Posts Tagged ‘தமிழில் மருத்துவம்’

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது- ஆரம்பம் முதல் முடிவு வரை அரசியல் தான்! (3)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்ததுஆரம்பம் முதல் முடிவு வரை அரசியல் தான்! (3)

திருமா வளவன் தமிழ் தேசிய பேச்சு, எதிர்ப்பு: இம்மாநாட்டை கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள் திருமாவளவனுக்கு மட்டும் கொடுக்கும் முக்கிய்த்துவம் அல்லது விளம்பரம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அந்த செய்திகள் அலசப்படுகின்றன. இவ்விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருந்தார்[1]. வழக்கம் போல திருமா வளவன், தமிழ் தேசியம், சனாதனம் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்[2]. அதாவது ஏகபட்ட அரசியல்வாதிகள் அழைக்கப் பட்டுள்ளதில், இவரும் ஒருவர். “மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான்[3]. அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது,” என்று கூறினார்[4].

Thiruma honoured for his “wonderful” speech…………

இஸ்லாம்கிறிஸ்தவம் ஒப்பிட்டு இந்து மதத்தை விமர்சித்துப் பேசியது: தத்துவம்-சமத்துவம் என்று விளக்கம் கொடுத்த போது, இஸ்லாத்தில், கிறிஸ்துவத்தில் சமத்துவம்-சகோதரத்துவம் இருக்கிறது ஆனால், இந்து மதத்தில், சனாதனத்தில், அந்த தத்துவத்தின் படி சமத்துவம் இல்லை, சகோதரத்துவம் இல்லை என்றெல்லாம் பேசினார். இஸ்லாம்-கிறிஸ்தவம் என்றால் மதம், மசூதி-சர்ச் என்றால் இன்ஸ்டிடுஷன். ஆனால், இந்துமதத்தில் அப்படியில்லை. அப்பொழுது மேடையில் அவர் தமிழ் தேசியம் குறித்து பேசினார்[5]. அதில் தமிழ் தேசியம் என்ற பெயரில் மதவாதம், இனவாதம் கூடாது என்று கூறியிருந்தார்[6]. அப்படி அவர் பேசி முடித்து மேடையை விட்டு இறங்கிய சில நொடிகளில் ‘டேய் நிப்பாட்ரா’ என்று திருமாவளவனுக்கு எதிராக சிலர் குரல் எழுப்பினர்[7]. ‘நீ பேசிய தலைப்பே சரியில்லை’ என்று அவரை சத்தம் போட்டு பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது[8]. அதன் பின்னர் விழா ஏற்பாடு செய்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்த முற்பட்டார்கள்[9]. பின்பு திருமாவளவன் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியே சென்றனர்[10]. சிறிது சலசலப்புகளுடன் மாநாட்டின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் திருமாவளவன்.

22-07-2023 சனிக்கிழமை: நாளை நடைபெறுகின்ற மாநாட்டின் இரண்டாம் நாள் (22.7.2023) நிகழ்வில் மலேசியப் பிரதமர் தொடங்கி வைத்திட உள்ள அமர்வில் சிறப்பு அழைப்பாளராகவும் வீரமணி பங்கேற்றார், என்று தமிழக ஊடகங்கள் தவறாகக் குறிப்பிடுகின்றன.. அவருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச்செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், பெரியார் பன்னாட்டமைப்புப் பொறுப்பாளர்களும்   மாநாட்டில் கலந்துகொள்கின்றனர் என்று “விடுதலை” கூறுகிறது. அதனால், திக-போன்ற கட்சியினர் அதிக அளவில் கலந்து கொண்டனர் என்று தெரிகிறது. ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. முன்பே குறிப்பிட்டபடி, 500 கட்டுரைகள் வந்திருந்தாலும், சுமார் 20-25 கட்டுரைகள் தான் ஆராய்ச்சி நெறிமுறைகளுடன் இருந்தன. மற்றவை ஏதோ மாநாட்டிற்கு என்று அவசர-அவசரமாக தயார் செய்து கொண்டு வந்தது போன்று தான் இருந்தது.

Malaysian PM officially inaugurated the Conference and spoke on the occasion….

PM appreciated that different politicians had come together there at the conference….

23-07-2023 ஞாயிற்றுக் கிழமை: மலேசிய பிரதமர் மாநாட்டணதிகாரப் பூர்வமாகத் துவக்கி வைத்தார். அதாவது, முடிவுநாளில், துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நிதியுதவியை அறிவித்து, தமிழ் இலக்கியங்களை மலேசிய மொழியில் மொழிபெயெற்க வேண்டும் என்றார். மாநாட்டிற்கு 10 லட்சம் ரிங்கெட்டை மானியமாக அறிவித்தார். 2000 பேர் கலந்து கொண்டனர்[11].  மொத்தம் 550 கட்டுரைகள் வாசிக்கப் பட்டுள்ளதாகவும்[12], அவை ஓம்ஸ் அறக்கட்டளை, மலேசிய பண்பாட்டுக் கழகம் மற்ற சமூக அமைப்புகள் ஆய்ந்து அவற்றை வெளியிடுவதைப் பற்றி ஆலோசிக்கும் என்று சொல்லப் படுகிறது[13]. அரசியல், மொழிப்பற்று [வெறி], இனம், போன்ற காரணிகளால், கட்டுரைகள் வேறுவிதமான விளக்கங்களால் விலகிச் சென்றிருப்பதை கவனிக்கலாம். அரசியல்வாதிகளின் பேச்சு, ஆராய்ச்சி ரீதியில் இல்லாமல், மக்களைப் பிரிக்கும் போகில் தான் உள்ளது. அவை அச்சில் ஏறினால், அவர்களது உண்மைத் தன்மையினையும் தெரிந்து கொள்ளலாம். 21ம் நூற்றாண்டிலும் இத்தகைய கட்டுக்கதைகளான மொழி, இனம், ஆரியன், திராவிடன் என்றெல்லாம் பேசிக் கொண்டு காலம் தள்ளும் ஆட்கள் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான சிவகுமார் உரை: மலேசிய அரசு மற்றும் ஏற்பாட்டுக் குழு சார்பாக, 11ஆவது உலகத் ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றியை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ சிவகுமார் தெரிவித்தார்[14]. “இந்த வருடம் மலேசிய நாட்டில் 11 ஆம் உலக ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதை எண்ணி நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இதற்கு முன்பு நடந்த மாநாடுகளைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கும். அதே வேளையில், ஒரு புது சகாப்தத்தையும் தொடக்கி உள்ளது. சுமார் 3,000 தமிழறிஞர்கள் பங்கேற்று, 501 ஆராய்ச்சியின் படைப்புகள் இந்த அரங்கில் சமர்பிக்கப்பட்டன. இதை தவிர்த்து, இலட்சக்கணக்கான ஒன்லைன் பார்வையாளர்கள் இந்த மாநாட்டை கண்டு களித்தனர். இதுவே இந்த மாநாட்டின் மிக பெரிய வெற்றியாகும். இது மாநாட்டின் கடைசி நாள் என்றாலும், மாநாட்டு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சில படிகள் செய்யப்பட வேண்டும். இம்மாநாட்டின் மையக் கருப்பொருளானஇணைய யுகத்தில் தமிழ்என்ற தலைப்பில், இலக்கியவாதிகள், மொழியியலாளர்கள் மற்றும் பலர் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் நாகரிகம் குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளை ஆய்வுக் கட்டுரைகளில் சமர்ப்பித்தனர். ஆய்வாளர்கள் அறிவுபூர்வமாக சமர்ப்பித்த கட்டுரைகளை அனைத்தும் உங்கள் செவிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்,” என்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்[15].

இனி வரும் மாநாடுகளில் அரசியல் இல்லாமல் இருப்பதாக: மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கஷ்டப்பட்டு குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் திருப்திகரமாக செய்துள்ளனர். அப்படியே தமிழ், தமிழாராய்ச்சி, ஆராய்ச்சி-நெறிமுறை என்று சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அரசியல் கலப்பினால், மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், அவர்களுக்குள் இருக்கும் அரசியல்வாதிகள், வரவேற்கப் பட்ட அரசியல்வாதிகள், என்று எல்லோருமே ஒவ்வொரு நிலையில் பிரச்சினையைக் கிளப்பியுள்ளனர். பிரதமர் பேசும் பொழுது, எல்லா மாறுபட்ட கட்சியினர் ஒன்றாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, அரசியல்வாதிகளாள் சலசலப்புகள், பிரச்சினைகள், கைகலப்புகள் முதலியவை உண்டாகின. இருப்பினும் அனைவற்றையும் அடக்கிக் கொண்டு மாநாடு நடந்து முடிந்துள்ளது. இனிமேல், அடுத்த மாநாடுகளிலிருந்து அரசியல், அரசியல்வாதிகள், கட்சிகள் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால், எல்லாவற்றிற்கும் நல்லது, உன்னதமானது.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] தினமலர், திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, பதிவு செய்த நாள்: ஜூலை 22,2023 01:45

[2] https://m.dinamalar.com/detail.php?id=3382814

[3] நியூஸ்.7.தமிழ், தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்! – உலக மலேசிய தமிழ் மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5] திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு: மலேசிய உலக தமிழ் மாநாட்டில் சலசலப்பு!, Manikanda Prabu, First Published Jul 23, 2023, 3:29 PM IST;  Last Updated Jul 23, 2023, 3:29 PM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/uproar-at-malaysian-world-tamil-conference-counter-stand-to-thirumavalavan-speech-ry8uel

[7] பாலிமர்.செய்தி, மலேசியாவில் திருமா பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்….! தமிழ் தேசிய சர்ச்சை……!, ஜூலை 23, 2023 08:53:44 காலை.

[8] https://www.polimernews.com/dnews/205989

[9] தமிழ்.ஸ்பார்க்.காம், டேய் நிப்பாட்ராநீ பேசுறதே சரியில்ல., திருமாவளவனுக்கு எதிராக மலேசியாவில் வெடித்த குரல்.!!, Sun, 23 Jul 2023 11:14:37 IST Author by Priya

[10] https://www.tamilspark.com/tamilnadu/voice-rise-against-to-thirumavalavan-in-malaysia

[11] பெர்னாமா.காம், 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை பிரதமர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார், 23-07-2023, 12.10 மாலை.

https://www.bernama.com/tam/news.php?id=2208933

[12] பெர்னாமா.காம், 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழா, 23-07-2023, 07:19 PM

[13]  https://www.bernama.com/tam/news.php?id=2209142

[14] தினத்தந்தி.மலேசியா, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தது புதிய சகாப்தமாகும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம் , Updated: July 23, 2023; July 23, 2023; https://thinathanthi.my/?p=5697

[15] https://thinathanthi.my/?p=5697

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-public-lecture-political.jpg

உள்ளூர் அறிஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்: முதல் நாளில், மலேசியாவில் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் பாப்பாவின் காவலர் கவிஞர் முரசு நெடுமாறன் உரையாற்றினார். குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே கவிதை மூலம் எப்படி தமிழை வளர்த்திருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்[1]. கவிஞர் முரசு நெடுமாறன், சிலாங்கூர் மாநில முன்னாள் க. முருகன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப் பட்டனர். மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், மாநாட்டிற்கான செயலாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொது மக்களும் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்[2]. உள்ளூர் ஊடகங்கள் இவற்றைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிறகு பேசியவர்கள் தமிழ் இலக்கியம், வைணவம், சைவம் பற்றியெல்லாம் பேசினர். ஆனால், அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்த போது, மாநாட்டின் போக்கு திசைத் திரும்பியது எனலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-thiruma-speaking-1.jpg

பிரிவினைவாதம் பேசப் பட்டது: மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள திருமாவளவன் பேசியதாவது[3]: மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது என்று கூறினார்[4]. இம் மாநாட்டின் பொது அரங்கில் மலேசிய நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல்நாள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-audience.jpg

கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை: ஆய்வு அமர்வுகள், ஆய்வு கட்டுரைகள், விவரங்கள், வாசிப்புகள் பற்றிய செய்திகளைக் காணவில்லை. கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றி மூச்சுக் கூட விட காணோம். மாநாட்டிற்குச் சென்றவர்களும், சமூக ஊடகங்களில் “நான் மாநாட்டிற்குச் சென்றேன்,” என்று புகைப்படங்கள் போட்டுக் கொண்டாலும், கட்டுரைப் படித்தேன், கேள்விகள் கேட்டார்கள், நான் பதில் சொன்னேன் என்றவாறு இல்லாமல், ஏதோ சுற்றுலா சென்றேன் பாணியில் தான் இருந்தது. ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய பட்டியல், தலைப்புகள், விவரங்களைக் காணோம் கலந்து கொண்டவர்களும் அவ்விவரங்களைப் பகிர்வதாகத் தெரியவில்லை. பெர்ணாம் என்ற இணைதளம் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலரின் வாசிப்புகள் தான் பதிவாகியுள்ளன (சைவம், வைணவம், சித்த மருத்துவம், பிள்ளைத் தமிழ், தோல்சீலை முதலியன).  சில கட்டுரைகள் நன்றாக இருந்தன. மற்றபடி, பெரும்பாலான மற்ற ஆய்வுக்கட்டுரைகள் அரைத்த மாவை அரைக்கும் என்பார்களே அந்த பாணியில் தான் இருந்தன.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia.more-politicians.2.jpg

அரசியல்வாதிகளை அழைத்து அரசியல் இல்லாமல் பேசுங்கள் என்று சொல்லப் பட்டது:. ஆனால், அவர்கள் எல்லோருமே அரசியல் தான் பேசினர், வீடியோவும் உள்ளது. அரசியல் மாநாடாக மாறிய நிலையில், தமிழ் தேசியம் போர்வையில், பிரிவினைவாதம் தான் பேசப்பட்டது. வேல்முருகன், தாமஸ், திருமாவளவன், ஶ்ரீகாந்த் [பீஜேபி], சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், இலானி, நிறைமதி [சீனர்], கடைசியாக கே.வீரமணி, என்று அதிகமாக, அரசியல் தான் நிறைய பேசப்பட்டது. தமிழ் தேசியம், பார்ப்பனியம், வர்ணம், தமிழ்-சமஸ்கிருதம், சமஸ்கிருத ஆதிக்கம், ஆரியன்–திராவிடன் பண்பாட்டு படையெடுப்பு, என்றெல்லாம் பேசப் பட்டது. வெண்பா, ஆசிரியபா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா முதலியவற்றிற்கு திரிபு விளக்கமும் கொடுக்கப் பட்டது. இதனால், தமிழுக்கு, தமிழ் ஆராய்ச்சிக்கு, தமிழ் மேன்பாட்டிற்கு எந்த பிரயோஜனும் இல்லை. பெரும்பாலான நேரம் இவ்வாறு அரசியல், பேசியதையே பேசியது, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் என்று தான் சென்றது. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர், அவரவர் வேலைகளுக்கு சென்றனர். சாப்பிடும் நேரதிற்கு வந்து விடுவர்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-velmurugan.jpg

மொழி, தேசம், தேசியம், நாடு, ஒன்றியம் என்று குழப்பவாதங்களை வைக்கும் குழப்பவாதிகள்: வேல்முருகன் தமிழ் தேசியம் என்று, பிரிவினைவாதம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முன்பு, கம்யூனிஸவாதிகள், பிறகு தமிழீழ ஆதரவாளர்கள், அதற்கும் பிறகு தமிழக பிரிவினைவாதிகள், மொழியை வைத்து, மொழிவாறான தேசிய இனங்கள் என்று பேசி குழப்பி வந்தார்கள். அதாவது ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தேசம் உள்ளது, அந்தமொழிவாரி தேசம் போற்றப் பட வேண்டும். அந்த தேசியம், இந்திய தேசியம் வேறு. எப்படி பலமொழி பேசும் தேசியங்கள், இந்திய நாட்டில் ஒன்றியத்தில் சேர்ந்திருக்கின்றனவோ, அதே போல சுயநிர்ணய உரிமையோடு, ஒவ்வொரு தேசமும் பிரிய உரிமை உண்டு என்றெல்லாம் குழப்பவாதங்களில் ஈடுபட்டனர். நாடு, தேசம், தேயம், இடம் போன்ற சொற்கள், ஒரு இடத்தைத் தான் குறிப்பிட்டன. அதை அறிந்தும் இவர்கள் திரிபுவாதம் செய்து வருகிறார்கள். அவையெல்லாம் கருணாநிதி போன்றோரே அடக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இப்பொழுது, மறுபடியும் திமுக ஒன்றியம், திராவிட மாடல், திராவிட ஸ்டாக் என்றெல்லாம் பேசி வருவதால், இந்த குழப்பவாதிகளுக்கு தைரியம் வந்து, அவ்வாறே முன்பு போல, பிரிவினைவாதம் பேச ஆரம்பித்து விட்டனர். ஆக இந்து வேல்முருகன் போன்றோருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth.jpg

வலதுசாரிகளின் பலவீனம், ஒற்றுமையின்மை மற்றும் பழமைவாதம்: ஶ்ரீகாந்த் என்ற பிஜேபி இந்தியதேசத்துடன் பேசினாலும், மற்றவர்கள் கொஞ்சம் பேசினாலும், எடுபடவில்லை. இவரும் கி.ஆ.பே.வின் பெயரன் என்ற முறையில் இருக்கிறார். நக்கீரன் கோபாலுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடதுசாரிகள், திக-திமுகவினர் ஒன்றாக வந்திருந்த நிலையில், வலதுசாரிக்கள் இங்கு வாய்கிழிய பேசினாலும், அங்கு யாரையும் காணோம். “இந்திய தேசியமும், தமிழ் தேசியமும்” என்று பேசி, அவர்களின் முகத்திரையைக் கிழிக்க ஆளில்லை; “தமிழ் தேசியமும், திராவிட தேசியமும்,” என்று கட்டுரை வாசிக்கவும் திராணி இல்லை. ஆனால், இங்கு, திராவிட மாயை, பெரியாரின் ம்ச்றுபக்கம் என்றெல்லாம் பேசுவார்கள், எழுதுவார்கள், புத்தகங்களும் போடுவார்கள். ”முகநூலில் கம்பு சுற்றுவதோடு சரி, இம்மாதிரியான, கருத்துருவாக்கும், தாக்கம் கொண்ட அல்லது ஏற்படுத்தும் கருத்தரங்களில் கலந்து கொள்வதில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth-next-to-gopal.jpg

வலது சாரிகளின் ரகசிய கருத்தரங்கங்கள்: மத்திய அரசு ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் நடத்தப் படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள் என்று இவர்களே கலந்து கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய விழா என்று கொண்டாட ஆரம்பித்தாலும், ஏதோ ரகசியமாக நடத்துவது போல நடத்துகிறார்கள்[5]. எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. சுமார் 50-100 என்றிருந்தால், அவர்களுக்குள் அகிர்ந்து கொண்டு, கூடி விலம்பரப் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற படி, பொது ஊடகங்களில் அதைப் பற்றி எந்த தகவலும் வருவதில்லை. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும், சித்தாந்த ரீதியில் ஆட்களுக்கு பயிறிசி அளிப்பதில்லை, தயார் செய்வதும் இல்லை. அனுபவம் கொண்ட, ஆராய்ச்சியாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தெரிந்தும் ஓரங்கட்டுகிறார்கள் இதனால் தான், தங்களது பலத்தையுமிழந்து, எதிர்சித்தாந்திகளின் பலத்தை மறைமுகமாக வளர்க்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

24-07-2023


இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-senator-saraswati.jpg

[1] வணக்கம் மலேசியா, பேராளர்கள்பார்வையாளர்கள்திரளாககலந்துகொண்ட 11-வதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு, 21-07-2023.

[2]https://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

[3] நியூஸ்7தமிழ், தேசியஇனஅடையாளத்தைவலுப்படுத்தவேண்டும்! – உலகமலேசியதமிழ்மாநாட்டில்தொல்.திருமாவளவன்பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5]  பாண்டி-லிட்-பெஸ்ட் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கே தெரியாத அளவில் கூட நடக்கிறது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-vips.jpg



11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

இரும்பு காலம் பற்றிய கருத்து: ஆய்வரங்கத்தின் முதல் அமர்வில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜன் பேசியதாவது[1]: “இந்தியா முழுக்க பிராகிருத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன், தமிழகத்தில் தமிழி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான், தமிழகத்தில் பிராகிருத கல்வெட்டுகள் இல்லை. தமிழர்களின் வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது. காரணம், சங்க இலக்கியத்தில் அனைத்து கூறுகளும் சொல்லப்படவில்லை. அகழாய்வில் பயன்படா பொருட்களே அதிகளவில் கிடைக்கின்றன. கல்வெட்டு, காசுகளும், பொதுமக்களின் வாழ்வியலை முழுமையாக சொல்லவில்லை. என்றாலும், உலகின் முன்னேறிய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை, இந்த ஆய்வுகளால் அறிய முடிகிறது. தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகம் சிறந்திருந்தது. இங்கு, எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்திருந்தது. நெல்லை நாற்றுவிட்டு நடும் பழக்கம், 2,700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, உலகத்திற்கே இரும்பை அறிமுகம் செய்தவன் தமிழனாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கன்குடியில் கிடைத்த இரும்பு வாள் நிரூபித்துள்ளது. அதாவது, சிந்துவெளியில் செம்பை பயன்படுத்திய காலத்தில், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான தரவுகளை சேகரிக்கும் வகையில், சிந்துவெளி மற்றும் தமிழ் நிலத்தில் கிடைத்துள்ள குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” இவ்வாறு அவர் பேசினார்[2].

அரைத்த மாவை அரைக்கும் பாணியில் ஆய்வுக்கட்டுரைகள்: பட்டியலிடப்பட்ட தாள்கள் தாள்களின் தரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான தாள்கள் மறுவடிவமைக்கும் வகையைச் சேர்ந்தவை, அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் பாணியில் கூறுகின்றன.

  • தொல்காப்பியர் நோக்கில் வள்ளுவம்
  • திருக்குறள், திருவள்ளுவர் முதலியன… – தற்போதைய வாழ்க்கை முறைக்கான நடைமுறை வழிகாட்டி, இது போன்ற திருக்குறள் பற்றிய பல ஆவணங்கள்.
  • தனிநாயகம் பிள்ளை……
  • தமிழை விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வது எப்படி
  • திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி (அவர் மீது பல ஆவணங்கள்) முதலியன,
  • சங்க இலக்கியம்……..பற்றி…
  • சிலப்பதிகாரம் பற்றி – பல தாள்கள்
  • சங்க இலக்கியம்
  • சித்த, சித்த மருத்துவம்

இதில் புதியதாக எந்த விசயத்தையும்சொல்ல காணோம்.

எப்படியாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற வெறியில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன: ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, தலைப்பை ஆராய்ச்சி செய்தல், திட்டமிடல் மற்றும் எழுதுதல் என்பது இல்லை. வலைத்தளங்கள், கல்வி கட்டுரைகள், புத்தகங்கள், கலைக்களஞ்சியம், நேர்காணல்கள், இணையத்தில் தனிப்பட்ட கட்டுரைகள் (வலைப்பதிவுகள்) என்பதெல்லாம் இல்லாமல், “கட்-அன்ட்-பேஸ்ட்” முறையிலேயே செல்கின்றனர். கட்டுரையின் வடிவத்தில் தர்க்கரீதியான விமர்சன வாதங்களை முன்வைப்பதில்லை, தீர்மானமாக முடிவை வைத்துக் கொண்டு இந்த வேலை நடக்கிறது. பகுப்பாய்வு கட்டுரைகள், என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும் போக்கில் விசயங்களைச் சொவ்தில்லை. ஆராய்ச்சியின் பொருள் சர்ச்சைக்குரியதாக இருப்பதும் இல்லை, அந்த அளவுக்கு கஷ்டப்படுவதும் இல்லை, உழைப்புடன் முனைவதும் இல்லை. சொந்த கருத்துக்களைத் தெரிவித்து, ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரையாளர்கள் சிலரே. நேரடி மேற்கோள்கள், நீண்ட மேற்கோள்களைத் தவிர்க்காமல், அவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்றனர்.

எந்த ஆராய்ச்சிநெறிமுறையும் பின்பற்றப் படுவதில்லை: இப்பொழுதைய ஆராய்ச்சிநெறிமுறை, தரக்கட்டுப்பாடு, விதிகள், மென்பொருளால் சரிபார்க்கும்முறை முதலியவற்றை வைத்து சரிபார்த்தால், எத்தனை ஒழுங்கானவை என்று தீர்வாகும் என்பதும் நோக்கத் தக்கது. இருப்பினும், இவர்கள் தலைப்புகளை மாற்றி, சில வர்களை வெட்டி-ஒட்டி கட்டுரை என்று தயாரித்து, வாசிக்க வந்து விடுகின்றனர். கட்டுரைகளை தேர்வு செய்பவர்களும் எந்த தரத்தையும் சரிபார்ப்பதில்லை, தெரிந்தவர்களா, நண்பர்கள் பரிந்துரைத்தார்களா என்று பார்த்து தேர்வு செய்கிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்டபடி, பெயர்களை வைத்துக் கொண்டு கூட, சில கட்டுரைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

09-07-2023 அன்று அவசரஅவசரமாக முடிந்த மாநாடு: குதிரை முன் வண்டிகல்வி அமர்வுகள் நிறைவடையும் முன் விழா நடைபெற்றது: ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் முடிவடைவதற்கு முன்பு நிறைவு விழா நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதி, ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் தங்கள் நிலையைக் கேட்டறிந்து காத்துக் கொண்டிருந்தனர், காலை 9.00 மணி முதல் அறைகள் காலியாக இருந்ததாலும், யாரும் சரியாக பதிலளிக்காததாலும், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கரவர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பு / கல்வி அமர்வுகள் குறித்து முற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், முதலில் பாராட்டு விழா நடைபெறும் என்றும், பின்னர் காலை 10.30 மணி 11 மணிக்கு தாள் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர், நேரம் கடந்துவிட்டதால் ஆய்வுக்கட்டுரை வழங்குபவர்கள் கவலையடைந்தனர். பின்னர், பிரிவுத் தலைவர்கள் அறைகளுக்குச் சென்று அமர்வுகளைத் தொடங்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் வாசிப்பவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதித்தனர். மேலும், 10-15 நபர்கள் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் கட்டுரை வழங்குபவர்களாக இருந்தனர். வழக்கம் போல கட்டுரை வாசிப்பவர் ஆசிட்டுவிட்டு போய்விட்டார்கள்.. நிச்சயமாக, அமர்வுகளைத் தொடங்க அமைப்பாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தரப்பில் இரண்டு மணி நேரம் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டது. எப்படியோ, பேப்பர் வாசிப்பு அமர்வுகள் முடிந்து, மதிய உணவுக்குப் பிறகு பிரதிநிதிகள் நகரத் தொடங்கினர். இதனால், மூன்று நாள் சர்வதேச தமிழ் மாநாடு மேலே விவரிக்கப்பட்டபடி இரண்டரை நாட்களில் முடிக்கப்பட்டது.

மலேசியாவின் போட்டியாளர் கூற்று: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், கடந்த 7, 8, 9ம் தேதிகளில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது[3]. அடுத்த மாநாட்டை, 2025ல் சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்[4]. 1968ல் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை விட, 11வது மாநாடு செம்மஞ்சேரியில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு கல்வி நிகழ்வாக நடைபெற்றது, என்று பொன்னவைக்கொ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ஏதோ நடத்த வேண்டுமே என்று நடத்தியாகி விட்டது. இதே ஜூலையில் இரண்டாவது சந்திப்பு. பெரும் ஆரவாரத்துடனும், பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடனும் நடைபெறும் என்று சொல்லப் படுகிறது. இந்த மாநாட்டுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஐஏடிஆர் உறுப்பினர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அரசர் அருளாளரையும் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் என பேராசிரியர் டி.மாரிமுத்து தலைமையிலான மற்றொரு குழு அறிவித்துள்ளது. அவர் இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என்கிறார்.

© வேதபிரகாஷ்

11-07-2023

.


[1] தினமலர், சிந்துவெளி காலத்திலேயே இரும்பு பயன்பாட்டில் இருந்தது, பதிவு செய்த நாள்: ஜூலை 08,2023 01:54.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3369634

[3] தினமலர், நிறைவு பெற்றது உலக தமிழாராய்ச்சி மாநாடு, Added : ஜூலை 11, 2023  04:37

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3372482

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

அதிரடிகளுடன் ஆரம்பித்து அமைதியாக முடிந்த மாநாடு: சென்னையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி 3 நாட்கள் மாநாடு 7ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நடக்கிறது. இதில், 20 நாடுகளிலிருந்து 200 தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றதாக சொல்லப் படுகிறது. ஆனால், வந்துள்ளவர்கள் ஏற்கெனவே பரிச்சயம் ஆனவர்கள் தாம். ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல வந்துள்ளனர்.. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் 7ம்தேதி தொடங்கி 9ம் தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடக்கிறது. இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது[1]: “மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2]. ஆனால், முதலமைச்சர் வரவில்லை. பொதுவாக, இந்த மாநாடு நடப்பதே தெரியாமல் தான் இருக்கிறது.

ஆய்வுக்கட்டுரை வாசிப்பு பற்றிய விவரணம்: வழக்கம் போல[3], “உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாக உள்ளது. தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் .சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி.ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி, டாக்டர் பத்மினி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்,” என்று ஊடகங்களுக்குக் கொடுக்கப் பட்ட குறிப்பு கூறுகிறது[4].

பொன்.வைகோமாரிமுத்து பிரச்சினை: பொன்.வைகோ-மாரிமுத்து பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லை போலிருக்கிறது[5]. “2019ல் சிகாகோவில் நடந்த 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, நான் ஐஏடிஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், முந்தைய தலைவர் மாரிமுத்து தான் தலைவர் என்று கூறிக்கொண்டு மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார். அது செல்லாத ஒன்றாக இருக்கும்,” என்று பொன்னவைக்கோ மேலும் கூறினார்[6]. ஆக இங்கும் பதவி-போட்டி முதலியன இருக்கிறது போலும். இருப்பினும், இம்மாநாடு சிக்கல்களுடன், முராபாடுகளுடன் தான் நடக்கிறது. ஏற்கெனவே, ஜான் சாமுவேலுக்கும, ஜான் ஜேக்கப் என்பவருக்கும் பிர்ச்சினை இருக்கிறது[7]. சென்னையைச் சேர்ந்த, தாம்சன் ஜேக்கப் என்பவர், “பல குற்றங்களில் சிக்கியுள்ள ஜான் சாமுவேல் எப்படி இம்மாநாட்டை நடத்த முடியும்,” என்று சென்னை பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்[8]. இதைப் பற்றியெல்லாம் தனியாக ஏற்கெனவே விளக்கி பிளாக் போட்டுள்ளேன். இப்படி, எல்லா நிலைகளிலும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, கல்வி-நெறிமுறை, ஆராய்ச்சி முதலிய கோணங்களில் இவர்களால் எப்படிகவனத்தைச் செல்லுத்த முடியும். மேலும் கூட அரசியலையும் வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

07-07-2023 – அரசியல்வாதிகள் அரசியல் பேசியது: துவக்க விழாவில், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ”பைபிளில் வரும், சங்கீதக்காரர்களின் பண்புகள், தமிழர்களின் பண்புகளுடன் ஒத்து போகின்றன. எழுத்தாளர் டால்ஸ்டாய் தமிழ் மொழியை நேசித்தார். ”மதம் பரப்ப வந்த கிறிஸ்துவர்கள் கூட, தமிழை படித்து, வியந்து, தமிழுக்காக தொண்டு செய்துள்ளனர்,” என்றார். இவர் இப்படி ஏதோ கிருத்துவ பிரசங்கி போல பேசியது, பலருக்கு திகைப்பாக இருந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என். ‘சிலர்’ தமிழ் மொழியின் பெருமையை இழிவுபடுத்துகின்றனர் என்று ரவி முதலியோரையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் தமிழை போற்றுவது போல, தூற்றுகிறார்கள் என்றார். “தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தமிழ் மொழியை சொந்தம் கொண்டாடுவதும், தமிழ் மொழிக்கு ஆதரவாக உயிர் தியாகம் செய்தவர்களை இழிவு படுத்துவதும் மாற்றுக் கருத்துகளை கூறி, இது போன்ற மாநாடுகள் (உலகத் தமிழாராய்ச்சி) அவசியம். இதுபோன்ற சதிகாரர்களிடம் இருந்து தமிழ் மொழியைக் காக்க மாநாடு நடத்தப்படும்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அழைப்பிதழ்-1

மோடி எதிர்ப்பு- முதலியன இம்மாநாட்டிற்குத் தேவையா?: இரண்டு வருடங்களாக சண்டை, சச்சரவு, முரண்பட்ட அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரை சேகரிப்பு, பறிப்பு, முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்-என்ற பெயரில் மொழிப்பற்றையும் தாண்டிய நிலையில் செயல்பட்டு, பல ஆய்வுக் கட்டுரைகள் நிராகரிக்கப் பட்டன. ஆராய்ச்சி நெறிமுறை, தரம் எல்லாம் காற்றில் பறக்க விடப் பட்டன. முதலில் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு, முழுகட்டுரையும் பெறப் பட்டு, பிறகு, “நேரமில்லை” என்று நிராகரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த மூன்று நாட்களில் வாசிக்கப் பட்ட பெரும்பான்மையான கட்டுரைகளில் விசயமே இல்லாமல், அரைத்த மாவையே அரைத்துள்ளார்கள். இதற்குத் தான் இவ்வாளவு ஆர்பாட்டம் செய்துள்ளர்கள். போதாகுறைக்கு மைனாரிட்டி மந்திரி, கமிட்டி உறுப்பினர் என்றெல்லாம் அழைக்கப் பட்டு, அவர்கள் பிரதமந்திரி-கவர்னர் பற்றி பேசி, அரசியலாக்கினர். மாநாட்டின் தன்மையினையே கெடுத்தனர் எனலாம். இருப்பினும், மத அடிப்படைவாதியான ஜான் சாமுவேல் போன்றோர் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய அரசியலால் இவர்களுக்கு என்ன பயன் கிட்டப் போகிறது என்று தெரியவில்லை.

மாநாட்டில் ஆராய்ச்சி போக்கு: உண்மையிலேயே தமிழுக்காக பாடுபடுகிறார்கள் என்றால், சரித்திர ஆதாரமில்லாத பழங்கதைகளை பேசாமல், ஆரிய-திராவிட இனவாத கட்டுக் கதைகள், முதலியவற்றை விடுத்து, ஆதாரங்களுடன் கட்டுரைகள் எழுதப் படவேண்டும். பாரதம் / இந்தியாவிலிருந்து ஏதோ தனியாக தோன்றியது போன்ற பொய்மைவாதங்களை விடுத்து, சங்க இலக்கியங்கள் சொல்வதையாவது வைத்துக் கொண்டு ஆராய வேண்டும். பெரியாரிஸம், நாத்திகம், இந்துவிரோதம், இந்தியவிரோதம், பிரிவினைவாதம் என்ற போக்கிலேயே ஆராய்ச்சிகள் நடந்தால், “குமரிக் கண்டம் போன்று” குறுகிய வட்டத்தில் அடைக்கப் பட்டு, மறைந்து விடும். இறையனாரு, நக்கீரரும், அப்பாதுரையும் கூட காப்பாற்ற முடியாது. இப்பொழுது கூட ஆய்வுக்கட்டுரை தொகுப்பு கொடுக்காமல், “குமரிக் கண்டம்” என்ற சிறு புத்தகம் கொடுக்கப் பட்டுள்ளது.     

© வேதபிரகாஷ்

11-07-2023


[1] மாலைமலர், சென்னையில் ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது: 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, By மாலை மலர், 6 ஜூன் 2023 12:53 PM.

[2] https://www.maalaimalar.com/news/state/7th-july-11th-world-tamil-research-conference-begins-in-chennai-618795

[3] தினகரன், 7ம்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு: 200 தமிழறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்பு, July 5, 2023, 1:30 am

[4] https://www.dinakaran.com/3_days_from_7th_research_conference_participation_of_poets/

[5] Times of India, 55 years on, Tamil research conference returns to city, A Ragu Raman / TNN / Updated: Jul 7, 2023, 09:16 IST

[6] “During the 10th World Tamil Research Conference in Chicago in 2019, I was elected as the president of IATR. But, the previous president Marimuthu is still claiming that he is the president and trying to conduct the conference. It will be an invalid one,” Ponnavaikko added.

https://timesofindia.indiatimes.com/city/chennai/55-years-on-tamil-research-conference-returns-to-city/articleshow/101558597.cms?from=mdr

[7] தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: Added : ஜூன் 13, 2023  00:33; https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

103 பேர் கைது – தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டு பிடிப்பது, தீர்வு எப்படி? (3)

ஏப்ரல் 26, 2023

103 பேர் கைதுதமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது தீர்வு எப்படி? (3)

70 ஆண்டுகளாக மருத்துவர்களாக செயல்பட்ட மருத்துவர் அல்லாதவர்: போலி டாக்டர், மருத்துவர் என்பது தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக மோசடி நடந்து வருகிறது. எப்படி அரசியல் ரீதியில் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு பவனி வருகிறார்கள் மற்றும் பவனி வர ஆசைப் படுகிறார்களோ, அதே போல, பலர், டாக்டராக ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்துவ வேலை செய்ய தயாராகி விடுகிறார்கள். முன்னர் டாக்டரிடம் “கம்பௌன்டர்” ஆக வேலை பார்த்தவர்களும், பிறகு, நர்ஸ் அல்லது ஓரளவுக்கு அனுபவம் உள்ள நர்ஸ் போன்றவர்கள் தாங்களே டாக்டர் போன்று செயல்பட்டது, செயல்படுவது தெரிந்த விசயமே. அவசரத்திற்கு என்று சில நேரங்களில் அவ்வாறு செய்தது, பிறகு, நிரந்தரமாக அதே வேலையை செய்வது என்று தொடர்கின்றனர். டாக்டரை விட, இவர்கள் பீஸும் குறைவாக வாங்குவதால், கண்டு கொள்ளாமல் காலம் ஓடுகிறது. புதியதாக வருபவர்களுக்கு, இந்த விவரமும் தெரியாது, எம்.பி.பி.எஸ் என்று போட்டுக் கொண்டால், உண்மையான டாக்டர் என்று நம்பித்தான் சிகிச்சைப் பெற்று செல்கிறார்கள். யாராவது அவர்களது சான்றிதழ்களைக் கேட்டு ஆராய்ந்தால் மாட்டிக் கொள்வார்கள். அதுவரை தொழில் அமோகமாகத்தான் சென்றுக் கொண்டிருக்கும். பெரும்பாலாக, கதை அப்படித்தான் ஓடியுள்ளது.

கொரோனா காலத்தில் போலி டாக்டர்கள் அதிகமானது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது[1].   கரோனா காலத்தில் டாக்டர்களுக்கும் கிராக்கி ஜாஸ்தியாகியது. டாக்டர்களுக்கே கொரோனா வந்து இறந்த போது, மக்கள் மற்றவர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அதாவது, சித்தா, ஆயுர்வேதம் எனும் மற்ற நாட்டு வைத்தியர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களிடம், சித்தா-ஆயுர்வேத படிப்பு சான்றிதழ் கூட இருக்காது. இருப்பினும், மருத்துவத்தை கரைத்துக் குடித்ததைப் போல பேசி, சொற்பொழிவு செய்து, விளம்பரங்கள் மூலம் வியாபாரம் செய்து, பிறகு ஒரு நிலையில், ஹீலர்-மருத்துவர், இயற்கை வைத்தியர் என்றெல்லாம் போர்ட் போட்டுக் கொண்டு, ஒரு நிலையில், டாக்டராகி விடுகிறார். டிவி செனல்களில் சுயவிளம்பரம் செய்துகொள்ளும் அளவிற்கு  பணத்தையும் சம்பாதிக்கின்றனர்.பணம் சேர-சேர, கிளிக் வைத்து, நடை-உடை மாறி, எல்லாமே மாறி விடுகின்றன. இதனால், அரசு அமைப்புகளுக்கும் போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க கஷ்டமாகிறது.

ஒரு தனிமனித புகாரிலிருந்து பிரச்சினை கிளம்பியதா?: சமீபத்தில் எலும்பு முறிவு சிகிச்சை விவகாரத்தில், பொகழ் பெற்ற மருத்துவ மனையில், சிலர், படிப்பு-பட்டம் இல்லாமல் மருத்துவம் பார்த்ததால் பிரச்சினை ஏற்பட்டது என்று புகார் செய்யப் பட்டது. ஆனால், இரண்டு தரப்பிலும் முரண்பட்ட புகார்கள் எழுந்தன. இருப்பினும், எம்பிபிஎஸ் பட்டம் இல்லாமல், மற்ற படிப்பு படித்து, சிகிச்சை செய்தது அறியப் பட்டது. தவிர, வெளிநாடுகளில் படித்து அவை இந்திய எம்பிபிஎஸ் பட்டத்திற்கு சமமானதல்ல, ஏர்புடையது அல்ல என்று முடிவு செய்யப்பட்டது. அந்நிலையிலும், பல மருத்துவப் படிப்புகளுக்கு, இந்தியாவில் அங்கீகாரம் இல்லாமல் போயின மற்றும் சிகிச்சைக்கு வருபவர் எண்ணிக்கையும் மிக கணிசமாக குறைந்தது. இருப்பினும், தேவை என்ற நிலையில் அப்போலி வைத்தியர் இருக்கத்தான் செய்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் படி, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது: போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது[2].  பிராக்டிஸ் செய்யும் சந்தேகத்திற்குள்ளான, மருத்துவ்ர்களின் சான்றிதழ்கள் மறைமுகமாக மற்றும் நேரிடையாக பரிசோதிக்கப் பட்டது. அப்பொழுது தான், போலி மருத்துவர்கள் பலர் அடையாளம் கண்டறியப் பட்டனர். தமிழகம் முழுவதும் 18 நாட்கள் நடைபெற்ற சோதனைகளில், முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்து வந்த 103 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[4].

போலீஸ் நடவடிக்கையும் சேர்ந்தது: இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்[5]. அதன்படி, கடந்த 18 நாட்களாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[6]. இதில், 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[7]. மேலும், உரிய அனுமதி இல்லாமல் மருத்துவம் பார்த்து வருவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்[8]. இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[9].

கைது செய்யப் பட்ட விவரங்கள்: அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்தியமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில், மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அணைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, அவர்கள் உத்தரவிட்டிருந்தார்[10].  இதனையடுத்து. கடந்த 18 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[11]. திருவாரூரில் 12 பேரும், தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், பெரம்பலூரில் 8 பேரும், திண்டுக்கல்லில் 6, தேனி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது[12].

© வேதபிரகாஷ்

25-4-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Doctors Fradulence : கடந்த 18 நாட்களில் மட்டும் இத்தனை போலி மருத்துவர்கள் கைதா..? காவல்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!, By: முகேஷ் | Updated at : 24 Apr 2023 09:03 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/police-informed-103-fake-doctors-have-arrested-in-tamil-nadu-in-the-last-18-days-113557

[3] தினத்தந்தி, 18 நாட்கள் 103 போலி டாக்டர்கள் கைதுதொடரும் டிஜிபியின் எச்சரிக்கை, By தந்தி டிவி, 25 ஏப்ரல் 2023 7:03 AM

[4] https://www.thanthitv.com/latest-news/18-days-103-fake-doctors-arrested-continued-dgps-warning-182154 – :~:text=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88,%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.

[5] மாலைமலர், தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது எண்ணிக்கை 103 ஆக உயர்வு, Byமாலை மலர்25 ஏப்ரல் 2023 8:33 AM

[6] https://www.maalaimalar.com/news/district/fake-doctors-arrested-increased-across-tn-600916

[7] தினமலர், போலி டாக்டர்கள் 103 பேர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 25,2023 08:06

[8] https://m.dinamalar.com/detail.php?id=3303534

[9] பத்திரிக்கை.காம், தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது, APR 25, 2023

[10] https://patrikai.com/103-fake-doctors-arrested/

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், போலி டாக்டர்களை பொறி வைத்து பிடித்த போலீஸ்.! 103 பேர் கைதுஎந்த மாவட்டத்தில் அதிக போலி மருத்துவர்கள் தெரியுமா?, Ajmal Khan; First Published Apr 25, 2023, 8:50 AM IST; Last Updated Apr 25, 2023, 11:01 AM IST

[12]  https://tamil.asianetnews.com/tamilnadu/103-fake-doctors-arrested-across-tamil-nadu-rtnimi

தமிழில் பொறியியல், மருத்துவம், சட்டம் முதலிய படிப்புகள்: உண்மையும், மாயையும்

ஜூலை 12, 2010

தமிழில் பொறியியல், மருத்துவம், சட்டம் முதலிய படிப்புகள்: உண்மையும், மாயையும்

தமிழில் பொறியியல் படித்தால் தமிழ்நாட்டில்தான் இருக்கவேண்டும்: தமிழில் பொறியியல், மருத்துவம், சட்டம்……………..என்றெல்லாம் படிக்கலாம் என்று கிளம்பிவிட்டார்கள். ஏதோ, தமிழில் பட்டிமன்றம் நடத்துவது மாதிரி, இப்படி படிப்பிலும் கலாட்டா செய்ய நுழைந்துவிட்டனர். கருணாநிதி, தான் முதலமைச்சர் என்பதனை பலமுறை மறந்துவிட்டு, ஒரு அரசியல்வாதி மற்றும் எந்தவகையிலும் பணம் பெருவதற்கு என்ன வழி என்றுதான் பார்க்கும் நிலை என்பது நன்றாகவே தெரிகின்றது. தமிழில் படித்தால் வேலை என்று திடீரென்று கிளம்பி விட்டனர். 40 ஆண்டுகளில் அதென்ன திடீரென்று அத்தகைய பாசம்? தமிழில் பொறியியல் படித்தால் தமிழ்நாட்டில்தான் இருக்கவேண்டும், தொழிற்சாலைகளில் சென்றால்கூட வேலை செய்யவேண்டும். மிஷின்களிடம் சென்று பத்துப்பாட்டு-எட்டுத்தொகை பாடமுடியாது. உலைகளில் கவிதைப்பாடி குளிர்காயமுடியாது. எல்லா மிஷன்களுக்கும் தமிழிலா கையேடு கிடைக்கும்? தமிழில் படித்தவர், புரிந்து கொண்டு மிஷினில் வேலை செய்வதற்குள் / பழுது பார்ப்பதற்குள் விடிந்துவிடுமே?

ஓய்வு பெற்றவர்கள், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கத்தான் இந்த திட்டம் போலிருக்கிறது: இப்பொழுது கருணாநிதிக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருக்கும் 60-80 வயதுகளில் பல ஓய்வு பெற்ற ஆட்கள் உள்ளனர். அவர்கள் சாகும்வரை, அரசாங்கத்தின் பணத்தை உறிஞ்சி சாகவேண்டும் என்று தீர்மானமாக உள்ளனர். இந்த 40 வருடங்களாக, இந்த வயதானவர்களால், கிழங்களால் என்ன தமிழுக்கு, தமிழகத்திற்கு, தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மை என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. மாறி-மாறி ஏதாவது ஒரு துறை, கழகம், வாரியம்………….என இருந்து கொண்டு மக்களின் பணத்தை உறிஞ்சி கொண்டு அனுபவித்து வருகின்றனர். அதுபோலத்தான், சிலருக்கு பொறியியல் புத்தகங்களை தமிழில் எழுத வாய்ப்புக் கிடைத்துள்ளது. தமிழில் படித்தால் நன்றாக புரியும் என்பதைவிட, தமிழில் விளக்கினால் நன்றாக புரியும் என்ற உண்மையை மறைக்கின்றனர். எங்கே கிடைத்த வேலை போய்விடுமோ என்ரு ஊடகங்களில் பொய் சொல்லித்திரிகின்றனர்.

தமது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து மற்றவர்களை மாட்டிவிடும் இந்த கிழங்கள்: இந்த ஜால்ராக்களுக்கு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். ஒரு சிறிய உண்மை உரைகல் சோதனை என்னவென்றால், இந்த ஜால்ராக்களின் மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள் என்றிருக்கும் ஒருவரைக்கூட இப்படி படிக்கவைப்பதில்லை. அவர்களுடைய வாரிசுகள் ஆங்கிலத்தில் படித்து, இந்தியில் பேசி, அயல்நாடுகளில் கோடிகளை அள்ளுகின்றனர். யாரோ சிலர் மாட்டிகொண்டனர் என்று அவர்களை மாட்டிவைத்து, அரசியல் ஆக்கி, நாடகம் நடத்துகின்றனர்.

மொழிவெறியோடு, மதவெறி ஊட்டும் கருணாநிதி: இதில் மொழிவெறி தான் உள்ளது என்றால், மதவெறியையும் நுழைக்கின்றனர் அரசியல்வாதிகள். கீழ் காணும் கருணாநிதியின் கடிதத்தில் அத்தகைய வெறியூட்டல்தான் காணப்படுகிறது.

உலகமயமாக்கல் அல்லது இந்திய பொருட்கள்-சேவைகள் மற்றவர்களுக்கு விற்கவேண்டும் என்றால் தமிழில் நடக்காது: முதலில், ஆங்கிலமே, ஒரு கலவை மொழி என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். டெக்னிகல் டார்ம்ஸ் / கலைச்சொற்கள் என்று என்னத்தான், தமிழில் மொழிபெயர்த்தாலும், தமிழ் படுத்தினாலும், அந்த படிப்பு, தத்துவம், அர்த்தம்…………….முதலியவை முழுவதுமாக தமிழ்படுத்துதல் என்பது முடியாததாகும்.

எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான், நியூட்ரினோ………………என்பவற்றை அப்படியேத்தான் படிக்கவேண்டியுள்ளது.

பி-என் ஜங்ஸன், என்–பி-என் ஜங்ஸன், பி-என்-பி ஜங்ஸன், கேட், எ ன்ட் கே, ஆர் கேட், லாஜிகல் சர்க்யூட், ………….. முதலியவற்றை எப்படி படிப்பார்கள்?

போரிங், டை-சிங்கிங், ஹோனிங், ………………

இதே கதைதான் சட்டப்படிப்பிலும்.

மருத்துவத்தைப் பற்றிக் கேட்வே வேண்டாம்.

இதெல்லாம், தொல்காப்பியமா, சங்க இலக்கியமா, இஷ்டத்திற்கும் மாற்றி-மாற்றி எழுதுவது, பொருள்கொள்வது ………………….என்ற வார்த்தை ஜாலங்கள்?

தமிழ் வழியில் பொறியியல் படிப்பு துவக்கம்! – 10-05-2010

http://kalvimalar.dinamalar.com/tamil/NewsDetails.asp?id=6810

இந்த ஆண்டு முதல் தமிழ் வழியில் பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது. தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு இன்ஜினியரிங் படிப்பு வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்ததாவது: “இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் பொறியியல் படிப்பை தமிழ் பயிற்று மொழியில் வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளில் பொறியியல் கல்வி உள்நாட்டு மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. இதனால், பொறியியல் படிப்பில் அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்ளும் அந்நாட்டு மாணவர்கள், அத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். இந்த நாடுகள் பொறியியல் துறையில் பெருமளவில் முன்னேறியுள்ளன. இந்நாடுகளில் பொறியியல் படிப்பில் எட்டு செமஸ்டர்களிலும் ஆங்கிலம் தொடர்பு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் மட்டும், சிவில், மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகளை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவில் படிப்பில் 900 இடங்கள், மெக்கானிக்கல் படிப்பில் 900 இடங்கள் என மொத்தம் 1,800 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

“உள்ளூர் மொழியில் பயிற்றுவிக்கும் போது, பாடத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில், தமிழ் பயிற்று மொழியில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, ஆறு செமஸ்டர்களில் ஆங்கிலம் தொடர்பு மொழியாகக் கற்பிக்கப்படும். பொறியியல் படிப்பை தமிழ் மொழியில் பயிற்றுவிப்பதற்கு வசதியாக பாடப்புத்தகங்கள் தயாராகி வருகின்றன. இம்மாத இறுதியில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கு முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு தேவையான பாடப் புத்தகம் தமிழ் மொழியில் தயாராகி விடும். மூன்றாவது மற்றும் நான்காவது செமஸ்டருக்கு தேவையான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

தமிழில் இன்ஜினியரிங் படிக்க 22 பேர் தயார் : தனியார் கல்லூரிகளிலும் அமல்படுத்த கோரிக்கை, ஜூலை 09, 2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=36035

சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கில் முதல் ஐந்து நாட்களிலேயே, தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர். கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பதால், அங்குள்ள சிவில், மெக்கானிக்கல் தமிழ் வழிப் படிப்பில் அதிக “கட்-ஆப்’ மதிப்பெண் எடுத்த மாணவர்களும் சேர்ந்துள்ளனர். தனியார் கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் படிப்பை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பி.இ., – பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது. பொதுப்பிரிவு கவுன்சிலிங்கிற்கு ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 67 ஆயிரத்து 727 பேர், பிளஸ் 2வில் தமிழ் வழியில் படித்தவர்கள். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. நேற்று வரை (08-07-2010) நடந்த ஐந்து நாள் கவுன்சிலிங்கிற்கு, 11 ஆயிரத்து 405 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 1,731 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில், 36 பேர் இடம் வேண்டாம் என தெரிவித்து சென்றனர். நேற்றைய நிலவரப்படி, 9,637 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இ.சி.இ., 2,270 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 1,538, மெக்கானிக்கல் 1,516, இ.இ.இ., 1,191, ஐ.டி., 893, சிவில் 531 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் தமிழ் பயிற்று மொழியிலான வகுப்புகள் துவக்கப் பட்டுள்ளன.

முதற்கட்டமாக அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் மட்டும் தமிழ் வழிக் கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டு உள்ளன. கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலை (பி.ஐ.டி., வளாகம்) மற்றும் திண்டிவனம், அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக் கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் என, மொத்தம் 11 கல்லூரிகளில், சிவில் படிப்பில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலை (பி.ஐ.டி., வளாகம்) மற்றும் விழுப்புரம், ஆரணி, அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக் கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் என, மொத்தம் 12 கல்லூரிகளில் மெக்கானிக்கல் படிப்பில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், கடந்த 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த கவுன்சிலிங்கிலும், 190க்கு மேல் “கட்-ஆப்’ மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட தமிழ் வழி பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த 6, 7, 8ம் தேதிகளில், பொறியியல் படிப்பில், தலா இரண்டு பேர், நேற்று ஏழு பேர், தொழிற்கல்வி படிப்பில் ஒன்பது பேர் என, மொத்தம் 22 பேர் இதுவரை தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதில் மூன்று மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் ஆங்கில பயிற்று மொழியில் படித்தவர்கள். இவர்கள், கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கிறது என்பதற்காக, தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். தற்போது, அண்ணா பல்கலைக் கழகங்களில் மட்டுமே தமிழ் வழி பொறியியல் படிப்பு துவக்கப் பட்டுள்ளது. தமிழ் வழியில் பொறியியல் படிப்பால், வெறுமனே மனப்பாடம் செய்யாமல், பாடத்தை புரிந்து படித்து, அதில் முழு அறிவை பெற முடியும் என கூறப்படுகிறது. எனவே, அண்ணா பல்கலைக் கழகங்களுடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் தமிழ் வழி பொறியியல் படிப்பை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழில் பொறியியல் கல்வி-மாணவர்களிடையே ஆர்வம் அதிகரிப்பு: கருணாநிதி

திங்கள்கிழமை, ஜூலை 12, 2010, 9:53[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/07/12/engineering-colleges-offer-tamil-medium-be-cm.html

சென்னை: பொறியியல் படிப்பை தமிழில் படிக்க மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதால் மேலும் பல கல்லூரிகளில் தமிழ் வழிப் படிப்பை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் தமிழ் வழிக் கல்வி அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் மட்டும் தமிழ் வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம்:

“கோலமிகு கோவை மாநகரில் ஜுன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் குவலயமே திரண்டு வந்து கூடியதோ என்று அனைவரும் வியந்து போற்றும் வண்ணம், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

”லட்சோபலட்சம் மக்கள் திரண்டனர்! எத்திசை நோக்கினும் எண்ணிலடங்கா மனிதத் தலைகள்” எனப் பத்திரிகைகள் அனைத்தும் பாரபட்சமின்றி பாராட்டும் அளவிற்கு மாபெரும் மக்கள் சங்கமம் என அம்மாநாடு நிகழ்ந்தது.

முன்னர் நடைபெற்ற மாநாடுகளை எல்லாம் விட- ஒரு சீர் கூடுதலாக ”உலகத் தமிழ் செம்மொழி மாநாடு” என்ற பெயரில் நடைபெற்ற அந்த மாநாட்டில்; ஐம்பதுக்கும் மேலான நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், ஆய்வாளர்கள் வந்து, ஆய்வரங்குகளில் கலந்துகொண்டு, தமிழ்மொழியின் மேன்மையைப் பற்றியும், மென்மையைப் பற்றியும்; தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பற்றியும், தனித்தன்மையைப் பற்றியும்; இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கித் தமிழ்மொழியை எடுத்துச் செல்வதற்கான தேவைகளைப் பற்றியும்; அந்தத் தேவைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகளைப் பற்றியும்; பல்வேறு வகையான கருத்துகளை எடுத்து இயம்பியிருக்கிறார்கள்.

மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள் வழங்கிய கருத்துரைகளின் அடிப்படையில்- மாநாட்டின் நிறைவு நாளன்று தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பயனுள்ள 15 அறிவிப்புகளையும், தீர்மானங்களையும் நான் வெளியிட்டேன்.

அவைகளில் ஒன்று; ”தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் தமிழக அரசின் சார்பில் இயற்றப்படும்” என்னும் அறிவிப்பாகும். அந்த அறிவிப்பு மாநாட்டில் கூடியிருந்த மாபெரும் மக்கள் வெள்ளத்தின் மனமார்ந்த வரவேற்பினைப் பெற்றது.

மாநாடு நிறைவு பெற்று, சென்னைக்கு திரும்பி வழக்கம் போல் தொடர்ந்து, மக்கள் பணிகளில் ஈடுபட்டிருக்கும் எனக்கு, நாள்தோறும் கிடைத்திடும் செய்திகள், ”இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று பாரதி பாடிய கவிதை வரிக்கொட்ப; செவிக்கும், நெஞ்சத்திற்கும் இனிமை ஊட்டுபவையாக உள்ளன.

தமிழ் வழியில் பொறியியல் பட்டப் படிப்புகள் என்னும் தன்னிகரில்லாத் திட்டம் இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில், ‘சிவில்’, ‘மெக்கானிகல்’ பிரிவுகளில் மட்டும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை-கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திண்டிவனம், அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் என மொத்தம் 11 கல்லூரிகளில் ‘சிவில்’ படிப்பில் தமிழ் பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் விழுப்புரம், ஆரணி, அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் என மொத்தம் 12 கல்லூரிகளில், “மெக்கானிக்கல்” படிப்பில் தமிழ் பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்தக் கலந்தாய்வில் 190க்கு மேல் ‘கட்-ஆப்’ மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட, தமிழ்வழிப் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும், பொறியியல் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி, முதல் ஐந்து நாட்களிலேயே, தமிழ்வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர் என்பதும் உண்மையிலேயே நமக்கெல்லாம் இனிப்பான செய்தியாகும்.

கடந்த 6, 7, 8 ஆகிய தேதிகளில் பொறியியல் படிப்பில் தலா 2 பேர், 10ம் தேதியன்று 7 பேர், தொழில்கல்வி படிப்பில் 9 பேர் என மொத்தம் 22 பேர் இதுவரை தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். பொறியியல் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்னும் ஒரு மாதத்திற்குமேல் நடைபெற உள்ளது.

எனவே, தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் மேலும் ஏராளமான மாணவர்கள் சேருவார்கள் என்று நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

தமிழ்வழிப் பொறியியல் பட்டப்படிப்பில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தின் காரணமாக, மாணவர் மற்றும் பெற்றோர்களிடையே; தற்போது அண்ணா பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள தமிழ்வழிப் பொறியியல் படிப்பு; அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும், தனியார் சுயநிதிக் கல்லூரிகளிலும் தொடங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது என்ற செய்தி, “எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்” என்ற எழுச்சி முழக்கத்திற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்திருக்கிறது.

கழக அரசு 2006ம் ஆண்டு பொறுப்பேற்றவுடன், 31.5.2006 அன்று, தமிழ்மொழிக் கல்வி, முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் என சட்டம் நிறைவேற்றப்பட்டதையும் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக, இந்த கல்வி ஆண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகப் படித்துப் பயன்பெறும் நல்ல சூழல் உருவாகியிருக்கிறது என்பதையும் நீ மறந்திருக்கமாட்டாய்!

எனக்கு தரப்பட்டுள்ள இன்னொரு இனிய செய்தியையும் உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆசியாவிலேயே முதல் பல்கலைக்கழகம் என்பதையும் அது முதன்முதலாகத் தமிழகத்தில், கழக ஆட்சியிலேதான் தொடங்கப்பட்டது என்பதையும் நீ அறிவாய்.

அந்த பல்கலைக்கழகத்தின் பி.வி.எஸ்சி., பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு 9.7.2010 அன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 9.7.2010 அன்று மட்டும், 166 இடங்களுக்கான கலந்தாய்வு நிறைவேறியிருக்கிறது.

166 இடங்களில், 51 இடங்கள் பொதுத் தொகுப்பிற்கும், 44 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும், 6 இடங்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும், 33 இடங்கள் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும், 25 இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும், 5 இடங்கள் அருந்ததியினர்க்கும், 2 இடங்கள் பழங்குடியினர்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

பலன் பெறும் முஸ்லீம்கள்அருந்ததியர்: முஸ்லிம்கள் 6 இடங்களைப் பெற்றிருப்பதும், அருந்ததியினர் 5 இடங்களைப் பெற்றிருப்பதும் கழக அரசால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி உள்ஒதுக்கீட்டின் காரணமாக அல்லவா? முஸ்லிம்களுக்குக் கழக அரசால் வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீட்டின் காரணமாக, அந்த சமுதாயத்தினர் தொடர்ந்து பயன்பெற்று வருவதை அனைவரும் அறிவர்.

பொறியியல் பட்டப்படிப்பில், 2008-2009ம் ஆண்டு சேர்க்கப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3,288. பொறியியல் பட்டப்படிப்பில் 2009-2010ம் ஆண்டு சேர்க்கப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3,655.

ஆனால், தனி உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு முன்பு, 2007-2008ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கப்பட்ட, முஸ்லிம் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 2,134 தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதைபோலவே, 2008-2009ம் ஆண்டில், பொறியியல் பட்டப்படிப்பில் அருந்ததியர்களுக்கு கிடைத்த இடங்கள் 1,093. உள்ஒதுக்கீடு வழங்கியதற்குப் பிறகு 2009-2010ம் ஆண்டில், அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1,165.

மருத்துவப் பட்டப்படிப்பிலும், உள்ஒதுக்கீடு வழங்கியதற்குப் பிறகு முஸ்லிம் சமுதாயத்தினரும், அருந்ததியினரும் தொடர்ந்து அதிக இடங்களைப் பெற்று பலனடைந்து வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

“தமிழ் மரபு, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழ் மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்; தரணியெங்கும் பரவிட வேண்டும்; மங்காமல் மறையாமல் போற்றிப் புகழப்படவேண்டும்; அந்த மறுமலர்ச்சி தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்படத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிபீடம் ஏறிட விரும்புகிறது” என்று 1967 விருகம்பாக்கம் மாநாட்டில் அறிஞர் அண்ணா முழங்கினார்.