Archive for the ‘பன்வாரிலால் புரோஹித்’ Category

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (2)

திசெம்பர் 27, 2023

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (2)

 

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது: போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மற்றும் அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்[1]. பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் அளித்தார்[2]. அப்படியென்றால் கையும்-களவுமாக மாட்டிக் கொண்டார் என்றாகிறது. அவர் அளித்த புகாரின் படி சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்[3]. இதனையடுத்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் துவங்கியது மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. அதன் பிறகு, முறையாக துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்[4].

 

நிறுவனம் நடத்தி மோசடிகளில் ஈடுபட்டது: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்[5]. பிறகு மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற விவகாரங்கள் குறிப்பிடப் படவில்லை என்றாலும், நடந்தேரின. விசாரணையில், துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் [Periyar University Technology Entrepreneurship and Research Foundation (PUTER Foundation)] என்ற தனி நிறுவனத்தை துவக்கியது தெரியவந்துள்ளது[6]. பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கினார். இது தவிர, தங்கவேல் உள்பட 3 பேர் இணைந்து ‘அப்டெக்கான் போரம்’ என்ற மற்றொரு அமைப்பையும் தொடங்கி உள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்படும். இவர்கள் மூன்று பேரும் பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-இன் படி பொது ஊழியர்களாக கருதப்படுகிறார்கள்.

 

பாமக தொடர்ந்து இத்தகைய ஊழல்கள் பற்றி அறிக்கை வெளியிட்டு வருவது: முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கையில்[7], “பெரியார் பல்கலைக்கழகத்தை அதன் துணைவேந்தரும், கூட்டாளிகளும் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே அதில் புதிய நிறுவனத்தை தொடங்குவது சட்டவிரோதம். இதற்காகவே துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும்,” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது[8]. இருப்பினும், அரசியல் கலந்து விட்டது, அதில் திராவிடக் கட்சிகளின் பங்கு உள்ளது என்றால் அமுக்கித்தான் வாசிப்பார்கள்.

 

கைதானவர் உடனடியாக ஜாமீன் பெற்று வீடு திரும்பியவர்: பின்னர் நீதிபதி தினேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், துணை வேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி விடுவித்தார்[9]. இத்தனை புகார்கள் இருந்டாலும், ஜாமீன் எப்படி வழங்கப் பட்டடு என்பது தெரியவில்லை. இவர் வெளியே இருந்தால், ஆதாரங்கள் எல்லாவற்றையும் அழித்து விடமாட்டாரா, அத்தகைய பிரச்சினை இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. மேலும், சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 7 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், அனுமதியின்றி வெளியூருக்கு செல்லக்கூடாது என்றும், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்[10]. இவையெல்லாம் சாதாரண கன்டிசன்கள் தான்.

 

திராவிடத்துவத்தில்பெரியாரிஸத்தில் ஊழல், சொகுசு வாழ்க்கை, தற்கொலை, இறப்பு: மனித உயிர் மிகவும் அபூர்வமானது, புனிதமானது, அதனை எடுக்க-எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமையில்லை. என்னத்தான் நாத்திகம், பெரியாரிஸம் எல்லாம் பேசினாலும், வாழத்தான் அவர்களுக்கும் ஆசையுள்ளது, அதிலும், அனுபவித்து வாழவேண்டும் என்ற பேராசை உள்ளது. ஆகவே, உண்மையில் அவர்கள் இறப்பிற்கு அஞ்சினாலும், இறப்பதற்கு விரும்புவதில்லை. ஆத்மா, உயிர், மூச்சு, உயிர் உடலிலா, மூச்சிலா, மூளையிலா, இதயத்திலா என்றெல்லாம், மண்டையைக் குடைந்து கொள்ளாமல், வாழத்தான் இரும்புகிறார்கள். அந்நிலையில் ஊழலுக்கு பயப்படாதவர்கள், ஊழலில் சிக்கிவிடுவோம் என்று பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை. சாவுக்கே சாவு கொடுப்போம் என்ற ரீதியில் அளப்பவர்கள், ஊழலுக்கே ஊழல் கொடுத்து, ஊழல் செய்து, உழல வைத்து விடுவோம் என்று சொல்லாமலா இருப்பர்? இருப்பினும் கல்வி என்பதால், இனிமேலாவது, அதில் ஊழலை நீக்கி, சுத்தமாக்கி, ஒழுங்கான-ஒழுக்கமான படிப்பை போதித்தால், இனி உருவாகும் மாணவ-மாணவிகள் மக்களுக்கு, சமூகத்திற்கு, நாட்டிற்கு உகந்தவர்களாக இருப்பர். இதை மனத்தில் வைத்துக் கொண்டாவது, திராவிடத்துவவாதிகள், ஊழல் விற்பன்னர்கள் முதலியோர் திருந்த வேண்டும், தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சாவதை விட, ஒழுங்காக வாழலாம், மக்கள் பாராட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

27-12-2023


[1] தினமலர், ஊழல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது, மாற்றம் செய்த நாள்: டிச 26,2023 17:39.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3512935

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது.. 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!, By Vignesh Selvaraj Updated: Tuesday, December 26, 2023, 20:50 [IST].

[4] https://tamil.oneindia.com/news/salem/salem-periyar-university-vice-chancellor-jeganathan-arrested-569307.html

[5] தமிழ்.இந்து, நிறுவனம் நடத்தி முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது, செய்திப்பிரிவு, Published : 27 Dec 2023 05:19 AM, Last Updated : 27 Dec 2023 05:19 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1174506-salem-periyar-university-vice-chancellor-arrested-on-corruption.html

[7] நக்கீரன், பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 26/12/2023 | Edited on 26/12/2023

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/periyar-university-vice-chancellor-issue

[9] தமிழ்.நியூஸ்.18, முறைகேடு வழக்கில் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நிபந்தனை ஜாமின்!, FIRST PUBLISHED : DECEMBER 27, 2023, 9:49 AM IST, LAST UPDATED : DECEMBER 27, 2023, 9:49 AM IST.

[10] https://tamil.news18.com/tamil-nadu/conditional-bail-for-periyar-university-vice-chancellor-1286758.html

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (1)

திசெம்பர் 27, 2023

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (1)

 

பல்கலைக்கழக ஊழல்கள், கைதுகள் சகஜமாகி விட்டன: தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதும், துணைவேந்தர்கள் கைதாவது என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. கல்வி, கல்வித் துறை, அல்கலைக் கழகம் என்றெல்லாம் வரும்பொழுது, ஏதோ ஒரு கோவில், புனிதமான இடம் என்றெல்லாம் மதிப்பு, மரியாதை, கௌரவம் என்றெல்லாம் இருந்தது. ஆனால், இப்பொழுதோ, ஏதோ செல்லக் கூடாத இடத்திற்கு செல்கிறோமோ, போனால் பிரச்சினை வருமோ அல்லது இருக்கும் பிரச்சினை பெரிதாகி விடுமோ என்ற அச்சமான சிந்தனைகளும் வருகின்றன. தமிழகத்தில் கடந்த 50-70 ஆண்டுகளில் கல்வியில் சிறந்தவர்கள் பெயரில் எதாவது பல்கலைக் கழகம் இருக்கிறதோ இல்லையோ, வரிசையாக, அண்ணா, கருணாநிதி, பெரியார், எம்லிஆர், ஜெயலலிதா என்று முதலமைச்சர்கள் பெயரில் உள்ளன. பிறகு, காந்தி, ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி, அம்பேத்கர் என்றும் உள்ளன. இவ்வாறு தான், சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது[1]. இதன் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது[2].

 

தொடந்து துணைவேந்தர்கள் கைது செய்யப் படுவது: தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஊழல் என்பது புதிதல்ல, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இரண்டு முன்னாள் துணைவேந்தர்கள் 2018 ஆம் ஆண்டில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகத்தால் (டிவிஏசி) [Directorate of Vigilance and Anti-Corruption (DVAC).] கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பதிவு செய்யப்பட்டனர். அதே ஆண்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவிப் பேராசிரியர் பணியை முறைப்படுத்துவதற்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இங்கு, கடந்த 3 ஆண்டுகளில் 141 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பணிக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. கையூட்டு பெறப்பட்ட பணிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்திருந்தாலும் கூட, தகுதியற்ற பலர் தான் போலிச்சான்றிதழ் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர், இப்படி புகார்களும் செய்திகளும் வெளிவந்தன. பிப்ரவரி 28, 2016, ஓய்வு பெறும் நாளில், உதவி தாளாளர் சி. பெரியசாமி [Deputy Regitrar C Periyaswamy] சஸ்பென்ட் செய்யப்பட்டதாக, சுவாமிநாதன், துணைவேந்தர் [Dr S Swaminathan, Vice Chancellor] அறிவித்தது, திகிலடையச் செய்தது.

 

 2010 முதல் 2023 வரை பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்: 2013-15 காலத்தில் செலவிற்கு என்று ரூ. 35 லட்சம் எடுத்துக் கொண்டதாகவும், ஆனால், இதுவரை கணக்குக் கொடுக்கவில்லை என்று குற்றம் சொல்லப்பட்டது[3]. அவர் கணக்கு காட்டாவிட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அறிவித்தார். அவரது இடைக்கால நீக்கம் விலக்கிக் கொள்ளப் பட்டது என்ற செய்தி வந்தாலும், அந்த போலி ரசீதுகள் விவகாரம் என்னாயிற்று என்று சொல்லப்படவில்லை. போராட்டத்தாலும், முத்துச்செழியன், துணைவேந்தர் ஓய்வு பெற்றதால் அவர் மூன்று பேருக்க்கு வேலைமாற்றம் செய்ய பிறப்பித்த ஆணையை ரத்து செய்ததாலும், ஒப்புக் கொண்டு ரத்தானது என்று குறிப்பிட்டுள்ளது. “தி.இந்து” 2013 செய்தியை நவம்பர் 2016ல் திருத்தியுள்ள நிலையும் நிலைமை விளக்கப்படவில்லை[4]. உள்-மற்றும்-வெளி தணிகைக் குழுக்களின் அறிக்கைக்கள் கூட ஆவணங்கள் சரி பார்த்து மற்றும் கொடுத்த உரிய பதில்-விளக்கங்களை வைத்துத் தான் முடிவெடுப்பர், தமது, தணிக்கை-எதிர்ப்புகளை முடிவுக்கு எடுத்து வருவர். ஆனால், செய்திகள் பொது மக்களின் முன் வந்த பிறகு, காரணம் வெளியிடப்படாமல் இருப்பது, எதையோ மறைப்பதைப் போலத்தான் உள்ளது.

 

2021ல் பதவிக்கு வந்த ஜெகநாடன் மீது ஆரம்பத்திலிருந்தே புகார்: இந்த பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்[5]. வந்ததிலிருந்தே அவருக்கு கை அரித்துக் கொண்டே இருந்தது போலும்[6]. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது[7].  அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[8]. 2010லிருந்து நடக்கும் ஊழல் விவகாரங்களைக் கவனித்தால், இதுவும் அந்த வகையில் சேர்ந்து விடும் போலிருக்கிறது. சமீபத்தில் பணியாளர்கள் நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றாதது, பல்கலைக்கழக பேராசிரியர் ஆராய்ச்சி படிப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன[9].  இதற்கெல்லாம் காரணம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்து வரும் பல்கலைக்கழக துணைவேந்த ஜெகநாதன் என்பது வெளிப்படையாக இருந்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை[10]. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்து நல்ல சேவை செய்தால் சரி, இத்தகைய ஊழல் செய்தாலும், அதிகாரம் சிறந்து விடுகிறது போலும். ஏற்கனவே 12 வகையான முறைகேடுகள் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த, கடந்த ஜனவரி மாதம் 2023 தமிழக அரசு உயர்நிலை குழுவை அமைத்தது. அதன் பெயரில், உயர்நிலைக் குழுவினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தினர்.

 

ஒரே மாதிரியான செய்தி- தலைப்புகள் வேறு: பாலியல் விசாரணை கமிட்டி போல, இத்தகைய விசாரணை கமிட்டிகளும் பெயரளவில், ஏதோ விசாரணை செய்து, விவகாரங்களை அமுக்கத் தான் பார்க்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த இதே போன்ற விவகாரங்கள், செய்திகள், மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான முடிவுகளைத் தான் கவனிக்க முடிகிறது. இப்பொழுதும் அதே பாணியில் தான் செய்திகள் வெளிவந்துள்ளன. தலைப்புகள் தான், ஏதோ அவரவர்கள் பெரிதாக புலன் விசாரணை செய்து, எதையோ புதியதாகக் கண்டு பிடித்து விட்டால் போல, வகைவகையா போட்டு, அரைத்த மாவையே அரைத்துள்ளனர்:

Ø  துணைவேந்தர் அதிரடி கைது![11]

Ø  பெரியார் பல்கலைக் கழகம் துணைவேந்தர் அதிரடி கைது![12]

Ø  சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது![13]

Ø  துணைவேந்தர் அதிரடி கைது! காரணம் என்ன?[14],

Ø  பெரியார் பல்கலை. துணைவேந்தர் துணைவேந்தர் அதிரடி கைது! காரணம் என்ன?[15],

Ø  முறைகேட்டில் ஈடுபட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தர்… அதிரடியாக கைது செய்த காவல்துறை – பின்னணி என்ன ?[16],

Ø  அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து அரசு பணத்தை தவறாக செலவிட்டதாக புகார்… துணைவேந்தர் கைது![17],

Ø  அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து அரசு பணத்தை தவறாக செலவிட்டதாக புகார்… பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது![18]

Ø  முறைகேடு வழக்கில் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நிபந்தனை ஜாமின்![19],

Ø  சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமீனில் விடுவிப்பு, 

Ø  காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்![20],

 

© வேதபிரகாஷ்

27-12-2023


[1] தினத்தந்தி, சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமீனில் விடுவிப்பு,  டிசம்பர் 27, 8:25 am

[2] https://www.dailythanthi.com/News/State/salem-periyar-university-vice-chancellor-jagannathan-released-on-bail-for-7-days-1087524

[3] Salem Periyar University here has suspened its Deputy Regitrar C Periyaswamy on his retirement day on charges of misappropriation of funds to the tune of Rs 35, university sources said today.
Dr S Swaminathan, Vice Chancellor of the university said Periyaswamy used to withdraw amount from the university funds for making arrangements for examinations. But he has not provided accounts regarding the expenditure for the Rs 35 lakh he has withdran from 2013-15 till February 28. He was suspended on his retirement day. Unless proper accounts were given or reimburse the amount, crimial case will be booked against him, Swaminathan said.

Business Stanard, Deputy registrar suspendedPress Trust of India  |  Salem Last Updated at March 1, 2015 14:46 IST.

http://www.business-standard.com/article/pti-stories/deputy-registrar-suspended-115030100332_1.html

[4] The suspension of Head of the Physics Department and former Vice-Chancellor in-charge of Periyar University V. Krishnakumar has been revoked by the five-member Vice-Chancellor Convenor Committee (VCCC) on Friday.  He was placed under suspension by former Vice-Chancellor K. Muthuchelian in an order signed by him on September 6, the day before his last day in office as VC, following which there were protests condemning the suspension. On Friday, the VCCC members met on the varsity premises for their first sitting after the tenure of the former VC ended. The order that was signed by all members of the committee was handed over to Mr. Krishnakumar, after which he joined duty immediately. It stated that he had been reinstated to his original position. Members of the struggle committee, who organised the demonstrations, claimed that the VCCC members reportedly agreed to consider their other demand seeking cancellation of the transfer orders issued to three non-teaching staff by Mr. Muthuchelian towards the end of his tenure. They added that based on these developments they had decided to end their agitations on Friday.

The Hindu, Suspension of former V-C in-charge of Periyar University revokedSTAFF REPORTER, SALEM:, SEPTEMBER 14, 2013 09:37 IST;  UPDATED: NOVEMBER 11, 2016 05:47 IST.UPDATED: NOVEMBER 11, 2016 05:47 IST

http://www.thehindu.com/news/national/tamil-nadu/Suspension-of-former-V-C-in-charge-of-Periyar-University-revoked/article11868701.ece

[5] ஏபிபி.லைவ், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அதிரடி கைது! காரணம் என்ன?,,By: சதீஷ் குமார்,  Published at : 26 Dec 2023 05:58 PM (IST)| Updated at : 26 Dec 2023 06:24 PM (IST).

[6] https://tamil.abplive.com/news/tamil-nadu/vice-chancellor-of-salem-periyar-university-arrested-158048

[7] தினமணி, பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, By DIN  |   Published On : 26th December 2023 05:56 PM  |   Last Updated : 26th December 2023 07:59 PM.

[8] https://www.dinamani.com/tamilnadu/2023/dec/26/selam-periyar-university-vice-chancellor-arrested-4128966.html

[9] ஜெயாடிவி, அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து அரசு பணத்தை தவறாக செலவிட்டதாக புகார்சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, Dec 27 2023 10:43 AM.

[10] http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_238677.html

[11] தமிழ்.வெப்துனியா, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது, Written By Sinoj, Last Updated: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (18:22 IST).

[12]  https://tamil.webdunia.com/article/regional-tamil-news/salem-periyar-university-vice-chancellor-arrested-today-123122600075_1.html

[13] நியூஸ்.7.தமிழ், சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, by Web Editor, December 26, 2023.

[14] https://news7tamil.live/salem-periyar-university-vice-chancellor-arrested.html

[15] கலைஞர்.செய்திகள், முறைகேட்டில் ஈடுபட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தர்அதிரடியாக கைது செய்த காவல்துறைபின்னணி என்ன ?, KL Reshma, Updated on : 26 December 2023, 07:31 PM

[16] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/12/26/periyar-university-vice-chancellor-jagannathan-arrested-in-salem

[17] இ.டிவி.பாரத், காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்!, Last Updated: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:27 IST).

[18] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/periyar-university-vc-jeganathan-appear-in-police-station/tamil-nadu20231227144630270270512

[19] ஜீ.நியூஸ், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைதுமுழு பின்னணி என்ன?,     Written by – Sudharsan G | Last Updated : Dec 26, 2023, 07:35 PM IST

[20] https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-periyar-university-vice-chancellor-jaganathan-arrested-check-here-for-shocking-details-480000

தமிழகத்தில் துணைவேந்தர் நியமன ஊழலும், திராவிடக் கட்சிகளும், கல்வி-படிப்புத் துறை தராதரமும், யோக்கியதையும்.

ஒக்ரோபர் 23, 2022

தமிழகத்தில் துணைவேந்தர் நியமன ஊழலும், திராவிடக் கட்சிகளும், கல்விபடிப்புத் துறை தராதரமும், யோக்கியதையும்.

2017 முதல் 2021 வரை திமுகதிமுக ஆட்சிகளும், கவர்னர்களும்: தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது குழப்பமான அரசியல் சூழ்நிலையில் 2017-ம் ஆண்டு தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்[1]. பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பின் பஞ்சாப் கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டார்[2]. இவர் ஆளுநராக இருந்த போது பல்வேறு சர்ச்சைகளிலும், குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் சூரப்பா உள்பட அவரின் துணைவேந்தர் நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின[3]. தமிழ்நாட்டு பல்கலைக் கழகத்திற்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரை நியமிப்பதா என கடும் எதிர்ப்புகள் எழுந்தன[4]. திக-திமுக போன்ற கட்சியினர் ஊடகங்கள் மூலம் பலவித எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். பலவிதமான அவதூருகளையும் கிளப்பி வந்தனர். “நக்கீரன்” ஒன்றே உதாராணத்திற்கு சொல்லலாம். 2021ம் ஆண்டு தமிழக புதிய கவர்னாக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறை ஊழல் விபச்சாத்தை விட மோசமானது: பல்கலைக்கழக ஊழல்கள் தமிழகத்திற்கோ, திராவிடக் கட்சிகளுக்கோ புதியதல்ல. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஊழலில் சிக்கியுள்ளன, பல் துணைவேந்தர்கள், தாளாளர்கள் ஊழலில் கைதாகியுள்ளனர், சிலர் மர்மமான நிலைகளில் இறந்துள்ளனர். ஆனால், ஊழல் ஒழிந்த பாடில்லை. துணைவேந்தர் நியமனம், அதிலிருந்து துணை-பேராசிரியர் நியமனம் முதலியவை எல்லாம் எப்படி லட்சங்கள் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்பதெல்லாம் பலமுறை ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஆனால், யாருக்கும் இதைப் பற்றி வெட்கப் படுவதோ, கவலைப் படுவதோ இல்லை. இதுவும் நடக்கிறது-அதுவும் நடக்கிறது என்று தான், காலம் போய் கொண்டே இருக்கிறது. படிப்பு-கல்வி, அவற்றின் தரம், நெறிமுறை என்றால் நினைப்பவர்களும் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சென்று விடுவார்கள். இத்தகைய ஊழல் விவகாரங்களை, அசிங்கங்களை, ஒதுக்கி விட்டு கடந்து செல்கிறார்கள். கல்வித்துறை ஊழல் விபச்சாத்தை விட மோசமானது என்பது தெரிந்த விவகாரம் ஆகிவிட்டது.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் முதல் மந்திரி பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது[5]. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித், அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்றும் தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்[6]. இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். ‘பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் கவர்னராக நான் நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழககவர்னராக அதாவது 20 பல்கலைக்கழகங்களின் வேந்தராக, 4 ஆண்டு காலம் இருந்துள்ளேன்[7]. எனது பதவிக் காலத்தில் சட்டப்படி 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன்[8]. தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்குள்ள கல்வித் துறையை ஒழுங்குபடுத்தியதற்காக தமிழக முதல்வ-மந்திரி மு.க.ஸ்டாலின் என்னைப் பாராட்டினார். அவரிடம் கேளுங்கள். அவரிடமிருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன். அதை யாராலும் தடுக்க முடியாது. நான் என் கடமையைச் செய்யவில்லை என்றால் நான் குற்றவாளியாக உணர்வேன். ஒரு கவர்னரின் பொறுப்பு, அனைவருக்கும் வழிகாட்டுவதும் பல்கலைக்கழகங்களைக் கவனிப்பதுமே. என்ன நடந்தாலும் என் கடமையைச் செய்வேன்’ என்று கூறியுள்ளார் .

துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் அது ஆளுநரையே சாரும் என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் கூறினார்[9]. முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கேபி.அன்பழகன் நேற்று அளித்த பேட்டி[10]: “பஞ்சாபில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை பெற்று நியமனம் செய்ததாக பேசி உள்ளார். துணை வேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் மட்டுமே கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார். ஆளுநரே தேர்வு செய்து அறிவிக்கிறார். இதில் அரசுக்கோ, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த எனக்கோ எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. அப்படி இருக்கிறபோது, தமிழகத்தில் தான் பணியாற்றிய காலத்தில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை பெற்றுக்கொண்டு துணைவேந்தரை நியமனம் செய்த நிலை இருந்தது என இன்றைய பஞ்சாப் ஆளுநர், பேசியது ஏற்ககூடியதாக இல்லை. பஞ்சாபில் அவர் துணைவேந்தரை நியமிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்த தவறு நடந்தாலும் அந்த காலகட்டத்தில் ஆளுநராக பணியாற்றிய அவரையே சார்ந்தது ஆகும்,”. இவ்வாறு அவர் கூறினார்.

கம்யூனிஸ்டுகளின் போலித்தனம்: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டின் ஆளுநராக 4 ஆண்டுகளுக்கு மேலாக பன்வாரிலால் புரோகித் பணியாற்றியுள்ளார்[11]. பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த காலத்தில் 27 துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கூறியுள்ளார்[12]. அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற உயர் பொறுப்பில் உள்ளவர் கூறும் புகாரை வெறும் செய்தியாக கடந்துவிட முடியாது. பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழக அரசு விசாரிக்க வேண்டும். தவறு நடந்திருந்தால் ஊழல் செய்து துணைவேந்தர் பதவிகளில் அமர்ந்துள்ளவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பணி நியமனம் ஊழல் முறைகேடுகளுக்கு இடம்தராத வகையில் அமைந்திட விதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கம்யூனிஸ்டுகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை, ஏனெனில், இவர்கள் சும்மா பேசிக் கொன்டுதான் இருப்பார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதும் தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1] தினமலர், தமிழக பல்கலை. துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை: மாஜி கவர்னர் குற்றச்சாட்டு, Updated : அக் 21, 2022  21:22 |  Added : அக் 21, 2022  20:48.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3151495

[3] நியூஸ்.17.தமிழ், தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை ; பன்வாரிலால் புரோஹித், by EZHILARASAN DOctober 22, 2022.

[4] https://news7tamil.live/in-tamil-nadu-the-post-of-vice-chancellor-sold-up-to-rs-50-crores-says-punjab-governor-banwarilal-purohit.html

[5] தினத்தந்தி, தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை விற்பனைபன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல், அக்டோபர் 22, 12:59 pm (Updated: அக்டோபர் 22, 1:07 pm).

[6] https://www.dailythanthi.com/News/India/vice-chancellors-post-in-tamil-nadu-for-sale-between-rs-40-crore-rs-50-crore-banwari-lal-purohit-shocking-information-820270

[7] தினமணி, தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை! முன்னாள் ஆளுநர் அதிர்ச்சித் தகவல்!!, By DIN  |   Published On : 22nd October 2022 10:36 AM  |   Last Updated : 22nd October 2022 10:36 AM.

[8] https://www.dinamani.com/india/2022/oct/22/in-tamil-nadu-a-vice-chancellors-post-was-sold-for-rs-40-to-rs-50-crore-banwarilal-purohit-3936820.html

[9] தினகரன், துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் ஆளுநரையே சாரும்: மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி, 2022-10-23@ 01:36:27

[10] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=808808

[11] தமிழ்.ஒன்.இந்தியா, துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்.. பற்றவைத்த பன்வாரிலால் புரோகித்.. விசாரணை தேவை.. முத்தரசன்!, By Yogeshwaran Moorthi Updated: Saturday, October 22, 2022, 17:10 [IST].

[12] https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-shoul-investigate-about-banwarilal-purohit-complaint-says-mutharasan-481764.html