திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, திராவிட மாடல் கல்வித்துறையை அரசியலாக்கி சீர்கெடுக்கிறது! (4)
சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் அமர்த்தப் பட்ட ஊழல்: சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி, பேராசிரியர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்[1]. இவ்வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசியர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணிநியமன விதிமுறைகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[2]. ஒவ்வொரு பேராசியரின் ஆவணங்களும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் பணிநியமன ஆணைகள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதா எனவும், விருப்பத்தின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதி சுப்ரமணியம் தெரிவித்தார்[3]. ‘வகுப்பில் மாணவர்கள் பேராசிரியர்களை மதிப்பதில்லை எனும் பொது குற்றச்சாட்டு நிலவி வருகிறது. பேராசிரியர்களுக்கு தகுதியில்லை என்றால், அவர்களால் முறையாக வகுப்புகளை நடத்த முடியாது. அப்படியிருந்தால் அவர்களை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?’ என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கொரோனா காலத்தில் தொடரும் ஊழல்கள்: பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட தொலைதூர கல்வி மைய மாணவர்களுக்கு மே 15-ந் தேதி 2019 (இன்னும் இரண்டுநாட்கள்தான் உள்ளன) தேர்வுகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழும்பியிருக்கிறது[4]. இதற்குப் பின்னணியை ஆராய்ந்தபோதுதான் துணைவேந்தரின் புத்தக பிரிண்டிங் ஊழலும் அம்பலமாகிறது[5]. புத்தகங்கள் இல்லாமலேயே தேர்வுக்கு படித்து எப்படி தேர்ச்சி பெறமுடியும்? அப்படி தேர்ச்சிபெற்றவர் அரசுப்பணியில் எப்படி நேர்மையுடன் செயல்படுவார்? 2022ல் கேரளா மையங்களில் னினா-விடைத் தாள்கள் மாற்றப் பட்டு, மற்றவர்களை வைத்து எழுதுவிக்கச் செய்து, பாஸ் செய்ய ரூ. 3.5 கோடிகள் பெற்றதாக செய்திகள் வந்தன[6]. அதாவது, கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, ஆ:ள்மாறாட்டம் செய்து, அத்தகைய ஊழல்களை செய்துள்ளனர்[7].
2018 ஊழலை 2022ல் நக்கீரன் கிளறுவது ஏன்?: பாமக ராமதாஸ், வள்ளி ஊழலை தனது அறிக்கையில் வெளியிய, அதை விகடன், “துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ்” என்று தலைப்பிட்டு வெளியிட்டது[8]. பிறகு, மேலும் விவரங்களை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டப் பிறகு, ஊடகங்கள் அதைப் பறிய செய்திகளை வெளியிட்டன[9]. நக்கீரனில் இப்பொழுது, இந்த விவரத்தை அதிமுகவுடன் இணைத்து கதையை வெளியிட்டுள்ளது[10]. பழையக் கதையை, இப்பொழுது விவரிக்க முயன்றுள்ளது. காளிமுத்து, ரவிச்சந்திரன், வள்ளி, சந்தில் பாலாஜி என்று புகைப் படங்களைப் போட்டு விவரிக்கின்றது. ஆனால், 25 பேருக்கும் மேலாக ஊழலில் சிக்கியுள்ள பல்கலை துணைவேந்தர்கள் பற்றியும் இதே மாதிரி கதைகள் எழுதலாமே? கோடிகளுக்கு அதிபதிகள் ஆகி, பல வீடுகள் வாங்கி, வியாபாரங்களில் முதலீடு செய்து ஜாலியாக காலம் தள்ளி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் மட்டும் ஊழல் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் தொடரத்தான் போகிறது. இதில் திராவிடக் கட்சிகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், தெளிவாகவும் செயல்படுகிறார்கள். பழைய-தொடர்ந்து வரும் சிஸ்டம் அப்படியே தான் இருக்கும். வேண்டுமானால், சில மாறுதல்களைச் செய்யலாம்.
மத்திய அரசு மோதல் கல்வித் துறையை சீரழிக்கும்: பெரியார், அண்ணா, கருணாநிதி சொன்னார்கள் என்று பாடங்களில் புகுத்தலாம். திராவிடியன் மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக, முழுமையாக, எல்லாப் பிரச்சினைகளையும் வைத்து, கடந்த 70 வருட திராவிடத்துவ தாக்கத்தை வைத்து, சமூகத்தை ஆராய்ந்தால், குற்றங்கள் தான் பலவிதங்களில் பெருகி வந்துள்ளன, வருகின்றன. கல்வித் துறை சீரழிவுகளே, மாணவ-மாணவியர் ஒழுங்கீன, சமூகவிரோத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது, திகைப்படையச் செய்கிறது. அடிப்பது, கொல்வது என்ற அளவுக்கு வந்து விட்டது. முதலில் இவற்றை சரிசெய்யப் பார்க்காமல், மத்திய அரசு மோதல் என்று வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளினால், எல்லாமே சீரழிந்து விடும். மத்திய அரசு நிதியுதவி, ஆதரவு, முதலியன எல்லா மாநிலங்களையும் இணைந்து வருவது. இந்தியாவில், பாரதத்தில் இந்தியர் ஒன்றாகத்தான் செயல்பட வேண்டும். அவ்வாறுதான் 5000 வருடங்களுக்கும்மேலாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது போல, சில மாநிலங்கள், அரசியல்வாதிகள் ஒற்றுமையில்லாமல் போகும் போது, வெளியிலிருந்து ஆபத்து வருகிறது. அதைத்தான், இந்த திராவிடன் மாடல் எல்லாம் செய்து வருகிறது.
- மாமூல், கையூட்டு, கமிஷன், லஞ்சம், கவனிப்பு, வந்து பார்க்கிறேன்…… இவற்றையெல்லாம் ஏன் இந்துத்துவ வாதி எதிர்ப்பதில்லை?
- திராவிட கட்சிகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், சரி, இந்துத்துவ வாதிகள், தூய்மை, நியாயம், தர்மம் பேசுபவர்கள் அப்படி இருக்கலாமா?
- ஶ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸர், மனத்தளவில் நினைக்கின்ற ஒரு சிறிய அதர்ம சிந்தனைக் கூட பெரிய பாவம் என்கிறார்! பிறகு, ஊழலைக் கொல்ல வேண்டாமோ?
- தூய நினைவுகள் தூய்மையாக்குகின்றன, அது உடலையும் கட்டுப் படுத்துகின்றன, அமைதி-ஆரோக்கியம், ஆயுள் கொடுக்கின்றன!
- உடல் என்றுமே தனக்கு ஒவ்வாததை வெளியேத் தள்ளி விடுகிறது – தூவாரங்கள் மூலம் அவை நடந்து கொண்டே இருக்கின்றன. ஊழல்கள் அகலுகின்றன!
- குடும்பம், சமூகம், ஊர், நகரம், நாடு..முதலியனற்றிலும் இருக்கின்ற ஒவ்வாத ஊழலை, எந்த விதத்தில் இருந்தாலும், நீக்கிவிட வேண்டும்.
- நோயாளிகள் சாகிறார்கள், பாலங்கள் விழுகின்றன, மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள், வாகனங்கள் எரிகின்றன இவையெல்லாமும் ஊழல்கள் தான்!
- மக்களைப் போலத்தான் ஆள்பவன் இருப்பான் (यथा प्रजा तथा राजा) எனும் போது, யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனஅறிந்து கொள்ளலாம்!
- தூய்மை என்று வாயினால் சொன்னால் மட்டும் போதாது, சொல்பவனின் எல்லா துவாரங்களும் தூய்மையாக இருக்க வேண்டும், இல்லை நாறிவிடும்!
- அசுத்தங்களில், அக்கிரமங்களில், அதர்மங்களில் அத்வைதம் எடுபடாது, துவைதம், விசிஷ்டாதுவைவதம் என்று தான் செல்ல வேண்டியிருக்கும்!
© வேதபிரகாஷ்
07-05-2022
[1] முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2016-17-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது தான் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
[2] மாலைமலர், சட்ட பல்கலைக்கழக ஊழல்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பேராசிரியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு: பிப்ரவரி 02, 2019 13:47 IST
[3] https://www.maalaimalar.com/news/district/2019/02/02134734/1225775/Law-university-scam-HC-asks-staff-to-produce-affidavit.vpf
[4] நக்கீரன், படிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள்! பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்!, மனோசௌந்தர், Published on 13/05/2019 (18:35) | Edited on 13/05/2019 (18:41).
[5] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/16000-students-going-write-examination-without-book-periyar-university
[6] பாலிமர் செய்தி, மதுரை காமராஜர் பல்கலையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க ரூ.3.5 கோடி லஞ்சம் பெற்றதாக புகார், ஆகஸ்ட்.8, 2020, 51:16 மதியம்.
[7] https://www.polimernews.com/dnews/117208
[8] விகடன், துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ், அஸ்வினி.சி, Published:03 Aug 2018 12 PMUpdated:03 Aug 2018 12 PM
[9] https://www.vikatan.com/government-and-politics/politics/132887-ramadoss-about-mother-therasa-university-scam
[10] நக்கீரன், துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம், தோண்டத் தோண்ட ஊழல், மே. 4-6-2022, பக்கம்.30-32.