Archive for the ‘பெண்ணியம்’ Category

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

ஜூலை 26, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

3-R, RRR, பற்றி மலேசிய முதல்வர் உறுதியாக இருக்கிறார்: மலேசிய பிரதமர் [3-R, RRR, Religion, Race, Royalty] விசயங்களில் யாரும் மற்றவர்களை தாழ்வாகப் பேசக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார், அதை பலமுறை எடுத்தும் காட்டியுள்ளார். ஆகையால், துவேசப் பேச்சுகளுக்கு மலேசியாவில் இடமில்லை. அந்நிலையில், நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று இதுவரை பேசி வந்தவர்களுக்கு இனி மலேசியாவில் அவ்வாறு பேச முடியாத நிலை உருவாகியிருக்கிறது. மொழி என்று வைத்துக் கொண்டாலும், அதை வைத்து முன்னேற வழிவகுக்க வேண்டுமேயன்றி, மொழிவெறியாக்கி, அதனை மதம், சித்தாந்தம், அரசியல் இவற்றுடன் சேர்த்து பிரச்சினை உண்டாக்கலாகாது. என்ன வேண்டுமானாலும்பேசி, நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்தாக வேண்டும். இதனால், அத்தகைய சித்தாந்திகள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

அரசியல்வாதிகள் பிஜேபி-எதிர்ப்பை இந்துதுவேசமாக மாற்றுவது: தமிழகத்தை சேர்ந்த பாஜக எதிர்ப்பு நிலை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் தற்போது பெரும் சிக்கலை இந்தியாவில் எதிர்கொள்வது மட்டுமல்ல உலக தமிழர்கள் இடையேயும் எதிர்கொண்டு இருப்பது பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு பெரும்பாலான நிலைகளில் இந்துவிரோதமாகி, இந்து துவேசமாகி, வெறுப்புப் பேச்ச்களில் முகின்றன. இங்குதான் சட்டமீறல்களும் வருகின்றன. புகார்கள் கொடுக்கப் பட்டு வழக்குகள் பதிவான்றன.ஆனால், தங்களது அரசியல் ஆதிக்கம் மூலம், அப்படியே அமுக்கப் பட்டு, தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், இப்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. செக்யூலரிஸ அரசாங்கம் எனும்பொழுது, அவ்வாறு ஏன் இந்துமதத்திற்கு மட்டும் விரோதமாக பேசி வருகிறார்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தொடர்ச்சியாக வீரமணி, திண்டுக்கல் லியோனி அவரை தொடர்ந்து திருமாவளவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவேளையில் மலேஷிய தமிழர்கள் இடையே எதிர்ப்பை சந்தித்து இருப்பது அதன் பின்னணியில் என்ன என்ற தகவல்தான் தற்போது ஒட்டுமொத்த திராவிட ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

2019ல் திக- வீரமணி நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது: 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24 -ம் தேதி திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் மலேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது அப்போது தொடர்ச்சியாக இந்து மதத்தை விமர்சனம் செய்யும் வீரமணி மலேஷியாவில் கால் வைக்க கூடாது எனவும், அப்படி வைத்தால் மத மோதல் உண்டாகும் எந்த மதத்தையும் தவறாக பேசாத மலேஷிய மக்கள் வாழும் இடத்தில் வீரமணி வந்தால் ஒற்றுமை குறையும் என மலேசியா உள்துறை அமைச்சகத்தில் இந்து தர்ம சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட உடனடியாக வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை திராவிட சித்தாந்தம் பேசுவோருக்கு உண்டாக்கியது, இதையடுத்து மலேஷியா சென்ற திண்டுக்கல் லியோனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்ட நேரத்தை கடந்து உள்ளே வர  அவரை வாசலில் நிற்க வைத்து மலேஷியா தமிழர்கள் வெளுத்து வாங்கினர், தமிழ்நாட்டில் இருந்து வாய் கிழிய ஊருக்கு மேடை மேடையில் நின்று கொண்டு உபதேசம் செய்வது ஆனால் நேரில் பார்த்தால் உங்கள் லட்சணம் தெரிகிறது? குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் எதற்கு மலேஷியா வருகிறீர்கள் என வெளுத்து வாங்கினர்[1]. அந்த வீடியோ இணையத்தில் TNNEWS24 வெளியிட பெரும் பரபரப்பு தமிழகத்தில் உண்டானது இதையடுத்து திண்டுக்கல் லியோனி விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது தமிழக அரசியல் சூழல்[2].

2023ல் திருமாவின் பேச்சிற்கு பலத்த எதிர்ப்பு: இந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கம் ஓய்வதற்குள் சில நாட்கள் முன்னர் திருமாவளவன் மலேஷியாவில் பேச சென்று கடும் எதிர்ப்பை சந்தித்து வந்து இருக்கிறார் அதிலும் மதம் குறித்து திருமாவளவன் பேச நிறுத்துடா என கிளம்பிய எதிர்ப்பு பெரும் பின்னடைவை திருமாவளவனுக்கு கொடுத்து இருக்கிறது. திருமாவளவன் மேடையில் பேசும் போது “தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம்.” என்றார். “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்றும் அவர் கூறினார். அப்போது மதம் குறித்து திருமாவளவன் பேசியதற்கு அரங்கில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மேடையில் இருந்து பாதியில் கிளம்பினார் திருமாவளவன்.

திருமாவின் சனாதனம் புரிதல் தவறானது: அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தனது வீடியோ பேட்டியில், அருமையாக திருமாவளவனின் பேச்சைக் கண்டித்து விளக்கம் கொடுதுள்ளார். “அவருடைய கருத்தே தவறானது. வெறுப்பு பிரச்சாரம் கூடாது என்பது ஏற்கத்தக்கது. ஆனால் அதே வெறுப்புப் பேச்சை, கடல்கடந்து வந்து ஒருமதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய அரசியல்-கட்சி சித்தாந்தத்தை தமிழாராய்ச்சி மாநாட்டில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சனாதனம் என்றால் அவருக்குப் புரியவில்லை என்பது தான் எனது கருத்து. சனாதனம் என்பது நாங்கள் புரிந்து கொண்டது அனைவரும் சமம். அனைவருக்கும் பொதுவானது இப்பூமி.., எல்லோரும் இறைவனின் குழந்தைகள் தான். எல்லோரும் ஒரு தருமம், அறத்தின் அடிப்படையில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான்  நாங்கள் புரிந்து கொண்ட சனாதனம். நாங்கள் புரிந்து கொண்ட இந்து சமயம். பக்தி மார்க்கத்துடன் நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் இங்கு வந்து ஒரு தவறான கருத்தை, தவறான இடத்தில், தவறான நோக்கத்தில் முன்வைத்ததை நாங்கள் ஏற்கமுடியாது. அதற்கு இங்கு மலேசியாவிலேயே பெருங்கண்டனம் உருவாகியுள்ளது. அவர் தமிழ்நாட்டில் என்ன அரசியலையும் செய்து கொள்ளட்டும், ஆனால், இங்கு இனிமேல் வந்தால் அத்தகைய வெறுப்பு அரசியல் உமிழவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்….பாலியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள் அங்கெல்லாம் ஜாதியம் இல்லை. இந்தியாவில் அரசியல்வாதிகளால் தான் அது ஊக்குவிக்கப் படுகிறது. எனவே இந்திய அரசியலை இங்கே கொண்டு வரவேண்டாம் என்று விளக்கினார்.  மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லோருமே ஒன்றாக, ஒரே குடும்பம் போல, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றாம். இங்கு [தமிழக] அரசியல் மற்றும் மதம் ரீதியில் எந்த பிரசினையும் தேவையில்லை. அது அவருடைய கருத்தாக இருக்கலாம், ஆனால், எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு அவர் [ஒரு மதத்திற்கு எதிராகப்] பேசியிருக்கக் கூடாது.

முனைவர் ராஜேந்திரனின் விளக்கம்: இதே போல முனைவர் ராஜேந்திரனும் அருமையான விளக்கம் அளித்துள்ளார்[3]. “ஒரு நாட்டுக்கு செல்லும்போது அந்நாட்டின் பாரம்பரியம் என்ன, அங்குள்ள சிக்கல்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது தான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது. இந்த மாநாட்டில் பேசிய, 99.99 சதவீத வெளிநாட்டவர்கள் அதை கடைபிடித்தனர். ஆனால், ஒரு சிலர் மதத்தை தாழ்த்தி பேசுகின்றனர். மலேஷியாவை சேர்ந்த ஒருவர், எங்கள் மதத்தை பற்றி இழிவுபடுத்தி பேசுகின்றனர் என, காவல்துறையில் புகார் அளித்திருந்தால், அப்படி பேசியவர்கள் வீடு திரும்பியிருக்க முடியாது. மலேஷிய சிறையில் தான் இருந்திருக்க வேண்டும். மலேஷியாவில் மதம், நாடு, இனம் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு, இம்மியளவும் இடம் கொடுக்க மாட்டோம் என, பிரதமர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நண்பர்கள் அங்கே உள்ள அரசியல் குப்பைகளை வந்து இங்கே கொட்ட வேண்டாம். அனைவருக்கும் பொதுவான தமிழை எப்படி மேம்படுத்துவது பற்றி மட்டுமே பேச வேண்டும். மாறாக அரசியல், மதம் பற்றி பேசினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்,” இவ்வாறு அவர் பேசினார்[4].

அரசியல் தவித்திருந்தால் மாநாடு நன்றாக இருந்திருக்கும்: அன்று அரங்கத்தில் இருந்தவர்களுள் யாரும் புகார் அளிக்கவில்லை, அப்படி புகார் செய்திருந்தால், அவர்கள், [திருமாவளவன்] வீடு திரும்பியிருக்க முடியாது,…சிறையில் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் எடுத்துக் காட்டினார். மூன்று 3 R-களைத் தொடவே கூடாது, பிரதமர் இதன் மீது கைவைத்தால், இம்மி அளவு கூட இடம் கொடுக்க மாட்டேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார், நேற்றும் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இருந்த நண்பர்கள் பெரிய ஆட்களாக இருக்கலாம், பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால், அங்கிருந்து வந்து குப்பைகளை இங்கு கொட்டவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இங்கு தமிழை எவ்வாறு உயர்த்தலாம், பெரிய அளவில் எடுத்துச் செல்லலாம் என்பது பற்றி பேச வேண்டும். அதை விடுத்து அரசியல் பேசுவது அந்த அளவுக்கு பொருத்தமாக இருக்காது.. இப்படி தொடர்ச்சியாக மலேஷியா தமிழர்கள் இந்து மதம் குறித்து நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சனம் செய்யும் நபர்களை சுளுக்கு எடுத்து அனுப்புவதால் அவர்கள் “குட்டி மோடி ரசிகராக மாறி விட்டார்கள்” என்று TNNEWS24 குறிப்பிட்டாலும், அங்கிருப்பவர்களுக்கும் இந்து என்ற உணர்வு இருக்கத்தான் செய்யும். போதாத குறைக்கு இலங்கை தமிழர்களும் மோடிக்கு ஆதரவாக பேச தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் இருந்து இனி மலேஷியா பயணமே வேண்டாம் என முக்கிய அமைச்சரான இளம் வாரிசு தொடங்கி பலரும் முடிவு செய்து விட்டார்களாம் என்று TNNEWS24 கூறுகிறது.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] மலேசியா, மலேசியாவா வேண்டவே வேண்டாம் சாமி தெறித்து ஓடும் முக்கிய அமைச்சர்கள்…!, BY WEB TEAM,  JULY 25, 2023.

[2] https://www.tnnews24air.com/posts/Malaysia-dont-ask-for-Sami–important-latest-tamil-current-update

[3] தினமலர், தமிழக அரசியல் குப்பையை மலேஷியாவில் கொட்ட வேண்டாம் திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, மாற்றம் செய்த நாள்: ஜூலை 26,2023 05:48

,https://m.dinamalar.com/detail.php?id=3386470

[4] https://m.dinamalar.com/detail.php?id=3386470

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

உலகம் முழுவதும் பரவியஉலகத் தமிழ் மாநாடுபிரச்சினை: 21-07-2023 அன்று தொடங்கும் 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டுக்  குழுக் கூட்டம், மஇகா துணைத் தலைவர் எம். சரவணனுக்கு முதலில் அந்த நிகழ்வில் பேச இடமளிக்கப்படாததால், கிட்டத்தட்ட அடிதடியில் முடிந்தது[1]. Pakatan Harapan-MIC meeting என்பதே அரசியல் கூட்டணி என்று தெரிகிறது. பிரதமர் அன்வார் இப்ராகிமின் முக்கிய உரையைத் தொடர்ந்து சர்வதேச மாநாட்டில் அமைச்சர் மட்டுமே உரையாற்றுவார் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், சரவணனுக்கு ஏன் இடம் கொடுக்கக் கூடாது என்ற வாதம் எழுந்தது. அதனால் அப்பிரச்சினை ஏற்பட்டது[2]. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சிவகுமார் [Sivakumar Varatharaju Naidu] IATRன் தலைவராக நியமிக்கப் பட்டதற்கும் எதிர்ப்பு மொழிரீதியில் என்றும் வெளிப்பட்டது[3].  அதாவது அவர் தெலுங்கர், தமிழர் கிடையாது என்ற வாதம் வைக்கப் பட்டது. தமிழ் வல்லுனர்களுக்கு சிவகுமாரைத் தெரியாது, அவருக்கு தமிழ் இலக்கியம் முதலியனவும் தெரியாது என்றெல்லாம் விமர்சனம் செய்யப் பட்டது[4]. இவ்வகையான மொழிவெறி இக்காலத்திலும் இவர்களிடம் இருப்பது திகைப்பாகவே இருக்கிறது. இந்தியாவில் ந்தியரை, தென்னிந்தியரை ஏன் தமிழரைக் கூடப் பிரித்து வருகின்றனர் என்றால் அயல்நாட்டிலும் அத்தகைய பிரிவினைவாதங்கள் இக்குழுக்கள் வைப்பதை கவனிக்கலாம்.

பல இடங்களை தேசங்களைக் கடத்து வந்த மாநாடு: முன்னரே இம்மாநாடு எங்கு நடத்தப் பட வேண்டும் என்ற பெரிய பிரச்சினையும் இருந்தது. ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்றெல்லாம் விவாதிக்கப் பட்டு, சென்னை என்று நடந்தது[5]. போதாகறைக்கு, சென்னையில் ஜூலை 7 முதல் 9 வரை 11ம் உலகத் தமிழ் மாநாடு என்று நடந்து விட்டது[6]. ஒவ்வொரு நிலையிலும் சச்சரவு, முரண்பாடு, சண்டை, புகார் என்றெல்லாம் எழுந்து அடங்கி விட்டன. நிதி, நிதியுதவி, நிதி பற்றாகுறை என்றெல்லாம் காரணங்கள் குறிப்பிட்டாலும், அதனையும் மீறி எதுவோ செயல்படுவது தெரிந்தது. இருப்பினும், இப்பிரச்சினை கோலாலம்பூருக்கு சென்று அங்கு அரசியலாகவே மாறி விட்டது. அழைப்பிதழ் கொடுக்கும் விசயத்தில் கூட அரசியல் தான், பெரும்பாலான அழைக்கப் பட்டவர்கள் திக-திமுகவினர் தான். அவர்களது இணைதள போட்டோக்களே சான்றாக உள்ளன.  அரசியல் பிரச்சினை பெரிதாக்க வேண்டாம் என்ற ரீதியில் தான் தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வராமல், பிரதிநிதிகள் போல மற்றவர்களை அனுப்பியுள்ளனர். ஸ்டாலின் முதல் எடப்பாடி வரை வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர். அதிமுக சார்பில் வைகை செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதே போல வந்தவர்கள் மேடையில் பேசினர்.

தமிழ் என்று சொல்லிக் கொண்டே பிரிவினைவாதம் வளர்த்து சண்டைப்போட்டுக் கொள்ளும் கூட்டங்கள்: மொத்தத்தில், “தமிழர்” என்று சொல்லிக் கொள்வதில், அடையாளம் காணுவதில், இப்பொழுது, சில சித்தாந்திகள் எழுப்பும் பிரச்சினையான யார் திராவிடன், யார் தமிழன் போன்ற அர்த்தமில்லாத விசயங்களை இதிலும் நுழைப்பது போலிருக்கிறது. தமிழன் – திராவிடன் அடையாளங்களைத் தாண்டி அப்படி என்ன வேலை செய்கிறது என்பது ரகசியமாகத் தான் உள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில், “தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் கிடையாது,” என்று பேச ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், தமிழன் என்பதற்கு என்ன தகுதிகளை, சரத்துகளை வைப்பார்கள் என்று தெரியவில்லை. சென்னை மாநாட்டிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், சிலர் இரண்டிலும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்-தமிழ் தேசிய, தமிழ் இன, தமிழின தேசியவாத, சுயயாட்சி, சுய-உரிமை என்றெல்லாம் ஆந்தைகள் போல இருந்து, பச்சோந்திகளாக பேசி திரிகின்றனர். பிரிவினைவாதத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

21-07-2023 வெள்ளிக்கிழமை முதல் நாள்: கோலாலம்பூர், ஜூலை 21- மலேசியாவில் இன்று (21.7.2023) 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய நட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், மாநாட்டுப் பாடலுடன் கோலாலம்பூரில் எழுச்சியுடன் தொடங்கியது[7]. மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று (21.7.2023) முதல் 3 நாள்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (International Association for Tamil Research) 11ஆம் மாநாடு நடைபெற்றது[8]. ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள் மாநாட்டினை மலேசிய நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் 23-07-2023 அன்று தொடங்கி வைத்தார். பலருக்கு அழைப்பிதழ் பலவிதமாக அனுப்பப் பட்டது[9]. தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பொது நல செயற்பாட்டாளர்கள், கல்லூரி – பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றுகிறார்கள்[10].  முதல் நாளான 21.7.2023 அன்று தொடக்க விழாவில் மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணையக்  காலகட்டத்தில் தமிழ்மொழி என்ற கருப்பொருளை மையமாக வைத்து மாநாடு  நடைபெறுகிறது.

முன் வரிசையில் அல்லது முன்னணியில் அரசியல்வாதிகள்: தொடக்க விழா அரங்கில், அரசியல்வாதிகள் அதிகமாகவே இருந்தனர். அவர்கள், அவர்களாகவே வந்தனரா, வரவழைக்கப் பட்டனரா என்று தெரியவில்லை.

  1. திராவிடர் கழகம் கி.வீரமணி,
  2. தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்,
  3. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,
  4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரன்,
  5. இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மதுக்கூர் இராமலிங்கம்,
  6. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி (சி.பி.எம்.),
  7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன்,
  8. ‘நக்கீரன்’ கோபால்,
  9. தமிழ்த் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன்,
  10. கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் மற்றும்

கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர்.

பொது விவரங்கள்: மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தொடங்கியது. பியர்ல் இன்டர்நேசனல் விடுதியில், தங்கியவர் எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்ட பின்பு, பேருந்துகள் மூலம் அரங்கிற்கு சென்றனர். 9.45 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின – கடவுள் வாழ்த்து, மலேசிய நாட்டுப் பண்,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அடுத்து வரிசையாகச் சொற்பொழிவுகள் அரங்கேறின. மலேசியத் தமிழ் அறிஞர்களும், இந்தியத் தமிழ் அறிஞர்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் வரிசையாகச் சொற்பொழிவு ஆற்றினர். பகல் உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு எல்லாம் அங்கேயே ஏற்பாடு செய்து இருந்தனர். இது ஒரு பங்கேற்றவரின் விவரம். நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் 40 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றிய பிறகு, இன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை, ஆடல், பாடல்கள். 8 மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] Free Malaysia Today, Altercation at PH-MIC meeting over who’ll speak at world Tamil conference, K. Parkaran – 20 Jul 2023, 9:57 pm.

[2] https://www.freemalaysiatoday.com/category/nation/2023/07/20/altercation-at-ph-mic-meeting-over-wholl-speak-at-world-tamil-conference/

[3] Focus – Malaysia, Tamils disappointed as Sivakumar, a Telugu, is appointed International Tamil Conference chairman, By Contributor – Tamil Vaanan, 13/07/2023.

[4] https://focusmalaysia.my/tamils-disappointed-as-sivakumar-a-telugu-is-appointed-international-tamil-conference-chairman/

[5]  இவை பற்றியெல்லாம் எற்கெனவே விவரமாக முந்தைய பிளாக்குகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[6]  இதைப் பற்றியும் விவரமாக எனது முந்தைய பிளாக்குகளில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஊடகங்கள் இவ்விசயங்களில் மௌனமாக இருப்பது தான் ஆச்சரியமாக-திகைப்பாக இருக்கிறது.

[7] நியூஸ்.டி.எம், 11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் தொடங்கியது..!, By: Newstm Admin, Sat, 22 Jul 2023.

[8] https://newstm.in/tamilnadu/11th-world-tamil-conference-begins-in-malaysia/cid11656242.htm

[9] நியூஸ்.லங்காஶ்ரீ, மலேசியாவில் 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: பிரபலங்களுக்கு பறந்த அழைப்பு, Malaysia, Tamil,  By Nandhini..

[10] https://news.lankasri.com/article/11th-world-tamil-research-conference-in-malaysia-1687942005

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? – புதிர்கள், மர்மங்கள் முதலியன விலகுமா? (4)

மே 24, 2023

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? – புதிர்கள், மர்மங்கள் முதலியன விலகுமா? (4)

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை?: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய நாட்களில் 11– ஆவது உலகத்தமிழ் மாநாடு நடக்கவுள்ளது[1]. இதை திராவிடச் சிந்தனையாளர்கள் சீர்குலைக்க முயல்வதாக தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அவியனரசு குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:- “தமிழ்ப் பேரறிஞர் ஈழத்து தனிநாயகம் அடிகளின் சீரிய முயற்சியாலும் சாலை இளந்திரையன் போன்ற தமிழறிஞர்களின் ஒத்துழைப்பாலும்உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்கடந்த காலங்களில் முறையாகத் தமிழ் அறிஞர்களிடம் ஆய்வு கட்டுரைகளைப்  பெற்று, உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்க வைத்து தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வந்தது. அரசியல் கலப்பற்ற அந்நிறுவனத்தைத் சில வேளைகளில் திராவிட கட்சிகள் கையகப்படுத்த எண்ணி அதில் தோல்வி அடைந்தன.

தமிழுக்கு முன்திராவிடம்என்ற பொய்யான கருத்தியலை முன்வைத்தால் தமிழை சிறுமைப் படுத்துவதாகுமா?: அவியனரசு தொடர்ந்து கூறியது, “சென்னையில் நடை பெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரைக் கூட முறையாக அழைக்கவில்லை. அது போல் 1980–இல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது தனித் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அழைக்கப் பெற்றும் அவர் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்ட கசப்பான நிகழ்வுகளும் உண்டு. தமிழறிஞர் என்று திராவிட கட்சியினரால் சொல்லப்படும் சிலர் எப்போதும்தமிழ் பேரறிஞர்களாகதங்களை தாங்களே விளம்பரப் படுத்திகக் கொள்வார்கள். தமிழுக்கு முன்திராவிடம்என்ற பொய்யான கருத்தியலை முன்வைத்து தமிழை சிறுமைப் படுத்துவதே அவர்களின் தொடர்ச்சியான வேலையாக உள்ளது. அவ்வாறான நிகழ்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் உள்ளது அரசியலா?: அவியனரசு தொடர்ந்து கூறியது, “உலகத் தமிழாராச்சி நிறுவனத்தை கைப்பற்ற நினைத்த திராவிட கட்சிகளின் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. இச்சூழலில் எதிர்வரும் ஜூன் 16, 17, 18, 23 ஆகிய நாட்களில், 11–ஆவது உலகத் தமிழ் மாநாட்டை சிங்கப்பூரில் நடத்துவது என உலகத் தமிழாராச்சி நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டது. மாநாட்டில் திராவிட சிந்தனையாளர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்பதை அறிந்து கொண்ட தமிழ்நாட்டிலிருக்கும் திராவிட சிந்தனையாளர்கள் சிலர் 70 ஆண்டுகளாக இயங்கிவரும் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தை பிளந்து, அவர்கள் தாங்களே உலகத் தமிழ்மாநாட்டை தனியாக நடத்தப் போவதாக அறிவித்தனர்.

ஷார்ஜாசிங்கப்பூர்கோலாலம்பூர்: அவியனரசு தொடர்ந்து கூறியது, “முதலில் சிங்கப்பூர் என்றும் பின்னர் சென்னை என்றும் மாநாட்டு இடங்களையும் அறிவித்த நிலையில் இடையில் என்ன நடந்தனவோ தெரியவில்லை மீண்டும் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு தாங்களும் இணைந்து உலகத்தமிழ் மாநாட்டை நடத்த விரும்புவதாக உலகத் தமிழாராச்சி தலைவர் மலேசிய ஐயா. மாரிமுத்துவுக்கு மடல் எழுதினார்கள். இவர்களின் சூது திட்டத்தை அறிந்த உலகத் தமிழாராச்சி நிறுவனத் தலைவர் மலேசிய ஐயா மாரிமுத்து, மீண்டும் அவர்களை மாநாட்டு குழுவில் சேர்க்க முடியாது என மறுத்துவிட்டார். இப்போது உலகத் தமிழாராச்சி நிறுவனம் முற்றிலும் திராவிட கலப்பற்ற தூய தமிழர்களின் முழுகட்டுப்க்பாட்டில் வந்துள்ளது. மாநாட்டு குழுவில் குழப்பங்களைத் தோற்றுவிக்க நினைத்த தமிழ்ப் பகைவர்கள் புறக்ககணிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரத்தால் அரசு நடத்துவதை தமிழர் அறிவர்: அவியனரசு தொடர்ந்து கூறியது, தற்போதைய சூழலில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து வருகின்றனர். தமிழ் அமைப்புகளில் பிறமொழியாளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப் பட்டுவருகின்றனர். திராவிடக்  கட்சிகளின் 56 ஆண்டுக்கால ஆட்சியில், 1956 ஆம் ஆண்டு தமிழ்ஆட்சி மொழிச் சட்டத்தை இன்னமும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை, தமிழ் மொழியைப் பயிற்றுமொழியாக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற  வேண்டுமென்ற தமிழர்களின்க கோரிக்கையை ஏற்க மறுப்பது, உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க இயலாத திராவிடர்களின் கையறு நிலைபோன்ற  பொறுப்பற்ற உண்மையான அக்கறையற்ற போக்கோடு வெறும் ஆரவாரத்தாலும் விளம்பரத்தாலும் மட்டுமே அரசை நடத்தி வருகிற நிலைகளை உலகத் தமிழர்கள் அறிந்தே உள்ளனர்.

சித்தாந்த மோதல் எதில் ஆரம்பம்முடிவு: அவியனரசு தொடர்ந்து கூறியது, 11–ஆவது உலகத் தமிழ்மாநாட்டை மலேசியதலை நகர் கோலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர் நிலத்தையும் மொழியையும் பாதுகாக்கவும் உண்மையான தமிழ் ஆய்வு கட்டுரைகள் மூலம் அடுத்த உலகலாவிய வளர்ச்சிக்குரிய மொழி தமிழ் என்பதை நிறுவிடவும் தமிழராகிய நாம் பலரும், இந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குத் தமிழ்நாட்டில் இருந்து மெய்யான தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், தமிழ்தமிழர்நல இயக்கங்களின் தலைவர்கள் என அனைவரும் பெரும் திரளாக போய் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் வேண்டிக் கொள்கிறேன்,” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறியப் படதோர், உதிரிகள் ஆர்பாட்டம் செய்வது ஏன்?: தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி, அதன் தலைவர் அவியனரசு யாருக்கும் தெரிந்ததாக இல்லை. ப்பொழுது மாலைமுரசு வெளியிட்ட செய்தியிலிருந்து தான் தெரிகிறது. இவரது முகநூலிலிருந்து அறியப் படுவதாவது, இவர் ஒரு இந்திய-தேசியவிரோத கொள்கைக் கொண்ட சித்தாந்தியாகப் புலப்படுகிறது. முன்பு, பாமக போன்றவர் கூட தன்னுரிமை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மாநாடுகள் நடத்தியுள்ளனர்.பிறகு, சட்டரீதியிலான பிரச்சினை புரிந்து அடங்கி விட்டனர். அவ்வப்பொழுது, எங்கிருந்தோ ஆதரவு கிடைக்கிறது என்றால், தமிழ், தமிழ் தேசியம், வடவர், ஆரியர், வந்தேறி என்றெல்லாம் பேசிக் கொண்டு கலந்தள்ளிக் கொண்டிருப்பர். இப்பொழுது, “உலக தமிழ் மாநாட்டவர்” இவ்வாறு நடந்து கொண்டால், அதில் ஆராய்ச்சி, ஆய்வுத் தன்மை, உண்மைத் தன்மை முதலியவை நீர்த்து, குறைந்து, உணர்ச்சிப் பூவமான கூப்பாடுகள், அரைத்த மாவை அறைக்கும் ஆய்வுக் கட்டுரைகள் என்று “கட்-அன்ட்-பேஸ்ட்” வகையறாக்கள் தான் மிஞ்சும். “”அரசியல் கலப்பற்ற நிறுவனம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். நிச்சயமாக அரசியல் கட்சிகளின் ஆட்கள் தான் எல்லா நிறுவனங்களிலும் நியமிக்கப் பட்டுள்ளார்கள், வேலை செய்து வருகிறார்கள். “ரிடையர்ட்” / ஓய்வு பெற்ற பிறகும் வேலை செய்து வருகிறார்கள்.    

தமிழ் பேரறிஞர்களாகதங்களை தாங்களே விளம்பரப் படுத்திகக் கொள்வார்கள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். அதனால் தான் தமிழைக் காப்போம் என்று 1970லிருந்து கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், இன்று வரை ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. மேடைகளில் கத்திக் கொண்டும், மாநாடுகளில் ஜாலியாக மூன்று நாட்கள் காலத்தைக் கழித்தும், கிடைத்த லட்சங்கள்-கோடிகளை செலவழித்து, கமிஷன் அடிப்பதில் போட்டிகளும் நடக்கின்றன. அது இப்பொழுது வெளி வந்து விட்டது. “தமிழ் அமைப்புகளில் பிறமொழியாளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப் பட்டுவருகின்றனர்,” என்பதிலும் போலித்தனம் வெளிப்படுகிறது. இம்மாநாடுகளில் ப்பங்கு கொண்டவர்கள், பதவுகளில் உள்ளவர்களில் நிறைய பேர் தமிழர்களே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். “திராவிட கலப்பற்ற தூய தமிழர்……….” என்றெல்லாம் பேசுவதையும் கவனிக்கலாம். ஒருபக்கம் திராவிட இனம் என்றும், இன்னொருப் பக்கம் தமிழர் இனல் என்றும் உளறிக் கொண்டிருப்பர். இவர்களுக்கு விஞ்ஞான ரீதியில், மொழிவிய்ல், மானுடவியல் போன்றவையும் ஒழுங்காகத் தெரியாது, ஆராய்ச்சி நெறிமுறைகளும் தெரியாது. கூட்டமாக, வெறிபிடித்தது போல, வன்முறைகளுடன் செயல் பட்டுக் கொண்டிருந்தால், நிச்சயமாக மற்றவர் ஒதுங்கி விடுவார்கள். இவர்கள் தான் “குண்டு சட்டியில் குதிரை” ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

23-05-2023.


[1] மாலைமுரசு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய நாட்களில் 11– ஆவது உலகத்தமிழ் மாநாடு, சென்னை, 23-05-2023, பக்கம்.

இலக்குவனின் கடிதம் தொடர்கிறது……………………….

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கைதுக்குப் பிறகு சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியர் கைது – புகார், குற்றங்கள் ஒன்றுதான்!

ஏப்ரல் 21, 2023

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கைதுக்குப் பிறகு சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியர் கைது – புகார், குற்றங்கள் ஒன்றுதான்!

மார்ச் 2023லேயே புகார் கொடுக்கப் பட்டது: மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுரை காமராஜ் பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார்[1]. மதுரை, மாடக்குளத்தைச் சேர்ந்தவர் சி. கருப்பையா, 60 (Madurai Kamaraj University Psychology department head C Karuppaiah); வயது 52 என்றெல்லாம் சில ஊடகங்கள் குறிப்பிடுவது வேடிக்கஈயாக இருக்கிறது. காமராஜ் பல்கலை சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியராக பணிபுரிந்து மார்ச்சில் ஓய்வு பெற்றார்[2]. மனோதத்துவ பேராசிரியர் என்றால், மாணவ-மாணவியருக்கு, இவரால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், திராவிட மாடலில் இவ்வாறு திசைத் திரும்பி, வேலியே பயிரை மெய்ந்த உண்மையாகி விட்டது போலும். கல்வியாண்டு முடியும் 2023 ஜூன் மாதம் வரை, இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது[3]. புகார்கள் உள்ள நபருக்கு அவ்வாறு பதவி நீட்டிப்பு கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. உளவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பல்கலையில் புகார் அளிக்கப்பட்டது[4].

முதலில் கொடுத்த புகார்கள் கண்டுகொள்ளப் படவில்லை: இவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில மாணவியர் புகார் அளித்தனர்[5]. அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துமணி, விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்[6]. காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கருப்பையா மீது மாணவிகள் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்[7]. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் 04-04-2023 அன்று புகார் அளித்தும் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டினர்[8]. இதனிடையே மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து மாணவிகள் புகார் அளித்தனர்[9]. இவ்வாறு பிடிஐ பாணியில் தான், எல்லா ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டே ஆகவேண்டும் என்ற ரீதியில் வெளியிட்டாலும், எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. மிக சமீபத்தைய கலாக்ஷேத்திரா போல பொங்கவில்லை. இதுதான், பத்திரிகா தர்மத்தின் மிகப் பெரிய மர்மமாக இருக்கிறது எனலாம்.

04-04-2023 அன்றும் புகார் கொடுக்கப் பட்டது: இந்தியன் எக்ஸ்பிரஸ் இதைப் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுளளது. அதாவது, அவ்வாறு செய்திகள் வெளிவந்தாலும், இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாகிறது. இதில் அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால், கலாக்ஷேத்திராவிற்கு குதித்தவர்கள், இதை கண்டு கொள்ளவில்லை போலும்! அந்த SFI உதலிய போராளிகளும், வீராதி-வீரர்களும் கண்டுகொள்லவில்லை, கொதித்தெழவில்லை, “நக்கீரனும்” மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் போலிருக்கிறது. அதை காமக்ஷேத்திரம் என்றெல்லாம் வர்ணித்தவர்கள், இங்கு அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் என்றாலோ, பெயர் என்றாலோ, யதுகை-மோனை என்றாலோ, தமிழ்-தமிழ் என்று அரற்றுபவர்களும் நிதர்சனத்தை அறிந்தும் அறியாதவர் போலிருக்கிறார். காமம் கூட ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், ஜாதிக்கு ஜாதி என்று மாறும் போலிருக்கிறது. இருப்பினும் பாதிக்கப் பட்ட மாணவியர், பெண்கள் புகார் கொடுக்கத் தான் செய்கின்றனர்.

10-04-2023 அன்று மறுபடியும் புகார்: கருப்பையா மீது ஒரு மாதமாக பல்கலை நிர்வாகத்திற்கு தொடர்ந்து, ‘ஆன்லைனில்’ புகார்கள் வந்தன. மார்ச் 2023லேயே புகார்கள் எழுந்தன. அதில், ‘மாணவியரிடம் மிக ஆபாசமாக பேசுகிறார்[10]. “ஏய்நீ ரொம்ப அழகா இருக்கஉன் ஜீன்ஸ் பேன்ட் சைஸ் என்ன, ஒல்லியாக இருக்கும் பெண்களை தான் பசங்க விரும்புவாங்க...’ என, தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்துள்ளார்[11]. அத்தகைய ஆதாரங்கள் கூட போதவில்லையா என்று தெரியவில்லை. முதுகலை மாணவி ஒருவருக்கு இ-மெயில் மூலம் ‘செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்துள்ளார். அப்படியென்றால் சைபர் சட்டம், விதிகள் மூலமாகவே இவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த வாரம் 04-04-2023 அன்று புகார் அளித்தனா்[12]. ஆனால், பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை[13]. அதாவது கமிட்டி போட்டாகி விட்டது என்று சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்ளும். ஆனால், இதெல்லாம் தாமதப்படுத்தப் படும் யுக்திகள் என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.

மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்: இதற்கிடையில் புகார் அளித்த மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்[14]. இதுவும் அதே பாணியில் நடந்தது எனலாம். ஊடகங்களும் இதை கண்டுகொள்ளவில்லை. இதிலுள்ள பிரச்சினை, மர்மம், அரசியல் அல்லது என்னது தடுக்கிறது, வித்தியாசமாக செயல்பட வைக்கிறது என்பது தெரியவில்லை. அதை வெளிப்படுத்த தயங்குவதும் புரியவில்லை. ஏனெனில், புகார் வாபஸ் என்றால், எல்லாமே மறைந்து விடுகிறது, அவரும் புனிதர் ஆகி விடுகிறார். ஆனால், பாதிப்பு மாணவியர்களிடம் தான் இருக்கும். பாலியல் புகார்களை விசாரிக்கும் ஐ.சி.சி., கமிட்டி விசாரணை நடத்தியது[15]. இதெல்லாம் விஷகா கமிட்டியின் படி நடப்புதான். பாதிக்கப்பட்ட மாணவி, தென் மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க்கிடம் புகார் அளித்தார். கருப்பையாவை சமயநல்லுார் மகளிர் போலீசார் 19-04-2023 அன்று கைது செய்தனர்.

31-03-2023 அன்று வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா கைதானது: இந்த பல்கலையில் வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா, மார்ச் 31ல் பாலியல் புகாரில் கைதான நிலையில், தற்போது இவர் கைதாகி உள்ளார்[16]. கருப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்[17]. மாணவியை சாதிப்பெயரை வைத்தும், உருவத்தை வைத்தும் கிண்டல் கேலி செய்ததால் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உதவி பேராசிரியர் சண்முகராஜா மாணவியைத் தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியது உண்மை எனத் தெரியவந்தது[18]. அதனைத் தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார், சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளைத் தவறாகப் பேசியதாகக் கூறி, பேராசிரியர் சண்முகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[19]. சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தற்போது மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[20].

© வேதபிரகாஷ்

20-04-2023


[1] தினமலர், மாணவியருக்கு பாலியல் தொல்லை; காமராஜ் பல்கலை பேராசிரியர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 19,2023 05:23

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3297967

[3] தமிழ்.இந்து,  மாணவிகளிடம் தவறாக பேசியதாக மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் கைது, செய்திப்பிரிவு, Published : 19 Apr 2023 06:12 AM; Last Updated : 19 Apr 2023 06:12 AM.

[4] https://www.hindutamil.in/news/crime/977807-madurai-kamaraj-university-professor-arrested.html

[5] தினத்தந்தி, மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை; பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி கைது, ஏப்ரல் 19, 2:14 am.

[6] https://www.dailythanthi.com/News/State/student-sexually-harassed-in-madurai-university-professor-arrested-945905?infinitescroll=1

[7] தினகரன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மதுரை பல்கலை பேராசிரியர் கைது, April 19, 2023, 1:39 am

[8] குமுதம், மதுரை: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைபோலீஸில் வசமாகச் சிக்கிய பேராசிரியர், kumudam | POLITICS| Updated: Apr 19, 2023

[9] https://www.kumudam.com/news/politics/55084

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உன்னோட சைஸ் என்ன? டபுள் மீனிங் பேச்சு.. மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர்.!, First Published Apr 19, 2023, 8:22 AM IST

[11] https://tamil.asianetnews.com/gallery/crime/sexual-harassment-of-female-students-madurai-kamaraj-university-professor-arrested-rtcdbs

[12] Nw Indian Express, Madurai Kamaraj University Psychology HoD held for sexual harassment, Published: 19th April 2023 06:36 AM  |   Last Updated: 19th April 2023 06:36 AM

[13] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/apr/19/madurai-kamaraj-universitypsychology-hod-held-for-sexual-harassment-2567304.html

[14] தினமணி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: காமராஜா் பல்கலை. பேராசிரியா் கைது, By DIN  |   Published On : 19th April 2023 12:00 AM  |   Last Updated : 19th April 2023 12:00 AM.

[15] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/apr/19/sexual-harassment-of-female-students-kamaraj-university-professor-arrested-3993154.html

[16] கூடல்.காம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது!, April 19, 2023

[17] https://koodal.com/news/2023/04/19/madurai-kamaraj-university-psychology-hod-arrested-for-sexual-harassment/

[18] கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாணவிகளிடம் உதவி பேராசிரியர் சண்முகராஜா தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து சண்டுகராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Crime: மாணவிகளுக்கு பாலியல் தொல்லைஅடுத்தடுத்து சிக்கிக் கொள்ளும் பேராசிரியர்கள்!, Suriyakumar Jayabalan, 19 April 2023, 8:29 IST.

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-kamaraj-university-professor-has-been-arrested-for-harassing-college-girls-131681872719405.html

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

ஏப்ரல் 13, 2023

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

 

காதலை முறித்துக் கொள் என்றதை ஒப்புக் கொள்ளாதலால், ஆட்களை வைத்து லக்ஷ்மி பிரியா சிவராமை அடித்தது: இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா, தனது காதலன் அமுல் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாணவனை கடந்த ஏப்ரல் 5ம் தேதி காரில் கடத்தி உள்ளனர். அந்த அளவுக்கு அவள் ரௌடியிசத்திற்கும் இறங்கியிருக்கிறாள். இது, தீய சகவாசமா, வேறு வகையான நட்பா, தொடர்பா என்றெல்லாம் தெரியவில்லை. அதே போல, இவளுடைய பெற்றோர், அவர்கள் இதில் ஏன் கண்டு கொள்லாமல் இருக்கிறார்கள் போன்ற விவரங்களும் தெரியவில்லை. ஒரு ஊடகம், லக்ஷ்மி பிரியாவின் தாயாரும் கைது செய்யப் பட்டிருக்கிறார் என்கிறது[1]. காரில் வைத்து பேசி பார்த்திருக்கிறார்கள் என்பதை விட, மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாணவன் உறுதியாக இருந்ததால், ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியாவின் நண்பர்கள் மாணவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். வழியில், ஆலப்புழாவில் நிறுத்தி, வாலிபரின் தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்திருக்கிறார்கள். இதெல்லாம் காதல், காதல் முறிப்பு, காதல் பிரிப்பு, கட்டப் பஞ்சாயத்து போன்ற காரியங்களையும் மிஞ்சுவதாக இருக்கின்றன. பிறகு, அவர்கள், இத்தகைய வேலைகளை செய்யும் ரௌடிகளாக இருந்திருக்க வேண்டும். பின்னர், மாணவனை எர்ணாகுளம் தம்மனம் அருகே உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த கும்பல் அவரை அங்கேயே கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் மாணவனின் ஆடைகளை அவிழ்த்து, மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்,” என மாணவனின் தந்தை கூறினார்.

 

அவர்கள் காதலர்கள் அல்ல; அவர் ஆபாச வீடியோக்களை அனுப்பினார், மகளைத் துன்புறுத்தினான்: மனோரமா செய்தியிடம் பேசிய லக்ஷ்மிபிரியாவின் தாயார், அந்த இளைஞனுடன் தனது மகளுக்கு தொடர்பு இல்லை என்று கூறினார். “இருவரும் நண்பர்கள். இருப்பினும், பின்னர் அவர் அவளை வாய்மொழியாகத் துன்புறுத்தத் தொடங்கினான், மேலும் அவரது தொலைபேசிக்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பினார். அவர் தனது பிரச்சனையிலிருந்து விடுபட உதவுமாறு தனது நண்பர்களைக் கேட்பது பற்றி என்னிடம் கூறினான்,” என்று லட்சுமிப்ரியாவின் தாயார் கூறினார். மேலும், அந்த இளைஞரை தாக்குவதற்கு லட்சுமிபிரியா எந்த கும்பலையும் நியமிக்கவில்லை என்றார். “இளைஞரை அடித்தது அவளுடைய நண்பர்கள்தான், என் மகள் அல்ல. அவள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டாள். லட்சுமி திறமையான மாணவி. சந்தேகம் இருந்தால் அவளுடைய ஆசிரியர்களிடம் கேட்கலாம்,” என்று அவர் கூறினார். இருப்பினும், இந்த அம்மா எல்லா நிகழ்வுகளுக்காகவும் வருந்துவதைக் காண வேண்டியதில்லை, அதில் அவரது மகள் நிச்சயமாக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். பள்ளியில் ஒரு பையனுடனும், கல்லூரியில் ஒரு பையனுடனும் காதல் விவகாரங்களில் ஈடுபடும் படிப்பைத் தவிர, அவளோ அல்லது அவளது கணவனோ தங்கள் மகளின் செயல்பாடுகள் குறித்து எச்சரித்தார்களா என்பதும் அறியப்படுகிறது. இயற்கையாகவே, ஒவ்வொரு தாயும் தனது மகள் மற்றும் மகனை மட்டுமே பாதுகாப்பார்கள், ஆனால், அவள் ஏன் அவளுடைய நடத்தை, செயல்பாடுகள் மற்றும் காதல் விவகாரங்களை கண்காணிக்கக்கூடாது. அவளுடைய தவறான நடத்தைக்கு எதிராக அவள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அவள் அவளுக்கு அறிவுரை சொல்லலாம், கட்டுப்படுத்தலாம் மற்றும் சரிபார்த்திருக்கலாம்.

 

போலீஸார் லக்ஷ்மி பிரியாவை கைது செய்தது: அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன. ஒரு ஆணின் வீடியோவை வெளியிட்டால் என்னாகும் என்று இனிமேல் தான் யோசிக்க வேண்டியுள்ளது. பெண்ணின் மானம் போகும் என்பது போல, ஒரு இளம் வாலிபனுக்கு என்னாகும் என்று ஆராய வேண்டியள்ளது. இது பற்றி மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார், எர்ணாகுளத்தை சேர்ந்த லட்சுமி பிரியாவின் காதலன் அமலை முதலில் கைது செய்தனர். அதன்பின்னர் லட்சுமி பிரியாவை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது தோழி வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனிடையே மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் லட்சுமி பிரியாவின் நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். லக்ஷ்மி பிரியாவின் தாயார், தன் மகளுக்கும் அந்த பையன் / அமலுக்கும் எந்த உறவு இல்லை என்கிறார்[2]. நண்பர்களாக இருக்கும் பொழுது, சில வீடியோக்களை அனுப்பி மிரட்டி வந்துள்ளான். அவன் சகவாசத்திலிருந்து விலகிச் செல்லவும் அவளின் நண்பர்கள் அறிவுருத்தியுள்ளனர், என்கிறார்[3].

 

‘மகனை விடுவிக்க முக்கிய குற்றவாளி மீட்கும் தொகை கேட்டார்’: தனது மகனை விடுவிக்க லட்சுமிபிரியா பணம் கேட்டதாக இளைஞரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது விவகாரங்களில் மிகவும் ஆபத்தானது. சிறுமியும் அவரது நண்பர்களும் தனது மகனை கொடூரமாக தாக்கியதை அவர் வெளிப்படுத்தினார். பின்னர் அருகில் உள்ள கடையில் இருந்து மதுபானம் வாங்குவதற்காக கொள்ளையர்கள் பணத்தை எடுத்து சென்றனர். தாக்கியவர்களில் ஒருவர் பீர் பாட்டிலை சிவராமின் தலையில் தாக்கினார். காவல்துறை அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதால், மருத்துவர்களின் அறிக்கையிலிருந்து இவை அனைத்தையும் சரிபார்க்க முடியும். அதிர்ச்சியில் துடிக்கும் வகையில் மொபைல் போன் சார்ஜர் வயர்கள் நாக்கில் வைக்கப்பட்டு கொடுமை தொடர்ந்தது. இந்த கொடூர செயல்களை அந்த இளம் கல்லூரி மாணவி ஒப்புக்கொண்டது பொருத்தமற்றது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவருக்கு கஞ்சா கொடுக்க அக்குழு முடிவு செய்தது. பின்னர் லெக்ஷ்மிபிரியா அவரை உடை கழற்றி வீடியோ எடுக்கும்படி குழுவை வற்புறுத்தினார். இதுவும் விவரிக்க முடியாதது, ஏன் இது போன்ற வீடியோ தேவை என்று தெரியவில்லை. இருவரும் உறவுமுறையில் இல்லை என்றும் அவர் கூறினார். காருக்குள் வைத்து அடித்து உதைத்தனர்.அவரது ரூ.20,000/- மதிப்புள்ள தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம் மற்றும் ரூ.5,000/- பணத்தைக் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு திருடிச் சென்றனர். அங்கிருந்து பழைய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீண்டும் தாக்கப்பட்டார், இந்த முறை, அவர்கள் அவரை தாக்குவதற்கு கனமான தடியைப் பயன்படுத்தி அவரை தாக்கினர் மற்றும் மின்சார அதிர்ச்சியையும் கொடுத்தனர். அந்த சித்திரவதையின் வீடியோ அவர்களிடம் உள்ளது. இந்த கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து என் மகன் இன்னும் மீளவில்லை, “என்று தந்தை கூறினார். லட்சுமி பிரியா குடும்பத்தினர் பணத்தை கொடுத்து பிரச்னையை தீர்த்துக்கொள்ள விரும்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவாவின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர்.

 

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] The mother of Lakshmi Priya, who was arrested about the incident, said, “Her daughter Lakshmi Priya and the student who was attacked are of the same age, they were friends and there was no romance between them. However, the student has alleged that he forced her to fall in love with her, abused her on her cell phone and harassed her by sending vulgar videos.

https://india.postsen.com/News/399178.html

[2] Talking to Manorama News, Lakshmipriya’s mother said her daughter was not in a relationship with the young man.  “Both of them were friends. However, he later started verbally harassing her and even sent lewd videos to her phone. She had told me about asking her friends to help her get rid of his trouble,” said Lakshmipriya’s mother.

Malayala Manorama, Youth manhandled, dumped naked on road; ex-girlfriend arrested, Onmanorama Staff Published: April 11, 2023 11:13 AM IST Updated: April 11, 2023 08:29 PM IST.

[3] https://www.onmanorama.com/news/kerala/2023/04/11/man-attacked-exgirlfriend-arrested-ernakulam.html

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் (6)

மார்ச் 24, 2021

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் (6)

விகடன் இப்பிரச்சினை பற்றி இவ்வாறாக செய்தி வெளியிட்டுள்ளது[1]: விகடன் இப்பொழுது செய்தியாக வெளியிட்டுள்ளது, “மதிப்பெண் வழங்கலில் பாரபட்சம், மாணவியிடம் தவறாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இணைந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். தேர்வு முடிவுகளில் குளறுபடி, முறையிட்ட மாணவி மீது தாக்குதல் எனத் துறைத் தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தனர். இந்தப் போராட்டத்தின் உச்சமாக 21-03-2021 அன்று பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். 22-03-2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலீஸாரால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என சென்னைப் பல்கலைக்கழகத்தை சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன”. சரி, மாணவி எப்படி தற்கொலைக்கு முயன்று, ஆஸ்பத்திரில் அட்மிட் ஆகி, ஒரே நாளில், வெளியே வந்து போராட்டத்திற்கு தயாரானார் என்று விசாரிக்கவில்லையே? அகழாய்வு செய்யும் இவர்களுக்கு, எப்படி இத்தகைய யுக்திகள் வந்தன என்று தெரியவில்லை!

தொல்லியதுறையில் படிக்கும் 80 மாணவர்களில் 5 பேர் ஆர்பாட்டங்களில் ஈடுபடுவது: விகடன் தொடர்கிறது[2], “தமிழகத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தொல்லியல் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. பட்ட மேற்படிப்பான இதில் நுழைவுத் தேர்வுகள் மூலமாகவே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இத்துறையின் தலைவராகப் பேராசிரியர் செளந்தரராஜன் பணியாற்றிவருகிறார். தொல்லியல் துறையில், மொத்தம் 80 மாணவர்கள் படித்துவருகின்றனர். அவர்களில் 25 மாணவர்கள் இறுதியாண்டு பயில்கின்றனர்”. ஆக 80 பேரில் இந்த 8 அல்லது 5 பேருக்குத் தான் இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன போலும்!

குறிப்பிட்ட சில மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் தோல்வியடைந்தது: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், தொடர்வது, “கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகியிருக்கிறது. இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் தோல்வியடைந்திருக்கின்றனர். அதிர்ச்சியடைந்த அந்த மாணவர்கள் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்திருக்கின்றனர். மறுகூட்டலுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டுமல்லாது, வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மறுகூட்டல் செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் தனியாக குழு ஒன்றை அமைத்திருக்கிறது”. ஆக இது என்ன பிரச்சினையோ?

வாக்குவாதம் தாக்குதலில் முடிந்ததாம்: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், தொடர்ந்து வர்ணிப்பது, “முதலில் விண்ணப்பித்த மாணவர்கள், மறுகூட்டலுக்குப் பிறகு மிகப்பெரிய மதிப்பெண் வேறுபாட்டில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆனால், மற்ற மாணவர்களின் மறுகூட்டல் முடிவுகள், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குப் பிறகும் வெளியிடப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் சிலர் துறைத் தலைவர் செளந்தரராஜனிடம் சென்று முறையிட்டிருக்கின்றனர். அப்போது வாக்குவாதம் முற்றி தாக்குதல் வரைச் சென்றிருக்கிறது”. நிருபருக்கு விசயம் தெரியாதா என்ன, அதுதான் ஆங்கில ஊடகங்களிலேயே இந்து, எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்ட் என்று வந்தி விட்டதே? தூண்டப் பட்டது யார், தூண்டியவர்கள் யார், பாதிக்கப் படுவது யார் என்றெல்லாம் கவனிக்க வேண்டும்.

விடுதி கட்டணம் எதிர்ப்பு போராட்டம்ஆரம்பம்: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், சொல்வது, “இந்த நிகழ்வின் பின்னணி குறித்து முழுமையாக அறியப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரிடம் பேசினேன். “இது ஒரு தனித்த போராட்டம் அல்ல; கடந்த ஜனவரி மாதம் விடுதிக் கட்டணத்துக்கு எதிராக நாங்கள் நடத்தி, வெற்றி பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சிதான் இது. கொரோனா ஊரடங்கில் மாணவர்கள் அனைவரும், விடுதியைக் காலி செய்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்ட நிலையில், ஒவ்வொரு மாதத்துக்கும் 4,500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி அப்போது போராட்டம் நடத்தினோம். அனைத்துத் துறைகளிலிருந்து மாணவர்கள் பரவலாகக் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்துக்குச் செல்லக்கூடாது என்று ஒவ்வொரு துறைத் தலைவர்களிடம் இருந்தும் நெருக்கடி வந்தது. இதனால் சிலர் பாதியிலேயே விலகிக் கொண்டனர். இருந்தபோதிலும், தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவால், நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை ரத்து செய்தது”.

சில மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தது: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், தொடர்ந்து விளக்கியது, “இந்தப் பின்னணியில் தான் செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவிருந்தது. பல்கலைக்கழக இணையதளம், மின்னஞ்சல், அறிவிப்புப் பலகை என மூன்று வழிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போதைய முடிவுகள் இந்த வழிகளில் வெளியாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து துறையில் தொடர்பு கொண்டு பேசினோம். தொலைபேசி வாயிலாக, வார்த்தை மூலமாகவே தேர்வு முடிவுகளைச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டனர். நன்றாகப் படிக்கும் நாங்கள் ஃபெயிலாக்கப் பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தோம். இதுவரை ஒருமுறைகூட ஃபெயிலாகி இருக்காத நாங்கள் இதனால் அதிர்ச்சியடைந்தோம்,” என்றார் அம்மாணவர்.”

மறுகூட்டலில் 8 மாணவர்கள் தேறியது: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், கூறுவது, “தேர்வு முடிவுகளில் குளறுபடி இருக்கிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் முறையிட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மறுகூட்டலுக்கான குழு ஒன்றை நிர்வாகம் அமைத்திருக்கிறது. இந்த 8 மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வகுப்புக்கும் மறுகூட்டல் நடத்தப்பட்டு, இரண்டு வாரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்தக் குழு கூறியிருக்கிறது. முதல்கட்டமாக 8 மாணவர்களுக்கு மறுகூட்டல் செய்து முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மறுகூட்டலில் மிகப் பெரிய மதிப்பெண் வேறுபாட்டில் 8 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்”. இதைத் தொடர்ந்து இரண்டு வாரம் கடந்தும் ஒட்டுமொத்த மாணவர்களுக்குமான மறுகூட்டல் முடிவுகள் வெளிவராத நிலையில், இதுகுறித்து துறைத் தலைவர் செளந்தரராஜனைச் சந்தித்து மாணவர்கள் சிலர் முறையிட்டிருக்கின்றனர்.

எப்படி வாக்குவாதம் கலாட்டாவில் முடிந்ததுமாற்றிச் சொல்லும் போக்கு: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், கூறுவது, “துறைத் தலைவர் செளந்தரராஜன் மிக மோசமாக எங்களை எதிர்கொண்டார்; வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் எங்களைத் திட்டினார்; அறையிலிருந்து உடனடியாக வெளியேறும்படி கத்தினார். ஒரு மாணவியிடம் நடந்துகொள்ளக் கூடாத வகையில், அந்த மாணவியின் மீது பலவந்தமாக மோதி வெளியில் தள்ள முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியும் நாங்களும், ‘நீங்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் எங்களிடம் நடந்துகொள்ளக் கூடாதுஎன்று கூறினோம். எதையும் சட்டை செய்யாத அவர் மீண்டும் மீண்டும் அப்படியே செய்தார்; இப்படி நடந்துகொண்டதற்காக துறைத் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் அறைக்கு முன் அமர்ந்து போராடினோம். அறையிலிருந்து வெளியேறும்போது, எங்களில் ஒருவரை மிதித்துவிட்டு வெளியேறினார்,” என்று மாணவர்களில் ஒருவர் அங்கு நடந்தவற்றை விவரிக்கிறார்”. இது முந்தைய  வர்ணனைகளிலிருந்து மாறுபட்டிருப்பதை கவனிக்கலாம்.

© வேதபிரகாஷ்

24-03-2021


[1] விகடன், மாணவி மீது பாலியல் தாக்குதல்எல்லை மீறினாரா பேராசிரியர்? சிக்கலில் சென்னைப் பல்கலைக்கழகம்!, சு. அருண் பிரசாத், Published: 23-03-2021 at 8 AM; Updated: 23-03-2021  at 8 AM.

[2] https://www.vikatan.com/social-affairs/madras-university-students-protest-against-hod?fbclid=IwAR3uKvMdoXvb7rCywpKmAbpmBCAJ3ES39Qt2yJ-mf469KZBwtQNgZkuQXHI