தமிழ்வழி / தமிழ் மீடியம் தொழிற்நுட்ப / இஞ்சினியரிங் பாடப் படிப்புகள் வெ ற்றியா, தோல்வியா? (1)
தேவை என்றால் வைத்துக் கொள்கிறோம் இல்லை என்றால் நீக்கி விடுகிறோம்: சமீபத்தில் பள்ளி-கல்லூரி பாடப் புத்தகங்களில், சில பிரிவுகள், தலைப்புகள், தொகுப்புகள் முதலியன சேர்க்கப் படுதல் / நீக்கப் படுதல் பற்றி அரசியல் ரீதியிலான சர்ச்சைகள் எழுப்பப் பட்டு விவாதிக்கப் படுகின்றன. கொரோனா காலத்தில் 2020-2021, இது அதிகமாக நடந்தது. பரீட்சை இல்லாமல் பாஸ் / ஆல்பாஸ் என்ற நிலைகளும் இருந்தன. கடந்த 70 ஆண்டுகளில், உலகம் முழுவதும், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் ரீதியில் நடைமுறை வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கேற்ற முறையில், மனிதர்கள், வீடுகள், வீடுகளில் உபயோகப் படுத்தப் படும் பொருட்கள், தெருக்கள், நகரங்கள், பேருந்துகள் என்று எல்லாமே மாறி விட்டன. தேவை என்றால் வைத்துக் கொள்கிறோம் இல்லை என்றால் நீக்கி விடுகிறோம். அதே போல பாடப் பிரிவுகள், தலைப்புகள் தொகுப்புகள் முதலியன அவற்றில் உள்ள விவரங்கள் தேவையா-இல்லையா என தீர்மானித்து நீக்கப் படுகின்றன.
நன்றாக இல்லை என்றால் மாற்றத்தான் செய்கிறார்கள்: ஒரு பள்ளி / கல்லூரி என்று சேர்ந்து, நன்றாக இல்லை என்றால், அந்த பள்ளி / கல்லூரி விட்டு, வேறு பள்ளி / கல்லூரி என்று சேர்ந்து விடுகிறார்கள். பல நேரங்களில் ஆசிரியர்களே சிலபஸில் (syllabus) உள்ளவற்றை குறிப்பிட்ட கலகட்டத்தில் போதிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது. அப்பொழுது, ஒன்று அவை பரீட்சைக்கு நீக்கப் படுகின்ற, இல்லை சாய்ஸில் (choice) விட்டுவிடுங்கள் என்று அறிவுருத்தப் படுகிறது. இதில் எத்தகைய உள்நோக்கத்தையும் கற்பிக்க முடியாது. இவையெல்லாம் எல்லா பள்ளி / கல்லூரிகளிலும் நடந்து கொண்டுதான் வருகின்றன. அரசியல்வாதிகள் ஆட்சி மாறும் பொழுது, தங்களது தலைவர்கள் பற்றி படிக்க வேண்டும் என்ற சித்தாந்த ரீதியில் பாடங்களை நுழைக்கும் பொழுது தான் பிரச்சினை வருகிறது. ஆட்சி மாறும் பொழுது, அவர்கள் முந்தைய படப் பிரிவுகளை நீக்கி தங்களது தலைவர்கள் பற்றிய பாடங்களை நுழைக்கிறர்கள். இது சுழற்சியில் நடந்து வருகிறது எனலாம்.
இந்திய உணர்வுகளுக்கு எதிரான பாடங்கள்: தவிர மார்க்சீய, முகமதிய, முகலாய சித்தாந்திகள் என்று ஜே.என்.யூ (JNU), ஏ.எம்.யூ (AMU), டி.யூ (DU) என்று பல பல்கலைக் கழகத்தவர் என்.சி.இ.ஆர்.டி (NCERT), யு.ஜி.சி (UGC) என்று பல கல்வித் துறைகளில் ஆதிக்கம் செல்லுத்தி, பாடப் பிரிவுகளை திணித்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும், இந்தியாவிற்கு எதிரான சீத்தந்தம் கொண்டவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்தியா என்ற நாடே இல்லை, இந்தியர்களுக்கு கல்வி போன்றவை போதித்தது ஆங்கிகேயர் தாம், இப்பொழுதுள்ள நவீன எந்திரங்கள் முதலியவை அந்நியர் கொடுத்தது தான் அவர்களாக எதையும் செய்யவில்லை போன்றவை, இக்கால இந்தியாவுக்கு முரண்பாடாக இருக்கிறது. ஏனெனில் நிச்சயமாக இந்தியா பல்லாண்டுகளாக தன்னிறைவு கொண்ட நாடாக இருந்து வந்துள்ளது. அந்நியர் தாம், இந்தியாவில் பாலும் தேனும் ஓடுகின்றன என்று ஆசைப் பட்டு வந்தனர். ஆக, அத்தகைய பாடப் பிரிவுகள் இன்றைய கால கட்டத்திற்கு ஒவ்வாததாக-தேவையில்லாததாக உள்ளது. அத்தகைய பிரிவுகளை நீக்கும் போது, ஏன், யார் எதிர்க்கிறார்கள் என்பதையும் கவனிக்கலாம்.
காமர்ஸ் (commerce) / கணிதம் (Mathematics) போன்ற படிப்புகளுக்கு கிராக்கி அதிகமாவதேன்?: அந்நிலையில் தமிழகத்தில் இப்பிரச்சினை எழுந்துள்ளதை கவனிக்கலாம். அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள, சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்,” என, சட்டசபையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்[1]. தமிழகத்தைப் பொறுத்த வரையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க லட்சங்களில் டொனேஷன் கொடுத்தால் தான் இடம் கொடுக்கும், 90% மார்க் எடுத்தால் கூட கிடைக்காது. அந்நிலையில் ஜே.இ.இ (JEE) / இஞ்சினியரிங் இன்ட்ரென்ஸ் (All India Engineering Entrance Examinaions), நீட் (NEET) ஏன்றெல்லாம் வந்த பொது, கல்வி-வியாபாரம் போகிறதே என்று, தனியார் கல்லுரி கோஷ்டிகள் அரசியல்வாதிகள் மூலம் எதிர்க்க ஆரம்பித்தனர். காமர்ஸ் (commerce) / கணிதம் (Mathematics) போன்ற படிப்புகளுக்கு என்றைக்கும் தேவையுள்ளது, அந்நிலையில், அதன் முக்கியத்துவத்தை அறிந்த மாணவ-மாணவியர் அப்படிப்புகளை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கின்றனர். முடிவுகள் சாதகமாக இருந்து வேலை கிடைக்கும் பொழுது, மற்ரவர்களும் அப்படிப்புகளுக்கு செல்கிகின்றனர். இதனால் தான் அப்படிப்புகளுக்கு கிராக்கி ஏற்படுகின்றன.
உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்: அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்[2]. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.
விஞ்ஞானம்-தொழிற்நுட்பப் படிப்புகளில் சர்ச்சை: அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனுார், கூடலுார், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. திட்டமலை அரசுக் கல்லூரியில் ஆங்கிலவழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றி கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்குப் பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், அரசு மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அனைத்து படிப்புகள் குறித்தும் விளக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தின் முக்கியத்துவமும் தெரியும். ஒவ்வொரு பாடத்திலும் ஆர்வம் வரும்.
கணித பட்டப்படிப்பையும் தொடர்ந்து நடத்தவேண்டும். புதிய பட்டப்படிப்புகளை நிச்சயம் அறிமுகம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது. ஏனெனில் தற்போது அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த மாணவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து மாணவர்கள் படிப்பதை அரசுதான் உறுதி செய்ய வேண்டும். கணிதப் படிப்பை புறக்கணிப்பது வரும் காலங்களில் உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம்தான் அடிப்படை. எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுதல், கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கணிதம் படிப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய முடியும். எனவே மாணவர்களுக்கு அரசு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சலுகைகளை அதிகரித்து மாணவர்கள் அதிகம் கற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்: அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன[3]. இது வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது[4]. பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியிலும் மாணவர்கள் படிப்பதற்கு முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது[5]. முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் வழங்கப்பட்டன[6]. அதன்பிறகு பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் 16 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வருகின்றன[7]. ஆனால், இவற்றில் சேரும் மாணவ-மாணவியர் ஒரு சிலரே. மேலும் தமிழில் படிப்பதால் வேலை கிடைக்கும் சிக்கலும் உள்ளது. இதனால், இப்படிப்புகளைப் படிக்க யாரும் வராத நிலையும் உண்டாகிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது[8]. அதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன[9].
© வேதபிரகாஷ்
27-06-2023
[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Govt. College : 12 அரசு கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் நீக்கம் ஏன்? அரசு ஆவண செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்தல், Priyadarshini R, Jun 18, 2023 10:43 AM IST.
[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/12-why-are-core-subjects-removed-in-government-colleges-the-government-insists-that-educators-should-document-131687064678098.html
[3] காமதேனு, தமிழ் வழி பாடப்பிரிவுகள் 11 கல்லூரிகளில் நீக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம், காமதேனு, Updated on : 25 May, 2023, 10:55 am.
[4] https://kamadenu.hindutamil.in/national/tamil-medium-courses-abolished-in-11-colleges-anna-university-notice
[5] தினத்தந்தி, #BREAKING || “தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்” – அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு , By தந்தி டிவி 25 மே 2023 10:11 AM
[6] https://www.thanthitv.com/latest-news/breaking-temporary-cancellation-of-tamil-medium-courses-important-notice-issued-by-anna-university-188390
[7] தினமலர், தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம், மாற்றம் செய்த நாள்: மே 25,2023 11:43
[8] https://m.dinamalar.com/detail.php?id=3330087
[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கம்; அண்ணா பல்கலை. அறிவிப்பு, Written by WebDesk, May 25, 2023 11:43 IST