Archive for the ‘கட்-அன்ட்-பேஸ்ட்’ Category

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

இரும்பு காலம் பற்றிய கருத்து: ஆய்வரங்கத்தின் முதல் அமர்வில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜன் பேசியதாவது[1]: “இந்தியா முழுக்க பிராகிருத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன், தமிழகத்தில் தமிழி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான், தமிழகத்தில் பிராகிருத கல்வெட்டுகள் இல்லை. தமிழர்களின் வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது. காரணம், சங்க இலக்கியத்தில் அனைத்து கூறுகளும் சொல்லப்படவில்லை. அகழாய்வில் பயன்படா பொருட்களே அதிகளவில் கிடைக்கின்றன. கல்வெட்டு, காசுகளும், பொதுமக்களின் வாழ்வியலை முழுமையாக சொல்லவில்லை. என்றாலும், உலகின் முன்னேறிய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை, இந்த ஆய்வுகளால் அறிய முடிகிறது. தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகம் சிறந்திருந்தது. இங்கு, எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்திருந்தது. நெல்லை நாற்றுவிட்டு நடும் பழக்கம், 2,700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, உலகத்திற்கே இரும்பை அறிமுகம் செய்தவன் தமிழனாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கன்குடியில் கிடைத்த இரும்பு வாள் நிரூபித்துள்ளது. அதாவது, சிந்துவெளியில் செம்பை பயன்படுத்திய காலத்தில், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான தரவுகளை சேகரிக்கும் வகையில், சிந்துவெளி மற்றும் தமிழ் நிலத்தில் கிடைத்துள்ள குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” இவ்வாறு அவர் பேசினார்[2].

அரைத்த மாவை அரைக்கும் பாணியில் ஆய்வுக்கட்டுரைகள்: பட்டியலிடப்பட்ட தாள்கள் தாள்களின் தரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான தாள்கள் மறுவடிவமைக்கும் வகையைச் சேர்ந்தவை, அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் பாணியில் கூறுகின்றன.

  • தொல்காப்பியர் நோக்கில் வள்ளுவம்
  • திருக்குறள், திருவள்ளுவர் முதலியன… – தற்போதைய வாழ்க்கை முறைக்கான நடைமுறை வழிகாட்டி, இது போன்ற திருக்குறள் பற்றிய பல ஆவணங்கள்.
  • தனிநாயகம் பிள்ளை……
  • தமிழை விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வது எப்படி
  • திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி (அவர் மீது பல ஆவணங்கள்) முதலியன,
  • சங்க இலக்கியம்……..பற்றி…
  • சிலப்பதிகாரம் பற்றி – பல தாள்கள்
  • சங்க இலக்கியம்
  • சித்த, சித்த மருத்துவம்

இதில் புதியதாக எந்த விசயத்தையும்சொல்ல காணோம்.

எப்படியாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற வெறியில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன: ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, தலைப்பை ஆராய்ச்சி செய்தல், திட்டமிடல் மற்றும் எழுதுதல் என்பது இல்லை. வலைத்தளங்கள், கல்வி கட்டுரைகள், புத்தகங்கள், கலைக்களஞ்சியம், நேர்காணல்கள், இணையத்தில் தனிப்பட்ட கட்டுரைகள் (வலைப்பதிவுகள்) என்பதெல்லாம் இல்லாமல், “கட்-அன்ட்-பேஸ்ட்” முறையிலேயே செல்கின்றனர். கட்டுரையின் வடிவத்தில் தர்க்கரீதியான விமர்சன வாதங்களை முன்வைப்பதில்லை, தீர்மானமாக முடிவை வைத்துக் கொண்டு இந்த வேலை நடக்கிறது. பகுப்பாய்வு கட்டுரைகள், என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும் போக்கில் விசயங்களைச் சொவ்தில்லை. ஆராய்ச்சியின் பொருள் சர்ச்சைக்குரியதாக இருப்பதும் இல்லை, அந்த அளவுக்கு கஷ்டப்படுவதும் இல்லை, உழைப்புடன் முனைவதும் இல்லை. சொந்த கருத்துக்களைத் தெரிவித்து, ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரையாளர்கள் சிலரே. நேரடி மேற்கோள்கள், நீண்ட மேற்கோள்களைத் தவிர்க்காமல், அவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்றனர்.

எந்த ஆராய்ச்சிநெறிமுறையும் பின்பற்றப் படுவதில்லை: இப்பொழுதைய ஆராய்ச்சிநெறிமுறை, தரக்கட்டுப்பாடு, விதிகள், மென்பொருளால் சரிபார்க்கும்முறை முதலியவற்றை வைத்து சரிபார்த்தால், எத்தனை ஒழுங்கானவை என்று தீர்வாகும் என்பதும் நோக்கத் தக்கது. இருப்பினும், இவர்கள் தலைப்புகளை மாற்றி, சில வர்களை வெட்டி-ஒட்டி கட்டுரை என்று தயாரித்து, வாசிக்க வந்து விடுகின்றனர். கட்டுரைகளை தேர்வு செய்பவர்களும் எந்த தரத்தையும் சரிபார்ப்பதில்லை, தெரிந்தவர்களா, நண்பர்கள் பரிந்துரைத்தார்களா என்று பார்த்து தேர்வு செய்கிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்டபடி, பெயர்களை வைத்துக் கொண்டு கூட, சில கட்டுரைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

09-07-2023 அன்று அவசரஅவசரமாக முடிந்த மாநாடு: குதிரை முன் வண்டிகல்வி அமர்வுகள் நிறைவடையும் முன் விழா நடைபெற்றது: ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் முடிவடைவதற்கு முன்பு நிறைவு விழா நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதி, ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் தங்கள் நிலையைக் கேட்டறிந்து காத்துக் கொண்டிருந்தனர், காலை 9.00 மணி முதல் அறைகள் காலியாக இருந்ததாலும், யாரும் சரியாக பதிலளிக்காததாலும், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கரவர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பு / கல்வி அமர்வுகள் குறித்து முற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், முதலில் பாராட்டு விழா நடைபெறும் என்றும், பின்னர் காலை 10.30 மணி 11 மணிக்கு தாள் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர், நேரம் கடந்துவிட்டதால் ஆய்வுக்கட்டுரை வழங்குபவர்கள் கவலையடைந்தனர். பின்னர், பிரிவுத் தலைவர்கள் அறைகளுக்குச் சென்று அமர்வுகளைத் தொடங்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் வாசிப்பவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதித்தனர். மேலும், 10-15 நபர்கள் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் கட்டுரை வழங்குபவர்களாக இருந்தனர். வழக்கம் போல கட்டுரை வாசிப்பவர் ஆசிட்டுவிட்டு போய்விட்டார்கள்.. நிச்சயமாக, அமர்வுகளைத் தொடங்க அமைப்பாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தரப்பில் இரண்டு மணி நேரம் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டது. எப்படியோ, பேப்பர் வாசிப்பு அமர்வுகள் முடிந்து, மதிய உணவுக்குப் பிறகு பிரதிநிதிகள் நகரத் தொடங்கினர். இதனால், மூன்று நாள் சர்வதேச தமிழ் மாநாடு மேலே விவரிக்கப்பட்டபடி இரண்டரை நாட்களில் முடிக்கப்பட்டது.

மலேசியாவின் போட்டியாளர் கூற்று: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், கடந்த 7, 8, 9ம் தேதிகளில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது[3]. அடுத்த மாநாட்டை, 2025ல் சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்[4]. 1968ல் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை விட, 11வது மாநாடு செம்மஞ்சேரியில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு கல்வி நிகழ்வாக நடைபெற்றது, என்று பொன்னவைக்கொ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ஏதோ நடத்த வேண்டுமே என்று நடத்தியாகி விட்டது. இதே ஜூலையில் இரண்டாவது சந்திப்பு. பெரும் ஆரவாரத்துடனும், பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடனும் நடைபெறும் என்று சொல்லப் படுகிறது. இந்த மாநாட்டுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஐஏடிஆர் உறுப்பினர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அரசர் அருளாளரையும் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் என பேராசிரியர் டி.மாரிமுத்து தலைமையிலான மற்றொரு குழு அறிவித்துள்ளது. அவர் இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என்கிறார்.

© வேதபிரகாஷ்

11-07-2023

.


[1] தினமலர், சிந்துவெளி காலத்திலேயே இரும்பு பயன்பாட்டில் இருந்தது, பதிவு செய்த நாள்: ஜூலை 08,2023 01:54.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3369634

[3] தினமலர், நிறைவு பெற்றது உலக தமிழாராய்ச்சி மாநாடு, Added : ஜூலை 11, 2023  04:37

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3372482

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? – புதிர்கள், மர்மங்கள் முதலியன விலகுமா? (4)

மே 24, 2023

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? – புதிர்கள், மர்மங்கள் முதலியன விலகுமா? (4)

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை?: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய நாட்களில் 11– ஆவது உலகத்தமிழ் மாநாடு நடக்கவுள்ளது[1]. இதை திராவிடச் சிந்தனையாளர்கள் சீர்குலைக்க முயல்வதாக தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அவியனரசு குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:- “தமிழ்ப் பேரறிஞர் ஈழத்து தனிநாயகம் அடிகளின் சீரிய முயற்சியாலும் சாலை இளந்திரையன் போன்ற தமிழறிஞர்களின் ஒத்துழைப்பாலும்உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்கடந்த காலங்களில் முறையாகத் தமிழ் அறிஞர்களிடம் ஆய்வு கட்டுரைகளைப்  பெற்று, உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்க வைத்து தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வந்தது. அரசியல் கலப்பற்ற அந்நிறுவனத்தைத் சில வேளைகளில் திராவிட கட்சிகள் கையகப்படுத்த எண்ணி அதில் தோல்வி அடைந்தன.

தமிழுக்கு முன்திராவிடம்என்ற பொய்யான கருத்தியலை முன்வைத்தால் தமிழை சிறுமைப் படுத்துவதாகுமா?: அவியனரசு தொடர்ந்து கூறியது, “சென்னையில் நடை பெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரைக் கூட முறையாக அழைக்கவில்லை. அது போல் 1980–இல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது தனித் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அழைக்கப் பெற்றும் அவர் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்ட கசப்பான நிகழ்வுகளும் உண்டு. தமிழறிஞர் என்று திராவிட கட்சியினரால் சொல்லப்படும் சிலர் எப்போதும்தமிழ் பேரறிஞர்களாகதங்களை தாங்களே விளம்பரப் படுத்திகக் கொள்வார்கள். தமிழுக்கு முன்திராவிடம்என்ற பொய்யான கருத்தியலை முன்வைத்து தமிழை சிறுமைப் படுத்துவதே அவர்களின் தொடர்ச்சியான வேலையாக உள்ளது. அவ்வாறான நிகழ்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் உள்ளது அரசியலா?: அவியனரசு தொடர்ந்து கூறியது, “உலகத் தமிழாராச்சி நிறுவனத்தை கைப்பற்ற நினைத்த திராவிட கட்சிகளின் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. இச்சூழலில் எதிர்வரும் ஜூன் 16, 17, 18, 23 ஆகிய நாட்களில், 11–ஆவது உலகத் தமிழ் மாநாட்டை சிங்கப்பூரில் நடத்துவது என உலகத் தமிழாராச்சி நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டது. மாநாட்டில் திராவிட சிந்தனையாளர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்பதை அறிந்து கொண்ட தமிழ்நாட்டிலிருக்கும் திராவிட சிந்தனையாளர்கள் சிலர் 70 ஆண்டுகளாக இயங்கிவரும் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தை பிளந்து, அவர்கள் தாங்களே உலகத் தமிழ்மாநாட்டை தனியாக நடத்தப் போவதாக அறிவித்தனர்.

ஷார்ஜாசிங்கப்பூர்கோலாலம்பூர்: அவியனரசு தொடர்ந்து கூறியது, “முதலில் சிங்கப்பூர் என்றும் பின்னர் சென்னை என்றும் மாநாட்டு இடங்களையும் அறிவித்த நிலையில் இடையில் என்ன நடந்தனவோ தெரியவில்லை மீண்டும் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு தாங்களும் இணைந்து உலகத்தமிழ் மாநாட்டை நடத்த விரும்புவதாக உலகத் தமிழாராச்சி தலைவர் மலேசிய ஐயா. மாரிமுத்துவுக்கு மடல் எழுதினார்கள். இவர்களின் சூது திட்டத்தை அறிந்த உலகத் தமிழாராச்சி நிறுவனத் தலைவர் மலேசிய ஐயா மாரிமுத்து, மீண்டும் அவர்களை மாநாட்டு குழுவில் சேர்க்க முடியாது என மறுத்துவிட்டார். இப்போது உலகத் தமிழாராச்சி நிறுவனம் முற்றிலும் திராவிட கலப்பற்ற தூய தமிழர்களின் முழுகட்டுப்க்பாட்டில் வந்துள்ளது. மாநாட்டு குழுவில் குழப்பங்களைத் தோற்றுவிக்க நினைத்த தமிழ்ப் பகைவர்கள் புறக்ககணிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரத்தால் அரசு நடத்துவதை தமிழர் அறிவர்: அவியனரசு தொடர்ந்து கூறியது, தற்போதைய சூழலில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து வருகின்றனர். தமிழ் அமைப்புகளில் பிறமொழியாளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப் பட்டுவருகின்றனர். திராவிடக்  கட்சிகளின் 56 ஆண்டுக்கால ஆட்சியில், 1956 ஆம் ஆண்டு தமிழ்ஆட்சி மொழிச் சட்டத்தை இன்னமும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை, தமிழ் மொழியைப் பயிற்றுமொழியாக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற  வேண்டுமென்ற தமிழர்களின்க கோரிக்கையை ஏற்க மறுப்பது, உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க இயலாத திராவிடர்களின் கையறு நிலைபோன்ற  பொறுப்பற்ற உண்மையான அக்கறையற்ற போக்கோடு வெறும் ஆரவாரத்தாலும் விளம்பரத்தாலும் மட்டுமே அரசை நடத்தி வருகிற நிலைகளை உலகத் தமிழர்கள் அறிந்தே உள்ளனர்.

சித்தாந்த மோதல் எதில் ஆரம்பம்முடிவு: அவியனரசு தொடர்ந்து கூறியது, 11–ஆவது உலகத் தமிழ்மாநாட்டை மலேசியதலை நகர் கோலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர் நிலத்தையும் மொழியையும் பாதுகாக்கவும் உண்மையான தமிழ் ஆய்வு கட்டுரைகள் மூலம் அடுத்த உலகலாவிய வளர்ச்சிக்குரிய மொழி தமிழ் என்பதை நிறுவிடவும் தமிழராகிய நாம் பலரும், இந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குத் தமிழ்நாட்டில் இருந்து மெய்யான தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், தமிழ்தமிழர்நல இயக்கங்களின் தலைவர்கள் என அனைவரும் பெரும் திரளாக போய் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் வேண்டிக் கொள்கிறேன்,” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறியப் படதோர், உதிரிகள் ஆர்பாட்டம் செய்வது ஏன்?: தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி, அதன் தலைவர் அவியனரசு யாருக்கும் தெரிந்ததாக இல்லை. ப்பொழுது மாலைமுரசு வெளியிட்ட செய்தியிலிருந்து தான் தெரிகிறது. இவரது முகநூலிலிருந்து அறியப் படுவதாவது, இவர் ஒரு இந்திய-தேசியவிரோத கொள்கைக் கொண்ட சித்தாந்தியாகப் புலப்படுகிறது. முன்பு, பாமக போன்றவர் கூட தன்னுரிமை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மாநாடுகள் நடத்தியுள்ளனர்.பிறகு, சட்டரீதியிலான பிரச்சினை புரிந்து அடங்கி விட்டனர். அவ்வப்பொழுது, எங்கிருந்தோ ஆதரவு கிடைக்கிறது என்றால், தமிழ், தமிழ் தேசியம், வடவர், ஆரியர், வந்தேறி என்றெல்லாம் பேசிக் கொண்டு கலந்தள்ளிக் கொண்டிருப்பர். இப்பொழுது, “உலக தமிழ் மாநாட்டவர்” இவ்வாறு நடந்து கொண்டால், அதில் ஆராய்ச்சி, ஆய்வுத் தன்மை, உண்மைத் தன்மை முதலியவை நீர்த்து, குறைந்து, உணர்ச்சிப் பூவமான கூப்பாடுகள், அரைத்த மாவை அறைக்கும் ஆய்வுக் கட்டுரைகள் என்று “கட்-அன்ட்-பேஸ்ட்” வகையறாக்கள் தான் மிஞ்சும். “”அரசியல் கலப்பற்ற நிறுவனம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். நிச்சயமாக அரசியல் கட்சிகளின் ஆட்கள் தான் எல்லா நிறுவனங்களிலும் நியமிக்கப் பட்டுள்ளார்கள், வேலை செய்து வருகிறார்கள். “ரிடையர்ட்” / ஓய்வு பெற்ற பிறகும் வேலை செய்து வருகிறார்கள்.    

தமிழ் பேரறிஞர்களாகதங்களை தாங்களே விளம்பரப் படுத்திகக் கொள்வார்கள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். அதனால் தான் தமிழைக் காப்போம் என்று 1970லிருந்து கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், இன்று வரை ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. மேடைகளில் கத்திக் கொண்டும், மாநாடுகளில் ஜாலியாக மூன்று நாட்கள் காலத்தைக் கழித்தும், கிடைத்த லட்சங்கள்-கோடிகளை செலவழித்து, கமிஷன் அடிப்பதில் போட்டிகளும் நடக்கின்றன. அது இப்பொழுது வெளி வந்து விட்டது. “தமிழ் அமைப்புகளில் பிறமொழியாளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப் பட்டுவருகின்றனர்,” என்பதிலும் போலித்தனம் வெளிப்படுகிறது. இம்மாநாடுகளில் ப்பங்கு கொண்டவர்கள், பதவுகளில் உள்ளவர்களில் நிறைய பேர் தமிழர்களே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். “திராவிட கலப்பற்ற தூய தமிழர்……….” என்றெல்லாம் பேசுவதையும் கவனிக்கலாம். ஒருபக்கம் திராவிட இனம் என்றும், இன்னொருப் பக்கம் தமிழர் இனல் என்றும் உளறிக் கொண்டிருப்பர். இவர்களுக்கு விஞ்ஞான ரீதியில், மொழிவிய்ல், மானுடவியல் போன்றவையும் ஒழுங்காகத் தெரியாது, ஆராய்ச்சி நெறிமுறைகளும் தெரியாது. கூட்டமாக, வெறிபிடித்தது போல, வன்முறைகளுடன் செயல் பட்டுக் கொண்டிருந்தால், நிச்சயமாக மற்றவர் ஒதுங்கி விடுவார்கள். இவர்கள் தான் “குண்டு சட்டியில் குதிரை” ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

23-05-2023.


[1] மாலைமுரசு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய நாட்களில் 11– ஆவது உலகத்தமிழ் மாநாடு, சென்னை, 23-05-2023, பக்கம்.

இலக்குவனின் கடிதம் தொடர்கிறது……………………….

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, முதலியன:தமிழ்-தமிழ் என்று பேசிக் கொண்டும், தமிழைக் காப்பேன் என்று அரற்றிக் கொண்டும், தமிழ் எங்கள் உயிர், தமிழின் உயிர், உயிரின் மூச்சு, மூச்சின் உச்சம் என்றெல்லாமும் கத்திக் கொண்டும் காசிருந்தால் மேடைப் போட்டு, புத்தகம் போட்டு, விழா நடத்தி, காலம் தள்ளிக் கொண்டே இருக்கலாம். திக-திமுக மற்ற திராவிட வகையெறாக்களில் இதைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம், பாடமும் படிக்கலாம். ஏதாவது விமர்சனம் செய்தால், “தமிழின் எதிரி, தமிழர்களின் துரோகி, தமிழனத்தின் கோடாரிக் காம்பு,” போன்ற வசைகளும் எழும். இப்படியாக உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று பல சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள், கூட்டங்கள், குழுக்கள் கிளம்பியுள்ளனர்.

  • உலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,
  • அனைத்துலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழர் மாநாடு,
  • உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு,
  • இன்னும் பல இருக்கின்றன……

பிறகு திருக்குறளை வைத்து ஏகப்பட்ட கூட்டங்கள் கிளம்பி விட்டன. இவற்றில் 90% ஊரைச் சுற்றிப் பார்க்கும் கூட்டம் தான். மூன்று முதல் ஐந்து-ஆறு நாட்கள் இருக்க இடம், மூன்று வேளை சாப்பாடு கட்டாயம் கிடைக்கும் என்ற போர்வையில் தான் சுற்றுலா திட்டம் போடப் பட்டு, ஆட்கள் கூட்டம் சேருகிறது. இதில் பல நிலைகளில் பலர் வியாபாரமும் செய்து, பணம் சம்பாதிக்கின்றனர். விசா, விமான டிக்கெட் வாங்குவது, உள்ளூர் சுற்றிப் பார்ப்பது என்று பலவழிகளில் வியாபாரம் நடந்து வருகிறது. ஏனெனில் ஏஜென்டுகளுக்கு, ஏஜென்டாக செயல்படுகிறவர்களுக்கு எல்ல நிலைகளிலும் கமிஷன் கிடைக்கிறது. இப்படி மாநாடுகள் நடத்துகிறவர்கள் அல்லது சம்பந்தப் படுபவர்கள் சுற்றுலா ஏஜென்டாகவே மாறி வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார்.

மாநாடுகள் சுற்றுலாவுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வியாபாரமாகின்றது: ஹோட்டலில் தங்கி, குளித்து சாப்பிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவர். மதியம் உணவுக்கு வந்து விடுவர். தூரமாக இருப்பின், இரவு உணவுக்குக் கட்டாயம் வந்து விடுவர். அந்த ஏஜென்டே எல்லாம் செய்து விடுவார். ஆக, தமிழுக்காக, மாநாட்டில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்பவர் 10 பேர் கூட் இருக்க மாட்டார்கள். இதில் என்ன வேடிக்கை அல்லது வருத்தப் படவேண்டிய விசயம் என்றால், அத்தகைய, முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்தால், அவற்றை ஒதுக்கி விடுவர். பிறகு, அவற்றை காப்பி அடிக்காமல் இருந்தால் சரி. ப்பொழுதெல்லாம், இதற்கும் “எதிக்ஸ்” என்றெல்லாம் பேசப் படுகிறது. ஆனால், அதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் ஆயிரகணக்கில் மின்னஞ்சல்களில் பெறப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சேகரிப்பவர்கள் என்ன செய்கிறார்கள், செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒழுங்காக, ஒழுக்கமாக, ஆராய்ச்சி தர்மத்தைப் பின்பற்றுவார்களா, இல்லை, ஜாலியாக-தாராளமாக “கட்-அன்ட்-பேஸ்ட்” அல்லது “காபி-அன்ட்-பேஸ்ட்” செய்து பிழைப்பார்களா, வியாபாரம் செய்வர்களா என்பதெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், அவர்கள் தமிழ்-தமிழாராய்ச்சி முதலியவற்றில் என்ன-எதனை சாதித்தார்கள் என்று தெரியவில்லை. மென்பொருளின் சாதனை நடந்துள்ளது, இல்லையென்றா இப்படி தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. இப்பொழுது, அதற்கும் கூகுள் டிரான்ஸ்டேட் வந்து விட்டது. முரட்டுத் தனமான மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.

1966 முதல் 2023 வரை: உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் 2023 நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது. இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், இவை அரசியல் சார்ந்து நடந்ததாகவே அறியப் படுகின்றது. மேலும், “மொழிப்பற்று” போர்வையில், உணர்ச்சிப் பூர்வமான உபன்யாசங்கள், பாஷணங்கள் மற்றும் கதாகாலக்ஷேபங்கள் புரிந்ததும் தெரிகிறது. கல்வி, படிப்பு மற்றும் போதனை போன்றவற்றிற்குப் பதிலாக சித்தாந்த உச்சங்களின் எல்லைகளில் அவை பலியானதும் புரிகின்றது.

மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் ரூபாய் 25 கோடி செலவு: இந்நிலையில், 11ஆவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தால் 1966 முதல் நடத்தப்பட்டு வரும் உலகத் தமிழ் மாநாடு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரிசியசிலும் நடைபெற்றுள்ளது. இந்த உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். சுமார் ரூபாய் 25 கோடி செலவில் நடைபெறவிருந்தது.  இப்பொழுது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மாறியுள்ளது. சரி இவ்வாறு கோடிகளில் செலவு செய்து தமிழுக்கு என்னவாகப் போகிறது? இதுவரை 10 மாநாடுகள் நடந்திருப்பதால் 200 கோடிகளும் செலவாகி இருக்கலாம். ஆனால், கடந்த காலங்களில் தமிழ் புலவர்கள், பண்டிதர்கள் கவிஞர் போன்றோர் செய்ததில் 1% ஆவது தமிழுக்கு சேவை செய்திருப்பார்களா? அல்லது அவ்வாறு செய்தேன் என்பதற்கு எதையாவது காண்பிர்ப்பார்களா?

சார்ஜாவிலிருந்து மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரை: இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் 2023 ஜூலையில் நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது[1]. இணைதள குழுக்களில் அதிகமாகவே பேச-பகிரப் பட்டன. இதற்கான மாநாட்டு விவரங்கள் அடங்கிய அழைப்பிதழ், அமைப்புகள், அமர்வுகள், அதற்கான அறிக்கைகள் எல்லாம் தயாராகியது[2]. ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் மின்னஞ்சல்கள் மூலம் ஏற்கப்பட்டன. சென்னையில் ரு நிறுவனம், இதே போல பலருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து, ஆய்வுக்கட்டுரை ஏற்க பணம் கட்ட வேண்டும் என்று கூட ஆரம்பித்தார். ஆனால், சார்ஜாவில் நடத்த முடியாமல் போனது அல்லது இயலவில்லை அல்லது காரணம் அறிவிக்க முடியவில்லை என்பது அமைதியாகி விட்டது[3]. தயார் செய்யப் பட்ட, அச்சிடப் பட்ட / வெளியான எல்லா ஆவணங்களும் வீணாகின[4]. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களினால் சார்ஜாவுக்கு பதிலாக மலேசியாவில் ஜூலை 21 – 23 வரை மலேயா பல்கலை வளாகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது[5]. இங்கும் “அதிகார பூர்வமான அறிவிப்பு” என்பதனைக் கவனிக்கலாம். ஏற்கனவே மூன்று உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடைபெற்றுள்ளது[6]அப்படியென்றால் ஆன்காவது முறை ஏற்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினகரன், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும், June 7, 2022, 5:25 pm.

[2] https://www.dinakaran.com/11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[3] வீரகேசரி, சார்ஜாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, Published By: VISHNU, 23 JUN, 2022 | 02:41 PM; https://www.virakesari.lk/article/130046

[4] https://www.virakesari.lk/article/130046

[5] தமிழ்.நியூஸ்.7, மலேசியாவில் 11-வது உலகத்தமிழ் மாநாடு; ஜூலை மாதம் நடைபெறுவதாக தகவல், by Yuthi, February 22, 2023 04.78

[6] https://news7tamil.live/11th-world-tamil-conference-in-malaysia-it-is-reported-to-be-held-in-july.html