Archive for the ‘சட்டம்’ Category

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் சரித்திரம் – வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது–பிரச்சினை, பின்னணி என்ன? (2)

ஏப்ரல் 14, 2024

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.., முடித்தவர்கள் சரித்திரம்வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது பிரச்சினை, பின்னணி என்ன? (2)

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறை: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறைக்கு அடித்தளமிட்டவர் 1911இல் துணைவேந்தராக இருந்த அசுதோஷ் முகர்ஜி. இங்கு கற்கால வரலாறு, கல்வெட்டு, நாணயவியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை எனத் தொல்லியலோடு தொடர்புடைய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் 1961 முதல் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட நிலையில் வழங்கிவருகிறது. கற்கால வரலாறு, தொல்லியல் அகழாய்வு நெறிமுறைகள், கட்டிட, சிற்பக்கலை, கல்வெட்டுக்கள் பற்றிய பாடப்பிரிவு, நாணயவியல், அருங்காட்சியகவியல், ஆழ்கடல் ஆய்வுகள் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் முறையான அகழாய்வுப் பயிற்சி வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதலியன: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், ஆழ்கடல் ஆய்வுத்துறை, கட்டிடக்கலைத் துறை எனத் தொல்லியல் சார்ந்த அனைத்துப் பாடப்பிரிவுகளையும் வழங்குகிறது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஓராண்டு தொல்லியல், கல்வெட்டியல் பட்டயப் படிப்பையும், பண்டைய வரலாறு, தொல்லியல் பாடத்தில் முனைவர் பட்டத்தையும், ஆறு மாத தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது. சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஓராண்டு கவ்வெட்டியல்பாடத்தை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இரண்டு வருட தொல்லியல் படிப்பை உதவித் தொகையுடன் வழங்குகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை அவர்கள் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.

மற்ற கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள் தவிர்த்துப் பல கல்லூரிகள் தொல்லியல் பாடத்தை இளங்கலை, முதுகலை அளவிலும் வழங்குகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள பூம்புகார் கல்லூரி ஓராண்டு கட்டிடக்கலை, சிற்பக்கலை பாடப்பிரிவில் இந்தியாவில் இருந்த பல்வேறு கட்டிடக்கலை அமைப்புகளை விளக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாமல்லபுரத்தில் உள்ள கட்டிட, சிற்பக்கலை கல்லூரியும் மாணவர்களுக்கு இளங்கலையில் நுண்கலைப் பட்டத்தை வழங்குகிறது. சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி இளநிலைக் கல்வியில் தொல்லியல் பாடத்தை வழங்குகிறது. இக்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட வரலாற்றின் மறுபக்கத்தை தொல்லியல் கல்வியின் மூலம் அறிவியல்பூர்வமான முறையில் அகழ்ந்தெடுத்து உலகுக்குப் பறைசாற்றுகின்றன. தொல்லியல் என்பது அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செய்யப்பட வேண்டிய ஆய்வுத் தளமாகும். ஆகையால் பல்துறை அறிஞர்களும் ஆர்வத்தோடு தொல்லியலைக் கற்றால் உலகின் தொன்மை வாய்ந்தவர்கள் இந்தியர்கள் என்பது புலப்படும். குறிப்பாக உலகின் தொன்மையாள மொழிக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்காரர்களான தமிழர்கள் தங்கள் வரலாற்றின் வளமையை உணரவும் போற்றவும் மிகப்பெரும் வாய்ப்பாக அமையும்.

சரித்திரப் பாடத்தில்-பட்டப் படிப்பில் வித்தியாசம் ஏன்?: சரித்திரம் படித்தவர்கள் தொல்லியல் வேலைக்குவர முடியாது என்றால், அதே போல தொல்லியல் படித்தவர்களும் சரித்திர வேலைக்குச் செல்ல முடியாது. ஜே,என்.யூவில் இடைக்கால சரித்திரம் பட்டம் பெற்றவருக்கும் இந்த ஆணை பொறுந்தும். பிறகு, ஜே,என்.யூ இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுகின்றதா? அதனிடம் ஏன் பழங்கால இந்தியாவுக்கு துறை-படிப்பு இல்லை என்று யாருகேட்டதாகத் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், புதிய படிப்புகள் படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வலுத்துள்ளது. அதனால், ஒருவேளை இப்படியெல்லாம் பல்கலைக் கழகங்களில் துறைகளை ஆரம்பிக்கலாம். சரித்திரப் படிக்க ஆளில்லை, சரித்திரத் துறையே மூடப் படுகிறது என்றெல்லாம் கூட நடந்தேறியுள்ளது. அதற்கும் முறையான எதிர்ப்பு ஒன்றும் இல்லை. சுற்றுலா, பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு, ஓட்டல்-கேடரிங் மேனேஜ்மென்ட் என்றெல்லாம் மாறி வருகின்றதை கவனிக்கலாம், அதாவது, சரித்திரம் இவற்றுடன் சேர்த்து அல்லது அவற்றை சரித்திரத்துடன் சேர்த்து, படிப்புகளை உருவாக்குகிறார்கள்.

நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது: நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது. அவர்கள் எப்படியாவது, எந்த படிப்பு, துறை படித்தாலும் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள், வேலைக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், 50% பெறுபவர்கள் கஷ்டப் படுகிறார்கள். மேலும், ஆங்கிலம் தெரியாத நிலையும் பலரை பாதிக்கிறது. அதைப் பற்றியும் பெரும்பாலோர் கண்டு கொள்ளவதில்லை. எப்படியாவது அரசு வேலை கிடைத்து விட்டால், போதும், பிறகு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் போன்ற மனப்பாங்கும் உள்ளது. இந்த வேலைக்கு, இந்த ஆண்டில் விளம்பரம் வரப்போகிறது, அதனால், அதற்குள் டிகிரி / பட்டயம் பெற்று தயாராகி விடவேண்டும் என்ற திட்டத்துடனும் படிக்க சேர்கின்றனர். அத்தகைய விவரம் தெரிந்தவர்கள், விவரமானவர்கள் அமைதியாக வேலைக்குச் சென்று விடுகின்றனர். மற்றவர்கள் முழிக்கின்றனர், திகைக்கின்றனர். போட்டியில் தம்மையும் அறியாமல் பின்னே தங்க நேரிடுகிறது.

காலப்போக்கில் மாறும் / காலாவதியாகும் பாடங்கள்: கல்வியாளர்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கலை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு, பாகுபாடு மற்றும் போட்டி ஆகியவை மறக்கமுடியாததாகவும், காலப்போக்கில் தொடர்கின்றன. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் கலைப் பாடங்கள் மற்ற பாடங்களைக் காட்டிலும் தாழ்ந்தவையாகக் கருதப்பட்டன. இதனால் சில மாணவர்கள் பி.ஏ. (ஹானர்ஸ்) மற்றும் / அல்லது வழக்கறிஞர்களாக ஆக சட்டம் போன்ற படிப்புகளைப் படித்தனர். இல்லையெனில், கலைப் பட்டதாரிகள் அலுவலகம் மற்றும் நிர்வாகப் பணிகளுக்குச் சென்றனர். அக்காலகட்டத்தில், எழுத்தர் பணிக்கு அத்தகைய அனுபவம் தேவைப்பட்டதால் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து அவசியமானது. எனவே, 1980கள் வரை, டைப்ரைட்டர் நிறுவனங்கள் காலை அல்லது மாலையில் ஒரு மணி நேர நேரத்தைப் பெறுவதற்கு வேலை தேடுபவர்களுடன் பிஸியாக இருந்தன. இன்றும் தட்டச்சு மற்றும் கணினி தட்டச்சு ஆகியவை எழுத்தர் பணிக்கு வலியுறுத்தப்படுகின்றன அல்லது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அவை இயந்திர தட்டச்சுப்பொறிகள் கிட்டத்தட்ட உபயோகமில்லாதவையாகி ஸ்கிராப்பாக விற்கப்பட்டன. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் தட்டச்சுப்பொறிகளும் கூட அதே நிலையை அடைந்தன.

வகுப்பறையில் திறமை தீர்மானிக்கப் படும்: அதுபோல சரித்திரம் போன்ற கலைசார் படிப்புகள் வேலை எனும்பொழுது, மதிப்பிழந்து வருகின்றன. அதிலும் ஆங்கிலம் எழுத-படிக்க-பேச சரியாக வராது என்றால், அலுவலகங்களில் வேலை செய்வது கடினமாகி விடுகிறது. அந்நிலையில் உதவி / துணை பேராசிரியர் பதவிக்குச் சென்றால், அவர்கள் எப்படி பாடங்கள் நடத்துவர், போதிப்பர், விளக்குவர் என்று தெரியவில்லை., ஆகவே, நிச்சயம் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும், தயார் படுத்திக் கொண்டு, சவல்களை சம்மாளிக்க வேண்டும். தங்களது வேலைக்கு உகந்தவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெறும்பட்டங்கள் / சான்றிதழ்கள் உதவாது, வேலை செய்யும் விதம் தான் அவர்களின் உண்மையான தகுதி, திறமை முதலியவற்றை வெளிப்படுத்தும். ஏனெனில், வகுப்பறையில் பாடத்தை போதிக்கும் பொழுது, ஏமாற்ற முடியாது. மாணவர்கள் தராதரத்தை கண்டு பிடித்து விடுவார்கள், கண்டு கொள்வார்கள், மதிக்க மாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

14-04-2024

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் சரித்திரம் – வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது–பிரச்சினை, பின்னணி என்ன? (1)

ஏப்ரல் 14, 2024

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.., முடித்தவர்கள் சரித்திரம்வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது பிரச்சினை, பின்னணி என்ன? (1)

தொல்லியல் படிப்பிற்கு திடீர் மவுசு ஏன்?: கீழடி அகழாய்வுக்குப் பிறகு, தொல்லியல் திடீஎன்று பிரபலமாகி, எல்லோரையும் உசுப்பேற்றியுள்ளது போலிருக்கிறது. 2000 வரை 10-15 பேரே சேர்ந்து படிக்கும் துறைக்கு, இன்று அதிகமாகவே விண்ணப்பித்து வருகிறார்கள். வருடா வருடம் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. படிப்புப் பற்றியும் அதிக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன[1]. உதவித் தொகையுடன் படிக்கலா, அரசு அழைப்புப் போன்ற செய்திகளும் உண்டு[2]. இதுவரை தமிழ், வரலாறு, தொல்லியல் முதலான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவா்கள் மட்டுமே முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், வளா்ந்து வரும் தொழில்நுட்பம், பன்முகத் தன்மை வாய்ந்த தொல்லியல் போக்குகள் முதலியவற்றைக் கருத்தில்கொண்டு இனி முதுகலை, முதுநிலைஅறிவியல், முதுநிலை பொறியியலில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவா்களும் முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது[3]. இதையும் யாரும் எதிர்க்கவில்லை.

தொல்லியல் படிப்பிற்கு பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: பொறியியல் மாணவர்கள் எதற்கு இபடிப்பிற்கு வரவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை, எதிர்க்கவில்லை, தடுக்கவில்லை. இந்த தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் மாதம் ரூ.5,000 கல்வி உதவித் தொகையுடன் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரிவான தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் தொல்லியல் மட்டுமின்றி அருங்காட்சியகங்கள், சுற்றுலா மற்றும் கோயில்கள் உள்ளிட்ட மரபுசார் இடங்களின் பாதுகாப்பு மற்றும் கல்விப் புலத்திலும் சிறப்பாகச் செயல்படமுடியும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்[4]. ஒரு பக்கம் தமிழகத்தில் 1000 வருடங்களுக்கு முந்தைய கோவில்கள் எவ்வாறு கவனிப்பார் இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன மற்றும் இருக்கும் கோவில்களிலும் நாத்திகம்-சித்தாந்தம் பேசு அரசுகளால் சேதமடைந்து வருகின்றன என்பதும் தெரிந்த விசயமே. அந்நிலையில் புராதக சின்னங்கள், கோவில்கள், கட்டிடங்கள் இவற்றை பாதுகாக்க, புதிய படிப்புகளை, துறைகளை உண்டாகலாம். அதே போல எம்.ஏ-தொல்லியலுக்கும் ஐ.டி என்று பலதுறை பட்டயம் பெற்ற மாணவர்கள் எல்லாம் சேர்ந்து வருகிறார்கள். இது படிப்பிற்காக போட்டியா அல்லது வேலைக்காக போட்டியா என்று புரியவில்லை. ஏதோ அர்ச்சகர் வேலைக்கு போட்டி போன்று, ஒரு பிரமிப்பை உண்டாக்கி வருவது தெரிகிறது.

தொல்லியல் பட்டதாரிகள் சரித்திர வேலைக்கு விண்ணப்பிக்கலாகாதா?: இருப்பினும், அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள, இணையில்லாத கல்வி பட்டியல் குறித்த அரசாணையால், சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை படிப்பை முடித்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்[5]என்று செய்தி வந்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் வரையறைக்கு உட்பட்டு, எந்தெந்த படிப்புகள் எந்தெந்த படிப்புகளுக்கு இணையில்லாதவை என்பது குறித்து, பிப்ரவரி மாதம் 2024 வல்லுனர் குழு ஆலோசித்தது[6]. அந்தக்குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதில், தாவரவியல், வரலாற்று துறை படிப்புகளுக்கு இணையில்லாத படிப்புகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, சென்னை பல்கலையால் வழங்கப்படும் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் எம்.ஏ., பட்டம், எம்.ஏ., வரலாறு பட்டத்துக்கு இணையானது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.., முடித்தவர்கள் சரித்திரம்வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது: இதனால், வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு, சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை பல்கலையில், எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்றவர்கள் கூறியதாவது: “தற்போது, ஆசிரியர் தேர்வாணையம் வரலாற்றுத்துறை பேராசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு, சென்னை பல்கலையில் எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்று, பிஎச்.டி., ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளோரும் விண்ணப்பிக்க முடியாத வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில தொல்லியல் துறைகளிலும், வரலாறு சார்ந்த கல்வித்துறையிலும், சென்னை பல்கலையில் படித்தோர் தான் அதிகளவில் சாதித்துள்ளனர்.”

தமிழக அரசு தவறான அரசாணையை வெளியிட்டுள்ளது:. “தமிழகத்தில் நடந்துள்ள பல்வேறு அகழாய்வுகளை அவர்களே திறம்பட செய்து, புதிய வரலாற்றுக்கு துணை புரிந்துள்ளனர். அதேபோல், நாணயம், கல்வெட்டு, சுவடிகள் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து, புதிய வரலாற்றை எழுதி உள்ளனர். தொல்லியல் துறை வேலைவாய்ப்புகளுக்கு வரலாற்று துறையினர் விண்ணப்பிக்கும் தகுதி பெற்றுள்ள நிலையில், வரலாற்றுத்துறை வேலைவாய்ப்புக்கு தொல்லியல் துறையினர் விண்ணப்பிக்க முடியாத வகையில், தமிழக அரசு தவறான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால், வரலாறு பாடத்திட்டத்தில் உள்ள பண்டைய வரலாறு, தொல்லியல் குறித்த பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்படுவதுடன், சென்னை பல்கலையில் படித்து அகழாய்வுகளை செய்து, பல வரலாற்று நுால்களை எழுதிய, தகுதியும் திறமையும் உள்ள நுாற்றுக்கணக்கான கல்வியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். இது, தொல்லியல் படிப்பை முடித்தோருக்கும், படிப்போருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், தஞ்சை தமிழ் பல்கலையில் தொல்லியல் படிப்பை முடித்தவர்கள், வரலாற்றுத் துறை பணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்படவில்லை. இது பாரபட்சமான அரசாணையாக உள்ளது. இதை மாற்றி, பழைய நடைமுறையை தொடர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொல்லியல் படிப்பின் முக்கியத்துவம்: வரலாற்றுத் தொன்மையை ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கு அடிப்படைத் தரவுகளாக இருப்பவை தொல்லியல் எச்சங்களே. அத்தகைய தொல்லியல் கல்வியை இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கற்பிக்கின்றன[7]. குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் முதுகலை, இளங்கலை, பட்டயப் படிப்புகளில் பண்டைய வரலாறு, தொல்லியல், கலாச்சாரம், தொல்லியல், அருங்காட்சியகவியல், பாதுகாப்புத் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை வழங்குகின்றன[8]. குறிப்பாக டெக்கான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 1939 முதல் பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல் பாடப்பிரிவுகளில் முதுகலை தொடங்கி முனைவர் பட்டம் வரை வழங்கிவருகிறது. மேலும், கணிணி வழியில் ஆய்வுகள், தொல்லியல் பொருட்களை வேதியியல் பகுப்பாய்வு செய்வது, புதைபடிவ ஆய்வியல், தொல்லுயிரியல் ஆய்வுகள், மகரந்தவியல் ஆய்வுகள் எனத் தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வகங்களுடன் மிகச் சிறந்த தொல்லியல் ஆய்வுக் கல்வியை வழங்குகிறது. புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களான சங்காலியா, வசந்த் சிண்டே, சாந்தி பப்பூ போன்ற ஆய்வாளர்களை நாட்டுக்கு வழங்கியது டெக்கான் பல்கலைக்கழகம்.

© வேதபிரகாஷ்

14-04-2024


[1] டமிழ்.ஏபிபி.லைவ், Archaeology Museology: தொல்லியல் படிப்புகளை உதவித் தொகையுடன் படிக்கலாம்: அரசு அழைப்புவிவரம், By : மாய நிலா,  PUBLISHED AT : 02 JUL 2023 05:12 PM (IST)| Updated at : 02 Jul 2023 05:12 PM (IST).

[2] https://tamil.abplive.com/education/tamil-nadu-institute-of-archaeology-and-museology-pgda-pgde-pdhmm-2023-2025-know-how-to-apply-126471

[3] தினமணி, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொல்லியல்பட்டயப் படிப்புக்கு 320 போ் விண்ணப்பம், Published on: 30 ஆகஸ்ட் 2020, 3:46 am; Updated on: 30 ஆகஸ்ட் 2020, 3:46 am.

[4]https://www.dinamani.com/tamilnadu/2020/Aug/29/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-320-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-3457057.html

[5] தினமலர், சென்னை பல்கலை தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்கு சிக்கல், UPDATED : ஏப் 10, 2024 03:34 AM; ADDED : ஏப் 10, 2024 03:34 AM.

[6] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-chennai-university-archeology-graduates-have-a-problem–/3596966

[7] தமிழ்.இந்து, 30+ பல்கலை.கள், 40+ கல்லூரிகள்… – ‘தொல்லியல்படிப்புகளில் தடம் பதிக்க விருப்பமா?, செய்திப்பிரிவு, Published : 18 Nov 2023 07:07 PM; Last Updated : 18 Nov 2023 07:07 PM. . இனியன் | தொடர்புக்க்கு initnou@gmail.com

[8] https://www.hindutamil.in/news/education/1155300-there-are-30-plus-universities-fot-archaeology-courses.html

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்-தல பிரச்சினையில் மோதல், அடிதடி, கைது முதலியன (1)

பிப்ரவரி 15, 2024

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்தல பிரச்சினையில் மோதல், அடிதடி, கைது முதலியன (1)

பல உயர்ந்தவகளை உருவாக்கியது பச்சையப்பன் கல்லூரி: சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக திகழும் பச்சையப்பன் கல்லூரி, 1842-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டில் தனியாரால் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற பெயரைப் பெற்றதாகும். வள்ளல் பச்சையப்ப முதலியாரின் (1754-1794) ஆசைப்படி பள்ளியாக உருவாக்கப்பட்டு, 1889-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியாக தரம் உயர்ந்தது. அதிலிருந்து தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றும் முக்கிய தலைவர்கள் உருவாகும் இடமாக பச்சையப்பன் கல்லூரி மாறியது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் சி. என். அண்ணாதுரை தொடங்கி, க. அன்பழகன், நெடுஞ்செழியன், துரைமுருகன், கணிதமேதை ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், தமிழறிஞர் மு.வரதராசனார், ஆர். எஸ். மனோகர், எனப் பட்டியல் நீண்டு, நா. பார்த்தசாரதி, கவிஞர் வைரமுத்து நா. முத்துக்குமார் என தொடர்ந்துகொண்டே போகும். தவிர, விளையாட்டு வீரர்கள், சிறந்த மருத்துவர், பொறியாளர், அரசு அதிகாரிகள் என்றும் பலர் இருக்கிறார்கள்.

அரசியலால் ஒழுக்கம் சிதைந்து சீரழிந்த கல்லூரி: மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எண்ணற்ற தேசிய தலைவர்களும் வந்து உரையாற்றிய இடமாக திகழ்ந்த பச்சையப்பன் கல்லூரி, லட்சக்கணக்கான மாணவர்களை சமூகத்திற்குக் கொடுத்திருக்கிறது. அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கவிஞர்கள், பேராசிரியர்களை உருவாக்கியது, ஏழை எளிய மாணவர்கள் பலர் பயின்று, தங்கள் வாழ்க்கையில் கல்வியின் ஒளி கண்ட பச்சையப்பன் கல்லூரி, தற்போதோ தலைகீழ் நிலைமையைக் கண்டு தவித்து வருவதே நிதர்சனம். முன்பெல்லாம் பச்சையப்பன் கல்லூரி என்ற பெயரைக் கேட்டு மரியாதை செலுத்திய தமிழ் மக்கள், இப்போது முகம் சுழிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இரண்டு நிலைமைகளுக்கும் காரணம் அதில் படித்த மாணவர்களின் நடவடிக்கைகள் என்பதே வேடிக்கையான விஷயம்[1]. பிற கல்லூரி மாணவர்களுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மோதல், அரசுப் பேருந்துகளில் ரூட் தல விவகாரம், கல்லூரியின் நிர்வாகத்திலும் பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு என, பெயர்போன கல்லூரியின் பெயர் நாளுக்கு நாள் பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறது[2].

மாநிலக் கல்லூரியும் அப்படியே; சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College), தமிழ்நாட்டில், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னோடி என்ப்படுகின்றது. இக்கல்லூரி ஹயர் பர்டன் பவல் எனும் கணிதவியல் பேராசிரியரால் 1840 இல் திறக்கப்பட்டது. சிறந்த முன்னாள் மாணவர்கள் பட்டியலில் சிலர்:

தி. முத்துச்சாமி அய்யர் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி

ச. வெ. இராமன் – அறிவியலாளர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் – இயற்பியலாளர்

எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் – கணிதவியலாளர்

சிதம்பரம் சுப்பிரமணியம் – முன்னாள் மத்திய அமைச்சர்

ம. சிங்காரவேலர் – விடுதலைப் போராட்ட வீரர்

நெ. து. சுந்தரவடிவேலு – சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்

சாலை இளந்திரையன் – எழுத்தாளர் – தமிழறிஞர்

சாலினி இளந்திரையன் – எழுத்தாளர்

அப்துல் ஹமீத் கான் முன்னாள் மேயர்

எம். எஸ். கிருஷ்ணன் புவியியலாளர்

ரூட்டு-தல பிரச்சினை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது[3]. அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன[4]. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி 14-02-2024 அன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. “சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று நேற்று பிற்பகல் சென்றுள்ளது.” என்கிறது நக்கீரன்[5]. “இந்த ரயிலில் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த ஏராளமன மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அதன்படி இந்த ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு காத்திருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்கியுள்ளனர்[6]. பதிலுக்கு மாநிலக் கல்லூரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.”

ரெயிலில், ரெயில் நிலையத்தில் வன்முறை கூடாது; காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது[7]. இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்[8]. பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது[9]. திடீரென்று ஏற்பட வாய்ப்பில்லை, மாறாக, அவர்கள் திட்டமிட்டே செய்திருக்கக் கூடும். இருப்பினும், ஆயிரக் கணக்கான, பொது மக்கள் பயணிக்கும் ரெயிலில், ரெயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டது, சட்டத்தை மீறியகுற்றமாகும். அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர்[10]. இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்[11]. இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது[12]. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர்.  உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.

© வேதபிரகாஷ்

15-02-2024


[1] குமுதம், பல ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரிக்கு இந்த நிலைமையா? வைரலாகும் வன்முறை, Feb 14, 2024 – 15:11  Feb 14, 2024 – 17:58.

[2] https://kumudam.com/Violence-Culture-rising-on-Pachaiyappas-college-student

[3] மாலைமுரசு, பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க ரெயில்வே போலீசார் கடிதம், Byமாலை மலர், 14 பிப்ரவரி 2024 12:55 PM.

[4] https://www.maalaimalar.com/news/state/tamil-news-students-clash-at-railway-station-703119

[5] நக்கீரன், கல்லூரி மாணவர்கள் மோதல்; 60 பேர் மீது வழக்குப்பதிவு!, செய்திப்பிரிவு,

 Published on 14/02/2024 | Edited on 14/02/2024

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-students-incident-case-against-60-people

[7] தமிழ்.ஏபிபி.லைவ், Train Violence : மின்சார ரயிலில் மோசமாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்! சென்னையில் பயங்கரம்!, By : சுகுமாறன் |PUBLISHED AT : 14 FEB 2024 08:09 PM (IST),  Updated at : 14 Feb 2024.

[8] https://tamil.abplive.com/news/chennai/chennai-college-students-fight-with-bottles-stones-patravakkam-railway-station-chennai-passenger-train-167549

[9] இடிவிபாரத், பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்.. ரணகளமான பட்டரவாக்கம் ரயில் நிலையம்– 60 பேர் மீது வழக்குப்பதிவு!, By ETV Bharat,  Tamil Nadu Desk. 14 Feb 2024.

[10] https://www.etvbharat.com/ta/!state/route-thala-clash-between-two-college-students-in-pattaravakkam-railway-station-tns24021403819

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சென்னை: பீர் பாட்டில் வீசி மாணவர்கள் மோதல்.. கலவர பூமியான ரயில் நிலையம்.. 3 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்!, Raghupati R, First Published Feb 14, 2024, 7:55 PM IST, Last Updated Feb 14, 2024, 7:55 PM IST.

[12] https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/at-the-chennai-train-station-students-from-two-city-colleges-fight-throw-stones-and-three-held-rag-s8uo2r

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

நவம்பர் 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிசெலவினங்கள் மூலம் ஆரம்பித்த கல்விஊழல்: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி, நியமனம், செலவினங்கள் பற்றிய விவரங்கள்-விவகாரங்கள் திருப்தியற்ற நிலையிலே இருந்தது. பல ஆடிட் / தணிக்கைக் குழுக்களின் சோதனைகளில் பணம் சரியாக கையாளப் படவில்லை மற்றும் செலவினங்கள் முறையாக கணக்குகளில் கொண்டுவரவில்லை-வரப்படவில்லை என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்தன. பணம் வாங்கிக் கொண்டு, ஆயிரக்ககணக்கில் வேலை நியமனம் செய்யப்பட்டது முதல் பலவித ஊழல்களும் மலிந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எனச் சுமார் 12,000 பேர் பணியாற்றிவருகின்றனர்[1]. நிர்வாகக் குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம்[2]. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.

தமிழக அரசு கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: நிதி நெருக்கடி, நிதி முறைகேடுகள் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பல்கலைக்கழக நிர்வாகியாக தற்போதைய தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனாவை 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் தமிழக அரசு நியமனம் செய்து, அவா் உடனடியாகப் பொறுப்பேற்றார். பின்னா், தமிழக அரசு உயா் கல்வித் துறை மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சட்டப் பேரவையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் பல்வேறு கல்வி, நிதி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் எனச் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்[3].  தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கைக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரியவந்தது[4]

2023ல் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம் அறிவிப்பு ஆணை: மேலும், பல்கலைக்கழகத்தில் அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு[5], உயா் கல்வித் துறைக்கு அவா் அறிக்கை சமா்ப்பித்தார்[6].. அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 56 உதவிப் பேராசிரியா்கள் அடிப்படை கல்வித் தகுதி மற்றும் அரசு தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியாற்றி வந்ததாகக் கூறி[7], தமிழக அரசு உயா் கல்வித் துறை பரிந்துரையின்பேரில், அவா்களை பணி நீக்கம் செய்து பதிவாளா் (பொ) ஆா்.சிங்காரவேலு வியாழக்கிழமை 16-11-2023 உத்தரவு பிறப்பித்தார்[8]. பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கும்[9], வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்[10].

புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை: உலகெங்கும் அண்ணாமலையில் படித்தவர்கள் உள்ளனர். பண்டித மணி கதிரேசன் செட்டியார் போன்ற சிறந்த தமிழ் அறிஞர்கள் தலைமையில் தமிழ் ஆராய்ச்சி ஜொலித்தது. பல அறிய படைப்புகள் வெளிவந்தன. தண்டபாணி தேசிகர் ரங்காச்சாரி போன்றோர் இசைக்கல்லூரியை அலங்கரித்தனர். சர் சி பி ராமஸ்வாமி ஐயர் போன்றோர் துணைவேந்தர்களாக பணியாற்றினார். அந்த பல்கலைக்கா இந்த நிலைமை. பொது உடைமையாக்கி நாசப்படுத்தி விட்டார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போதிய தகுதி இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதைய உயர்க்கல்வித்துறை அமைச்சறின் ஆதரவு: இந்நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்[11]. விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுஜிசி விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எச்.டி படிப்பை முடித்திருக்க வேண்டும்[12]. ஆனால் அந்த தகுதிகள் எதுவும் இல்லாதவர்கள் உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி குறைவான பேராசிரியர்கள் குறித்து 2019ஆம் ஆண்டில் சிண்டிகேட் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது[13]. நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. இப்போது துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளார்[14]. இது வரவேற்கத்தக்கது. இதற்கு யாரும் பொறுப்பல்ல. 10 ஆண்டுகளாக அவர்கள் தகுதியை மீறி சலுகையை அனுபவித்து உள்ளார்கள். தகுதி குறைவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வருங்காலத்தில் தங்களின் தகுதிக்கேற்ற வகையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தால் அரசு அதனை பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்வி ஊழல்உருவானஉருவாக்கப் பட்ட நிலைவிதம்: ஊழலில் கல்வி, கல்வித்துறை, கல்வி பாடங்கள், கல்வி நெறிமுறை அல்லது கல்வியில் ஊழல் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தது. கல்வி தெய்வமாக, தெய்வீகமாகக்  கருதப் பட்டதால் அத்தகைய உரிய ஸ்தானம் கொடுக்கப் பட்டு மதிக்கப் பட்டது. இருந்தாலும் சமீப காலங்களில் கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டதால் அந்த விளைவின் உச்சத்தில், “கல்வி ஊழல்” நடந்து வருகிறது. விடுதலைக்குப் பிறகு அரசியல் நுழைவு, ஆளும் அரசியல்வாதிகளின் தாக்கத்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் சித்தாந்த வாதிகளின் திரிபுகளாலும் கல்வி பாடத்திட்டங்கள் புத்தகங்கள் மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விற்பனர்கள் என்று எல்லாமே அரசியலுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய “கல்வி ஊழல்” என்பது ஆரம்பிக்க வைக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

18-11-2023.


[1] தினமணி, அண்ணாமலைப் பல்கலை.யில் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம், By DIN  |   Published On : 17th November 2023 12:32 AM  |   Last Updated : 17th November 2023 12:32 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2023/nov/17/56-assistant-professors-sacked-in-annamalai-university-4107136.html

[3] விகடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ்பின்னணி என்ன?!, ஜெ.முருகன், Published: 17-11-2023 at 1 PMUpdated: 17-11-2023 at 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/higher-education-department-has-dismissed-56-professors-without-adequate-educational-qualification-in-annamalai-university

[5] தமிழ்.வெப்.துனியா, அண்ணாமலை பல்கலையின் 56 பேராசிரியர்கள் பணி நீக்கமா? பரபரப்பு தகவல்..!, Written By Mahendran Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:08 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/56-professors-dismiss-in-annamalai-university-123111600061_1.html

[7] தினமலர், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 58 பேர் டிஸ்மிஸ், பதிவு செய்த நாள்: நவ 16,2023 14:25

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3482745

[9] தினத்தந்தி, 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி, 16 Nov 2023 9:28 PM.

[10] https://www.dailythanthi.com/News/State/56-assistant-professors-sacked-chidambaram-annamalai-university-takes-action-1082995

[11] தமிழ்.சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. போராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் பொன்முடி பரபரப்பு விளக்கம்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 17 Nov 2023, 3:51 pm

[12] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-ponmudi-reveals-the-reason-why-annamalai-university-56-assistant-professors-dismissed/articleshow/105289709.cms

[13] தமிழ்.இந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை செய்திப்பிரிவு, Last Updated : 17 Nov, 2023 05:58 AM.

[14] https://www.hindutamil.in/news/tamilnadu/1154731-chidambaram-annamalai-university-sacks-56-assistant-professors.html

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

ஏப்ரல் 13, 2023

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

 

காதலை முறித்துக் கொள் என்றதை ஒப்புக் கொள்ளாதலால், ஆட்களை வைத்து லக்ஷ்மி பிரியா சிவராமை அடித்தது: இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா, தனது காதலன் அமுல் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாணவனை கடந்த ஏப்ரல் 5ம் தேதி காரில் கடத்தி உள்ளனர். அந்த அளவுக்கு அவள் ரௌடியிசத்திற்கும் இறங்கியிருக்கிறாள். இது, தீய சகவாசமா, வேறு வகையான நட்பா, தொடர்பா என்றெல்லாம் தெரியவில்லை. அதே போல, இவளுடைய பெற்றோர், அவர்கள் இதில் ஏன் கண்டு கொள்லாமல் இருக்கிறார்கள் போன்ற விவரங்களும் தெரியவில்லை. ஒரு ஊடகம், லக்ஷ்மி பிரியாவின் தாயாரும் கைது செய்யப் பட்டிருக்கிறார் என்கிறது[1]. காரில் வைத்து பேசி பார்த்திருக்கிறார்கள் என்பதை விட, மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாணவன் உறுதியாக இருந்ததால், ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியாவின் நண்பர்கள் மாணவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். வழியில், ஆலப்புழாவில் நிறுத்தி, வாலிபரின் தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்திருக்கிறார்கள். இதெல்லாம் காதல், காதல் முறிப்பு, காதல் பிரிப்பு, கட்டப் பஞ்சாயத்து போன்ற காரியங்களையும் மிஞ்சுவதாக இருக்கின்றன. பிறகு, அவர்கள், இத்தகைய வேலைகளை செய்யும் ரௌடிகளாக இருந்திருக்க வேண்டும். பின்னர், மாணவனை எர்ணாகுளம் தம்மனம் அருகே உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த கும்பல் அவரை அங்கேயே கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் மாணவனின் ஆடைகளை அவிழ்த்து, மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்,” என மாணவனின் தந்தை கூறினார்.

 

அவர்கள் காதலர்கள் அல்ல; அவர் ஆபாச வீடியோக்களை அனுப்பினார், மகளைத் துன்புறுத்தினான்: மனோரமா செய்தியிடம் பேசிய லக்ஷ்மிபிரியாவின் தாயார், அந்த இளைஞனுடன் தனது மகளுக்கு தொடர்பு இல்லை என்று கூறினார். “இருவரும் நண்பர்கள். இருப்பினும், பின்னர் அவர் அவளை வாய்மொழியாகத் துன்புறுத்தத் தொடங்கினான், மேலும் அவரது தொலைபேசிக்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பினார். அவர் தனது பிரச்சனையிலிருந்து விடுபட உதவுமாறு தனது நண்பர்களைக் கேட்பது பற்றி என்னிடம் கூறினான்,” என்று லட்சுமிப்ரியாவின் தாயார் கூறினார். மேலும், அந்த இளைஞரை தாக்குவதற்கு லட்சுமிபிரியா எந்த கும்பலையும் நியமிக்கவில்லை என்றார். “இளைஞரை அடித்தது அவளுடைய நண்பர்கள்தான், என் மகள் அல்ல. அவள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டாள். லட்சுமி திறமையான மாணவி. சந்தேகம் இருந்தால் அவளுடைய ஆசிரியர்களிடம் கேட்கலாம்,” என்று அவர் கூறினார். இருப்பினும், இந்த அம்மா எல்லா நிகழ்வுகளுக்காகவும் வருந்துவதைக் காண வேண்டியதில்லை, அதில் அவரது மகள் நிச்சயமாக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். பள்ளியில் ஒரு பையனுடனும், கல்லூரியில் ஒரு பையனுடனும் காதல் விவகாரங்களில் ஈடுபடும் படிப்பைத் தவிர, அவளோ அல்லது அவளது கணவனோ தங்கள் மகளின் செயல்பாடுகள் குறித்து எச்சரித்தார்களா என்பதும் அறியப்படுகிறது. இயற்கையாகவே, ஒவ்வொரு தாயும் தனது மகள் மற்றும் மகனை மட்டுமே பாதுகாப்பார்கள், ஆனால், அவள் ஏன் அவளுடைய நடத்தை, செயல்பாடுகள் மற்றும் காதல் விவகாரங்களை கண்காணிக்கக்கூடாது. அவளுடைய தவறான நடத்தைக்கு எதிராக அவள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அவள் அவளுக்கு அறிவுரை சொல்லலாம், கட்டுப்படுத்தலாம் மற்றும் சரிபார்த்திருக்கலாம்.

 

போலீஸார் லக்ஷ்மி பிரியாவை கைது செய்தது: அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன. ஒரு ஆணின் வீடியோவை வெளியிட்டால் என்னாகும் என்று இனிமேல் தான் யோசிக்க வேண்டியுள்ளது. பெண்ணின் மானம் போகும் என்பது போல, ஒரு இளம் வாலிபனுக்கு என்னாகும் என்று ஆராய வேண்டியள்ளது. இது பற்றி மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார், எர்ணாகுளத்தை சேர்ந்த லட்சுமி பிரியாவின் காதலன் அமலை முதலில் கைது செய்தனர். அதன்பின்னர் லட்சுமி பிரியாவை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது தோழி வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனிடையே மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் லட்சுமி பிரியாவின் நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். லக்ஷ்மி பிரியாவின் தாயார், தன் மகளுக்கும் அந்த பையன் / அமலுக்கும் எந்த உறவு இல்லை என்கிறார்[2]. நண்பர்களாக இருக்கும் பொழுது, சில வீடியோக்களை அனுப்பி மிரட்டி வந்துள்ளான். அவன் சகவாசத்திலிருந்து விலகிச் செல்லவும் அவளின் நண்பர்கள் அறிவுருத்தியுள்ளனர், என்கிறார்[3].

 

‘மகனை விடுவிக்க முக்கிய குற்றவாளி மீட்கும் தொகை கேட்டார்’: தனது மகனை விடுவிக்க லட்சுமிபிரியா பணம் கேட்டதாக இளைஞரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது விவகாரங்களில் மிகவும் ஆபத்தானது. சிறுமியும் அவரது நண்பர்களும் தனது மகனை கொடூரமாக தாக்கியதை அவர் வெளிப்படுத்தினார். பின்னர் அருகில் உள்ள கடையில் இருந்து மதுபானம் வாங்குவதற்காக கொள்ளையர்கள் பணத்தை எடுத்து சென்றனர். தாக்கியவர்களில் ஒருவர் பீர் பாட்டிலை சிவராமின் தலையில் தாக்கினார். காவல்துறை அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதால், மருத்துவர்களின் அறிக்கையிலிருந்து இவை அனைத்தையும் சரிபார்க்க முடியும். அதிர்ச்சியில் துடிக்கும் வகையில் மொபைல் போன் சார்ஜர் வயர்கள் நாக்கில் வைக்கப்பட்டு கொடுமை தொடர்ந்தது. இந்த கொடூர செயல்களை அந்த இளம் கல்லூரி மாணவி ஒப்புக்கொண்டது பொருத்தமற்றது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவருக்கு கஞ்சா கொடுக்க அக்குழு முடிவு செய்தது. பின்னர் லெக்ஷ்மிபிரியா அவரை உடை கழற்றி வீடியோ எடுக்கும்படி குழுவை வற்புறுத்தினார். இதுவும் விவரிக்க முடியாதது, ஏன் இது போன்ற வீடியோ தேவை என்று தெரியவில்லை. இருவரும் உறவுமுறையில் இல்லை என்றும் அவர் கூறினார். காருக்குள் வைத்து அடித்து உதைத்தனர்.அவரது ரூ.20,000/- மதிப்புள்ள தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம் மற்றும் ரூ.5,000/- பணத்தைக் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு திருடிச் சென்றனர். அங்கிருந்து பழைய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீண்டும் தாக்கப்பட்டார், இந்த முறை, அவர்கள் அவரை தாக்குவதற்கு கனமான தடியைப் பயன்படுத்தி அவரை தாக்கினர் மற்றும் மின்சார அதிர்ச்சியையும் கொடுத்தனர். அந்த சித்திரவதையின் வீடியோ அவர்களிடம் உள்ளது. இந்த கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து என் மகன் இன்னும் மீளவில்லை, “என்று தந்தை கூறினார். லட்சுமி பிரியா குடும்பத்தினர் பணத்தை கொடுத்து பிரச்னையை தீர்த்துக்கொள்ள விரும்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவாவின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர்.

 

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] The mother of Lakshmi Priya, who was arrested about the incident, said, “Her daughter Lakshmi Priya and the student who was attacked are of the same age, they were friends and there was no romance between them. However, the student has alleged that he forced her to fall in love with her, abused her on her cell phone and harassed her by sending vulgar videos.

https://india.postsen.com/News/399178.html

[2] Talking to Manorama News, Lakshmipriya’s mother said her daughter was not in a relationship with the young man.  “Both of them were friends. However, he later started verbally harassing her and even sent lewd videos to her phone. She had told me about asking her friends to help her get rid of his trouble,” said Lakshmipriya’s mother.

Malayala Manorama, Youth manhandled, dumped naked on road; ex-girlfriend arrested, Onmanorama Staff Published: April 11, 2023 11:13 AM IST Updated: April 11, 2023 08:29 PM IST.

[3] https://www.onmanorama.com/news/kerala/2023/04/11/man-attacked-exgirlfriend-arrested-ernakulam.html

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? (1)

ஏப்ரல் 12, 2023

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? (1)

போலி டாக்டர்கள் கைது: தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நன்னிலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்[1]. இந்த சோதனையில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்களை கண்டறிந்தனர்[2]. இது தொடர்பாக மாப்பிள்ளைகுப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில், கொல்லுங்மாங்குடியைச் சேர்ந்த சிவக்குமார், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், நாச்சிகுளம் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்[3].

தொடர்ந்து நடவடிக்கை; இதுபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் மருத்துவம் படிக்காமலே ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்[4]. இதனிடையே, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக வரும் பொது மக்களுக்கு அதிக அளவு உள்ள டோஸ் மருந்து செலுத்துவதாக மருத்துவதுறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ஊரக மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் சாந்தி கொட்டாயூரில் உள்ள கொட்டாயூர் கிராமத்தில் முனுசாமி என்பவரது கிளினிக்கில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றியும், முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் முனுசாமியை கைது செய்தனர்.

10 நாட்களில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது: தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 10 நாட்களில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. கேரளா, ஆந்திராவில் மருத்துவராக பயில்வதற்கான விதிகள் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் மருத்துவராக பயில்வதாக புகார்கள் வந்துள்ளன[6]. மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு, காவல்துறை உதவியுடன் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவம் பயிலாமல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், மருத்துவத் தொழில் செய்து வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, தேனி உட்பட எல்லையோர மாவட்டங்களில் இதுவரை 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்த மருத்துவர் அல்லோபதி மருத்துவம் பார்ப்பது: சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகாவில் தின்னப்பட்டி ரயில் நிலையம்  உள்ளது. இந்த ரயில்வே நிலையம் அருகில் போலி மருத்துவர் ஒருவர் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக சுகாதாரத்துறையினருக்கு புகார் வந்தது[7]. தகவலின்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்[8]. அப்பொழுது சித்த மருத்துவம் படித்துவிட்டு ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆண்டரஸ் கிளினிக் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்து மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

உதவியாளராக வேலை பார்த்து மருத்துவர் ஆனது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு ராஜபாண்டி 39. மதுரை மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரரான இவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் 27 ல் வில்லாபுரத்தில் சிவா வர்மா கிளினிக்கிற்கு சென்றார். அவருக்கு சிவசுப்பிரமணி சிகிச்சை அளித்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராஜபாண்டி மயங்கினார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் இறந்தார். சிவசுப்பிரமணி மீது நடவடிக்கை கோரி ராஜபாண்டி மனைவி கண்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். சிவசுப்பிரமணி தனது பெயருக்கு பின்னால் எம்.டி., என்று குறிப்பிட்டிருந்ததால் அவரது மருத்துவ சான்றுகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய மருத்துவ துறைக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பரிந்துரைத்தார். மருத்துவக்குழு ஆய்வு செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த இவர் 9ம் வகுப்பு தேர்வில் இருமுறை தேர்ச்சி பெறாமலும், பிறகு பிளஸ் 2 தொழிற்பாடப்பிரிவில் சேர்ந்து படித்து திருத்தணி, திருவள்ளூரில் எலக்ட்ரீசியனாக வேலை செய்ததும் தெரிந்தது. அதில் போதிய வருமானம் கிடைக்காததால், மதுரை பகுதியில் தலைச்சுமையாக ஜவுளி விற்றார். அதிலும் வருமானம் கிடைக்காத நிலையில், சித்த வைத்தியம் பார்த்த ராமலிங்க சுவாமி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் ‘எடுபிடி’ யாக வேலைக்கு சேர்ந்து, சிகிச்சை அளிப்பதை பார்த்து பார்த்து தொழில் கற்றுக்கொண்டார். பின்னர் போலியாக பீகாரில் சித்த வைத்தியத்திற்கு சான்று பெற்று 10 ஆண்டுகளாக வில்லாபுரத்தில் மருத்துவ தொழில் செய்து வந்துள்ளார். இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த ஒருவரின் அங்கீகார எண்ணை பயன்படுத்தி கிளினிக் நடத்தி வந்துள்ளார்[9]. போலீஸ்காரர் ராஜபாண்டி இறந்த வழக்கில், மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சிவசுப்பிரமணியை 07-04-2023 அன்று இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கைது செய்தார்[10].  10-04-2023 அன்று, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தில் வீட்டில் 12ஆம் வகுப்பு படித்து, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் பெரியசாமி என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்[11].

தீர்வு என்ன – என்ன செய்ய வேண்டும்? முன்பெல்லாம் மருத்துவ சிகிச்சை இலவசமாகத்தான் இருந்தது. இந்திய ராஜாக்கள் ஆண்ட போது, எல்லாமே இலவசமாகத்தான் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் அம்முறை மாற்றப்பட்டபோது, மாறியபோது, பல சீர்கேடுகள் ஏற்பட்டதில், இதுவும் ஒன்று எனலாம். இப்பொழுதுள்ள முறையில் மருத்துவ படிப்பு முதல் சிகிச்சை வரை பணம் தான் பிரதானம் என்ற நிலையுள்ளது. இந்நிலையை மாற்ற வேண்டும்.

  1. மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கப் படவேண்டும். நூற்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இல்லை, உணவு சுத்தமாக ஆரோக்யமாக இருக்க வேண்டும். உணவு கலப்படம் முதலியவற்றைப் போக்க வேண்டும்.
  2. மருத்துவர்கள் தங்களது பொதுநல சேவை, தார்மீக எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. பணம் சம்பாதிக்க வேண்டும், ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்ற லாபநோக்கில் இருக்கும் போது, அவர்களால் நிச்சயமாக தங்களது மருத்துவத் தொழிலை நியாமாக செய்ய முடியாது.
  4. அரசு / பொது மருத்துவ மனைகள் அதிகமாக்கப் பட வேண்டும். நகரங்களைத் தவிர, நகர் புறங்கள், கிராமங்களில் மருத்துவ மனைகள் அதிகமாக்கப் படவேண்டும்.
  5. டாக்டர்கள் மாதத்திற்கு ஒருதடவை அங்கு சென்று மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும். கம்பெனிகள் அதற்கு “ஸ்பான்சர்” செய்ய வேண்டும்.
  6. மருந்துகள், பரிசோதனைகள், சோதனைகள் முதலியவற்றின் விலை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது அரசு அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டும். இதில் ஏகப்பட்ட ஊழல்கள் / மோசடிகள் / வரியேய்ப்புகள் நடந்து வருகின்றன. அவற்றை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.
  7. ஆயுர்வேத, சித்தா, யுனானி முறைகளிலும் நவீனமுறைகளைப் பின்பற்றி, மக்களுக்கு உபயோகமாக செயல்படுத்த வேண்டும். “கிளினிகல்” முறைகள் பின்பற்றப்படவேண்டும். நோயாளிகளின் “மருத்துவ சிகிச்சை சரித்திரம்” (கேஸ் ஹிஸ்டரி) பாதுகாக்கப்படவேண்டும்.
  8. முதலில் மருத்துவப் படிப்பு என்பது பணக்காரர்களுக்கு அல்லது லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் தான் சீட் கிடைக்கும் என்ற நிலையினையும் மாற்ற வேண்டும்.
  9. படிக்க வேண்டும் என்ற ஆசை, மனப்பாங்கு, தகுந்த பாவம் உள்ளவர்களை நுழைவு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படலாம். அப்பொழுது அந்த பணபலம் குறையும்.
  10. சேவை எண்ணம் இல்லாமல், மருத்துவத் தொழில் செய்ய முடியாது, ஆகவே, அத்தகைய எண்ணம் இல்லாதோர், மருத்துவத் தொழிலுக்கு வராமல் இருப்பதே நல்லது.

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், Thiruvarur: திருவாரூரில் ஷாக்.. ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் அதிரடி கைது!, Karthikeyan S, 08 April 2023, 12:34 IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/10-fake-doctors-arrested-in-thiruvarur-131680936986089.html

[3] தமிழ்.நியூஸ்.18, 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைதுதமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை…!, NEWS18 TAMIL, First published: April 11, 2023, 19:11 IST, LAST UPDATED : APRIL 11, 2023, 19:11 IST.

[4] https://tamil.news18.com/tamil-nadu/72-fake-doctors-arrested-in-last-10-days-by-tamil-nadu-police-936421.html

[5] தினத்தந்தி, தினத்தந்தி, 10 நாளில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது, By தந்தி டிவி, 12 ஏப்ரல் 2023 7:24 AM.

[6] https://www.thanthitv.com/latest-news/71-fake-doctors-were-identified-and-arrested-in-10-days-179511

[7] நியூஸ்7தமிழ், சேலம் அருகே போலி மருத்துவர் கைது!, —கோ. சிவசங்கரன், by Web Editor, April 10, 2023

[8] https://news7tamil.live/omalur-duplicate-doctor-arrest.html

[9] தினமலர், பார்த்த அனுபவத்தில் வைத்தியம் பார்த்த போலி மருத்துவர் கைது: சுளுக்கு எடுத்த போலீஸ்காரர் இறந்த வழக்கில் திருப்பம், பதிவு செய்த நாள்: ஏப் 08,2023 00:02

[10]  https://m.dinamalar.com/detail.php?id=3287827

[11] தமிழ்.ஏபிபி.லைவ், கரூர்: குளித்தலை அருகே கிராமத்து வீட்டில் மருத்துவம்போலி மருத்துவர் கைது, By: பிரபாகரன் வீரமலை | Published at : 11 Apr 2023 02:11 PM (IST), Updated at : 11 Apr 2023 02:11 PM (IST)

https://tamil.abplive.com/crime/karur-news-medicine-at-karur-village-house-fake-doctor-arrested-tnn-111254

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

சிங்கப்பூருக்கு மாறியது ஏன்?: இந்த உலகத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளதை 2022 இல் நியூஸ் 7 தமிழ் முதலாவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது[1] என்று பிப்ரவரி 2023ல் செய்தி வெளியிட்டாலும், இச்செய்தி ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன்னரே தினமலரில் வெளிவந்து விட்டது[2]. அதாவது, இதைப் பற்றி அத்தனை பரபாரப்பு, தாக்கம் ஏற்படுத்த வேண்டும் போன்ற முயற்சிகளும் நடந்து கொன்டிருக்கின்றன. சென்னை-உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18 வரை, சிங்கப்பூரில் நடக்க உள்ளது[3]. மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது[4]. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஶ்ரீ மாரிமுத்து சென்னையில் நேரில் சந்தித்து மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்[5]. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது[6]. ஆக மலேசியவில் நடத்தப் படுவது உறுதியானது என்று தெரிகிறது. பிறகு, மறுபடியும் அது சிங்கப்பூருக்கு ஏன் மாறியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

அரசியலா, ஆதரவா, சித்தாந்தமாநடப்பது என்ன?: அரசியல் அல்லது அரசு நிறுவனங்களின் ஆதரவில் நடைபெற்ற கடந்த சில மாநாடுகளைப் போலன்றி, இந்த மாநாட்டை ‘மில்லேனியல் தமிழ்’ அமைப்பும் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமுமே நடத்தும் என்று திரு பொன்னவைக்கோ கூறினார். இம்மாநாட்டின் ஆய்வுக்குழு ஆலோசகராகவும் ஏற்பாட்டுக்குழு உதவியாளராகவும் உள்ள முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, ஆய்வு நோக்கில் அமைந்த கட்டுரைகளே தேர்வுசெய்யப்படுகின்றன என்றும் இளையர்களுக்கான அங்கங்களும் இம்மாநாட்டில் இடம்பெறும் என்றும் சொன்னார்.இந்நிலையில், இத்தகைய ஆய்வு மாநாட்டைத் தமிழ் அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒத்த நோக்குடன் ஒரே இடத்தில் நடத்துவதே சிறப்பு என்று சிங்கப்பூர் பெருமக்கள் கருதுகிறார்கள்.சிங்கப்பூரில் அரசாங்கம், தமிழ்ப் பட்டக்கல்வி பயிற்றுவிக்கும் இரண்டு பல்கலைக்கழகங்கள், கிட்டத்தட்ட 40 தமிழ் அமைப்புகள், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் துணையும் ஆதரவும் இல்லாமல் சிங்கப்பூரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த முடியாது[7]. நாளடைவில் ஒரு திருவிழாவாக மாறி, அதன் உச்சமாக தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து போட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது தமிழ்மொழியின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும் என்று சிங்கப்பூரின் கல்வியாளர்கள், தமிழ் செயல்பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்தனர்[8]. தமிழ்… இந்த மூன்றெழுத்து இல்லாமல் நாம் இல்லை. அந்த மூன்று எழுத்து இல்லாமல் தமிழக அரசியலே இல்லை. அந்த அளவுக்கு பாமரனில் இருந்து பார்லிமென்ட் வரை மொழி உணர்வின் தாக்கம் ஏதோ ஒருவிதத்தில் இன்றும் இருந்து கொண்டுதான் வருகிறது[9]. அதன் தாக்கத்தின் எதிரொலிப்பாகத்தான் 300க்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்களை எதிர்த்து “தமிழ் வாழ்க” என்று நாடாளுமன்றத்தில் நம்மால் குரல் கொடுக்க முடிந்திருக்கிறது[10]

தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?: தமிழறிஞர்களுக்குள் புதுப்புது சச்சரவுகள் கிளம்புவதால், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[11]. அமெரிக்காவின் சிகாகோ நகரில், 2019 ஜன., 29 முதல் பிப்., 1 வரை, பத்தாவது உலகத்தமிழ் மாநாடு, டத்தோ மாரிமுத்து தலைமையில் நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளில், அடுத்த மாநாட்டை, 2023 ஜூலையில், ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் சார்ஜாவில், பொன்ன வைக்கோ தலைமையில் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து, பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் தமிழ் மொழி, இலக்கணம், கலை, பண்பாடு, கணினி உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சார்ஜாவுக்குப் பதில், மலேஷியாவில் நடத்தப் போவதாக, டத்தோ மாரிமுத்து உள்ளிட்டோர் அறிவித்து உள்ளனர். இதை ஏற்காத பொன்னவைக்கோ தலைமையிலான அணியினர், சிங்கப்பூரில் நடத்தப் போவதாக அறிவித்து கட்டுரைகள் பெறுகின்றனர். மாநாடு நடத்துவோர், இரண்டு குழுக்களாக இருப்பது தெரியாத ஆய்வாளர்கள், இரண்டு குழுவிடமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டுரைகளை அனுப்பி உள்ளனர்[12]. இதுகுறித்து, தமிழறிஞர்கள் கூறியதாவது: பல நாடுகளில் உள்ள தமிழர்களை உணர்வால் இணைத்து, உயர்த்துவதற்காகத் தான், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழறிஞர்களுக்குள் ஒற்றுமை இல்லை. கட்சி சார்ந்தும், ஆட்சி சார்ந்தும் முடிவெடுக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிட்டதை, அப்போதைய உலகத் தமிழாராய்ச்சி மன்ற பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. இதனால் தான், அவர் ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ என, கோவையில் நடத்தினார்.

ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில் குளறுபடிகள்: சென்ற ஆண்டிலிருந்து சார்ஜா, மலேசியா என்று அறிவித்துக் கொண்டு, பல்லாயிரக் கணக்கில் ஆய்வுக்கட்டுரைகள் பெறப் பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவித்துப் பெற்றதால், அவை பல இடங்களில் பதிவாகி உள்ளன.  இருப்பினும் ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில், பலநிலைகளில் குளறுபடிகள் நடந்துள்ளன. முதலில் சிறந்த கட்டுரையாளர்களுக்கு சிங்கப்பூர் சென்றுவர இலவசம் என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால், பல்கலைக்கழகங்களிருந்து ஆராய்ச்சியாளர்கள் மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகளை அனுப்பியுள்ளனர். முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, இப்பொழுது நிராகரிக்கப் பட்டுள்ளது. அதாவது “பார்வையாளர்களாக” வந்து கொள்ளல்லாம் என்று நிராகரிப்பு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால், அத்தகைய மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகள் மற்றவர்கள் உபயோகப் படுத்துவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது மாநாடு நடத்துவதில் இம்மோசடி பெருமளவில் நடக்கின்றது, மாணவி-மாணவியர்களுக்கு அக்கட்டுரைகள் விற்கப் படுகின்றன. இதனால், “பிளேஜியாரிஸம்” என்ற ஞானத் திருட்டு, விசயக் கொள்ளை, படிப்புத் திருட்டு அதிகமாகி வருகிறது. ஆகவே, இத்தகையோர் அவ்வாறான மோசடிகள் நடக்காது என்று வாக்குறுதி கொடுக்கவேண்டும்.

நிதிபெறுதலும், செலவழித்தலும், தமிழ் வளர்த்தலும்: இதுபோல், பல முரண்பாடுகள் நீடித்த நிலையில், தற்போது, பல கூறுகளாக அறிஞர்கள் பிரிந்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்த மாநாட்டை, மத்திய அரசின் கீழ் செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் இருக்கைகள் அமைந்துள்ள உலகப் பல்கலைகள், தமிழ் பல்கலை உள்ளிட்ட, தமிழக அரசு நிறுவனங்கள் இணைந்து நடத்த வேண்டும். அப்போது தான், அயல்நாடுகளில் மாநாடு நடத்துவதற்கான அனுமதியும், நிதியும் கிடைக்கும். மேலும், தமிழ் இருக்கைகள், தமிழ் பல்கலை, செம்மொழி நிறுவனத்தில் பல ஆய்வாளர்கள் உள்ளதால், உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதும் எளிதாக இருக்கும். இந்தாண்டு, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸாமில் உள்ள கவுஹாத்தி பல்கலையில் மாநாட்டை நடத்தலாம். இதனால், அங்குள்ள தமிழ்த் துறையும் வளரும். இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தமிழறிஞர்களுடன் பேசி, புதிய அமைப்பை ஏற்படுத்தி, மாநாட்டுக்கான பணிகளைத் துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினமலர், உலக தமிழாராய்ச்சி மாநாடு 2023ல் சிங்கப்பூரில் நடக்கிறது, மாற்றம் செய்த நாள்: செப் 25,2022 03:01; https://m.dinamalar.com/detail.php?id=3130639

[2] https://m.dinamalar.com/detail.php?id=3130639

[3] தினபூமி, மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு சனிக்கிழமை, 4 மார்ச் 2023

[4] https://www.thinaboomi.com/2023/03/04/194601.html

[5] கல்கி, உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற உள்ளது!, கல்கி டெஸ்க், Published on : 22 Feb, 2023, 7:22 pm

[6] https://kalkionline.com/news/world/the-world-tamil-conference-will-be-held-in-malaysia-in-july

[7] தமிழ்.முரசு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: சிறந்த கல்வியாளர்கள் சேர்ந்து நடத்துவதே சிறப்பு, லதா 31 Oct 2022 13:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Oct 2022 15:42

[8] https://www.tamilmurasu.com.sg/singapore/story20221031-98833

[9] நக்கீரன், உலகத் தமிழ் மாநாடுகளும்அது கடந்து வந்த பாதையும்..., சுதாகர், Published on 05/07/2019 (12:12) | Edited on 05/07/2019 (12:43).

[10] https://www.nakkheeran.in/special-articles/special-article/10th-world-tamil-conference

[11] தினமலர், தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?, – நமது நிருபர் –பதிவு செய்த நாள்: ஏப் 05,2023 06:57; https://m.dinamalar.com/detail.php?id=3285547

[12] https://m.dinamalar.com/detail.php?id=3285547

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, முதலியன:தமிழ்-தமிழ் என்று பேசிக் கொண்டும், தமிழைக் காப்பேன் என்று அரற்றிக் கொண்டும், தமிழ் எங்கள் உயிர், தமிழின் உயிர், உயிரின் மூச்சு, மூச்சின் உச்சம் என்றெல்லாமும் கத்திக் கொண்டும் காசிருந்தால் மேடைப் போட்டு, புத்தகம் போட்டு, விழா நடத்தி, காலம் தள்ளிக் கொண்டே இருக்கலாம். திக-திமுக மற்ற திராவிட வகையெறாக்களில் இதைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம், பாடமும் படிக்கலாம். ஏதாவது விமர்சனம் செய்தால், “தமிழின் எதிரி, தமிழர்களின் துரோகி, தமிழனத்தின் கோடாரிக் காம்பு,” போன்ற வசைகளும் எழும். இப்படியாக உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று பல சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள், கூட்டங்கள், குழுக்கள் கிளம்பியுள்ளனர்.

  • உலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,
  • அனைத்துலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழர் மாநாடு,
  • உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு,
  • இன்னும் பல இருக்கின்றன……

பிறகு திருக்குறளை வைத்து ஏகப்பட்ட கூட்டங்கள் கிளம்பி விட்டன. இவற்றில் 90% ஊரைச் சுற்றிப் பார்க்கும் கூட்டம் தான். மூன்று முதல் ஐந்து-ஆறு நாட்கள் இருக்க இடம், மூன்று வேளை சாப்பாடு கட்டாயம் கிடைக்கும் என்ற போர்வையில் தான் சுற்றுலா திட்டம் போடப் பட்டு, ஆட்கள் கூட்டம் சேருகிறது. இதில் பல நிலைகளில் பலர் வியாபாரமும் செய்து, பணம் சம்பாதிக்கின்றனர். விசா, விமான டிக்கெட் வாங்குவது, உள்ளூர் சுற்றிப் பார்ப்பது என்று பலவழிகளில் வியாபாரம் நடந்து வருகிறது. ஏனெனில் ஏஜென்டுகளுக்கு, ஏஜென்டாக செயல்படுகிறவர்களுக்கு எல்ல நிலைகளிலும் கமிஷன் கிடைக்கிறது. இப்படி மாநாடுகள் நடத்துகிறவர்கள் அல்லது சம்பந்தப் படுபவர்கள் சுற்றுலா ஏஜென்டாகவே மாறி வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார்.

மாநாடுகள் சுற்றுலாவுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வியாபாரமாகின்றது: ஹோட்டலில் தங்கி, குளித்து சாப்பிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவர். மதியம் உணவுக்கு வந்து விடுவர். தூரமாக இருப்பின், இரவு உணவுக்குக் கட்டாயம் வந்து விடுவர். அந்த ஏஜென்டே எல்லாம் செய்து விடுவார். ஆக, தமிழுக்காக, மாநாட்டில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்பவர் 10 பேர் கூட் இருக்க மாட்டார்கள். இதில் என்ன வேடிக்கை அல்லது வருத்தப் படவேண்டிய விசயம் என்றால், அத்தகைய, முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்தால், அவற்றை ஒதுக்கி விடுவர். பிறகு, அவற்றை காப்பி அடிக்காமல் இருந்தால் சரி. ப்பொழுதெல்லாம், இதற்கும் “எதிக்ஸ்” என்றெல்லாம் பேசப் படுகிறது. ஆனால், அதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் ஆயிரகணக்கில் மின்னஞ்சல்களில் பெறப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சேகரிப்பவர்கள் என்ன செய்கிறார்கள், செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒழுங்காக, ஒழுக்கமாக, ஆராய்ச்சி தர்மத்தைப் பின்பற்றுவார்களா, இல்லை, ஜாலியாக-தாராளமாக “கட்-அன்ட்-பேஸ்ட்” அல்லது “காபி-அன்ட்-பேஸ்ட்” செய்து பிழைப்பார்களா, வியாபாரம் செய்வர்களா என்பதெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், அவர்கள் தமிழ்-தமிழாராய்ச்சி முதலியவற்றில் என்ன-எதனை சாதித்தார்கள் என்று தெரியவில்லை. மென்பொருளின் சாதனை நடந்துள்ளது, இல்லையென்றா இப்படி தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. இப்பொழுது, அதற்கும் கூகுள் டிரான்ஸ்டேட் வந்து விட்டது. முரட்டுத் தனமான மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.

1966 முதல் 2023 வரை: உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் 2023 நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது. இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், இவை அரசியல் சார்ந்து நடந்ததாகவே அறியப் படுகின்றது. மேலும், “மொழிப்பற்று” போர்வையில், உணர்ச்சிப் பூர்வமான உபன்யாசங்கள், பாஷணங்கள் மற்றும் கதாகாலக்ஷேபங்கள் புரிந்ததும் தெரிகிறது. கல்வி, படிப்பு மற்றும் போதனை போன்றவற்றிற்குப் பதிலாக சித்தாந்த உச்சங்களின் எல்லைகளில் அவை பலியானதும் புரிகின்றது.

மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் ரூபாய் 25 கோடி செலவு: இந்நிலையில், 11ஆவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தால் 1966 முதல் நடத்தப்பட்டு வரும் உலகத் தமிழ் மாநாடு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரிசியசிலும் நடைபெற்றுள்ளது. இந்த உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். சுமார் ரூபாய் 25 கோடி செலவில் நடைபெறவிருந்தது.  இப்பொழுது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மாறியுள்ளது. சரி இவ்வாறு கோடிகளில் செலவு செய்து தமிழுக்கு என்னவாகப் போகிறது? இதுவரை 10 மாநாடுகள் நடந்திருப்பதால் 200 கோடிகளும் செலவாகி இருக்கலாம். ஆனால், கடந்த காலங்களில் தமிழ் புலவர்கள், பண்டிதர்கள் கவிஞர் போன்றோர் செய்ததில் 1% ஆவது தமிழுக்கு சேவை செய்திருப்பார்களா? அல்லது அவ்வாறு செய்தேன் என்பதற்கு எதையாவது காண்பிர்ப்பார்களா?

சார்ஜாவிலிருந்து மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரை: இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் 2023 ஜூலையில் நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது[1]. இணைதள குழுக்களில் அதிகமாகவே பேச-பகிரப் பட்டன. இதற்கான மாநாட்டு விவரங்கள் அடங்கிய அழைப்பிதழ், அமைப்புகள், அமர்வுகள், அதற்கான அறிக்கைகள் எல்லாம் தயாராகியது[2]. ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் மின்னஞ்சல்கள் மூலம் ஏற்கப்பட்டன. சென்னையில் ரு நிறுவனம், இதே போல பலருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து, ஆய்வுக்கட்டுரை ஏற்க பணம் கட்ட வேண்டும் என்று கூட ஆரம்பித்தார். ஆனால், சார்ஜாவில் நடத்த முடியாமல் போனது அல்லது இயலவில்லை அல்லது காரணம் அறிவிக்க முடியவில்லை என்பது அமைதியாகி விட்டது[3]. தயார் செய்யப் பட்ட, அச்சிடப் பட்ட / வெளியான எல்லா ஆவணங்களும் வீணாகின[4]. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களினால் சார்ஜாவுக்கு பதிலாக மலேசியாவில் ஜூலை 21 – 23 வரை மலேயா பல்கலை வளாகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது[5]. இங்கும் “அதிகார பூர்வமான அறிவிப்பு” என்பதனைக் கவனிக்கலாம். ஏற்கனவே மூன்று உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடைபெற்றுள்ளது[6]அப்படியென்றால் ஆன்காவது முறை ஏற்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினகரன், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும், June 7, 2022, 5:25 pm.

[2] https://www.dinakaran.com/11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[3] வீரகேசரி, சார்ஜாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, Published By: VISHNU, 23 JUN, 2022 | 02:41 PM; https://www.virakesari.lk/article/130046

[4] https://www.virakesari.lk/article/130046

[5] தமிழ்.நியூஸ்.7, மலேசியாவில் 11-வது உலகத்தமிழ் மாநாடு; ஜூலை மாதம் நடைபெறுவதாக தகவல், by Yuthi, February 22, 2023 04.78

[6] https://news7tamil.live/11th-world-tamil-conference-in-malaysia-it-is-reported-to-be-held-in-july.html

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, திராவிட மாடல் கல்வித்துறையை அரசியலாக்கி சீர்கெடுக்கிறது! (4)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, திராவிட மாடல் கல்வித்துறையை அரசியலாக்கி சீர்கெடுக்கிறது! (4)

சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் அமர்த்தப் பட்ட ஊழல்: சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி, பேராசிரியர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்[1]. இவ்வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசியர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணிநியமன விதிமுறைகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[2]. ஒவ்வொரு பேராசியரின் ஆவணங்களும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் பணிநியமன ஆணைகள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதா எனவும், விருப்பத்தின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும்  நீதிபதி சுப்ரமணியம் தெரிவித்தார்[3]. ‘வகுப்பில் மாணவர்கள் பேராசிரியர்களை மதிப்பதில்லை எனும் பொது குற்றச்சாட்டு நிலவி வருகிறது. பேராசிரியர்களுக்கு தகுதியில்லை என்றால், அவர்களால் முறையாக வகுப்புகளை நடத்த முடியாது. அப்படியிருந்தால் அவர்களை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?’ என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கொரோனா காலத்தில் தொடரும் ஊழல்கள்: பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட தொலைதூர கல்வி மைய மாணவர்களுக்கு மே 15-ந் தேதி 2019 (இன்னும் இரண்டுநாட்கள்தான் உள்ளன) தேர்வுகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழும்பியிருக்கிறது[4]. இதற்குப் பின்னணியை ஆராய்ந்தபோதுதான் துணைவேந்தரின் புத்தக பிரிண்டிங் ஊழலும் அம்பலமாகிறது[5]. புத்தகங்கள் இல்லாமலேயே தேர்வுக்கு படித்து எப்படி தேர்ச்சி பெறமுடியும்? அப்படி தேர்ச்சிபெற்றவர் அரசுப்பணியில் எப்படி நேர்மையுடன் செயல்படுவார்? 2022ல் கேரளா மையங்களில் னினா-விடைத் தாள்கள் மாற்றப் பட்டு, மற்றவர்களை வைத்து எழுதுவிக்கச் செய்து, பாஸ் செய்ய ரூ. 3.5 கோடிகள் பெற்றதாக செய்திகள் வந்தன[6]. அதாவது, கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, ஆ:ள்மாறாட்டம் செய்து, அத்தகைய ஊழல்களை செய்துள்ளனர்[7].

2018 ஊழலை 2022ல் நக்கீரன் கிளறுவது ஏன்?: பாமக ராமதாஸ், வள்ளி ஊழலை தனது  அறிக்கையில் வெளியிய, அதை விகடன், “துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ்” என்று தலைப்பிட்டு வெளியிட்டது[8]. பிறகு, மேலும் விவரங்களை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டப் பிறகு, ஊடகங்கள் அதைப் பறிய செய்திகளை வெளியிட்டன[9]. நக்கீரனில் இப்பொழுது, இந்த விவரத்தை  அதிமுகவுடன் இணைத்து கதையை வெளியிட்டுள்ளது[10]. பழையக் கதையை, இப்பொழுது விவரிக்க முயன்றுள்ளது.  காளிமுத்து, ரவிச்சந்திரன், வள்ளி, சந்தில் பாலாஜி என்று புகைப் படங்களைப் போட்டு விவரிக்கின்றது. ஆனால், 25 பேருக்கும் மேலாக ஊழலில் சிக்கியுள்ள பல்கலை துணைவேந்தர்கள் பற்றியும் இதே மாதிரி கதைகள் எழுதலாமே? கோடிகளுக்கு அதிபதிகள் ஆகி, பல வீடுகள் வாங்கி, வியாபாரங்களில் முதலீடு செய்து ஜாலியாக காலம் தள்ளி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் மட்டும் ஊழல் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் தொடரத்தான் போகிறது. இதில் திராவிடக் கட்சிகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், தெளிவாகவும் செயல்படுகிறார்கள். பழைய-தொடர்ந்து வரும் சிஸ்டம் அப்படியே தான் இருக்கும். வேண்டுமானால், சில மாறுதல்களைச் செய்யலாம்.

மத்திய அரசு மோதல் கல்வித் துறையை சீரழிக்கும்: பெரியார், அண்ணா, கருணாநிதி சொன்னார்கள் என்று பாடங்களில் புகுத்தலாம். திராவிடியன் மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக, முழுமையாக, எல்லாப் பிரச்சினைகளையும் வைத்து, கடந்த 70 வருட திராவிடத்துவ தாக்கத்தை வைத்து, சமூகத்தை ஆராய்ந்தால், குற்றங்கள் தான் பலவிதங்களில் பெருகி வந்துள்ளன, வருகின்றன. கல்வித் துறை சீரழிவுகளே, மாணவ-மாணவியர் ஒழுங்கீன, சமூகவிரோத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது, திகைப்படையச் செய்கிறது. அடிப்பது, கொல்வது என்ற அளவுக்கு வந்து விட்டது. முதலில் இவற்றை சரிசெய்யப் பார்க்காமல், மத்திய அரசு மோதல் என்று வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளினால், எல்லாமே சீரழிந்து விடும். மத்திய அரசு நிதியுதவி, ஆதரவு, முதலியன எல்லா மாநிலங்களையும் இணைந்து வருவது. இந்தியாவில், பாரதத்தில் இந்தியர் ஒன்றாகத்தான் செயல்பட வேண்டும். அவ்வாறுதான் 5000 வருடங்களுக்கும்மேலாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது போல, சில மாநிலங்கள், அரசியல்வாதிகள் ஒற்றுமையில்லாமல் போகும் போது, வெளியிலிருந்து ஆபத்து வருகிறது. அதைத்தான், இந்த திராவிடன் மாடல் எல்லாம் செய்து வருகிறது.

  1. மாமூல், கையூட்டு, கமிஷன், லஞ்சம், கவனிப்பு, வந்து பார்க்கிறேன்…… இவற்றையெல்லாம் ஏன் இந்துத்துவ வாதி எதிர்ப்பதில்லை?
  2. திராவிட கட்சிகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், சரி, இந்துத்துவ வாதிகள், தூய்மை, நியாயம், தர்மம் பேசுபவர்கள் அப்படி இருக்கலாமா?
  3. ஶ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸர், மனத்தளவில் நினைக்கின்ற ஒரு சிறிய அதர்ம சிந்தனைக் கூட பெரிய பாவம் என்கிறார்! பிறகு, ஊழலைக் கொல்ல வேண்டாமோ?
  4. தூய நினைவுகள் தூய்மையாக்குகின்றன, அது உடலையும் கட்டுப் படுத்துகின்றன, அமைதி-ஆரோக்கியம், ஆயுள் கொடுக்கின்றன!
  5. உடல் என்றுமே தனக்கு ஒவ்வாததை வெளியேத் தள்ளி விடுகிறது – தூவாரங்கள் மூலம் அவை நடந்து கொண்டே இருக்கின்றன. ஊழல்கள் அகலுகின்றன!
  6. குடும்பம், சமூகம், ஊர், நகரம், நாடு..முதலியனற்றிலும் இருக்கின்ற ஒவ்வாத ஊழலை, எந்த விதத்தில் இருந்தாலும், நீக்கிவிட வேண்டும்.
  7. நோயாளிகள் சாகிறார்கள், பாலங்கள் விழுகின்றன, மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள், வாகனங்கள் எரிகின்றன இவையெல்லாமும் ஊழல்கள் தான்!
  8. மக்களைப் போலத்தான் ஆள்பவன் இருப்பான் (यथा प्रजा तथा राजा) எனும் போது, யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனஅறிந்து கொள்ளலாம்!
  9. தூய்மை என்று வாயினால் சொன்னால் மட்டும் போதாது, சொல்பவனின் எல்லா துவாரங்களும் தூய்மையாக இருக்க வேண்டும், இல்லை நாறிவிடும்!
  10. அசுத்தங்களில், அக்கிரமங்களில், அதர்மங்களில் அத்வைதம் எடுபடாது, துவைதம், விசிஷ்டாதுவைவதம் என்று தான் செல்ல வேண்டியிருக்கும்!

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2016-17-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது தான் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

[2] மாலைமலர், சட்ட பல்கலைக்கழக ஊழல்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பேராசிரியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு: பிப்ரவரி 02, 2019 13:47 IST

[3] https://www.maalaimalar.com/news/district/2019/02/02134734/1225775/Law-university-scam-HC-asks-staff-to-produce-affidavit.vpf

[4] நக்கீரன், படிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள்! பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்!, மனோசௌந்தர், Published on 13/05/2019 (18:35) | Edited on 13/05/2019 (18:41).

[5] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/16000-students-going-write-examination-without-book-periyar-university

[6] பாலிமர் செய்தி, மதுரை காமராஜர் பல்கலையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க ரூ.3.5 கோடி லஞ்சம் பெற்றதாக புகார், ஆகஸ்ட்.8, 2020, 51:16 மதியம்.

[7] https://www.polimernews.com/dnews/117208

[8] விகடன், துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ், அஸ்வினி.சி, Published:03 Aug 2018 12 PMUpdated:03 Aug 2018 12 PM

[9] https://www.vikatan.com/government-and-politics/politics/132887-ramadoss-about-mother-therasa-university-scam

[10] நக்கீரன், துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம், தோண்டத் தோண்ட ஊழல், மே. 4-6-2022, பக்கம்.30-32.

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக்கழகங்களின் கதை!: இப்படி தலைப்பிட்டு, 2018ல் விகடன் பதிவு செய்துள்ளது[1]. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறது. இன்றைக்குக் கல்வியின் தரத்தைத் தாழ்ந்த தரத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள்[2]. பணம் கொடுத்தால் பட்டம் வாங்கலாம் என்கிற நிலைமை பல்கலைக்கழகங்களில் உண்டு என்பது ஊரறிந்த உண்மையாகப் போய்விட்டது[3]. கல்விதான் இப்படியென்றால் பேராசிரியர்கள் பணியிடங்கள்முதல் துணைவேந்தர் பதவிவரைக்கும் பணம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்த ஊழலுக்கு, ஊனும் உடலுமாக இருப்பவர்கள் உயர்கல்வித் துறை அமைச்சர், கல்லூரிகளின் இயக்குநர்கள், செனட் கமிட்டி துணைவேந்தர்கள் தேர்வுக் குழுவினர். இவை எல்லாவற்றையும்விட ஆளுநர் அலுவலகம் வரைக்கும் லஞ்சம் நீண்டுகொண்டே போகிறது[4]. அந்த அளவுக்குத் தமிழகத்தில், கல்வி பணத்துக்காக விற்கப்படும் பெட்டிக்கடைகள்போல் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் புரோக்கர்களை வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கைது நடவடிக்கைக்குப் பிறகாவது பல்கலைக்கழகங்கள் சுத்தம் செய்யப்படுமா என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது.

சுபாஷ் சந்திரபோஸ் என்பவரின் விவரங்கள்: ஊழல் புகாருக்குள்ளான ஒருவரை துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 29-05-2018 அன்று விடுத்துள்ள அறிக்கையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், புதிய துணைவேந்தராக நியமிப்பதற்காக மூன்று பேரின் பட்டியல் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது[5]. அவர்களில் ஊழல் புகாருக்குள்ளான சுபாஷ் சந்திரபோஸ் துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது[6]. அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறை  பேராசிரியராக பணியாற்றிய அவர், 1998-2001 காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் பணிக்கான ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளான முனைவர் சுபாஷ் சந்திர போஸ் தான் இப்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துனைவேந்தராக நியமிக்கப்படவுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2018-நிலைஊழல் செய்த துணைவேந்தர்கள் கைதாகாமல் பணியில் தொடர்கிறார்கள்: தமிழ்நாட்டில் அதிக ஊழல்கள் நடைபெற்ற முதல் 5 பல்கலைக்கழகங்கள் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகியவை தான். ஜி. ஜேம்ஸ் பிச்சை, முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மற்றும் சி. சுவாமிநாதன், முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன[7]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[8]. பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ஜேம்ஸ் பிச்சை செய்த ஊழல்களும், அதன்மூலம் குவித்த சொத்துகளும் கணக்கிலடங்காதவை[9]. பாரதியார், பெரியார் ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக பணியாற்றிய முனைவர் சுவாமிநாதன் உரிய தகுதி இல்லாமலேயே அந்தப் பதவிகளுக்கு வந்தவர். இரு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர். அதற்காக புதிய, புதிய வழிமுறைகளைக் கண்டறிந்தவர்[10]. இவருடைய ஊழலுக்கு உடந்தையாக இருந்து சிக்கிக் கொண்டதால் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மீது ஏராளமான வழக்குகளை கையூட்டுத் தடுப்புப் பிரிவு பதிவு செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அவரது வீட்டில் மத்திய வருமானவரித்துறை சோதனை நடத்தியது. ஆனாலும், அவர் இன்னும் பணியில் நீடிக்கிறார்.

தகுதியற்றவர்கள் தேர்தெடுக்கப் படுவதற்கு காரணம்பல்கலை ஊழல் பற்றி பாலகுருசாமி (2018)[11]: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது[12], “பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல் என்பது இன்றுநேற்று..நடைபெறும் ஊழல் அல்ல. கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனுவை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கடிதத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணபதி ஒருவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை. நிறைய துணைவேந்தர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. கணபதியின் வழக்கை மையமாகவைத்தே அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யக்கூடிய பல்கலைகழகத் தேர்வுக் கமிட்டியில் நேர்மையான ஆட்களை நியமிக்க வேண்டும்.தேர்வுக் கமிட்டியில்  இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி நேர்மையான துணைவேந்தர்களை அவர்கள்  தேர்வுசெய்வார்கள்?

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] விகடன், அழகப்பா இது அழகாப்பா?” – அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-2, பாலமுருகன். தெ, Published:15 Feb 2018 4 PM; Updated:16 Feb 2018 1 AM.

[2] https://www.vikatan.com/news/education/116515-a-report-on-scam-in-karaikudi-alagappa-university-university-scam-series-part-2

[3] விகடன், “எண்ணியது முடிய காசு வேண்டும்அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-1, குருபிரசாத், Published:08 Feb 2018 1 PM; Updated:08 Feb 2018 4 PM.

[4] https://www.vikatan.com/arts/cartoon/115830-story-about-coimbatore-bharathiar-university

[5] தினமணி, அழகப்பா பல்கலை: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவரை துணைவேந்தராக நியமிப்பதா?, By DIN  |   Published On : 30th May 2018 11:34 AM  |   Last Updated : 30th May 2018 04:08 PM.

[6]https://www.dinamani.com/tamilnadu/2018/may/30/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-2929827.html

[7] Times of India, As corruption cases idle, higher education slips into old, bad ways, TNN / Jul 28, 2019, 10:50 IST

[8] Bharathiar University’s former VCs G James Pitchai and C Swaminathan also have corruption cases pending against them. But, no action has been initiated against them so far.

https://timesofindia.indiatimes.com/city/chennai/as-corruption-cases-idle-higher-edu-slips-into-old-bad-ways/articleshow/70414522.cms

[9] மாலைமலர், ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தர்களை கைது செய்ய வேண்டும்ராமதாஸ், பதிவு: மார்ச் 26, 2018 11:10 ISTமாற்றம்: மார்ச் 26, 2018 11:11 IST

[10] https://www.maalaimalar.com/news/district/2018/03/26111043/1153189/Ramadoss-says-Corruption-scandal-caught-Vice-Chancellor.vpf

[11] விகடன், தகுதி இல்லாதவர்கள் தேர்வு செய்யப்படுவதே ஊழலுக்குக் காரணம்!” – பல்கலைக்கழக ஊழல் குறித்து கல்வியாளர்கள், கா . புவனேஸ்வரி, Published:07 Feb 2018 5 PMUpdated:07 Feb 2018 6 PM.

[12] https://www.vikatan.com/government-and-politics/corruption/115761-educationist-shares-their-concern-over-choosing-vice-chancellors-for-university