலம் தனது பிரச்சாரத்தைத் துவங்கி விட்டார்[9]. “மூலிகை சாறுகளினால் தயாரிக்கப் பட்ட மருந்து என்னிடம் உள்ளது. அது எல்லாவிதமான வைரஸ்களால் உண்ட்சாக்கும் ஜுவரத்தைப் போக்கும். கரோனா வைரஸ் நீக்க எந்த மருந்தும் கிடையாது. சீனாவில் ஹுவானில் 50 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். எங்களது மூலிகை சாறு திரட்டு டெங்குவை குணப்படுத்துகிறது, பல உடல் பாகங்கள் வேலை செய்யாமல் போகும் நிலை மற்றும் கணையீரல் சுவரம் முதலியவற்றை குணப்படுத்தும்,” என்று பேட்டிக் கொடுத்தார்[10]. இதனால், விசயம் அரசாங்கத் துறைகளுக்குச் சென்றது. உலகத்திலேயே எங்கு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலை. அமெரிக்காவிலேயே ஆயிரக் கணக்கில் தினமும் செய்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, உஷரான அரசு, விசாரிக்க ஆரம்பித்தது.

Tail Siddhar Thanikachalam arrested-2

மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும் போலி சித்த மருத்துவர்: மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள இந்திய மருத்துவத் துறையின் இயக்குனர் காவல்துறையில் புகார் அளித்தார்[11]. இந்த புகார்களை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு விசாரித்துவந்தது[12]. இந்த நிலையில், புகார் தெரிவிக்கப்பட்ட அன்றே ஒரு வீடியோவை வெளியிட்ட தணிகாசலம் தான் மருந்து கண்டுபிடித்ததற்காக தன்னைக் கைதுசெய்வதென்றால் கைதுசெய்யட்டும் என்று கூறினார்[13]. இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும் போலி சித்த மருத்துவர் என்று தமிழக சுகாதாரத்துறை அண்மையில் அறிக்கையில் தெரிவித்து இருந்தது[14]. இந்திய மருத்துவம் மற்றம் ஹோமியோபதித் துறை மூலம் சென்னை, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் ”கோவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது,” என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tamil Siddhar Thanikachalam challenge - hang me -3

போலி சித்தர் தணிகாசலம் கைது: இதற்குப் பிறகு அவரது செல்போன் ‘ஸ்விட்ச் – ஆஃப்’ செய்யப்பட்ட நிலையில் இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை 06-05-2-20 அன்று காலையில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்[15]. அவர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 54வது பிரிவு, பெருந்தொற்றுப் பரவல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3, இந்திய தண்டனைச் சட்டத்தின் 188வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார். முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக பேசிவந்த ஒருவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது[16]. அரசு அங்கீகாரம் பெறாத மருத்துவ நிலையம் நடத்திவரும் போலி மருத்துவர் தணிக்காசலம் என்பவர் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறப்பட்டது[17].

© வேதபிரகாஷ்

07-05-2020

Fake doctor Thanikachalam arrested-1

[1] நக்கீரன், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் தணிகாசலம் கைது!, Published on 06/05/2020 (17:09) | Edited on 06/05/2020 (17:21).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-issue-siddha-doctor-thanikachalam-arrested

[3] புதியதலைமுறை, கொரோனாவுக்கு மருந்து என வதந்தி பரப்பியதாக தணிகாசலம் கைது, Web Team Published :06,May 2020 01:09 PM

[4] http://www.puthiyathalaimurai.com/newsview/69849/Siddha-doctor-Thanigasalam-held-by-police

[5] மாலைமலர், கொரோனா தடுப்பு மருந்து: சித்தாயுனானி மருத்துவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை, பதிவு: ஏப்ரல் 23, 2020 12:36 IST

[6] https://www.maalaimalar.com/news/district/2020/04/23123638/1447087/Edappadi-Palaniswami-consulting-with-Siddha-and-Ayurveda.vpf

[7] தினமலர், ஆயுர்வேத, சித்த மருந்துகள் பரிந்துரைப்பில் தெளிவில்லை பாரம்பரிய மருத்துவர்கள் புகார், Added : ஏப் 25, 2020 01:44

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2527397

[9] Speaking to ANI, he said: “We have formulated a medicine from an extract of herbs. It is very effective to cure any type of viral fever. Coronavirus has no medicine. In China’s Wuhan where Coronavirus has claimed over 50 lives, experts have no idea how to cure the disease. Our herbal extract medicine is used to treat dengue, multi-organ fever and acute liver fever.”

Times of India, Dr Thanikasalam Veni of Rathna Siddha Hospital in Chennai has 25-year of vast experience in field Siddha and Ayurvedic medicines,ANI January 28, 2020, 13:30 IST

[10] https://health.economictimes.indiatimes.com/news/diagnostics/siddha-doctor-from-tn-claims-to-have-invented-cure-for-coronavirus/73691161

[11] பிபிசி.தமிழ், தணிகாசலம் கைதுகோவிட் – 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தவரை கைது செய்தது போலீஸ், 6 மே 2020

[12] https://www.bbc.com/tamil/india-52556570

[13] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், கொரோனா மருந்து தருவதாக கூறிய வைத்தியர் தணிகாசலம் கைது: அரசு அதிரடி,  May 06, 2020 08:54:19 p

https://tamil.indianexpress.com/tamilnadu/fake-siddha-doctor-thanikasalam-arrested-189380/

[14] தமிழ்.ஒன்.இந்தியா, போலி சித்த மருத்துவர் தணிகாசலம் கைது.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியவர், By Velmurugan P | Updated: Wednesday, May 6, 2020, 19:52 [IST]

[15] https://tamil.oneindia.com/news/chennai/fake-siddha-doctor-thanikachalam-arrested-by-chennai-police-384668.html

[16] பாலிமர் செய்தி, சதுரங்கவேட்டை சித்தர் தணிகாசலம் கைது ஏன்? பயபுள்ள போலி மருத்துவராம்!, மே.06. 2020. 09.00.19.PM

[17]https://www.polimernews.com/dnews/108667/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F..-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..!