Archive for the ‘துறைத் தலைவர்’ Category

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (2)

திசெம்பர் 27, 2023

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (2)

 

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது: போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மற்றும் அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்[1]. பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் அளித்தார்[2]. அப்படியென்றால் கையும்-களவுமாக மாட்டிக் கொண்டார் என்றாகிறது. அவர் அளித்த புகாரின் படி சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்[3]. இதனையடுத்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் துவங்கியது மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. அதன் பிறகு, முறையாக துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்[4].

 

நிறுவனம் நடத்தி மோசடிகளில் ஈடுபட்டது: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்[5]. பிறகு மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற விவகாரங்கள் குறிப்பிடப் படவில்லை என்றாலும், நடந்தேரின. விசாரணையில், துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் [Periyar University Technology Entrepreneurship and Research Foundation (PUTER Foundation)] என்ற தனி நிறுவனத்தை துவக்கியது தெரியவந்துள்ளது[6]. பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கினார். இது தவிர, தங்கவேல் உள்பட 3 பேர் இணைந்து ‘அப்டெக்கான் போரம்’ என்ற மற்றொரு அமைப்பையும் தொடங்கி உள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்படும். இவர்கள் மூன்று பேரும் பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-இன் படி பொது ஊழியர்களாக கருதப்படுகிறார்கள்.

 

பாமக தொடர்ந்து இத்தகைய ஊழல்கள் பற்றி அறிக்கை வெளியிட்டு வருவது: முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கையில்[7], “பெரியார் பல்கலைக்கழகத்தை அதன் துணைவேந்தரும், கூட்டாளிகளும் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே அதில் புதிய நிறுவனத்தை தொடங்குவது சட்டவிரோதம். இதற்காகவே துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும்,” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது[8]. இருப்பினும், அரசியல் கலந்து விட்டது, அதில் திராவிடக் கட்சிகளின் பங்கு உள்ளது என்றால் அமுக்கித்தான் வாசிப்பார்கள்.

 

கைதானவர் உடனடியாக ஜாமீன் பெற்று வீடு திரும்பியவர்: பின்னர் நீதிபதி தினேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், துணை வேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி விடுவித்தார்[9]. இத்தனை புகார்கள் இருந்டாலும், ஜாமீன் எப்படி வழங்கப் பட்டடு என்பது தெரியவில்லை. இவர் வெளியே இருந்தால், ஆதாரங்கள் எல்லாவற்றையும் அழித்து விடமாட்டாரா, அத்தகைய பிரச்சினை இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. மேலும், சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 7 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், அனுமதியின்றி வெளியூருக்கு செல்லக்கூடாது என்றும், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்[10]. இவையெல்லாம் சாதாரண கன்டிசன்கள் தான்.

 

திராவிடத்துவத்தில்பெரியாரிஸத்தில் ஊழல், சொகுசு வாழ்க்கை, தற்கொலை, இறப்பு: மனித உயிர் மிகவும் அபூர்வமானது, புனிதமானது, அதனை எடுக்க-எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமையில்லை. என்னத்தான் நாத்திகம், பெரியாரிஸம் எல்லாம் பேசினாலும், வாழத்தான் அவர்களுக்கும் ஆசையுள்ளது, அதிலும், அனுபவித்து வாழவேண்டும் என்ற பேராசை உள்ளது. ஆகவே, உண்மையில் அவர்கள் இறப்பிற்கு அஞ்சினாலும், இறப்பதற்கு விரும்புவதில்லை. ஆத்மா, உயிர், மூச்சு, உயிர் உடலிலா, மூச்சிலா, மூளையிலா, இதயத்திலா என்றெல்லாம், மண்டையைக் குடைந்து கொள்ளாமல், வாழத்தான் இரும்புகிறார்கள். அந்நிலையில் ஊழலுக்கு பயப்படாதவர்கள், ஊழலில் சிக்கிவிடுவோம் என்று பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை. சாவுக்கே சாவு கொடுப்போம் என்ற ரீதியில் அளப்பவர்கள், ஊழலுக்கே ஊழல் கொடுத்து, ஊழல் செய்து, உழல வைத்து விடுவோம் என்று சொல்லாமலா இருப்பர்? இருப்பினும் கல்வி என்பதால், இனிமேலாவது, அதில் ஊழலை நீக்கி, சுத்தமாக்கி, ஒழுங்கான-ஒழுக்கமான படிப்பை போதித்தால், இனி உருவாகும் மாணவ-மாணவிகள் மக்களுக்கு, சமூகத்திற்கு, நாட்டிற்கு உகந்தவர்களாக இருப்பர். இதை மனத்தில் வைத்துக் கொண்டாவது, திராவிடத்துவவாதிகள், ஊழல் விற்பன்னர்கள் முதலியோர் திருந்த வேண்டும், தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சாவதை விட, ஒழுங்காக வாழலாம், மக்கள் பாராட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

27-12-2023


[1] தினமலர், ஊழல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது, மாற்றம் செய்த நாள்: டிச 26,2023 17:39.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3512935

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது.. 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!, By Vignesh Selvaraj Updated: Tuesday, December 26, 2023, 20:50 [IST].

[4] https://tamil.oneindia.com/news/salem/salem-periyar-university-vice-chancellor-jeganathan-arrested-569307.html

[5] தமிழ்.இந்து, நிறுவனம் நடத்தி முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது, செய்திப்பிரிவு, Published : 27 Dec 2023 05:19 AM, Last Updated : 27 Dec 2023 05:19 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1174506-salem-periyar-university-vice-chancellor-arrested-on-corruption.html

[7] நக்கீரன், பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 26/12/2023 | Edited on 26/12/2023

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/periyar-university-vice-chancellor-issue

[9] தமிழ்.நியூஸ்.18, முறைகேடு வழக்கில் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நிபந்தனை ஜாமின்!, FIRST PUBLISHED : DECEMBER 27, 2023, 9:49 AM IST, LAST UPDATED : DECEMBER 27, 2023, 9:49 AM IST.

[10] https://tamil.news18.com/tamil-nadu/conditional-bail-for-periyar-university-vice-chancellor-1286758.html

போன்–பே, கூகுள்-பே மூலம் எழை மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது திராவிட மாடலா, அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் திராவிட ஸ்டாக்குகளா?

செப்ரெம்பர் 28, 2023

போன்–பே, கூகுள்-பே மூலம் எழை மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது திராவிட மாடலா, அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் திராவிட ஸ்டாக்குகளா?

உதகை அரசு கல்லூரியில் எல்லாவித ஊழல்களும் மலிந்துள்ளது ஏன்?: நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு கலைக்கல்லூரி 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது[1]. இந்த கல்லூரியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்[2]. இக்கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்த நிலையில், சில பேராசிரியர்கள் பெண் பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகார் எழுந்தது[3]போலிச் சான்றிதழ், பாலியல் தொல்லை என அடுத்தடுத்த புகார்களில் சிக்கிய ஊட்டி அரசு கலைக் கல்லூரி, இப்போது மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது[4]. ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர்[5]. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை, துறை மாற்றம், மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்களில் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் லஞ்சம் பெறுவதாக கூகுள் பே ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது[6].

பழங்குடிகள் போன்ற மாணவர்களிடமே லஞ்சம் வாங்கும் மாடலை என்னவென்பது?: உயர்கல்விக்கான வசதி வாய்ப்புகளை, குறைவாகக்கொண்டிருக்கும் மலை மாவட்டமான நீலகிரியில், அரசுக் கல்லூரிகளை நம்பியே பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்[7]. அதிலும் குறிப்பாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஊட்டி அரசு கலைக் கல்லூரி, மாவட்டத்தின் முக்கிய கல்லூரியாக இருந்துவருகிறது[8]. பிறகு, “பாரதியார்” பெயரை வைத்துக் கொண்டாலும் சமத்துவம், சமநீதி, சமூகநீதி என்பதெல்லாம் கிடைக்காது போலும். பழங்குடிகள், தோட்டத் தொழிலாளர்கள் என வறுமையான பின்னணியைக்கொண்ட முதல் தலைமுறை மாணவ, மாணவிகள் அதிகம் பயின்றுவருகின்றனர். இந்தக் கல்லூரியின் முதல்வராக அருள் அந்தோணி கடந்த ஜூன் மாதம் 2022 பொறுப்பேற்றுக்கொண்டார்.‌ இந்த அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை, துறை மாறுதல், தங்கும் விடுதி வசதி போன்றவற்றுக்கு மாணவ, மாணவிகளிடம் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சிலர் ஆயிரக்கணக்கில் லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன[9]. அப்படியென்றால் அருள் அந்தோணி வந்தவுடன் அதிகமானதா என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், லஞ்சம் வாங்கியதற்கான ஆடியோ, ஸ்க்ரீன் ஷாட் எனச் சில ஆதாரங்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின[10].

வாட்ஸ்-அப், ஊடகம், லஞ்ச செய்தி பரவியது: இவற்றை அடிப்படையாகக்கொண்டு ஜூனியர் விகடன் இதழில் வாட்ஸ்அப் கூகுள் பே வழியே லஞ்சம்! – மாணவர்களிடம் பணம் பறித்த பேராசிரியர்கள்?’ என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். ஆனால், அதிலும் வியாபாரம் தான் மேலோங்குகிறது. அக்க்கட்டுரை “பிரீமியம்” காசு கொடுத்தால் தான் படிக்க முடியும் என்கிறார்கள். அப்படியென்றால், அதுவும் ஒருவித லஞ்சம் எனலாம். இந்த நிலையில், ஜூனியர் விகடன் கட்டுரையின் எதிரொலியாக, கல்லூரி கல்வி இயக்கத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி தலைமையில், ஊழல் புகார் குறித்து விசாரணை நடைபெற்றது, என்று அவ்வூடகம் பெருமைப் பட்டுக் கொள்கிறது. இந்த நிலையில், ஆதிதிராவிடர் மாணவர்களை அரசு தங்கும் விடுதியில் சேர்க்க, கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

மாணவர்கள் சொல்வது: இந்த வீடியோ குறித்துப் பேசிய கல்லூரி மாணவர்கள் சிலர், “நடப்பு கல்வியாண்டில் ஊட்டி கல்லூரியில் ஏகப்பட்ட ஊழல் நடந்திருக்கிறது[11]. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்திருக்கிறார்கள்[12]. பலருக்கு ரசீதும் கொடுக்கவில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கான ஹாஸ்டல் வசதிக்கு 10,000 ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்கள். ஒரு மாணவரிடம் 3,000 ரூபாய் கவரில் வாங்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்வர் மட்டுமல்ல, பேராசிரியர்கள் சிலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். முறையான விசாரணை நடத்தினால் பலரும் சிக்குவார்கள்” என்றனர். இந்த லஞ்சப் புகார் குறித்து ஊட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி, “மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கவரில் வாங்கினேன். லஞ்சம் எனச் சொல்கிறார்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, “கல்லூரியில் நடைபெறும் லஞ்சப் புகார் குறித்து ஏற்கெனவே விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

நடவடிக்கை எடுக்கப் பட்டது என்ன?: ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுக் கல்லூரியில், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் லஞ்சம் வாங்கியதாக அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் சர்ச்சையைக் கிளப்பின.  இக்கல்லூரியில் பணியாற்றும் தாவரவியல் பேராசிரியர் ரவி என்பவர், மாணவர்கள் வேறு துறைக்கு மாறி செல்ல 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது[13]. இது தொடர்பாக மாணவர்கள் அவருடன் பேசிய செல்போன் உரையாடல்கள் மற்றும் ஜி பே செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்[14]. ஆகவே, இனி வேறு வழியில்லை என்ற நிலையில், விசாரணை தொடர்ந்தது. விவகாரம் பெரிதாகாமல் இருக்க வேண்டும் என்பதால், இங்கேயே இதனை சரிகட்ட முயற்சி மேற்கொள்ளப் பட்டது போலும். சாதாரண வழி, “பணியிடை மாற்றம்,” சஸ்பெண்ட் முதலியன.

டெக்னோலாஜி வளர்ந்தால், ஊழலும் அதே போல வளர்கிறது:  மாணவர்களிடமே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டது[15]. கல்லூரியின் முதல்வரும், இணைப் பேராசிரியர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்[16]. இவையெல்லாம் வழக்கமான செய்திகளாகி விட்டன[17]. ஒருசில நாட்களில் மறக்கப்படும்[18]. இவர்களுக்கு எப்படித் தான் ஏழை மாணவர்களிட கூட லஞ்சம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று தெரியவில்லை. இதைப் பற்றி விசாரித்த பிறகு, செல்போன் மற்றும், பணபரிமாற்றம் முதலியவை மெய்ப்பிக்கப் பட்டன. தனால், மாணவர்களின் பணம் அவர்களுக்குச் சென்றுள்ளது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டது. ஆக, இத்தகைய “பே” போன்ற மின்பரிமாற்றங்களும் லஞ்சத்திற்கு உபயோகப் படும் மற்றும் நன்றாக மாட்டிக் கொள்வார்கள் என்றும் தெரிகிறது. இருப்பினும் மெத்தப் படித்த முதல்வர், பேராசிரியர் போன்ரோர் இத்தகைய கல்வி-ஊழல்களில் ஊறியிருப்பது, இதிலும் லஞ்சம் வாங்குவது எல்லாம், மிகப் பெரிய கோரமான குற்றங்களாகவே தெரிகின்றன.

© வேதபிரகாஷ்

28-09-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ வைரல்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை, By: பிரசாந்த் | Published at : 28 Sep 2023 11:34 AM (IST). Updated at : 28 Sep 2023 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/coimbatore/education-department-officials-investigating-the-video-of-ooty-government-arts-college-principal-asking-money-142521

[3] ஜீ.நியூஸ், Crime In Tamil Nadu | மாணவர்களிடம் 5000 – 20000 ரூபாய் வரை லஞ்சம் பெற்ற பேராசிரியர், Written by – Shiva Murugesan | Last Updated : Sep 22, 2023, 01:13 PM IST

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-professor-who-took-bribes-of-rs-5000-to-20000-from-college-students-464903

[5] விகடன், வாட்ஸ்அப், கூகுள் பே வழியே லஞ்சம்! – மாணவர்களிடம் பணம் பறித்த பேராசிரியர்கள்?, சதீஸ் ராமசாமி, கே.அருண், Published: 20 Sep 2023 12 AM; Updated: 20 Sep 2023 12 AM;

[6] https://www.vikatan.com/crime/money/professors-bribery-from-students

[7] தினமலர், மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக புகார் :அரசு கலை கல்லூரியில் விசாரணை, பதிவு செய்த நாள்: செப் 22,2023 22:46.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3438048

[9] விகடன், மாணவர்களை விடுதியில் சேர்க்க லஞ்சம் வாங்கினாரா ஊட்டி அரசுக் கல்லூரி முதல்வர்?- வீடியோவும் விளக்கமும், சதீஸ் ராமசாமி, கே.அருண், Published: 27-09-2023 at 7 PM; Updated: 27-09-2023  at 7 PM.

[10] https://www.vikatan.com/crime/ooty-arts-college-principal-video-controversy

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஹாஸ்டலில் சேர ரூ.10,000 லஞ்சம்.. பரவிய ஷாக் வீடியோ! உதகை அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!, By Vignesh Selvaraj Published: Thursday, September 28, 2023, 12:20 [IST]

[12] https://tamil.oneindia.com/news/nilgiris/government-college-principal-and-professor-suspended-for-getting-bribe-from-students-543133.html

[13] காமதேனு, மாணவர்களிடம் லஞ்சம்பேராசிரியர் மீது பரபரப்பு புகார்!, Updated on: 23 Sep 2023, 7:45 pm.

[14] https://kamadenu.hindutamil.in/crime-corner/bribe-complaint-on-government-college-professor

[15] நக்கீரன், மாணவர்களிடம் 10,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 28/09/2023 (12:21) | Edited on 28/09/2023 (12:37)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-principal-suspended-accepting-rs-10-bribe-students

[17] தமிழ்வெப்துனியா, லஞ்சம் பெற்ற புகாரில் கல்லூரி முதல்வர், பேராசிரியர் சஸ்பெண்ட், வியாழன், 28 செப்டம்பர் 2023, 14;!2 IST.

[18] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/college-principal-professor-suspended-on-bribe-complaint-123092800043_1.html

திருவள்ளுவர் பல்கலைக் கழகம் -டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகம் தோற்றமும், மறைவும் – தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

செப்ரெம்பர் 17, 2023

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

05-09-2023 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள் பற்றி விசாரணை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள், போராட்டங்கள் என்று நடந்து கொண்டிருப்பது[1]. அந்த திருவள்ளுவர் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது[2]. வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2015ல் நடந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்[3]. ஆனால், பல விவரங்கள் பொது மக்களிடமிருந்து மறைக்கப் படுகின்றன. இதில், பல்கலைக்கழகத்தில், 112 கோடி ரூபாய் அளவிற்கு நிதி நிர்வாக முறைகேடு நடந்ததாகவும், பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி, பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது மற்றும் பல்கலைக்கழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது[4]. அதன் அடிப்படையில் 05-09-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்[5]. விவரங்கள் என்னவென்று தெரியவில்லை. மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடம் விசாரணை நடத்தப்பட்டது[6]. இங்கும் விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை. பிடிஐ பாணியில் ஊடகங்களில் ஒருசில வரிகளில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

02-08-2023 – திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!:  02-08-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி ஊழியர்கள் மற்றும் உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் பறை இசைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[7]. பல்கலைக்கழகத்தில் லஞ்சம், முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தி 12 மாதங்களாகியும் இதுவரை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும், உடனடியாக அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தனர்[8].

டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்: அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா 2021 பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த கல்வியாண்டு முதலில் புதிய டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கப்பட்டது. ஆனால், மாநில சட்டமன்றத் தேர்தலின் காரணமாக இந்தத் திட்டம் தாமதமானது, பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்ததன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 05ஆம் நாள் இதற்கான சட்ட முன்வரைவினை உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர் எஸ். அன்பழகன் மார்ச் 01 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகள் வரும். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், இப்பல்கலைக்கழகம் மூடப்பட்டது: அப்போதைய அ.தி.மு.க அரசு. அந்த நேரம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த துரைமுருகன், “திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நான் கொண்டுவந்தது. அதை எந்தக் காரணத்துக்காகவும் பிரிக்கவிட மாட்டேன். புதிதாக வேண்டுமானால், பல்கலைக்கழகத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இம்மாவட்டங்களில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் பிரிக்கப் பட்டன. முழுமையாக செயல்படாமல் இருந்த இப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான சட்டமுன்வடிவானது ”2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்டம்” என்பதை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா பல்கலைக்கழகம் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அ.தி.மு.க தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும்விதமாக, துணை வேந்தரைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொறுப்புகளுமே காலியாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன[9].  பொது மக்கள், “பல்கலைக்கழகத்தைப் பிரித்ததில், தி.மு.வுக்குக் கோபமில்லை. ஜெயலலிதா பெயர் சூட்டியிருப்பதுதான் பிடிக்கவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக, கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இரண்டு கட்சிகளுக்குமான அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மூன்று மாவட்டங்களிலுள்ள கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விதான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்,’’ என்கிறனர்[10].

குற்றங்கள், சீரழிவுகள் டிவி-சீரியல் போன்று காண்பிக்கப் படுகின்றன: இவையெல்லாம் தனித்தனி செய்திகளாக இருந்தாலும், சம்பந்தம் இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் ஆரம்பிப்பது என்பது சாதாரணமான விசயம் கிடையாது, அதிலும் முதலமைச்சர் பெயரில் ஆரம்பித்து உடனே மூடு விழா செய்யப் படுவது, அதிலும் அசாதாரணமன விசயம் ஆகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செய்துள்ளது. அதிமுகவும் அதை பெரிதாக எதிர்த்ததாகத்தெரியவில்லை[11]. ஆனால், திமுக-அதிமுக கட்சிகளுக்குள் இருக்கும் விருப்பு-வெறுப்பு, போட்டி-பொறாமை முதலியவற்றிற்கும் மேலாக ஏதோ ஒன்று இருப்பது தெரிகிறது[12]. கல்வியை சக்காக வைத்துக் கொண்டு அரசியல் செய்து, பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மறைக்க முடியாது. திடீரென்று தமிழக்த்தில் எல்லா பல்கலைக்கழகங்களில் ஊழல் ஏற்பட்டுள்ளது,ஏற்படுகிறது, கைது, விசாரணை, வழக்கு என்றெல்லாம் நடந்து ஒண்டிருப்பதை கவனித்து வர முடிகிறது. பிறகு, இந்த நடவடிக்கைகளில்,செயல்பாடுகளில், பலநிலைகளில் செலவழிக்கப் பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி யார் கவலைப் படுவது? பொதுவாக மக்கள் அரசியலைக் கூட இன்று, டிவி-சீரியல் போன்று பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதில் நடக்கும் குற்றங்கள் முதலியவை பார்த்து-பார்த்து,கேட்டு-கேட்டு மரத்துப் போகிறது. அவை மறக்கவும் படுகின்றன.

© வேதபிரகாஷ்

17-09-2023


[1] தினத்தந்தி, முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை , செப்டம்பர் 5, 11:19 pm

[2] https://www.dailythanthi.com/News/State/higher-education-additional-secretary-inquiry-into-irregularities-1046282

[3] மாலைமலர், முறைகேடு நடந்ததாக புகார்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை, ByMaalaimalar .5 செப்டம்பர் 2023 1:32 PM.

[4] https://www.maalaimalar.com/news/state/allegation-of-malpractice-investigation-by-additional-secretary-department-of-higher-education-thiruvalluvar-university-658795

[5] தினமலர், திருவள்ளுவர் பல்கலை.,யில் ஊழல்: அதிகாரி விசாரணை, செப்டம்பர், 07,2023,09:13 IST

[6] https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=58971&cat=1

[7] இடிவி.பாரத், திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!,Published: Aug 3, 2023, 6:38 AM.

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/vellore/thiruvalluvar-university-teaching-and-non-teaching-staffs-protest-against-administration/tamil-nadu20230803063809297297569

[9] விகடன், பெயர் சர்ச்சையால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குகிறதா தி.மு.?! – என்ன நடக்கிறது?, லோகேஸ்வரன்.கோ, ச.வெங்கடேசன், Published:23 Jul 2021 5 PM; Updated:23 Jul 2021 5 PM.

[10] https://www.vikatan.com/government-and-politics/is-dmk-government-closing-jayalalitha-university

[11] The Fedearal, Closure of Jayalalithaa Univ, fallout of rivalry between Dravidian parties?, N Vinoth Kumar, 2 Sept 2021 6:55 PM  (Updated:2 Sept 2021 7:07 PM).

[12] https://thefederal.com/states/south/tamil-nadu/closure-of-jayalalithaa-univ-fallout-of-rivalry-between-dravidian-parties/

தமிழகத்தில் துணைவேந்தர் நியமன ஊழலும், திராவிடக் கட்சிகளும், கல்வி-படிப்புத் துறை தராதரமும், யோக்கியதையும்.

ஒக்ரோபர் 23, 2022

தமிழகத்தில் துணைவேந்தர் நியமன ஊழலும், திராவிடக் கட்சிகளும், கல்விபடிப்புத் துறை தராதரமும், யோக்கியதையும்.

2017 முதல் 2021 வரை திமுகதிமுக ஆட்சிகளும், கவர்னர்களும்: தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது குழப்பமான அரசியல் சூழ்நிலையில் 2017-ம் ஆண்டு தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்[1]. பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பின் பஞ்சாப் கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டார்[2]. இவர் ஆளுநராக இருந்த போது பல்வேறு சர்ச்சைகளிலும், குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் சூரப்பா உள்பட அவரின் துணைவேந்தர் நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின[3]. தமிழ்நாட்டு பல்கலைக் கழகத்திற்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரை நியமிப்பதா என கடும் எதிர்ப்புகள் எழுந்தன[4]. திக-திமுக போன்ற கட்சியினர் ஊடகங்கள் மூலம் பலவித எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். பலவிதமான அவதூருகளையும் கிளப்பி வந்தனர். “நக்கீரன்” ஒன்றே உதாராணத்திற்கு சொல்லலாம். 2021ம் ஆண்டு தமிழக புதிய கவர்னாக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறை ஊழல் விபச்சாத்தை விட மோசமானது: பல்கலைக்கழக ஊழல்கள் தமிழகத்திற்கோ, திராவிடக் கட்சிகளுக்கோ புதியதல்ல. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஊழலில் சிக்கியுள்ளன, பல் துணைவேந்தர்கள், தாளாளர்கள் ஊழலில் கைதாகியுள்ளனர், சிலர் மர்மமான நிலைகளில் இறந்துள்ளனர். ஆனால், ஊழல் ஒழிந்த பாடில்லை. துணைவேந்தர் நியமனம், அதிலிருந்து துணை-பேராசிரியர் நியமனம் முதலியவை எல்லாம் எப்படி லட்சங்கள் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்பதெல்லாம் பலமுறை ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஆனால், யாருக்கும் இதைப் பற்றி வெட்கப் படுவதோ, கவலைப் படுவதோ இல்லை. இதுவும் நடக்கிறது-அதுவும் நடக்கிறது என்று தான், காலம் போய் கொண்டே இருக்கிறது. படிப்பு-கல்வி, அவற்றின் தரம், நெறிமுறை என்றால் நினைப்பவர்களும் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சென்று விடுவார்கள். இத்தகைய ஊழல் விவகாரங்களை, அசிங்கங்களை, ஒதுக்கி விட்டு கடந்து செல்கிறார்கள். கல்வித்துறை ஊழல் விபச்சாத்தை விட மோசமானது என்பது தெரிந்த விவகாரம் ஆகிவிட்டது.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் முதல் மந்திரி பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது[5]. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித், அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்றும் தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்[6]. இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். ‘பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் கவர்னராக நான் நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழககவர்னராக அதாவது 20 பல்கலைக்கழகங்களின் வேந்தராக, 4 ஆண்டு காலம் இருந்துள்ளேன்[7]. எனது பதவிக் காலத்தில் சட்டப்படி 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன்[8]. தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்குள்ள கல்வித் துறையை ஒழுங்குபடுத்தியதற்காக தமிழக முதல்வ-மந்திரி மு.க.ஸ்டாலின் என்னைப் பாராட்டினார். அவரிடம் கேளுங்கள். அவரிடமிருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன். அதை யாராலும் தடுக்க முடியாது. நான் என் கடமையைச் செய்யவில்லை என்றால் நான் குற்றவாளியாக உணர்வேன். ஒரு கவர்னரின் பொறுப்பு, அனைவருக்கும் வழிகாட்டுவதும் பல்கலைக்கழகங்களைக் கவனிப்பதுமே. என்ன நடந்தாலும் என் கடமையைச் செய்வேன்’ என்று கூறியுள்ளார் .

துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் அது ஆளுநரையே சாரும் என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் கூறினார்[9]. முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கேபி.அன்பழகன் நேற்று அளித்த பேட்டி[10]: “பஞ்சாபில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை பெற்று நியமனம் செய்ததாக பேசி உள்ளார். துணை வேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் மட்டுமே கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார். ஆளுநரே தேர்வு செய்து அறிவிக்கிறார். இதில் அரசுக்கோ, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த எனக்கோ எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. அப்படி இருக்கிறபோது, தமிழகத்தில் தான் பணியாற்றிய காலத்தில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை பெற்றுக்கொண்டு துணைவேந்தரை நியமனம் செய்த நிலை இருந்தது என இன்றைய பஞ்சாப் ஆளுநர், பேசியது ஏற்ககூடியதாக இல்லை. பஞ்சாபில் அவர் துணைவேந்தரை நியமிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்த தவறு நடந்தாலும் அந்த காலகட்டத்தில் ஆளுநராக பணியாற்றிய அவரையே சார்ந்தது ஆகும்,”. இவ்வாறு அவர் கூறினார்.

கம்யூனிஸ்டுகளின் போலித்தனம்: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டின் ஆளுநராக 4 ஆண்டுகளுக்கு மேலாக பன்வாரிலால் புரோகித் பணியாற்றியுள்ளார்[11]. பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த காலத்தில் 27 துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கூறியுள்ளார்[12]. அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற உயர் பொறுப்பில் உள்ளவர் கூறும் புகாரை வெறும் செய்தியாக கடந்துவிட முடியாது. பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழக அரசு விசாரிக்க வேண்டும். தவறு நடந்திருந்தால் ஊழல் செய்து துணைவேந்தர் பதவிகளில் அமர்ந்துள்ளவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பணி நியமனம் ஊழல் முறைகேடுகளுக்கு இடம்தராத வகையில் அமைந்திட விதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கம்யூனிஸ்டுகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை, ஏனெனில், இவர்கள் சும்மா பேசிக் கொன்டுதான் இருப்பார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதும் தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1] தினமலர், தமிழக பல்கலை. துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை: மாஜி கவர்னர் குற்றச்சாட்டு, Updated : அக் 21, 2022  21:22 |  Added : அக் 21, 2022  20:48.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3151495

[3] நியூஸ்.17.தமிழ், தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை ; பன்வாரிலால் புரோஹித், by EZHILARASAN DOctober 22, 2022.

[4] https://news7tamil.live/in-tamil-nadu-the-post-of-vice-chancellor-sold-up-to-rs-50-crores-says-punjab-governor-banwarilal-purohit.html

[5] தினத்தந்தி, தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை விற்பனைபன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல், அக்டோபர் 22, 12:59 pm (Updated: அக்டோபர் 22, 1:07 pm).

[6] https://www.dailythanthi.com/News/India/vice-chancellors-post-in-tamil-nadu-for-sale-between-rs-40-crore-rs-50-crore-banwari-lal-purohit-shocking-information-820270

[7] தினமணி, தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை! முன்னாள் ஆளுநர் அதிர்ச்சித் தகவல்!!, By DIN  |   Published On : 22nd October 2022 10:36 AM  |   Last Updated : 22nd October 2022 10:36 AM.

[8] https://www.dinamani.com/india/2022/oct/22/in-tamil-nadu-a-vice-chancellors-post-was-sold-for-rs-40-to-rs-50-crore-banwarilal-purohit-3936820.html

[9] தினகரன், துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் ஆளுநரையே சாரும்: மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி, 2022-10-23@ 01:36:27

[10] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=808808

[11] தமிழ்.ஒன்.இந்தியா, துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்.. பற்றவைத்த பன்வாரிலால் புரோகித்.. விசாரணை தேவை.. முத்தரசன்!, By Yogeshwaran Moorthi Updated: Saturday, October 22, 2022, 17:10 [IST].

[12] https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-shoul-investigate-about-banwarilal-purohit-complaint-says-mutharasan-481764.html

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, திராவிட மாடல் கல்வித்துறையை அரசியலாக்கி சீர்கெடுக்கிறது! (4)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, திராவிட மாடல் கல்வித்துறையை அரசியலாக்கி சீர்கெடுக்கிறது! (4)

சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் அமர்த்தப் பட்ட ஊழல்: சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி, பேராசிரியர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்[1]. இவ்வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசியர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணிநியமன விதிமுறைகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[2]. ஒவ்வொரு பேராசியரின் ஆவணங்களும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் பணிநியமன ஆணைகள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதா எனவும், விருப்பத்தின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும்  நீதிபதி சுப்ரமணியம் தெரிவித்தார்[3]. ‘வகுப்பில் மாணவர்கள் பேராசிரியர்களை மதிப்பதில்லை எனும் பொது குற்றச்சாட்டு நிலவி வருகிறது. பேராசிரியர்களுக்கு தகுதியில்லை என்றால், அவர்களால் முறையாக வகுப்புகளை நடத்த முடியாது. அப்படியிருந்தால் அவர்களை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?’ என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கொரோனா காலத்தில் தொடரும் ஊழல்கள்: பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட தொலைதூர கல்வி மைய மாணவர்களுக்கு மே 15-ந் தேதி 2019 (இன்னும் இரண்டுநாட்கள்தான் உள்ளன) தேர்வுகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழும்பியிருக்கிறது[4]. இதற்குப் பின்னணியை ஆராய்ந்தபோதுதான் துணைவேந்தரின் புத்தக பிரிண்டிங் ஊழலும் அம்பலமாகிறது[5]. புத்தகங்கள் இல்லாமலேயே தேர்வுக்கு படித்து எப்படி தேர்ச்சி பெறமுடியும்? அப்படி தேர்ச்சிபெற்றவர் அரசுப்பணியில் எப்படி நேர்மையுடன் செயல்படுவார்? 2022ல் கேரளா மையங்களில் னினா-விடைத் தாள்கள் மாற்றப் பட்டு, மற்றவர்களை வைத்து எழுதுவிக்கச் செய்து, பாஸ் செய்ய ரூ. 3.5 கோடிகள் பெற்றதாக செய்திகள் வந்தன[6]. அதாவது, கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, ஆ:ள்மாறாட்டம் செய்து, அத்தகைய ஊழல்களை செய்துள்ளனர்[7].

2018 ஊழலை 2022ல் நக்கீரன் கிளறுவது ஏன்?: பாமக ராமதாஸ், வள்ளி ஊழலை தனது  அறிக்கையில் வெளியிய, அதை விகடன், “துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ்” என்று தலைப்பிட்டு வெளியிட்டது[8]. பிறகு, மேலும் விவரங்களை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டப் பிறகு, ஊடகங்கள் அதைப் பறிய செய்திகளை வெளியிட்டன[9]. நக்கீரனில் இப்பொழுது, இந்த விவரத்தை  அதிமுகவுடன் இணைத்து கதையை வெளியிட்டுள்ளது[10]. பழையக் கதையை, இப்பொழுது விவரிக்க முயன்றுள்ளது.  காளிமுத்து, ரவிச்சந்திரன், வள்ளி, சந்தில் பாலாஜி என்று புகைப் படங்களைப் போட்டு விவரிக்கின்றது. ஆனால், 25 பேருக்கும் மேலாக ஊழலில் சிக்கியுள்ள பல்கலை துணைவேந்தர்கள் பற்றியும் இதே மாதிரி கதைகள் எழுதலாமே? கோடிகளுக்கு அதிபதிகள் ஆகி, பல வீடுகள் வாங்கி, வியாபாரங்களில் முதலீடு செய்து ஜாலியாக காலம் தள்ளி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் மட்டும் ஊழல் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் தொடரத்தான் போகிறது. இதில் திராவிடக் கட்சிகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், தெளிவாகவும் செயல்படுகிறார்கள். பழைய-தொடர்ந்து வரும் சிஸ்டம் அப்படியே தான் இருக்கும். வேண்டுமானால், சில மாறுதல்களைச் செய்யலாம்.

மத்திய அரசு மோதல் கல்வித் துறையை சீரழிக்கும்: பெரியார், அண்ணா, கருணாநிதி சொன்னார்கள் என்று பாடங்களில் புகுத்தலாம். திராவிடியன் மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக, முழுமையாக, எல்லாப் பிரச்சினைகளையும் வைத்து, கடந்த 70 வருட திராவிடத்துவ தாக்கத்தை வைத்து, சமூகத்தை ஆராய்ந்தால், குற்றங்கள் தான் பலவிதங்களில் பெருகி வந்துள்ளன, வருகின்றன. கல்வித் துறை சீரழிவுகளே, மாணவ-மாணவியர் ஒழுங்கீன, சமூகவிரோத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது, திகைப்படையச் செய்கிறது. அடிப்பது, கொல்வது என்ற அளவுக்கு வந்து விட்டது. முதலில் இவற்றை சரிசெய்யப் பார்க்காமல், மத்திய அரசு மோதல் என்று வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளினால், எல்லாமே சீரழிந்து விடும். மத்திய அரசு நிதியுதவி, ஆதரவு, முதலியன எல்லா மாநிலங்களையும் இணைந்து வருவது. இந்தியாவில், பாரதத்தில் இந்தியர் ஒன்றாகத்தான் செயல்பட வேண்டும். அவ்வாறுதான் 5000 வருடங்களுக்கும்மேலாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது போல, சில மாநிலங்கள், அரசியல்வாதிகள் ஒற்றுமையில்லாமல் போகும் போது, வெளியிலிருந்து ஆபத்து வருகிறது. அதைத்தான், இந்த திராவிடன் மாடல் எல்லாம் செய்து வருகிறது.

  1. மாமூல், கையூட்டு, கமிஷன், லஞ்சம், கவனிப்பு, வந்து பார்க்கிறேன்…… இவற்றையெல்லாம் ஏன் இந்துத்துவ வாதி எதிர்ப்பதில்லை?
  2. திராவிட கட்சிகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், சரி, இந்துத்துவ வாதிகள், தூய்மை, நியாயம், தர்மம் பேசுபவர்கள் அப்படி இருக்கலாமா?
  3. ஶ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸர், மனத்தளவில் நினைக்கின்ற ஒரு சிறிய அதர்ம சிந்தனைக் கூட பெரிய பாவம் என்கிறார்! பிறகு, ஊழலைக் கொல்ல வேண்டாமோ?
  4. தூய நினைவுகள் தூய்மையாக்குகின்றன, அது உடலையும் கட்டுப் படுத்துகின்றன, அமைதி-ஆரோக்கியம், ஆயுள் கொடுக்கின்றன!
  5. உடல் என்றுமே தனக்கு ஒவ்வாததை வெளியேத் தள்ளி விடுகிறது – தூவாரங்கள் மூலம் அவை நடந்து கொண்டே இருக்கின்றன. ஊழல்கள் அகலுகின்றன!
  6. குடும்பம், சமூகம், ஊர், நகரம், நாடு..முதலியனற்றிலும் இருக்கின்ற ஒவ்வாத ஊழலை, எந்த விதத்தில் இருந்தாலும், நீக்கிவிட வேண்டும்.
  7. நோயாளிகள் சாகிறார்கள், பாலங்கள் விழுகின்றன, மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள், வாகனங்கள் எரிகின்றன இவையெல்லாமும் ஊழல்கள் தான்!
  8. மக்களைப் போலத்தான் ஆள்பவன் இருப்பான் (यथा प्रजा तथा राजा) எனும் போது, யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனஅறிந்து கொள்ளலாம்!
  9. தூய்மை என்று வாயினால் சொன்னால் மட்டும் போதாது, சொல்பவனின் எல்லா துவாரங்களும் தூய்மையாக இருக்க வேண்டும், இல்லை நாறிவிடும்!
  10. அசுத்தங்களில், அக்கிரமங்களில், அதர்மங்களில் அத்வைதம் எடுபடாது, துவைதம், விசிஷ்டாதுவைவதம் என்று தான் செல்ல வேண்டியிருக்கும்!

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2016-17-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது தான் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

[2] மாலைமலர், சட்ட பல்கலைக்கழக ஊழல்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பேராசிரியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு: பிப்ரவரி 02, 2019 13:47 IST

[3] https://www.maalaimalar.com/news/district/2019/02/02134734/1225775/Law-university-scam-HC-asks-staff-to-produce-affidavit.vpf

[4] நக்கீரன், படிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள்! பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்!, மனோசௌந்தர், Published on 13/05/2019 (18:35) | Edited on 13/05/2019 (18:41).

[5] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/16000-students-going-write-examination-without-book-periyar-university

[6] பாலிமர் செய்தி, மதுரை காமராஜர் பல்கலையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க ரூ.3.5 கோடி லஞ்சம் பெற்றதாக புகார், ஆகஸ்ட்.8, 2020, 51:16 மதியம்.

[7] https://www.polimernews.com/dnews/117208

[8] விகடன், துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ், அஸ்வினி.சி, Published:03 Aug 2018 12 PMUpdated:03 Aug 2018 12 PM

[9] https://www.vikatan.com/government-and-politics/politics/132887-ramadoss-about-mother-therasa-university-scam

[10] நக்கீரன், துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம், தோண்டத் தோண்ட ஊழல், மே. 4-6-2022, பக்கம்.30-32.

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக்கழகங்களின் கதை!: இப்படி தலைப்பிட்டு, 2018ல் விகடன் பதிவு செய்துள்ளது[1]. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறது. இன்றைக்குக் கல்வியின் தரத்தைத் தாழ்ந்த தரத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள்[2]. பணம் கொடுத்தால் பட்டம் வாங்கலாம் என்கிற நிலைமை பல்கலைக்கழகங்களில் உண்டு என்பது ஊரறிந்த உண்மையாகப் போய்விட்டது[3]. கல்விதான் இப்படியென்றால் பேராசிரியர்கள் பணியிடங்கள்முதல் துணைவேந்தர் பதவிவரைக்கும் பணம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்த ஊழலுக்கு, ஊனும் உடலுமாக இருப்பவர்கள் உயர்கல்வித் துறை அமைச்சர், கல்லூரிகளின் இயக்குநர்கள், செனட் கமிட்டி துணைவேந்தர்கள் தேர்வுக் குழுவினர். இவை எல்லாவற்றையும்விட ஆளுநர் அலுவலகம் வரைக்கும் லஞ்சம் நீண்டுகொண்டே போகிறது[4]. அந்த அளவுக்குத் தமிழகத்தில், கல்வி பணத்துக்காக விற்கப்படும் பெட்டிக்கடைகள்போல் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் புரோக்கர்களை வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கைது நடவடிக்கைக்குப் பிறகாவது பல்கலைக்கழகங்கள் சுத்தம் செய்யப்படுமா என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது.

சுபாஷ் சந்திரபோஸ் என்பவரின் விவரங்கள்: ஊழல் புகாருக்குள்ளான ஒருவரை துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 29-05-2018 அன்று விடுத்துள்ள அறிக்கையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், புதிய துணைவேந்தராக நியமிப்பதற்காக மூன்று பேரின் பட்டியல் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது[5]. அவர்களில் ஊழல் புகாருக்குள்ளான சுபாஷ் சந்திரபோஸ் துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது[6]. அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறை  பேராசிரியராக பணியாற்றிய அவர், 1998-2001 காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் பணிக்கான ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளான முனைவர் சுபாஷ் சந்திர போஸ் தான் இப்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துனைவேந்தராக நியமிக்கப்படவுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2018-நிலைஊழல் செய்த துணைவேந்தர்கள் கைதாகாமல் பணியில் தொடர்கிறார்கள்: தமிழ்நாட்டில் அதிக ஊழல்கள் நடைபெற்ற முதல் 5 பல்கலைக்கழகங்கள் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகியவை தான். ஜி. ஜேம்ஸ் பிச்சை, முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மற்றும் சி. சுவாமிநாதன், முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன[7]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[8]. பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ஜேம்ஸ் பிச்சை செய்த ஊழல்களும், அதன்மூலம் குவித்த சொத்துகளும் கணக்கிலடங்காதவை[9]. பாரதியார், பெரியார் ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக பணியாற்றிய முனைவர் சுவாமிநாதன் உரிய தகுதி இல்லாமலேயே அந்தப் பதவிகளுக்கு வந்தவர். இரு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர். அதற்காக புதிய, புதிய வழிமுறைகளைக் கண்டறிந்தவர்[10]. இவருடைய ஊழலுக்கு உடந்தையாக இருந்து சிக்கிக் கொண்டதால் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மீது ஏராளமான வழக்குகளை கையூட்டுத் தடுப்புப் பிரிவு பதிவு செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அவரது வீட்டில் மத்திய வருமானவரித்துறை சோதனை நடத்தியது. ஆனாலும், அவர் இன்னும் பணியில் நீடிக்கிறார்.

தகுதியற்றவர்கள் தேர்தெடுக்கப் படுவதற்கு காரணம்பல்கலை ஊழல் பற்றி பாலகுருசாமி (2018)[11]: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது[12], “பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல் என்பது இன்றுநேற்று..நடைபெறும் ஊழல் அல்ல. கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனுவை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கடிதத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணபதி ஒருவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை. நிறைய துணைவேந்தர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. கணபதியின் வழக்கை மையமாகவைத்தே அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யக்கூடிய பல்கலைகழகத் தேர்வுக் கமிட்டியில் நேர்மையான ஆட்களை நியமிக்க வேண்டும்.தேர்வுக் கமிட்டியில்  இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி நேர்மையான துணைவேந்தர்களை அவர்கள்  தேர்வுசெய்வார்கள்?

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] விகடன், அழகப்பா இது அழகாப்பா?” – அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-2, பாலமுருகன். தெ, Published:15 Feb 2018 4 PM; Updated:16 Feb 2018 1 AM.

[2] https://www.vikatan.com/news/education/116515-a-report-on-scam-in-karaikudi-alagappa-university-university-scam-series-part-2

[3] விகடன், “எண்ணியது முடிய காசு வேண்டும்அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-1, குருபிரசாத், Published:08 Feb 2018 1 PM; Updated:08 Feb 2018 4 PM.

[4] https://www.vikatan.com/arts/cartoon/115830-story-about-coimbatore-bharathiar-university

[5] தினமணி, அழகப்பா பல்கலை: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவரை துணைவேந்தராக நியமிப்பதா?, By DIN  |   Published On : 30th May 2018 11:34 AM  |   Last Updated : 30th May 2018 04:08 PM.

[6]https://www.dinamani.com/tamilnadu/2018/may/30/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-2929827.html

[7] Times of India, As corruption cases idle, higher education slips into old, bad ways, TNN / Jul 28, 2019, 10:50 IST

[8] Bharathiar University’s former VCs G James Pitchai and C Swaminathan also have corruption cases pending against them. But, no action has been initiated against them so far.

https://timesofindia.indiatimes.com/city/chennai/as-corruption-cases-idle-higher-edu-slips-into-old-bad-ways/articleshow/70414522.cms

[9] மாலைமலர், ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தர்களை கைது செய்ய வேண்டும்ராமதாஸ், பதிவு: மார்ச் 26, 2018 11:10 ISTமாற்றம்: மார்ச் 26, 2018 11:11 IST

[10] https://www.maalaimalar.com/news/district/2018/03/26111043/1153189/Ramadoss-says-Corruption-scandal-caught-Vice-Chancellor.vpf

[11] விகடன், தகுதி இல்லாதவர்கள் தேர்வு செய்யப்படுவதே ஊழலுக்குக் காரணம்!” – பல்கலைக்கழக ஊழல் குறித்து கல்வியாளர்கள், கா . புவனேஸ்வரி, Published:07 Feb 2018 5 PMUpdated:07 Feb 2018 6 PM.

[12] https://www.vikatan.com/government-and-politics/corruption/115761-educationist-shares-their-concern-over-choosing-vice-chancellors-for-university

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா – பல்கலை ஊழல்கள் அதிகமாவது ஏன்? (1)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, பல்கலை ஊழல்கள் அதிகமாவது ஏன்? (1)

திமுக, பல்கலை ஊழல், துணைவேந்தர் நியமனம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பத்திய அரசுடன் பல விசயங்களில் மோதல்களில் ஈடுபட்டுள்ளது. முக்கியமாக பல்கலைக் கழக  துணைவேந்தர் நியமிப்பதில், தாங்களே அதை செய்வோம் என்று முனைந்துள்ளது. மசோதாவும் போட்டு ஆர்பாட்டம் செய்து வருகிறது. ஆனால், கவர்னர் துணைவேந்தர் நியமிப்பதில், கடந்த ஆண்டுகளில் ஊழல் குறைந்திருப்பது தெரிகிறது. அதாவது, மேலே சில நிலைகளில் இல்லாமல் இருந்தாலும், நியமனத்திற்குப் பிறகு, பாரம்பரியமாக இருக்கும் ஊழியர், அதிகாரிகள், ஏஜென்டுகள் பழையபடி தங்களது வேலைகளை செய்து தான் வருகிறார்கள். உதாரணத்திற்கு, கக்கூஸ் கட்டுவது, ரிப்பேர் செய்வது, புதுபிப்பது போன்றவற்றில் கூட ஊழல் செய்து வருகிறார்கள். வருடாவருடம் இவ்வேலைகளை செய்வதாக கணக்குக் காட்டி லட்சங்களை சுருட்டுகின்றனர். மற்றவற்றைப் பற்றி கேட்கவேண்டாம். இதில் வெட்கப் படக் கூடிய விசயம் என்னவென்றால், பல பல்கலைக் கழகங்களில் ஒழுங்கான கக்கூஸே இல்லை. இருந்தாலும், முறையாக சுத்தமாக வைத்திருப்பதில்லை. மெயின் பில்டிங் / துணைவேந்தர் கட்டிடம் போன்றவற்றில் மட்டும் இருப்பவை சுத்தமாக இருக்கும்.

பல்கலை ஊழல்களை மறந்து, துணைவேந்தரை நியமிக்க அவசரம் ஏன், மசோதா ஏன்?: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரே துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமித்ததால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தநிலையில் தமிழக சட்டபேரவையில் ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்களை சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி 04-05-2022 அன்று அறிமுகம் செய்தார்[1]. இந்த மசோதாவிற்கு அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தநிலையில் மீண்டும் சட்ட பேரவையில் சட்டபல்கலை கழக துணை வேந்தரை நியமிக்கும் வகையிலான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2].

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் ஊழல்கள் பல மலிந்துள்ள நிலையில் முதலமைச்சரே துணைவேந்தரை நியமிப்பார் என்ற மசோதா[3]: நீதிமன்றங்களிலும் வழக்குகள் நிலுவியில் உள்ளன. ஆந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம் அளிப்பதற்கான திருத்த சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டசபையில் 05-05-2022 அன்று தாக்கல் செய்தார்[4]. இருக்கின்ற ஊழல்களை சரிசெய்யாமல், செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல், தண்டிக்காமல், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 27 தரமற்ற, தகுதியற்றவர்கள் பேராசிரியர்களாக பணியாற்றுவதாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் உள்ளதை, நீதிபடி 2019ல் எடுத்துக் காட்டினார்[5]. சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும், அங்கு பாடம் எடுப்பவர்கள் தகுதியுடன், பாடம் எடுக்கும் திறமை, ஞானம் இருக்க வேண்டும்[6]. அப்பாடங்களைக் கேட்டு, படித்து, பரீட்சை எழுது, பட்டத்துடன் வெளி வரும் மாணவர்களுக்கு, சட்டங்கள்-விதிகள், மனுதயாரித்து, தாக்கல் செய்தல், வாதிடும் தன்மை முதலியவை எல்லாம் இருக்க வேண்டும். வெறும் பி.எச் / எம்.எல் பட்டத்தினாலோ, பார் கவுன்சில் உறுப்பினர் என்பதாலோ திறமை, புகழ் வந்து விடாது. ஆனால், 70% மாணவர்கள் தரமில்லாமல், ஆங்கிலம் பேசத் தெரியாமல் பாஸ் ஆகித் தான் வெளியே வருகிறார்கள்.,

பல்கலைக் கழகங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியுதவு கிடைக்கின்றது: உண்மையில் பல்கலைக் கழகங்களுக்கு, மத்தியாரசிடமிருந்து, கோடிகள் கிடைக்கின்றன. தவிர கட்டுமானம், ஆராய்ச்சி போன்றவற்றிற்கும் நிதியுதவி கிடக்கிறது. இத்தகைய நிதிகளை முறையாகப் பயன்படுத்தாமல் தான் ஊழல் செய்து மாட்டிக் கொள்கின்றனர், தப்பித்துக் கொள்கின்றனர். ஒரு கட்டிடம் கட்ட ஒரு கோடி என்றால், 30 லட்சம் வரை கமிஷன் அதாவது ஊழலில் பட்டுவாடா செய்யப் படுகிறது. பில்டிங் கான்ட்ரேக்டர், தனக்கு கொஞ்சம் வைத்துக் கொண்டு, மீததத்தை துணிவேந்தர், தாளாளர், துணைத் தலைவர் என்று பட்டுவாடா செய்கிறார். இப்படித்தான் 1970களிலிருந்து நடந்து வருகிறது. இது ஒரு நிலைநிறுத்தப் பட்ட நிறுவனத்துவ ஊழலாகி விட்டது. இதில் திராவிக் கட்சிகளில் விதிவிலக்கல்ல. தொடர்ந்து தான் நடைபெற்று வருகிறது. இதனால் தான் கவர்னர் ஒழுங்காக இருக்கும் பொழுது, ஊழல் குறைகிறது. கொடுக்கப் படும் பணம் முறையாக அந்த வேலைகளுக்குச் செல்கிறது. ஆனால், 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் பிஜேபி அரசு சார்பில் நியமிக்கப் பட்ட கவர்னர்கள் ஒழுங்காக இஉந்தனர். தனால், ஊழல் செய்ய வழிகள் குறைக்கப் பட்டன. அது மாநில அரசுகளுக்குப் பிடிக்கவில்லை, இதனால் தான் புரோஹித் மீது ஆரம்பத்திலிருந்தே பிரச்சாரம் செய்யப் பட்டது. நக்கீரன் மூலம் சேற்றை வாறி இரைக்கப் பட்டது. ஆனால் அவர் பொறுமையாக தனது கடமைகளை செய்து முடித்தார். இப்பொழுது ரவி என்ற போலீஸ் அதிகாரி கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார். இது திமுகவுக்குப் பிடிக்கவில்லை. இதனால், கவர்னர் எதிர்ப்பு போராட்டம், தினம்-தினம் பல உருவங்களில் வெளிப்பட்டு வருகின்றது.

2016ல் தமிழக பத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்தது: 2016ல் தமிழ்நாட்டிலுள்ள பத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் சசிகலாவை சந்தித்துள்ளனர்[7]. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், அவரது வழியில் அதிமுகவைத் தலைமையேற்று நடத்தும்படி வலியுறுத்தியதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் செய்தி வெளியாகியுள்ளது[8]. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இதை கேள்வி கேட்டுள்ளார். எந்த அதிகாரப் பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத திருமதி. சசிகலாவை சந்தித்தது தொடர்பாக துணைவேந்தர்களிடையே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை ஆகும். இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து கடந்த வாரம் ஓய்வுபெற்ற வணங்காமுடி, ‘‘தமிழகத்தில் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இச்சந்திப்பு நிகழ்த்தப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு அரசு அதிகாரிகள் உதவி வழங்கியுள்ளனர். அதனால் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியம் என நாங்கள் கருதினோம். அதனால் தான் திருமதி. சசிகலாவை சந்தித்தோம்,’’ என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்து முழுக்க முழுக்க அரசியல்மயமானதும், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பணி விதிகளுக்கு எதிரானதுமாகும்.

© வேதபிரகாஷ் 07-05-2022


[1] தமிழ்.ஏசியாநெட், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் தமிழக அரசு…! சட்டப் பல்கலை. துணை வேந்தரை, முதலமைச்சரே நியமிக்க அதிகாரம், Ajmal Khan, Chennai, First Published May 5, 2022, 12:26 PM IST; Last Updated May 5, 2022, 12:26 PM IST.

[2] https://tamil.asianetnews.com/politics/the-chief-minister-has-the-power-to-appoint-a-vice-chancellor-to-the-tamil-nadu-law-university-rbedxo

[3] மாலைமலர், அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தரை முதல்அமைச்சர் நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல், பதிவு: மே 05, 2022 16:17 IST

[4] https://www.maalaimalar.com/news/district/2022/05/05161729/3740044/tamil-news-Ambedkar-Law-University-Bill-to-amend-law.vpf

[5] The judge Justice S. M. Subramaniamsaid P. Vanangamudi, former Vice Chancellor of Tamil Nadu Dr.Ambedkar Law University filed a counter affidavit stating that nearly about 27 professors were not qualified and the details, qualifications and other relevant particulars were provided in the counter affidavit.

https://www.deccanchronicle.com/nation/current-affairs/050119/unqualified-profs-in-law-colleges-madras-high-court-wants-details.html

[6] DECCAN CHRONICLE, Unqualified professors in law colleges: Madras high court wants details, PublishedJan 5, 2019, 1:36 am ISTUpdatedJan 5, 2019, 2:40 am.

[7]  தமிழ்.இந்து, அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவை சந்தித்து துணைவேந்தர்கள்  கெஞ்சுவதா?- அன்புமணி கண்டனம், செய்திப்பிரிவு, Last Updated : 21 Dec, 2016 03:30 PM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/91007-.html

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை – ஊடகங்களின் வர்ணனை! அரசியலாக்கப் படும் முறை (5)

மார்ச் 20, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்உள்ளிருப்பு போராட்டம்விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரைஊடகங்களின் வர்ணனை! அரசியலாக்கப் படும் முறை (5)

பத்திரிக்கையாளர் சந்திப்புகடிதங்கள், வீடியோக்கள், செய்திகள் தயாரிப்பு என்று தொடர்வது: “மாணவர்களை ஒருமையில் பேசும் நபர். கேட்டால் நிர்வாக ஊழியர் என்கிறார்,” போன்ற வீடியோக்கள், இப்பிரச்சினையை பெரிதாக்க முயல்வது தெரிகிறது. பிறகு, அவர்களின் கடிதமும் வெளியிடப் பட்டுள்ளது: 18-03-2021 பற்றிய பகுதி:

“ஒரு மணிநேரம் 20 நிமிடம் நடந்த விசாரணையில், பேரா.சௌந்திரராஜனை எப்படியெல்லாம் காப்பாற்றலாம் என்று, பாதிக்கப்பட்ட மாணவி மீதுதான் குற்றம் என்று சித்தரிக்கும் வகையில் டிசைன் டிசைனாக, சாந்தகுமாரி, ரீட்டா ஜான், சசிகலா, உசைன், சம்பூரணி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இந்த குரூப்பில் டூப்பாக மாணவர்கள் தரப்பு என்று நிர்வாகமே நியமித்துள்ள ஆய்வு மாணவி உமா மகேஸ்வரியும் செயல்பட்டுள்ளார்.

உதாரணமாக, பாதிக்கப்பட்டவரின் தரப்பை முழுமையாக கேட்டறியாமல், மாணவியை குற்றவாளியைப்போல் நடத்தி, அதட்டி மிரட்டி, பிரச்சனையை ஊத்திமூட முயற்சித்துள்ளார் நாட்டாமை சாந்தகுமாரி. அதுமட்டுமின்றி, பேரா.சௌந்திரராஜன் வேண்டுமென்றே மார்பகத்தில் மூன்றுமுறை கைவைக்கவில்லை, போகிற போக்கில் அது நடந்துவிட்டது, இதை நீங்கள் தவறாக சித்தரிக்கிறீர்கள் என்று தீர்ப்பையும் வழங்கியுள்ளனர் மைனர்குஞ்சு கட்டப்பஞ்சாயத்தின் நாட்டாமைகள்.

மேலும், கமிட்டியில் இருந்த உசைன் பாதிக்கப்பட்ட மாணவியைப் பார்த்து, “செக்ஸூவல் ஹராஸ்மண்ட் கம்ப்ளைண்ட் குடுத்துட்டு, குடும்பத்தைவிட்டுட்டு பாய்ஸோட நைட்ல உட்காருவது சரியா?,” என்று கிரிமினல் தனமாக கேட்டுள்ளார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேரா.சௌந்திரராஜனை தண்டிக்க துப்பிலாத உசைன் போன்ற ஜால்ராக்கள், பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரோடு போராட்டத்தில் உள்ள மாணவர்களின் கேரக்டரையும் தவறாக சித்தரித்து தனது அல்ப்ப புத்தியை காட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த பாலியல் அத்துமீறலை நேரில் பார்த்த சாட்சியங்களான மாணவர்களை அழைத்து பேசாத கமிட்டியினர், பேரா.சௌந்திரராஜன் செட்-அப் செய்து கூட்டி வந்த, சம்பவ இடத்திலேயே இல்லாதவர்களை சாட்சியங்களாக விசாரித்துள்ளனர். இந்த கமிட்டியின் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு, பாதிக்கப்பட்ட மாணவியின் பிரச்சனையையே கேட்காமல், கேடுகெட்ட தனமாக பேரா.சௌந்தரராஜனுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்கள் என்பதை நீண்ட பட்டியலே போடலாம்.

இவ்வளவு அநீதிகளும் அட்டுழியங்களும் எங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பகல் இரண்டு இரவுகளை கடந்து எங்களுடைய போராட்டம் சென்று கொண்டிருக்கிறது. எங்களது குரலை நசுக்கும் வேலையைத்தான் பேரா.சௌந்திரராஜனும், பல்கலைக்கழக நிர்வாகமும் செய்து கொண்டிருக்கின்றனர். எங்களுடைய கோரிக்கையே, தவறுமேல்தவறு செய்து கொண்டிருக்கும் பேரா.சௌந்திரராஜனால் எங்களைப்போல் இன்னொரு மாணவரும், மாணவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான்.

எனவே, இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரிக்குமாறு கோருகிறோம். மேலும், ஃபெயில் ஆக்கியது முதல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வரை கல்விச் செயல்பாட்டுக்கே முற்றிலும் தகுதியில்லாத பேரா.சௌந்திரராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு

பாதிக்கப்பட்ட தொல்லியல்துறை மாணவர்கள்,

சென்னைப் பல்கலைக்கழகம்

சேப்பாக்கம் வளாகம்

தொடர்புக்கு: 96001 62343

நடக்கும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தால், பற்பல கேள்விகள் எழுகின்றன: நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்து, உள்ளவற்றை படித்து-சரிபார்த்து, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையில், சிந்தித்து, கீழ்கண்ட விசயங்கள் தொகுக்கப் படுகின்றன:

  1. முதுகலை படிப்பு, ஆராய்ச்சி என்று பல்கலைப் படிப்பு படிக்க வரும் மாணவ-மாணவியர், ஏன், எவ்வாறு, இதற்காக இவ்வாறு திசை மாறுகின்றனர்?
  2. அனுமதி கிடைப்பதே கடினமாக உள்ள நிலையில், அனுமதி கிடைத்தப் பிறகு, வகுப்பு, பாடம், படிப்பு, ஆராய்ச்சி என்றில்லாமல், ஏன் இத்தகைய ஆர்பாட்டம்-போராட்டம் முதலியவற்றில் ஈடுபடுகின்றனர்?
  3. உண்மையில் விடுதி, கட்டணம், மெஸ், சாப்பாடு…போன்ற பிரச்சினைகள் என்றால், பல்கலைக் கழக நிர்வாகம் அவற்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். நூறாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் பல்கலைக் கழகத்திற்கு, இதெல்லாம், ஒரு பிரச்சினையாகவே இருக்க முடியாது.
  4. கொரோனா காலம் எனும் போது, உரிய வசதிகளை பல்கலைக் கழக நிர்வாகம் செய்திருக்க வேண்டும்.
  5. சென்னை பல்கலைக் கழகம் போன்ற உலக பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகங்கள் ஏன் உரிய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முதலியோரை உடனுக்கு உடன் நியமிக்காமல், காலியான இடங்களை வைத்து, ஒன்று, இரண்டு, மூன்று என்று பல ஆண்டுகளாக செயல்பட வேண்டும்?
  6. அரசியல் சார்ந்த மாணவ இயக்கங்கள், மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் முதலியோரைப் பிரிக்கும் வகையில் ஏன் அனுமதிக்கப் படவேண்டும்?
  7. பல்கலை துறை ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று, துறை ஆசிரியர்களே, முன்பு மாணவர்கள் தாக்கியபோது போராடி-ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
  8. பிறகு “அம்பேத்கர்-பெரியார் ஸ்டெடி சர்கிள்” போன்ற தீவிரக் கொள்கைகள், சித்தாந்தங்கள் கொண்ட குழுக்களால், மாணவ-மாணவியர்களிடையே அமைதி குலைக்கும் போக்கு ஏற்பட்டுள்ளது, ஏற்படுகிறது.
  9. படிப்பில் மட்டும் கவனம், சிரத்தை வைத்துக் கொண்டால், இத்தகைய பிரச்சினைகள் எழாது.
  10. மேலும், மாணவ-மாணவியர்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் இத்தகைய விசயங்களில் கண்டுகொள்ளாதது போல தெரிகிறது. உண்மையில் அவர்களுக்குத் தெரியுமா, அறிவிக்கப் படுகிறதா என்று தெரியவில்லை.
  11. நிச்சயமாக, மாணவ-மாணவியர், இரவுகளில் அவ்வாறு தங்கி போராடுவதை யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், விரும்ப மாட்டார்கள். பிறகு, அவை – அத்தகைய நிகழ்வுகள் “உள்ளிருப்புப் போராட்டங்கள்,”………எப்படி, எவ்வாறு, ஏன் நடந்து கொண்டிருக்கின்றன?
  12. எனவே, இவையெல்லாம் நடப்பது படிப்பு, பாடம், பாடதிட்டம், புத்தகங்கள், போதனை, பயிற்சி, ஆராய்ச்சி,……..முதலியவற்றைத் தாண்டிய நிலையில் வேறெதற்கோ சம்பந்தப் பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது.
  13. விளம்பரம், பிரச்சாரம், பிரபலம், போன்ற காரணங்களுக்காக, எதையோ சாதிக்கிறோம், போராடுகிறோம் என்று ஒரு மனநிலையோடு, உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுவது தான் தெரிகிறது. முகநூலில் வருவது, பிறகு குறிப்பிட்ட இணைதள ஊடகங்களில் வருவது, பிறகு பிரபல ஊடகங்களில் செய்திகளாக மாறுவது, வருவது, ஒரு முறையினைக் காட்டுகிறது.
  14. உணர்ச்சிப் பூர்வமான பேச்சுகள், தூண்டும் வாதங்கள், தொடர்ந்து செய்யும் விவாதங்கள், வாய்-சண்டைகள், தான் என்ற அகம்பாவத்துடன் செயல்படும் போக்கு, எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது போன்ற தோரணைகள்,……………………. முதலியன சரியான போக்காகத் தெரியவில்லை.
  15.  திட்டமிட்டு புகைப் படங்கள் – வீடியோக்கள் எடுப்பது, ஊடகங்களுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு, இத்தகைய பிரச்சினைகளை விளம்பரம் படுத்துவது, படிப்படியாக திசைத் திரும்பி அல்லது திசைத் திருப்பி, வக்கிர-வன்ம குற்றச் சாட்டுகள், பரஸ்பர குற்றச் சாட்டுகள், முதலியவற்றை வைப்பது, தொடர்ந்து அவற்றை நீட்டிப்பது, ஒருதலைப் பட்சமாக ஒரு நிகழ்வை, நபர்களை விமர்சிப்பது, தாக்குவது முதலியன சொல்லி வைத்து செய்பவை போன்று உள்ளன, சரியான போக்காகத் தெரியவில்லை.
  16. சம்பந்தப் பட்டவர்கள், பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோர் பேசித் தீர்க்க வேண்டிய விசயங்களை பிரச்சினை ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதநிலை தவறுகள் மற்றும் மனப்பாங்குடன் பழி வாங்க வேண்டும் போன்ற மனோபாவங்கள் இருந்தால், அவற்றை மாற்றியாக வேண்டும்.
  17. மக்களை ஒன்று சேர்ப்பது என்பது தான் கடினம், பிரிப்பது சுலபமான செயல் தான்.

© வேதபிரகாஷ்

20-03-2021

அம்பேத்கர் பெரியார் ஸ்டெடி சர்கிள் என்ற அமைப்பு, சர்ச்சைக்குரிய வேலைகளை செய்து வருகிறது. மாணா-மாணவியர்களைப் பிரிக்கிறது.
இங்கு போராடும் மாணவர்கள் மற்றவர்களுடன் சண்டை போடுவது முதலியவற்றில் ஈடுபடுவது தெர்கிறது.
ஊடகங்கள் சரிபார்த்து செய்திகளை வெளியிடுவதில்லை என்பதற்கு, இது ஒரு உதாரணம். வகுப்பில் அந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நடந்ததாகக் குறிப்பிடுகிறது.

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை! (1)

மார்ச் 19, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை! (1)

விடுதி கட்டண எதிர்ப்பு, பாலியல் தொல்லையில் முடிந்தது எப்படி?: தொல்லியல் துறை பேராசிரியர் விடுதி கட்டணத்தை எதிர்த்து போராடிய தனது துறையை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது[1]. இதுகுறித்து விளக்கம் அறிய பேராசிரியர் சௌந்தரராஜனை தொடர்பு கொண்டபோது, ஏற்கனவே மதிப்பெண் விவகாரத்தில் தனக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து, மாணவர்கள் தன் மீது அபாண்டமாக பழி சுமத்தி, தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி முடித்துக்கொண்டார்[2]. ஆங்கிலத்தில், “டிடிநெக்ஸ்ட்” (DTNext) என்ற தினத்தந்தி வெளியீட்டில் மட்டும் வந்துள்ளது[3]. 18-03-2021 அன்று விசாரணைக் குழு முன்னர் அவர் ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது[4].  மேல் படிப்பு படிக்க வரும் மாணவர்கள், இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்களா, அதற்கெல்லாம் நேரம் உள்ளதா, மாணவர்-ஆசிரியர் உறவு முறை சரியாக இல்லையா, பெற்றோர்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என்று தான் தோன்றுகிறது. ஏதோ படிக்க வந்தால், படிப்பை முடித்து கொண்டு, நிம்மதியாக பட்டத்துடன் வெளியேறினால் போதும் என்ற நிலையில்லாமல், இவ்வாறெல்லாம் பிரச்சினைகள் செய்ய வேண்டுமா அல்லது பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டுமா என்று தெரியவில்லை.

“பாதிக்கப்பட்ட தொல்லியல் துறை மாணவர்கள்,” கொடுத்துள்ள கடிதம்: “பாதிக்கப்பட்ட தொல்லியல் துறை மாணவர்கள்,” கொடுத்துள்ள கடிதம் என்று செய்தியாக, சில இணைதள செய்திகள் வெளிவந்துள்ளன[5]. “சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் முதுகலை இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவர்களாகிய நாங்கள் தற்போது எங்கள் துறை சார்பில் கள அகழாய்வு பணிக்காக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முகாமிட்டுள்ளோம். இந்நிலையில் கடந்த 12/02/2021 அன்று எங்களுடைய நவம்பர் மாத மூன்றாம் பருவத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இத்தேர்வு முடிவுகள் இணையதளம் வாயிலாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கப்படவில்லை[6].

மாறாக, தொலைபேசி வாயிலாக அலுவலக ஊழியரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தொலைபேசி வாயிலாக எங்கள் முடிவுகளை கேட்டறிந்தோம். மேலும் இம்முடிவுகள் மதிப்பெண் வாயிலாக அளிக்கப்படாமல் வெறும் குறியீடுகளாகவே (Grade) கூறப்பட்டது.

இதில் சுமார் 8 பேர் தேர்வை நன்கு எழுதியிருந்தும் ஃபெயில் (அரியர்) என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுற்றோம். குறிப்பாக கடந்த மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் விடுதி கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராட்டத்தில் பங்கு பெற்ற, அதை ஆதரித்த மாணவர்களுக்கே ஃபெயில் என்ற முடிவு வந்திருந்தது.

இம்முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று துறைத்தலைவரை நாங்கள் தொடர்பு கொண்டு ஒவ்வொருவரின் Internal மற்றும் External மதிப்பெண்கள் என்ன என்று கேட்டபோது முறையாக பதில் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே 14 மாணவர்கள் உடல்நலம் சரியில்லாத நிலையிலும், வேலூரில் அகழாய்வு பணி நடக்கும் இடத்திலிருந்து கிளம்பி வருகிறோம் என்று முறையாக பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் எங்களின் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டும், அகழாய்வுக்கான பொறுப்பாளரிடமும் தெரிவித்துவிட்டு கிளம்பினோம்.

நேற்று (15-02-2021) பல்கலைகழகத்திற்கு வந்தவுடன் நேரடியாக துறைத் தலைவரான சௌந்தரராஜன் அவர்களை அணுகி விளக்கம் கோரினோம். ஆனால், அவரோ எங்களை உதாசீனப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். மேலும், எங்கள் மாணவர்களுல் சிவப்பிரகாசத்தை நோக்கி, “நீடீ பார்’ . அதனால அரியர்தான் உனக்கு, உன்னுடைய mail copy வேறாகவும், தபாலில் அனுப்பப்பட்ட ஒரிஜினல் வேறயாவும் இருக்குஎன்று அப்பட்டமாக பொய்யுரைத்தார்.

அப்படியெனில் தேர்வுத்தாளை காட்டுங்கள் எனக் கோரியதற்கு முடியாது என மறுத்துவிட்டார். இதனையடுத்து பதிவாளரை சந்தித்து முறையிட்டபோது அவர் துறைத்தலைவரை வைத்துக்கொண்டு நாளை காலை 10 மணிக்கு உங்கள் அனைவரது தேர்வுத்தாளை திருத்திய சப்ஜெக்ட் ஆசிரியரை கொண்டு உங்கள் மத்தியிலேயே மீண்டும் திருத்துகிறோம் என உத்திரவாதமளித்த நிலையில் நாங்கள் திரும்ப விடுதிக்கு சென்றோம்.

இன்று (16-02-2021) மீண்டும் பதிவாளரின் வார்த்தையை நம்பி துறைத்தலைவரை அணுகியபோது, ஒவ்வொருவரையும் தனித்தனியே அறைக்குள் அழைத்து திருத்திய ஆசிரியர் அல்லாமல் துறையில் உள்ள வேறொரு ஆசிரியரை வைத்து இதுதான் உங்கள் மார்க் பாத்துக்கோங்க என்று சிறிதும் மரியாதையின்றி அதிகாரத்தனமாக நடந்து கொண்டார்.

மேலும், ஃபெயில் செய்த தேர்வுத்தாளை மட்டும் ஒரிஜினல் பேப்பரில் திருத்தாமல் மெயில் காப்பியை Xerox செய்து திருத்தியிருக்கிறார்கள். அதுகூட பென்சில்களால் அழித்து அடித்து திருத்தியிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்று, “எங்கே எங்களுடைய ஒரிஜினல் பேப்பர்?, திருத்திய பேராசிரியரின் கையொப்பம் எங்கே?, ஏன் பென்சிலால் திருத்தியிருக்கிறது?, மார்க்குகள் அழித்து போடப்பட்டுள்ளதுஎன்று கேட்டதற்குஅதெல்லாம் நீ பேசக்கூடாதுநீ ஓவரா பேசுரஎன்று எங்களை மிரட்டினார் துறைத் தலைவர்.

மேலும், சரியாக எழுதியிருந்தும் வெறும் 2 மார்க் 1 மார்க் என்று அளிக்கப்பட்டது ஏன் என்றால் “ ‘கண்டென்ட்இல்லை, எனக்கு சரியா கண்ணு தெரியலைஎன்று மாணவர்களிடம் கதையளக்கிறார். “கண்டென்ட் இல்லையென்றால் எதைவைத்து அளவிடுகிறீர்கள்? Answer key எங்கே?” என்றால் அதற்கும் பதிலில்லை.

இதையடுத்து தற்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாங்கள் பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை அழைத்துப் பேசிய பதிவாளர், “அகழாய்வு பணியை முடித்து 25 நாட்கள் கழித்து வாங்க.. அப்போது பார்த்துக் கொள்ளலாம்; உடனடியாக எதுவும் செய்யமுடியாதுஎன நேற்று அளித்த உத்திரவாதத்தையே மாற்றி மிகவும் அலட்சியமாகப் பேசுகிறார்.

பல்வேறு பொருளாதார சமூக தடைகளிலிருந்து தாண்டிவந்து தற்போதுதான் கல்வி எனும் கனவை நோக்கி வருகிறோம். ஆனால் இதிலும் காரணமற்ற நிர்வாக நெருக்கடிகளும், துறைத்தலைவர் சௌந்தரராஜன் அவர்களின் நாகரீகமற்ற பழிவாங்கும் செயல்பாட்டாலும் எங்களில் சிலர் படிப்பையே விட்டுவிட்டு வெளியேறிவிடலாம் என்னும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டுள்ளோம்.

தற்சமயம் எங்களது தேர்வுத்தாள்கள் வேறொரு கல்லூரி பேராசிரியர்களால் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கும் வரை நாங்கள் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்து இரவிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்தும், தொல்லியல் துறைத்தலைவர் சௌந்தரராஜன் அவர்களின் அதிகாரத் திமிரை கண்டித்தும் எங்களுக்காக அனைத்து கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களும், பொதுமக்களும் சமூக ஜனநாயக சக்திகளும் ஆதரவு குரலெழுப்ப வேண்டுமென்று இந்த அறிக்கை வாயிலாக உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்”.

இப்படிக்கு,

பாதிக்கப்பட்ட தொல்லியல் துறை மாணவர்கள்,

சென்னை பல்கலைக்கழகம்,

தொடர்புக்கு : 9600162343

இக்கடிதம் அல்லது அறிக்கை அப்படியே செய்தியாக, இணைதள ஊடகங்களில் உலாவந்து கொண்டிருக்கின்றன.

© வேதபிரகாஷ்

19-03-2021


[1] நியூஸ்.18, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு…!, NEWS18; LAST UPDATED : MARCH 18, 2021, 18:03 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/madras-university-students-protest-against-archaeology-department-hod-for-sexual-harassment-vin-430253.html

[3]  DTNext, Madras University students protest assault on female student, demand action against HOD, Published: Mar 18,202112:54 PM

[4] Students of Ancient History and Archaeology in the University of Madras on Thursday (18-03-2021) staged a demonstration demanding action against their head of department (HOD) for allegedly assaulting a female student in his class. The protesters claimed that J Soundararajan had also sexually assaulted a female student during an argument in the class. Students said that several complaints were  lodged with the university authorities against the HOD but no action has been taken yet. University sources confirmed that a complaint was lodged against Soundararajan, who was asked to appear before the inquiry committee on Thursday on the allegations submitted by the students. The protesting students said their stir would continue till action is taken against Soundararajan.

https://www.dtnext.in/News/City/2021/03/18125435/1281478/Madras-University-students-protest-assault-on-female-.vpf

[5] வினவு, சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துப்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !, செல்வம் -March 18, 2021.

[6] https://www.vinavu.com/2021/03/18/madras-university-hod-archeology-sexual-harassment/