கொல்கத்தாபல்கலைக்கழகத்தில் 1960ஆம்ஆண்டுதொடங்கப்பட்டதொல்லியல்துறை: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறைக்கு அடித்தளமிட்டவர் 1911இல் துணைவேந்தராக இருந்த அசுதோஷ் முகர்ஜி. இங்கு கற்கால வரலாறு, கல்வெட்டு, நாணயவியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை எனத் தொல்லியலோடு தொடர்புடைய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் 1961 முதல் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட நிலையில் வழங்கிவருகிறது. கற்கால வரலாறு, தொல்லியல் அகழாய்வு நெறிமுறைகள், கட்டிட, சிற்பக்கலை, கல்வெட்டுக்கள் பற்றிய பாடப்பிரிவு, நாணயவியல், அருங்காட்சியகவியல், ஆழ்கடல் ஆய்வுகள் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் முறையான அகழாய்வுப் பயிற்சி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்தமிழ்ப்பல்கலைக்கழகம், உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம்முதலியன: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், ஆழ்கடல் ஆய்வுத்துறை, கட்டிடக்கலைத் துறை எனத் தொல்லியல் சார்ந்த அனைத்துப் பாடப்பிரிவுகளையும் வழங்குகிறது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஓராண்டு தொல்லியல், கல்வெட்டியல் பட்டயப் படிப்பையும், பண்டைய வரலாறு, தொல்லியல் பாடத்தில் முனைவர் பட்டத்தையும், ஆறு மாத தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது. சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஓராண்டு கவ்வெட்டியல்பாடத்தை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இரண்டு வருட தொல்லியல் படிப்பை உதவித் தொகையுடன் வழங்குகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை அவர்கள் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.
மற்றகல்விநிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள் தவிர்த்துப் பல கல்லூரிகள் தொல்லியல் பாடத்தை இளங்கலை, முதுகலை அளவிலும் வழங்குகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள பூம்புகார் கல்லூரி ஓராண்டு கட்டிடக்கலை, சிற்பக்கலை பாடப்பிரிவில் இந்தியாவில் இருந்த பல்வேறு கட்டிடக்கலை அமைப்புகளை விளக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாமல்லபுரத்தில் உள்ள கட்டிட, சிற்பக்கலை கல்லூரியும் மாணவர்களுக்கு இளங்கலையில் நுண்கலைப் பட்டத்தை வழங்குகிறது. சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி இளநிலைக் கல்வியில் தொல்லியல் பாடத்தை வழங்குகிறது. இக்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட வரலாற்றின் மறுபக்கத்தை தொல்லியல் கல்வியின் மூலம் அறிவியல்பூர்வமான முறையில் அகழ்ந்தெடுத்து உலகுக்குப் பறைசாற்றுகின்றன. தொல்லியல் என்பது அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செய்யப்பட வேண்டிய ஆய்வுத் தளமாகும். ஆகையால் பல்துறை அறிஞர்களும் ஆர்வத்தோடு தொல்லியலைக் கற்றால் உலகின் தொன்மை வாய்ந்தவர்கள் இந்தியர்கள் என்பது புலப்படும். குறிப்பாக உலகின் தொன்மையாள மொழிக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்காரர்களான தமிழர்கள் தங்கள் வரலாற்றின் வளமையை உணரவும் போற்றவும் மிகப்பெரும் வாய்ப்பாக அமையும்.
சரித்திரப் பாடத்தில்-பட்டப் படிப்பில் வித்தியாசம் ஏன்?: சரித்திரம் படித்தவர்கள் தொல்லியல் வேலைக்குவர முடியாது என்றால், அதே போல தொல்லியல் படித்தவர்களும் சரித்திர வேலைக்குச் செல்ல முடியாது. ஜே,என்.யூவில் இடைக்கால சரித்திரம் பட்டம் பெற்றவருக்கும் இந்த ஆணை பொறுந்தும். பிறகு, ஜே,என்.யூ இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுகின்றதா? அதனிடம் ஏன் பழங்கால இந்தியாவுக்கு துறை-படிப்பு இல்லை என்று யாருகேட்டதாகத் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், புதிய படிப்புகள் படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வலுத்துள்ளது. அதனால், ஒருவேளை இப்படியெல்லாம் பல்கலைக் கழகங்களில் துறைகளை ஆரம்பிக்கலாம். சரித்திரப் படிக்க ஆளில்லை, சரித்திரத் துறையே மூடப் படுகிறது என்றெல்லாம் கூட நடந்தேறியுள்ளது. அதற்கும் முறையான எதிர்ப்பு ஒன்றும் இல்லை. சுற்றுலா, பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு, ஓட்டல்-கேடரிங் மேனேஜ்மென்ட் என்றெல்லாம் மாறி வருகின்றதை கவனிக்கலாம், அதாவது, சரித்திரம் இவற்றுடன் சேர்த்து அல்லது அவற்றை சரித்திரத்துடன் சேர்த்து, படிப்புகளை உருவாக்குகிறார்கள்.
நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது: நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது. அவர்கள் எப்படியாவது, எந்த படிப்பு, துறை படித்தாலும் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள், வேலைக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், 50% பெறுபவர்கள் கஷ்டப் படுகிறார்கள். மேலும், ஆங்கிலம் தெரியாத நிலையும் பலரை பாதிக்கிறது. அதைப் பற்றியும் பெரும்பாலோர் கண்டு கொள்ளவதில்லை. எப்படியாவது அரசு வேலை கிடைத்து விட்டால், போதும், பிறகு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் போன்ற மனப்பாங்கும் உள்ளது. இந்த வேலைக்கு, இந்த ஆண்டில் விளம்பரம் வரப்போகிறது, அதனால், அதற்குள் டிகிரி / பட்டயம் பெற்று தயாராகி விடவேண்டும் என்ற திட்டத்துடனும் படிக்க சேர்கின்றனர். அத்தகைய விவரம் தெரிந்தவர்கள், விவரமானவர்கள் அமைதியாக வேலைக்குச் சென்று விடுகின்றனர். மற்றவர்கள் முழிக்கின்றனர், திகைக்கின்றனர். போட்டியில் தம்மையும் அறியாமல் பின்னே தங்க நேரிடுகிறது.
காலப்போக்கில் மாறும் / காலாவதியாகும் பாடங்கள்: கல்வியாளர்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கலை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு, பாகுபாடு மற்றும் போட்டி ஆகியவை மறக்கமுடியாததாகவும், காலப்போக்கில் தொடர்கின்றன. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் கலைப் பாடங்கள் மற்ற பாடங்களைக் காட்டிலும் தாழ்ந்தவையாகக் கருதப்பட்டன. இதனால் சில மாணவர்கள் பி.ஏ. (ஹானர்ஸ்) மற்றும் / அல்லது வழக்கறிஞர்களாக ஆக சட்டம் போன்ற படிப்புகளைப் படித்தனர். இல்லையெனில், கலைப் பட்டதாரிகள் அலுவலகம் மற்றும் நிர்வாகப் பணிகளுக்குச் சென்றனர். அக்காலகட்டத்தில், எழுத்தர் பணிக்கு அத்தகைய அனுபவம் தேவைப்பட்டதால் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து அவசியமானது. எனவே, 1980கள் வரை, டைப்ரைட்டர் நிறுவனங்கள் காலை அல்லது மாலையில் ஒரு மணி நேர நேரத்தைப் பெறுவதற்கு வேலை தேடுபவர்களுடன் பிஸியாக இருந்தன. இன்றும் தட்டச்சு மற்றும் கணினி தட்டச்சு ஆகியவை எழுத்தர் பணிக்கு வலியுறுத்தப்படுகின்றன அல்லது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அவை இயந்திர தட்டச்சுப்பொறிகள் கிட்டத்தட்ட உபயோகமில்லாதவையாகி ஸ்கிராப்பாக விற்கப்பட்டன. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் தட்டச்சுப்பொறிகளும் கூட அதே நிலையை அடைந்தன.
வகுப்பறையில் திறமை தீர்மானிக்கப் படும்: அதுபோல சரித்திரம் போன்ற கலைசார் படிப்புகள் வேலை எனும்பொழுது, மதிப்பிழந்து வருகின்றன. அதிலும் ஆங்கிலம் எழுத-படிக்க-பேச சரியாக வராது என்றால், அலுவலகங்களில் வேலை செய்வது கடினமாகி விடுகிறது. அந்நிலையில் உதவி / துணை பேராசிரியர் பதவிக்குச் சென்றால், அவர்கள் எப்படி பாடங்கள் நடத்துவர், போதிப்பர், விளக்குவர் என்று தெரியவில்லை., ஆகவே, நிச்சயம் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும், தயார் படுத்திக் கொண்டு, சவல்களை சம்மாளிக்க வேண்டும். தங்களது வேலைக்கு உகந்தவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெறும்பட்டங்கள் / சான்றிதழ்கள் உதவாது, வேலை செய்யும் விதம் தான் அவர்களின் உண்மையான தகுதி, திறமை முதலியவற்றை வெளிப்படுத்தும். ஏனெனில், வகுப்பறையில் பாடத்தை போதிக்கும் பொழுது, ஏமாற்ற முடியாது. மாணவர்கள் தராதரத்தை கண்டு பிடித்து விடுவார்கள், கண்டு கொள்வார்கள், மதிக்க மாட்டார்கள்.
தொல்லியல்படிப்பிற்குதிடீர்மவுசுஏன்?: கீழடி அகழாய்வுக்குப் பிறகு, தொல்லியல் திடீஎன்று பிரபலமாகி, எல்லோரையும் உசுப்பேற்றியுள்ளது போலிருக்கிறது. 2000 வரை 10-15 பேரே சேர்ந்து படிக்கும் துறைக்கு, இன்று அதிகமாகவே விண்ணப்பித்து வருகிறார்கள். வருடா வருடம் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. படிப்புப் பற்றியும் அதிக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன[1]. உதவித் தொகையுடன் படிக்கலா, அரசு அழைப்புப் போன்ற செய்திகளும் உண்டு[2]. இதுவரை தமிழ், வரலாறு, தொல்லியல் முதலான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவா்கள் மட்டுமே முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், வளா்ந்து வரும் தொழில்நுட்பம், பன்முகத் தன்மை வாய்ந்த தொல்லியல் போக்குகள் முதலியவற்றைக் கருத்தில்கொண்டு இனி முதுகலை, முதுநிலைஅறிவியல், முதுநிலை பொறியியலில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவா்களும் முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது[3]. இதையும் யாரும் எதிர்க்கவில்லை.
தொல்லியல்படிப்பிற்குபொறியியல்மாணவர்கள்விண்ணப்பிக்கலாம்: பொறியியல் மாணவர்கள் எதற்கு இபடிப்பிற்கு வரவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை, எதிர்க்கவில்லை, தடுக்கவில்லை. இந்த தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் மாதம் ரூ.5,000 கல்வி உதவித் தொகையுடன் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரிவான தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் தொல்லியல் மட்டுமின்றி அருங்காட்சியகங்கள், சுற்றுலா மற்றும் கோயில்கள் உள்ளிட்ட மரபுசார் இடங்களின் பாதுகாப்பு மற்றும் கல்விப் புலத்திலும் சிறப்பாகச் செயல்படமுடியும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்[4]. ஒரு பக்கம் தமிழகத்தில் 1000 வருடங்களுக்கு முந்தைய கோவில்கள் எவ்வாறு கவனிப்பார் இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன மற்றும் இருக்கும் கோவில்களிலும் நாத்திகம்-சித்தாந்தம் பேசு அரசுகளால் சேதமடைந்து வருகின்றன என்பதும் தெரிந்த விசயமே. அந்நிலையில் புராதக சின்னங்கள், கோவில்கள், கட்டிடங்கள் இவற்றை பாதுகாக்க, புதிய படிப்புகளை, துறைகளை உண்டாகலாம். அதே போல எம்.ஏ-தொல்லியலுக்கும் ஐ.டி என்று பலதுறை பட்டயம் பெற்ற மாணவர்கள் எல்லாம் சேர்ந்து வருகிறார்கள். இது படிப்பிற்காக போட்டியா அல்லது வேலைக்காக போட்டியா என்று புரியவில்லை. ஏதோ அர்ச்சகர் வேலைக்கு போட்டி போன்று, ஒரு பிரமிப்பை உண்டாக்கி வருவது தெரிகிறது.
தொல்லியல்பட்டதாரிகள்சரித்திரவேலைக்குவிண்ணப்பிக்கலாகாதா?: இருப்பினும், அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள, இணையில்லாத கல்வி பட்டியல் குறித்த அரசாணையால், சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை படிப்பை முடித்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்[5]என்று செய்தி வந்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் வரையறைக்கு உட்பட்டு, எந்தெந்த படிப்புகள் எந்தெந்த படிப்புகளுக்கு இணையில்லாதவை என்பது குறித்து, பிப்ரவரி மாதம் 2024 வல்லுனர் குழு ஆலோசித்தது[6]. அந்தக்குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதில், தாவரவியல், வரலாற்று துறை படிப்புகளுக்கு இணையில்லாத படிப்புகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, சென்னை பல்கலையால் வழங்கப்படும் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் எம்.ஏ., பட்டம், எம்.ஏ., வரலாறு பட்டத்துக்கு இணையானது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
பண்டையவரலாறுமற்றும்தொல்லியலில்எம்.ஏ., முடித்தவர்கள்சரித்திரம்–வேலைக்குவிண்ணப்பிக்கமுடியாது: இதனால், வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு, சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை பல்கலையில், எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்றவர்கள் கூறியதாவது: “தற்போது, ஆசிரியர் தேர்வாணையம் வரலாற்றுத்துறை பேராசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு, சென்னை பல்கலையில் எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்று, பிஎச்.டி., ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளோரும் விண்ணப்பிக்க முடியாத வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில தொல்லியல் துறைகளிலும், வரலாறு சார்ந்த கல்வித்துறையிலும், சென்னை பல்கலையில் படித்தோர் தான் அதிகளவில் சாதித்துள்ளனர்.”
தமிழகஅரசுதவறானஅரசாணையைவெளியிட்டுள்ளது:. “தமிழகத்தில் நடந்துள்ள பல்வேறு அகழாய்வுகளை அவர்களே திறம்பட செய்து, புதிய வரலாற்றுக்கு துணை புரிந்துள்ளனர். அதேபோல், நாணயம், கல்வெட்டு, சுவடிகள் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து, புதிய வரலாற்றை எழுதி உள்ளனர். தொல்லியல் துறை வேலைவாய்ப்புகளுக்கு வரலாற்று துறையினர் விண்ணப்பிக்கும் தகுதி பெற்றுள்ள நிலையில், வரலாற்றுத்துறை வேலைவாய்ப்புக்கு தொல்லியல் துறையினர் விண்ணப்பிக்க முடியாத வகையில், தமிழக அரசு தவறான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால், வரலாறு பாடத்திட்டத்தில் உள்ள பண்டைய வரலாறு, தொல்லியல் குறித்த பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்படுவதுடன், சென்னை பல்கலையில் படித்து அகழாய்வுகளை செய்து, பல வரலாற்று நுால்களை எழுதிய, தகுதியும் திறமையும் உள்ள நுாற்றுக்கணக்கான கல்வியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். இது, தொல்லியல் படிப்பை முடித்தோருக்கும், படிப்போருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், தஞ்சை தமிழ் பல்கலையில் தொல்லியல் படிப்பை முடித்தவர்கள், வரலாற்றுத் துறை பணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்படவில்லை. இது பாரபட்சமான அரசாணையாக உள்ளது. இதை மாற்றி, பழைய நடைமுறையை தொடர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொல்லியல்படிப்பின்முக்கியத்துவம்: வரலாற்றுத் தொன்மையை ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கு அடிப்படைத் தரவுகளாக இருப்பவை தொல்லியல் எச்சங்களே. அத்தகைய தொல்லியல் கல்வியை இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கற்பிக்கின்றன[7]. குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் முதுகலை, இளங்கலை, பட்டயப் படிப்புகளில் பண்டைய வரலாறு, தொல்லியல், கலாச்சாரம், தொல்லியல், அருங்காட்சியகவியல், பாதுகாப்புத் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை வழங்குகின்றன[8]. குறிப்பாக டெக்கான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 1939 முதல் பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல் பாடப்பிரிவுகளில் முதுகலை தொடங்கி முனைவர் பட்டம் வரை வழங்கிவருகிறது. மேலும், கணிணி வழியில் ஆய்வுகள், தொல்லியல் பொருட்களை வேதியியல் பகுப்பாய்வு செய்வது, புதைபடிவ ஆய்வியல், தொல்லுயிரியல் ஆய்வுகள், மகரந்தவியல் ஆய்வுகள் எனத் தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வகங்களுடன் மிகச் சிறந்த தொல்லியல் ஆய்வுக் கல்வியை வழங்குகிறது. புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களான சங்காலியா, வசந்த் சிண்டே, சாந்தி பப்பூ போன்ற ஆய்வாளர்களை நாட்டுக்கு வழங்கியது டெக்கான் பல்கலைக்கழகம்.
[3] தினமணி, புதியதாகஅறிமுகப்படுத்தப்பட்டதொல்லியல்பட்டயப்படிப்புக்கு 320 போ்விண்ணப்பம், Published on: 30 ஆகஸ்ட் 2020, 3:46 am; Updated on: 30 ஆகஸ்ட் 2020, 3:46 am.
கல், சோடாபாட்டில், பீர்பாட்டில்களைஒருவர்மீதுஒருவர்வீசிதாக்கினர். உருட்டுகட்டையாலும்தாக்கிக்கொண்டனர்: இவையெல்லாம் எப்படி உடனடியாக இவர்களுக்குக் கிடைக்கும் என்று தெரியவில்லை. மாறாக, இவர்கள் ஏற்கெனவே வைத்திருந்தனர் எனும் பொழுது, அத்தகைய வன்முறைக்குத் தயாராக இருந்தனர் என்றாகிறடு. இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். ரயில் நடைமேடையில் நடந்த இந்த மோதல்சம்பவம், பயணியரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிக் கொண்டதால், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. என்றாலும், இதனால், மாணவர்களின் வன்முறை அதிகமாகும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கருதியிருக்கலாம்.
‘சிசிடிவிகேமரா‘வில்பதிவை வைத்து கைது, வழக்குப் பதிவு: உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வன்முறை சம்பவம், ‘சிசிடிவி கேமரா’வில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட இரண்டு கல்லுாரிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் மீது, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1]. இது தொடர்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த 60 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் பெரம்பூர் ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்[2]. மேலும் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்[3]. மற்ற மாணவர்களைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகிறது[4]. சட்டத்தை மீறி பொது சொத்தை நாசப் படுத்துவது, அமைதியை குளைப்பது என்பதெல்லாம் படிக்கும் மாணவர்களுக்கு உரிய குணங்கள் அல்ல.
வன்முறையில் ஈடுபட்ட 60 மாணவர்களையும்நிரந்தரமாகநீக்கபரிந்துரைசெய்த போலீஸ்: ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., ரமேஷ் கூறியதாவது[5]: “இந்தமோதலில்ஈடுபட்ட 60 மாணவர்களையும்நிரந்தரமாகநீக்கபரிந்துரைசெய்து, இரண்டுகல்லுாரிகளின்முதல்வர்களுக்கும்கடிதம்அனுப்பிஉள்ளோம்.சென்னைபுறநகரில், 50க்கும்மேற்பட்டபிரதானகல்லுாரிகள்இருக்கின்றன. ஆனால், ஒருசிலகல்லுாரிமாணவர்கள்அடிக்கடிமோதிக்கொள்வதுநல்லதல்ல.பலமுறைபிடித்துஎச்சரிக்கைவிடுத்தும், அவர்கள்பொதுஇடங்களில்ஒழுங்குமுறைகளைபின்பற்றுவதில்லை. இனி, சம்பந்தப்பட்டமாணவர்கள்மீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கப்படும்,” இவ்வாறு அவர் கூறினார்[6]. பொறுப்புடன் தான் இதை சொல்லி இருக்கிறார், போலீஸ் அதிகாரி என்பது மட்டுமில்லாமல் ஒரு தந்தை என்ற முறையிலும் கூறியிருக்கிறார் என்பதை நன்றாக கவனிக்கலாம். இதே போன்ற பொறுப்பு இந்த மாணவர்களின் தாய்-தந்தையர்களுக்கும் இருக்க வேண்டும்.
தினமும் மணவர்கள் ஒழுங்காக வகுப்புகளில் உட்கார்ந்து பாடம் கேட்டாலே, பாதி பிரச்சினை தீர்ந்து விடும்: முதலில் படிக்கும் கல்வி நிறுவனங்களில் அதாவது பள்ளி கல்லூரிகளில் அவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை, வகுப்பில் கூட ஒழுங்காக இருப்பதில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கின்ற வேளையில், நேரங்களில் வெளியில் உட்காருவது, சுற்றி வருவது என்றெல்லாம் செய்து வருகிறார்கள். ஒரு 50 பேர் இருந்தால், ஒரு 10 மாணவர்கள் தான் வகுப்பில் உட்கார்ந்து பாடங்களை கேட்கிறார்கள். மற்றவர்கள் ஊரைச் சுற்றி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த 10 மாணவர்களையும் வகுப்புக்கு செல்ல விடாமல் முயற்சிகளையும் செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. ஆகவே இத்தகைய ஒழுங்கீனங்களை முதலில் மாணவர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும். அட்டென்டென்ஸ் / தினசரி வருகை, குறைந்த பட்சம் மதிப்பெண் கொடுப்பது, போன்ற சலுகைகளால், ஏதோ தண்டம் கட்டிவிட்டால், பரீட்சை எழுதி விடலாம், டிகிரி / பட்டம் கிடைத்து விடும் என்பதால், வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற போக்கும் மாறி விட்டது.
சினிமா, ஊடகங்கள் ஒழுன்கீனங்களுக்குக் காரணம்; இப்பொழுதெல்லாம் பிரச்சனை, பிரச்சினையின் மூல காரணம், அது எவ்வாறு உருவாகிறது, அதை தவிர்ப்பது எப்படி என்பதெல்லாம் விட்டுவிட்டு, வேறு வகையில் விளக்கம் கொடுத்து, ஒரு நிலையில அதனை நியாயப்படுத்தும் முறைக்கு கூட இன்றைய சித்தாந்தவாதிகள், அரசியல்வாதிகள், ஏன் மனோதத்துவ ஆலோசர்கள் கூட செய்து வருகிறார்கள். சமூக கட்டுப்பாடு, கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பொது இடங்களில் எப்படி ஒழுங்காக இருக்க வேண்டும் முதலியவற்றை எல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை, மாணவர்கள் மீறும் பொழுது உடனடியாக அவர்கள் கட்டுப்படுத்தப்படுத்தப் பட வேண்டும். அறிவுரை அல்லது தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால், அவர்கள் செய்வதெல்லாம் சரி, ஏற்றுக் கொள்ளப் பட்டவை என்ற மனநிலை வரும்பொழுதும், மற்ற ஊடகங்கள் சினிமா போன்றவற்றில் வருகின்ற வன்முறை காட்சிகள், அடிதடி சண்டைகள் முதலியவற்றைல்லாம் வீட்டில் கூட உட்கார்ந்து மற்ற நண்பர்கள் குடும்பத்தினர், மற்றும் பெரியவர்களுடன் கூட பார்க்கும் பொழுது இதெல்லாம் ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது என்ற மனநிலை உண்டாகலாம். சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்பதை கூட இக்கால சிறுவர்கள் இளைஞர்கள் மற்றவர்கள் நினைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதலில் அத்தகைய போக்கை மாற்றவேண்டும்.
கல்வியில் ஒழுங்கீனம் ஏற்பட்டால், சமூக்சமே சீரழிந்து விடும்; பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றில் வரைமுறை, சட்டதிட்டம் என்றெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது. அதேபோல கல்வி கற்பிக்கும் ஒவ்வொரு துறை தலைவர், பேராசிரியர், விரிவுரையாளர் என்று பாடம் எடுக்கும் மற்றவர்களும் அத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது எல்லாம் ஒவ்வொரு பல்கலைக்கழகம் கல்லூரிகளில் துணைவேந்தர் முதல் பணியாற்றம் மற்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள், போதிக்கும் ஆசிரியர்கள் என்று வரும்பொழுது, அவர்கள் மீதும் ஒழுங்கீனங்கள், சட்டமீறல்கள், ஊழல் என்று, குற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகின்றன. இவையெல்லாம் ஊடகங்களிலும் விவரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் மீதான மரியாதை குறைந்து வர்கிறது. துறை தலைவர் பேராசிரியர் போன்றவர்களே, இப்படி இருக்கிறார்கள், இவர்களிடம் நமக்கு எப்படி ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுப்பது என்ற ஒரு மன போக்கும் உண்டாகும். இந்த நிலையில், மன நிலையில் சென்று பதியும் பொழுது, இருக்கும் கொஞ்சம் மரியாதையும் பயமும் கூட போய்விடும் / போய் விடுகிறது. அந்நிலையில் இவர்களே அந்த வன்முறைகளில் விடுகிறார்கள் இதனால் தான் படிப்பு மற்றும் கல்வித் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் குறைந்து கொண்டு, மற்ற காரியங்கள், ஒழுங்கீனங்கள், வன்முறைகள் என்று பல சமூக தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.
[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ரயில்நிலையத்தில்பீர்பாட்டில்வீசிமோதல்: மாணவர்களைகல்லூரியில்இருந்துநீக்கரயில்வேபோலீசார்கடிதம்,WebDesk, 14 Feb 2024 13:32 IST.
பலஉயர்ந்தவகளைஉருவாக்கியதுபச்சையப்பன்கல்லூரி: சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக திகழும் பச்சையப்பன் கல்லூரி, 1842-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டில் தனியாரால் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற பெயரைப் பெற்றதாகும். வள்ளல் பச்சையப்ப முதலியாரின் (1754-1794) ஆசைப்படி பள்ளியாக உருவாக்கப்பட்டு, 1889-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியாக தரம் உயர்ந்தது. அதிலிருந்து தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றும் முக்கிய தலைவர்கள் உருவாகும் இடமாக பச்சையப்பன் கல்லூரி மாறியது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் சி. என். அண்ணாதுரை தொடங்கி, க. அன்பழகன், நெடுஞ்செழியன், துரைமுருகன், கணிதமேதை ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், தமிழறிஞர் மு.வரதராசனார், ஆர். எஸ். மனோகர், எனப் பட்டியல் நீண்டு, நா. பார்த்தசாரதி, கவிஞர் வைரமுத்து நா. முத்துக்குமார் என தொடர்ந்துகொண்டே போகும். தவிர, விளையாட்டு வீரர்கள், சிறந்த மருத்துவர், பொறியாளர், அரசு அதிகாரிகள் என்றும் பலர் இருக்கிறார்கள்.
அரசியலால் ஒழுக்கம் சிதைந்து சீரழிந்த கல்லூரி: மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எண்ணற்ற தேசிய தலைவர்களும் வந்து உரையாற்றிய இடமாக திகழ்ந்த பச்சையப்பன் கல்லூரி, லட்சக்கணக்கான மாணவர்களை சமூகத்திற்குக் கொடுத்திருக்கிறது. அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கவிஞர்கள், பேராசிரியர்களை உருவாக்கியது, ஏழை எளிய மாணவர்கள் பலர் பயின்று, தங்கள் வாழ்க்கையில் கல்வியின் ஒளி கண்ட பச்சையப்பன் கல்லூரி, தற்போதோ தலைகீழ் நிலைமையைக் கண்டு தவித்து வருவதே நிதர்சனம். முன்பெல்லாம் பச்சையப்பன் கல்லூரி என்ற பெயரைக் கேட்டு மரியாதை செலுத்திய தமிழ் மக்கள், இப்போது முகம் சுழிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இரண்டு நிலைமைகளுக்கும் காரணம் அதில் படித்த மாணவர்களின் நடவடிக்கைகள் என்பதே வேடிக்கையான விஷயம்[1]. பிற கல்லூரி மாணவர்களுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மோதல், அரசுப் பேருந்துகளில் ரூட் தல விவகாரம், கல்லூரியின் நிர்வாகத்திலும் பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு என, பெயர்போன கல்லூரியின் பெயர் நாளுக்கு நாள் பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறது[2].
மாநிலக் கல்லூரியும் அப்படியே; சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College), தமிழ்நாட்டில், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னோடி என்ப்படுகின்றது. இக்கல்லூரி ஹயர் பர்டன் பவல் எனும் கணிதவியல் பேராசிரியரால் 1840 இல் திறக்கப்பட்டது. சிறந்த முன்னாள் மாணவர்கள் பட்டியலில் சிலர்:
தி. முத்துச்சாமி அய்யர் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி
ச. வெ. இராமன் – அறிவியலாளர்
சுப்பிரமணியன் சந்திரசேகர் – இயற்பியலாளர்
எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் – கணிதவியலாளர்
சிதம்பரம் சுப்பிரமணியம் – முன்னாள் மத்திய அமைச்சர்
ம. சிங்காரவேலர் – விடுதலைப் போராட்ட வீரர்
நெ. து. சுந்தரவடிவேலு – சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
சாலை இளந்திரையன் – எழுத்தாளர் – தமிழறிஞர்
சாலினி இளந்திரையன் – எழுத்தாளர்
அப்துல் ஹமீத் கான் முன்னாள் மேயர்
எம். எஸ். கிருஷ்ணன் புவியியலாளர்
ரூட்டு-தல பிரச்சினை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது[3]. அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன[4]. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி 14-02-2024 அன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. “சென்னைகடற்கரைரயில்நிலையத்தில்இருந்துஅரக்கோணம்நோக்கிமின்சாரரயில்ஒன்றுநேற்றுபிற்பகல்சென்றுள்ளது.” என்கிறது நக்கீரன்[5]. “இந்தரயிலில்மாநிலக்கல்லூரியைச்சேர்ந்தஏராளமனமாணவர்கள்பயணம்செய்துள்ளனர். அதன்படிஇந்தரயில்பட்டரவாக்கம்ரயில்நிலையத்திற்குவந்துள்ளது. அப்போதுஅங்குகாத்திருந்தபச்சையப்பன்கல்லூரிமாணவர்கள், மாநிலக்கல்லூரிமாணவர்கள்மீதுகற்கள்மற்றும்பாட்டில்களால்தாக்கியுள்ளனர்[6]. பதிலுக்குமாநிலக்கல்லூரிமாணவர்களும், பச்சையப்பன்கல்லூரிமாணவர்கள்மீதுதாக்குதல்நடத்தியுள்ளனர்.”
ரெயிலில், ரெயில் நிலையத்தில் வன்முறை கூடாது; காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது[7]. இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்[8]. பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது[9]. திடீரென்று ஏற்பட வாய்ப்பில்லை, மாறாக, அவர்கள் திட்டமிட்டே செய்திருக்கக் கூடும். இருப்பினும், ஆயிரக் கணக்கான, பொது மக்கள் பயணிக்கும் ரெயிலில், ரெயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டது, சட்டத்தை மீறியகுற்றமாகும். அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர்[10]. இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்[11]. இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது[12]. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர். உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.
[7] தமிழ்.ஏபிபி.லைவ், Train Violence : மின்சாரரயிலில்மோசமாகதாக்கிக்கொண்டமாணவர்கள்! சென்னையில்பயங்கரம்!, By : சுகுமாறன் |PUBLISHED AT : 14 FEB 2024 08:09 PM (IST), Updated at : 14 Feb 2024.
[9] இடிவிபாரத், பீர்பாட்டிலைவீசிமாணவர்கள்மோதல்.. ரணகளமானபட்டரவாக்கம்ரயில்நிலையம்– 60 பேர்மீதுவழக்குப்பதிவு!, By ETV Bharat, Tamil Nadu Desk. 14 Feb 2024.
[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சென்னை: பீர்பாட்டில்வீசிமாணவர்கள்மோதல்.. கலவரபூமியானரயில்நிலையம்.. 3 பேரைஅலேக்காகதூக்கியபோலீஸ்!, Raghupati R, First Published Feb 14, 2024, 7:55 PM IST, Last Updated Feb 14, 2024, 7:55 PM IST.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (2)
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது: போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மற்றும் அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்[1]. பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் அளித்தார்[2]. அப்படியென்றால் கையும்-களவுமாக மாட்டிக் கொண்டார் என்றாகிறது. அவர் அளித்த புகாரின் படி சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்[3]. இதனையடுத்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் துவங்கியது மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. அதன் பிறகு, முறையாக துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்[4].
நிறுவனம் நடத்தி மோசடிகளில் ஈடுபட்டது: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்[5]. பிறகு மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற விவகாரங்கள் குறிப்பிடப் படவில்லை என்றாலும், நடந்தேரின. விசாரணையில், துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் [Periyar University Technology Entrepreneurship and Research Foundation (PUTER Foundation)] என்ற தனி நிறுவனத்தை துவக்கியது தெரியவந்துள்ளது[6]. பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கினார். இது தவிர, தங்கவேல் உள்பட 3 பேர் இணைந்து ‘அப்டெக்கான் போரம்’ என்ற மற்றொரு அமைப்பையும் தொடங்கி உள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்படும். இவர்கள் மூன்று பேரும் பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-இன் படி பொது ஊழியர்களாக கருதப்படுகிறார்கள்.
பாமக தொடர்ந்து இத்தகைய ஊழல்கள் பற்றி அறிக்கை வெளியிட்டு வருவது: முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கையில்[7], “பெரியார் பல்கலைக்கழகத்தை அதன் துணைவேந்தரும், கூட்டாளிகளும் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே அதில் புதிய நிறுவனத்தை தொடங்குவது சட்டவிரோதம். இதற்காகவே துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும்,” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது[8]. இருப்பினும், அரசியல் கலந்து விட்டது, அதில் திராவிடக் கட்சிகளின் பங்கு உள்ளது என்றால் அமுக்கித்தான் வாசிப்பார்கள்.
கைதானவர் உடனடியாக ஜாமீன் பெற்று வீடு திரும்பியவர்: பின்னர் நீதிபதி தினேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், துணை வேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி விடுவித்தார்[9]. இத்தனை புகார்கள் இருந்டாலும், ஜாமீன் எப்படி வழங்கப் பட்டடு என்பது தெரியவில்லை. இவர் வெளியே இருந்தால், ஆதாரங்கள் எல்லாவற்றையும் அழித்து விடமாட்டாரா, அத்தகைய பிரச்சினை இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. மேலும், சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 7 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், அனுமதியின்றி வெளியூருக்கு செல்லக்கூடாது என்றும், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்[10]. இவையெல்லாம் சாதாரண கன்டிசன்கள் தான்.
திராவிடத்துவத்தில்–பெரியாரிஸத்தில்ஊழல், சொகுசுவாழ்க்கை, தற்கொலை, இறப்பு: மனித உயிர் மிகவும் அபூர்வமானது, புனிதமானது, அதனை எடுக்க-எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமையில்லை. என்னத்தான் நாத்திகம், பெரியாரிஸம் எல்லாம் பேசினாலும், வாழத்தான் அவர்களுக்கும் ஆசையுள்ளது, அதிலும், அனுபவித்து வாழவேண்டும் என்ற பேராசை உள்ளது. ஆகவே, உண்மையில் அவர்கள் இறப்பிற்கு அஞ்சினாலும், இறப்பதற்கு விரும்புவதில்லை. ஆத்மா, உயிர், மூச்சு, உயிர் உடலிலா, மூச்சிலா, மூளையிலா, இதயத்திலா என்றெல்லாம், மண்டையைக் குடைந்து கொள்ளாமல், வாழத்தான் இரும்புகிறார்கள். அந்நிலையில் ஊழலுக்கு பயப்படாதவர்கள், ஊழலில் சிக்கிவிடுவோம் என்று பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை. சாவுக்கே சாவு கொடுப்போம் என்ற ரீதியில் அளப்பவர்கள், ஊழலுக்கே ஊழல் கொடுத்து, ஊழல் செய்து, உழல வைத்து விடுவோம் என்று சொல்லாமலா இருப்பர்? இருப்பினும் கல்வி என்பதால், இனிமேலாவது, அதில் ஊழலை நீக்கி, சுத்தமாக்கி, ஒழுங்கான-ஒழுக்கமான படிப்பை போதித்தால், இனி உருவாகும் மாணவ-மாணவிகள் மக்களுக்கு, சமூகத்திற்கு, நாட்டிற்கு உகந்தவர்களாக இருப்பர். இதை மனத்தில் வைத்துக் கொண்டாவது, திராவிடத்துவவாதிகள், ஊழல் விற்பன்னர்கள் முதலியோர் திருந்த வேண்டும், தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சாவதை விட, ஒழுங்காக வாழலாம், மக்கள் பாராட்டுவார்கள்.
[5] தமிழ்.இந்து, நிறுவனம்நடத்திமுறைகேடு: சேலம்பெரியார்பல்கலைக்கழகதுணைவேந்தர்கைது, செய்திப்பிரிவு, Published : 27 Dec 2023 05:19 AM, Last Updated : 27 Dec 2023 05:19 AM.
[9] தமிழ்.நியூஸ்.18, முறைகேடுவழக்கில்கைதானபெரியார்பல்கலை. துணைவேந்தருக்குநிபந்தனைஜாமின்!, FIRST PUBLISHED : DECEMBER 27, 2023, 9:49 AM IST, LAST UPDATED : DECEMBER 27, 2023, 9:49 AM IST.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (1)
பல்கலைக்கழக ஊழல்கள், கைதுகள் சகஜமாகி விட்டன: தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதும், துணைவேந்தர்கள் கைதாவது என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. கல்வி, கல்வித் துறை, அல்கலைக் கழகம் என்றெல்லாம் வரும்பொழுது, ஏதோ ஒரு கோவில், புனிதமான இடம் என்றெல்லாம் மதிப்பு, மரியாதை, கௌரவம் என்றெல்லாம் இருந்தது. ஆனால், இப்பொழுதோ, ஏதோ செல்லக் கூடாத இடத்திற்கு செல்கிறோமோ, போனால் பிரச்சினை வருமோ அல்லது இருக்கும் பிரச்சினை பெரிதாகி விடுமோ என்ற அச்சமான சிந்தனைகளும் வருகின்றன. தமிழகத்தில் கடந்த 50-70 ஆண்டுகளில் கல்வியில் சிறந்தவர்கள் பெயரில் எதாவது பல்கலைக் கழகம் இருக்கிறதோ இல்லையோ, வரிசையாக, அண்ணா, கருணாநிதி, பெரியார், எம்லிஆர், ஜெயலலிதா என்று முதலமைச்சர்கள் பெயரில் உள்ளன. பிறகு, காந்தி, ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி, அம்பேத்கர் என்றும் உள்ளன. இவ்வாறு தான், சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது[1]. இதன் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது[2].
தொடந்து துணைவேந்தர்கள் கைது செய்யப் படுவது: தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஊழல் என்பது புதிதல்ல, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இரண்டு முன்னாள் துணைவேந்தர்கள் 2018 ஆம் ஆண்டில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகத்தால் (டிவிஏசி) [Directorate of Vigilance and Anti-Corruption (DVAC).] கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பதிவு செய்யப்பட்டனர். அதே ஆண்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவிப் பேராசிரியர் பணியை முறைப்படுத்துவதற்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இங்கு, கடந்த 3 ஆண்டுகளில் 141 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பணிக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. கையூட்டு பெறப்பட்ட பணிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்திருந்தாலும் கூட, தகுதியற்ற பலர் தான் போலிச்சான்றிதழ் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர், இப்படி புகார்களும் செய்திகளும் வெளிவந்தன. பிப்ரவரி 28, 2016, ஓய்வு பெறும் நாளில், உதவி தாளாளர் சி. பெரியசாமி [Deputy Regitrar C Periyaswamy] சஸ்பென்ட் செய்யப்பட்டதாக, சுவாமிநாதன், துணைவேந்தர் [Dr S Swaminathan, Vice Chancellor] அறிவித்தது, திகிலடையச் செய்தது.
2010 முதல் 2023 வரை பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்: 2013-15 காலத்தில் செலவிற்கு என்று ரூ. 35 லட்சம் எடுத்துக் கொண்டதாகவும், ஆனால், இதுவரை கணக்குக் கொடுக்கவில்லை என்று குற்றம் சொல்லப்பட்டது[3]. அவர் கணக்கு காட்டாவிட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அறிவித்தார். அவரது இடைக்கால நீக்கம் விலக்கிக் கொள்ளப் பட்டது என்ற செய்தி வந்தாலும், அந்த போலி ரசீதுகள் விவகாரம் என்னாயிற்று என்று சொல்லப்படவில்லை. போராட்டத்தாலும், முத்துச்செழியன், துணைவேந்தர் ஓய்வு பெற்றதால் அவர் மூன்று பேருக்க்கு வேலைமாற்றம் செய்ய பிறப்பித்த ஆணையை ரத்து செய்ததாலும், ஒப்புக் கொண்டு ரத்தானது என்று குறிப்பிட்டுள்ளது. “தி.இந்து” 2013 செய்தியை நவம்பர் 2016ல் திருத்தியுள்ள நிலையும் நிலைமை விளக்கப்படவில்லை[4]. உள்-மற்றும்-வெளி தணிகைக் குழுக்களின் அறிக்கைக்கள் கூட ஆவணங்கள் சரி பார்த்து மற்றும் கொடுத்த உரிய பதில்-விளக்கங்களை வைத்துத் தான் முடிவெடுப்பர், தமது, தணிக்கை-எதிர்ப்புகளை முடிவுக்கு எடுத்து வருவர். ஆனால், செய்திகள் பொது மக்களின் முன் வந்த பிறகு, காரணம் வெளியிடப்படாமல் இருப்பது, எதையோ மறைப்பதைப் போலத்தான் உள்ளது.
2021ல் பதவிக்கு வந்த ஜெகநாடன் மீது ஆரம்பத்திலிருந்தே புகார்: இந்த பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்[5]. வந்ததிலிருந்தே அவருக்கு கை அரித்துக் கொண்டே இருந்தது போலும்[6]. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது[7]. அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[8]. 2010லிருந்து நடக்கும் ஊழல் விவகாரங்களைக் கவனித்தால், இதுவும் அந்த வகையில் சேர்ந்து விடும் போலிருக்கிறது. சமீபத்தில் பணியாளர்கள் நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றாதது, பல்கலைக்கழக பேராசிரியர் ஆராய்ச்சி படிப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன[9]. இதற்கெல்லாம் காரணம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்து வரும் பல்கலைக்கழக துணைவேந்த ஜெகநாதன் என்பது வெளிப்படையாக இருந்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை[10]. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்து நல்ல சேவை செய்தால் சரி, இத்தகைய ஊழல் செய்தாலும், அதிகாரம் சிறந்து விடுகிறது போலும். ஏற்கனவே 12 வகையான முறைகேடுகள் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த, கடந்த ஜனவரி மாதம் 2023 தமிழக அரசு உயர்நிலை குழுவை அமைத்தது. அதன் பெயரில், உயர்நிலைக் குழுவினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தினர்.
ஒரே மாதிரியான செய்தி- தலைப்புகள் வேறு: பாலியல் விசாரணை கமிட்டி போல, இத்தகைய விசாரணை கமிட்டிகளும் பெயரளவில், ஏதோ விசாரணை செய்து, விவகாரங்களை அமுக்கத் தான் பார்க்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த இதே போன்ற விவகாரங்கள், செய்திகள், மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான முடிவுகளைத் தான் கவனிக்க முடிகிறது. இப்பொழுதும் அதே பாணியில் தான் செய்திகள் வெளிவந்துள்ளன. தலைப்புகள் தான், ஏதோ அவரவர்கள் பெரிதாக புலன் விசாரணை செய்து, எதையோ புதியதாகக் கண்டு பிடித்து விட்டால் போல, வகைவகையா போட்டு, அரைத்த மாவையே அரைத்துள்ளனர்:
[3] Salem Periyar University here has suspened its Deputy Regitrar C Periyaswamy on his retirement day on charges of misappropriation of funds to the tune of Rs 35, university sources said today. Dr S Swaminathan, Vice Chancellor of the university said Periyaswamy used to withdraw amount from the university funds for making arrangements for examinations. But he has not provided accounts regarding the expenditure for the Rs 35 lakh he has withdran from 2013-15 till February 28. He was suspended on his retirement day. Unless proper accounts were given or reimburse the amount, crimial case will be booked against him, Swaminathan said.
Business Stanard, Deputy registrar suspended, Press Trust of India | Salem Last Updated at March 1, 2015 14:46 IST.
[4] The suspension of Head of the Physics Department and former Vice-Chancellor in-charge of Periyar University V. Krishnakumar has been revoked by the five-member Vice-Chancellor Convenor Committee (VCCC) on Friday. He was placed under suspension by former Vice-Chancellor K. Muthuchelian in an order signed by him on September 6, the day before his last day in office as VC, following which there were protests condemning the suspension. On Friday, the VCCC members met on the varsity premises for their first sitting after the tenure of the former VC ended. The order that was signed by all members of the committee was handed over to Mr. Krishnakumar, after which he joined duty immediately. It stated that he had been reinstated to his original position. Members of the struggle committee, who organised the demonstrations, claimed that the VCCC members reportedly agreed to consider their other demand seeking cancellation of the transfer orders issued to three non-teaching staff by Mr. Muthuchelian towards the end of his tenure. They added that based on these developments they had decided to end their agitations on Friday.
The Hindu, Suspension of former V-C in-charge of Periyar University revoked, STAFF REPORTER, SALEM:, SEPTEMBER 14, 2013 09:37 IST; UPDATED: NOVEMBER 11, 2016 05:47 IST.UPDATED: NOVEMBER 11, 2016 05:47 IST
[5] ஏபிபி.லைவ், சேலம்பெரியார்பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர்அதிரடிகைது! காரணம்என்ன?,,By: சதீஷ் குமார், Published at : 26 Dec 2023 05:58 PM (IST)| Updated at : 26 Dec 2023 06:24 PM (IST).
கல்லூரிகளில்முதலீடுசெய்பவர்கள்ஏன்தரத்தைப்பற்றிகவலைப்படுவதில்லை?: பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, கடந்த 25 வருடங்களாக, நிறைய விசயங்கள் அலசப் பட்டு, எடுத்துக் காட்டியாகி விட்டது. பணத்தை கோடிகளில் போட்டு, கோடிகளில் அள்ள வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், நிறைய கல்லூரிகள் உருவாக்கப் படுகின்றன. அரசியல்வாதிகள் தமது பணத்தை முதலீடு செய்வது போல இத்தகைய கல்லூரிகளை உருவாக்கி வருகிறார்கள். ஆனால், தேவையான கட்டுமானங்கள், சோதனைக் கூடங்கள், ஒவ்வொரு பாடத்தையும் போதிக்க தகுதியான ஞானம் கொண்ட ஆசிரியர்கள் என்றெல்லாம் இல்லாமலேயே இவர்கள் கல்லூரிகளை ஆரம்பிக்கிறார்கள். இதனால், கல்லூரிகளில் வகுப்பறைகள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை, சோதனைக் கூடங்கள் இல்லை என்று தரமற்ற முறையில் மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள்.
இதில்எந்தமாடல்பின்பற்றப்படுகிறது?: அட்மிசன் நேரத்தில் டொனேஷன் வாங்கி. கோடிகளை வசூலித்து, அதன் மூலம் கொஞ்சம்-கொஞ்சமாகக் கட்டலாம் போன்ற திட்டங்களுடனும் ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் –ஜேப்பியார், பச்சமுத்து [பாரிவேந்தர்], ஏ.சி.சண்முகம் இதர மைனாரிடி மாடல்களை பின்பற்ற முயல்கிறார்கள். அவர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டாலும், ஒரு நிலையில் தரத்தை உயர்த்திக் கொண்டார்கள், நிலைத்து நிற்கிறார்கள். ஆனால், வெறுங்கையால் முழம் போடலாம் என்ற எண்ணங்களுடம்-திட்டங்களுடன் செயல்படுகிறவர்கள், எந்த தரமுமில்லாமல், மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள். பல குடும்பங்களை நாசமாக்கி வருகிறார்கள். ஏனெனில், அவர்களது பெற்றோர் வீட்டை, நிலத்தை, சொத்தை விற்று தமது குழந்தைகளை படிக்க ஆசைப் பட்டு லஞ்சங்களில் பணத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த முதலைகள் அப்படியே முழுங்கி ஏப்பமிட்டு வருகின்றன..
44 பொறியியல்கல்லூரிகளில்ஒருமாணவர்கூடசேரவில்லை: தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றும் வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[1], என்று ஊடகத்தினர் குறிப்பிட்டாலும், கடந்த 20-30 ஆண்டுகளாக நடந்து வரும் செயல்பாடுகளிலிருந்து, அவற்றிற்கு உண்மை நிலை தெரிந்து தான் இருக்கும். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார்[2], என்று குறிப்பிட்டாலும், அவை வெளியிடப் படவில்ல. ‘தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் 44 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை[3]. 35 கல்லூரியில் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்க்க நடந்துள்ளது[4]. ஆக மொத்தம் 75 கல்லூரிகளில் நிலைமை இப்படியுள்ளது. ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம்[5]. ஏற்கெனவே கடந்த ஆண்டுகளிலும் இதே நிலைதான் இருந்து வந்தது. பிறகு, அதே கல்லூரிகள் மறுபடியும் கவுன்சிலிங்கிற்கு எப்படி அனுமட்தி கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது[6]. இதுவரை நடக்கவில்லையா, பார்க்காமலேயே அனுமதி கொடுக்கப் பட்டதா போன்ற கேள்விகளும் எழுகின்றன.
2022 நிலை தான் 2023லும் தொடர்கிறது: மேலும் எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்று வேல்ராஜ் கூறியுள்ளார்[7]. அதாவது இந்த கல்வியாண்டு 2023-24க்கு அனுமதி உண்டு என்றாகிறது. பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக காரணம் கூறப்படுகிறது[8]. இதுவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதாகிறது. கல்லூரிகளில் வசதி இல்லை என்பதாலா அல்லது, படித்தும் வேலை கிடைக்கவில்லை, சரியான சம்பளம் இல்லை போன்ற காரணங்களால், அவ்வாறு நடைபெறுகிறதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் கல்லூரி என்ற பெயரில் எந்த விதமான வசதியும் இல்லாமல் வெறுமனே கட்டிடங்களையும் வைத்திருக்கும் கல்லூரிகளில் தான் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது[9]. பிறகு, அத்தகைய “கல்லூரிகளுக்கு” எப்படி அனுமதி கொடுத்து, அங்கீகாரம் கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். ஆக, அந்த உண்மையும் தெரிந்து தான் உள்ளது[10].
75,000, 65,000 என்றுசீட்டுகள்எப்படிகாலியாகஇருக்கமுடியும்?: பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கு பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற்றது. இதையடுத்து துணை கலந்தாய்வு மூலம் காலியான இடங்கள் நிரப்பப்பட்டன. ஒட்டு மொத்தமாக 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,60,780 இடங்களில் 54,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன[11]. மூன்று சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, 95,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 84,812ஆக இருந்தது[12]. ஆக 2022ல் 75,968 மற்றும் 2023ல் 65,780 இடங்கள் காலியாக இருக்கின்றன என்று தெரிகிறது. பிறகு, இது யார் குற்றம் என்று சொல்ல வேண்டியுளளது. படிக்க ஆசையுள்ள மாணவ-மாணவியருக்கு மார்க் உள்ள போதும், சீட் கிடைக்கவில்லை என்ற என்ன காரணம் என்று சொல்லியே ஆகவேண்டும்.
அந்த 79 கல்லூரிகள்எவை, விவரங்கள்என்ன?[13]: உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும்[14], 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன[15]. ஏன் பெயர்கள்-விவரங்கள் குற்ப்பிடப் படவில்லை?[16]
அந்த 44 பொறியியல் கல்லூரிகள் எவை?
அந்த 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றால் அவை எவை?
அவற்றின் பெயர்கள் ஏன் குறிப்பிடப் படவில்லை.
லட்சங்களில் பீஸ் / கட்டணம் என்றெல்லாம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட வேண்டிய அவசியம் உள்ளது.
கல்வியில் நிச்சயம் மோசடிகள் இருக்கக் கூடாது.
கல்வியில் மோசடி, ஊழல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
[7] தமிழ்.வெப்.துனியா, 44 பொறியியல்கல்லூரிகளில்ஒருமாணவர்கூடசேரவில்லை.. தமிழகத்திற்குவந்தசோதனை..!, Written By Mahendran Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (17:17 IST).
பணத்தினால்கல்வித்துறையில்எதனைஅல்லதுஎதையும்சாதிக்கலாம்: கல்வியில் ஊழல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத்து என்று இருந்தது. ஆனால், இப்பொழுது நாறுகிறது.
முதலில் “கல்வி ஊழல்” என்பது பணம் இல்லாத பலன்களை மட்டுமே எதிர்பார்த்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது பணம் தான் பிரதானமாக இருப்பதினால் பணத்தினால் எதையும் வாங்கிவிடலாம்,
“எதையும்” அதாவது கல்வியில் படிக்காமலேயே டிகிரி சர்டிபிகேட், சான்றிதழ், மார்க் லிஸ்ட், முதலிய பெற்று விடலாம்,
அது மட்டும் இல்லாமல் பணத்திற்கு ஏற்ப இப்பொழுது அவற்றை பெறலாம், தேவைக்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,
இல்லை தமக்கு பதிலாக ஒருவரை வைத்துக் கூட தேர்வு எழுதப்படலாம்.,
தேர்வு எழுதி வைத்துக் கொள்ளலாம், பாஸ் ஆகலாம்,
அதன்படியே சான்றிதழ் பெறலாம்
இவரெல்லாம் கூட மறைந்து, பிறகு அத்தகைய போலி அல்லது அதர்மமுறையில் பெறப்பட்ட சான்றிதழ்களை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்வது
அதிலும் என்ன புண்ணியமாக மிகச் சிறப்பாக நினைத்து வரப்படுகின்ற ஆசிரியர் வேலைகளுக்கு அத்தகைய அநியாயமான சான்றிதழ்களை கொடுத்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது
பிறகு அத்தகைய ஆசிரியர்கள் எவ்வாறு ஒழுக்கத்துடன், நியாயத்துடன், தர்மத்துடன் இருப்பார்கள், நடந்து கொள்வார்கள்.
யோக்கியம்இல்லாதவர்கள்கல்வித்துறையில்இருப்பதற்குயார்காரணம்?: சமீபகாலமாக நடந்த முறைகேடுகளில் இரண்டு முறைகேடுகள், கல்வித் துறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளன[1]. அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துவரும் நிலையில், ஊழலற்ற, நேர்மையான அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு கல்வித் துறைக்கு உண்டு[2], என்றெல்லாம் பேசவேண்டிய நிலை வந்து விட்டது. “கல்வித்துறை” என்றால் என்ன, அதில் உள்ளவர்கள் ஹகுதியுள்ளவர்களா என்று யோசிக்க வேண்டும். இன்று “சினிமாக்காரர்கள்,” கெட்ட-பஷை பேசுபவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் உறிப்பினர்களாக இருக்கின்றனர். ஊழல்களில் சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும்,
அதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா?
இந்த அளவுக்குக் கல்வித் துறையில் ஊழல் பெருக என்ன காரணம்?
ஒரு பல்கலைக் கழக துணைவேந்தர் தனியாக தவறு செய்ய முடியாது. கூட இருக்கும் பதிவாளர், டீன், சூப்பரவசைர்கள், வினாத்தாள் திருத்துபவர்கள், கணக்கர்கள் என சகலரையும் அதில் இணைத்தே செய்ய முடியும்![3]
லஞ்சம் வாங்குவது ஒரு பெருங்குற்றமல்ல என்ற மனநிலைக்கு அவர்கள் செல்வதற்கு என்ன காரணம்?
ஒழுக்கத்தை கற்க வேண்டிய இடத்தில் மாணவர்கள் ஊழலை கற்று வெளியேறுகின்றனர்[4].
ஒட்டுமொத்தக் கல்வித் துறையே பணம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலையும் இதனுடன் சேர்த்துப் பார்க்கவேண்டியுள்ளது.
சுயநிதிக்கல்லூரிகளின்வருகையில் “கல்விஊழல்”ஆரம்பித்தது: 1985-களில் சுயநிதிக் கல்லூரிகளின் வருகை ஆரம்பித்தது. அப்போதுதான் கல்வி வியாபாரமும் ஆரம்பமானது என்று கருத்துத் தெரிவிப்பது, அரசியல்வாதிகள் அதில் முதலீடு செய்ததனால் தான் என்ற உண்மையினை மறைக்கின்றனர். “அந்தக் காலகட்டத்தில் கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் நியமனத்தில் பங்குவகித்தனர். அப்போதும் சிறு சிறு பிரச்னைகள் எழும். அதை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எதிர்க்கப் பட்டுள்ளது,” என்று நாஜுக்காக குறிப்பிட்டுக் கொண்டாலும், ஊழல், ஊழல் தான், அதனை நியாயப் படுத்த முடியாது. ஆனால், அப்போது நடைபெறும் ஊழல்களைவிட பல மடங்கு மோசமான முறைகேடுகள் இப்போது நடைபெறுகின்றன, என்றும் ஒப்பீடு செய்ய முடியாது. கல்வி வியாபாரிகள் ஒருபக்கமும், வேலையை ஏலம்விடும் வியாபாரிகள் மறுபக்கமும் உள்ளனர். குறிப்பாக, அரசு வேலைகளை நம்பி தமிழ்நாடு தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (TRB) மூலம் நடத்தப்படும் தேர்வுகளை எழுதிவிட்டு, ஏழை மக்கள் பலர் வேலைவாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊழல் மூலம் அவர்களது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. உயர்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி இந்நாள் அமைச்சர் அன்பழகன் வரை உயர்கல்வித் துறையில் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பது கேள்விக்குறியே!
இதுவரைநடந்துள்ளகைதுகள்முதலியன: பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, கைதானவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இந்து அறநிலையத்துறை கைதுகள் போலத்தான் இதுவும் இருக்கிறது.கைதானவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.
பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்கொலை செய்துகொண்டார். அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் துறையில் ஊழல் நடைபெற்றது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில், கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற நியமனங்களில் ஊழல் நடைபெற்றது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் போராடிவருகின்றன.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்தான் வெளியே வந்துள்ளன.
துணைவேந்தர்கள் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
எஸ்.ஆர்.எம் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்தும் விவகாரங்கள் தெரிய வந் துள்ளன.
ஆசிரியர்பணிகள் – விற்க–வாங்கப்படுகின்றனவா?: துணைவேந்தர் பணி நியமனத்தில் கல்வியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. சமூகச் செயற்பாட்டாளர் பாலம் நாராயணன், இதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்னரே தனியார் மருத்துவக் கல்லூரியான பள்ளிக் கல்வி தொடங்கி பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்து ஆசிரியர் பணி நியமனங்களிலும் ஊழல் நடைபெற்றால், எப்படிப்பட்ட கல்வியை நாம் மாணவர்களுக்கு அளிக்கப்போகிறோம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், ஆசிரியர் பணிகள் ஏலம்விடப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவை எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும்? தனியார் கல்லூரியின் கட்டணக் கொள்ளையும் அரசு நிறுவனங்களின் ஊழலும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லாமல் செய்துவருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துத் துணைவேந்தர் பணி நியமனங்களிலும் அரசு தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்–உதவிபேராசிரியர்–பேராசிரியர்பணம்கொடுத்துவாங்கப்படும்பதவிகளா?: எல்லா அரசுப் பணி நியமனங்களிலும் பணம் கொடுத்தால்தான் பதவி என்பதை வெளிப்படையாக அனைத்து மக்களும் பேசிக்கொள்கின்றனர். ஆசிரியர் பணி நியமனங்களிலும், துணைவேந்தர் பணி நியமனங்களிலும் என்ன மாதிரியான வெளிப்படைத்தன்மை இருக்கிறது? எதன் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது என்பது பற்றிய உண்மைத்தன்மையே இல்லை. இங்கு நடைபெறும் ஊழல் என்பது, வெறுமனே துணைவேந்தர் மட்டுமே சம்பந்தப்பட்டது கிடையாது; இது ஒரு பெரிய அங்கம்போல் செயல்படுகிறது. இதன் பின்னால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எனப் பலர் இருப்பர். கல்வித் துறை, கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியிருக்கிறது. இதை ஊடகங்களும் பொதுமக்களும் பெரும் விவாதமாக மாற்றினால் மட்டுமே இந்தப் போக்கை மாற்ற முடியும்.
கல்வி–வியாபாரத்தால், கல்வி–ஊழல்உண்டானதா?: கல்வி-கல்லூரி முதலாளிகளாக பல பணக்காரர்கள் வந்துவிட்ட கல்வித் துறை முழுக்கவே வியாபார மயமாகிவிட்டது. கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்கள் பலரும் அரசுக் கல்லூரியை மட்டுமே நம்பி உயர்கல்வியை நோக்கிப் பயணிக்கின்றனர். பல்கலைக்கழகங்களில் நடக்கும் இதுபோன்ற ஊழல்கள், கல்வித் துறையின் மீதும் ஆசிரியர்கள் மீதும் உள்ள மதிப்பைக் கெடுத்துவிடுகின்றன; `கல்வியின் மூலம் மட்டுமே தனக்கான வாழ்வை மீட்க முடியும், சமூகத்தில் நல்ல நிலையை எட்ட முடியும்’ என நம்பும் பல லட்சம் மாணவர்களையும் பெற்றோர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. இதுபோன்ற முறைகேடுகளைக் களையும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு தலைமுறையே பாதிக்கும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்!
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில்நிதி–செலவினங்கள்மூலம்ஆரம்பித்தகல்வி–ஊழல்: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி, நியமனம், செலவினங்கள் பற்றிய விவரங்கள்-விவகாரங்கள் திருப்தியற்ற நிலையிலே இருந்தது. பல ஆடிட் / தணிக்கைக் குழுக்களின் சோதனைகளில் பணம் சரியாக கையாளப் படவில்லை மற்றும் செலவினங்கள் முறையாக கணக்குகளில் கொண்டுவரவில்லை-வரப்படவில்லை என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்தன. பணம் வாங்கிக் கொண்டு, ஆயிரக்ககணக்கில் வேலை நியமனம் செய்யப்பட்டது முதல் பலவித ஊழல்களும் மலிந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எனச் சுமார் 12,000 பேர் பணியாற்றிவருகின்றனர்[1]. நிர்வாகக் குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம்[2]. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.
தமிழகஅரசுகட்டுப்பாட்டில்அண்ணாமலைப்பல்கலைக்கழகம்: நிதி நெருக்கடி, நிதி முறைகேடுகள் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பல்கலைக்கழக நிர்வாகியாக தற்போதைய தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனாவை 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் தமிழக அரசு நியமனம் செய்து, அவா் உடனடியாகப் பொறுப்பேற்றார். பின்னா், தமிழக அரசு உயா் கல்வித் துறை மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சட்டப் பேரவையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் பல்வேறு கல்வி, நிதி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் எனச் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்[3]. தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கைக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரியவந்தது[4].
2023ல்56 உதவிப்பேராசிரியா்கள்பணிநீக்கம்அறிவிப்புஆணை: மேலும், பல்கலைக்கழகத்தில் அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு[5], உயா் கல்வித் துறைக்கு அவா் அறிக்கை சமா்ப்பித்தார்[6].. அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 56 உதவிப் பேராசிரியா்கள் அடிப்படை கல்வித் தகுதி மற்றும் அரசு தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியாற்றி வந்ததாகக் கூறி[7], தமிழக அரசு உயா் கல்வித் துறை பரிந்துரையின்பேரில், அவா்களை பணி நீக்கம் செய்து பதிவாளா் (பொ) ஆா்.சிங்காரவேலு வியாழக்கிழமை 16-11-2023 உத்தரவு பிறப்பித்தார்[8]. பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கும்[9], வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்[10].
புகழ்பெற்றஅண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின்இன்றையநிலை: உலகெங்கும் அண்ணாமலையில் படித்தவர்கள் உள்ளனர். பண்டித மணி கதிரேசன் செட்டியார் போன்ற சிறந்த தமிழ் அறிஞர்கள் தலைமையில் தமிழ் ஆராய்ச்சி ஜொலித்தது. பல அறிய படைப்புகள் வெளிவந்தன. தண்டபாணி தேசிகர் ரங்காச்சாரி போன்றோர் இசைக்கல்லூரியை அலங்கரித்தனர். சர் சி பி ராமஸ்வாமி ஐயர் போன்றோர் துணைவேந்தர்களாக பணியாற்றினார். அந்த பல்கலைக்கா இந்த நிலைமை. பொது உடைமையாக்கி நாசப்படுத்தி விட்டார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போதிய தகுதி இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுதையஉயர்க்கல்வித்துறைஅமைச்சறின்ஆதரவு: இந்நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்[11]. விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுஜிசி விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எச்.டி படிப்பை முடித்திருக்க வேண்டும்[12]. ஆனால் அந்த தகுதிகள் எதுவும் இல்லாதவர்கள் உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி குறைவான பேராசிரியர்கள் குறித்து 2019ஆம் ஆண்டில் சிண்டிகேட் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது[13]. நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. இப்போது துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளார்[14]. இது வரவேற்கத்தக்கது. இதற்கு யாரும் பொறுப்பல்ல. 10 ஆண்டுகளாக அவர்கள் தகுதியை மீறி சலுகையை அனுபவித்து உள்ளார்கள். தகுதி குறைவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வருங்காலத்தில் தங்களின் தகுதிக்கேற்ற வகையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தால் அரசு அதனை பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
“கல்விஊழல்” உருவான–உருவாக்கப்பட்டநிலை–விதம்: ஊழலில் கல்வி, கல்வித்துறை, கல்வி பாடங்கள், கல்வி நெறிமுறை அல்லது கல்வியில் ஊழல் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தது. கல்வி தெய்வமாக, தெய்வீகமாகக் கருதப் பட்டதால் அத்தகைய உரிய ஸ்தானம் கொடுக்கப் பட்டு மதிக்கப் பட்டது. இருந்தாலும் சமீப காலங்களில் கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டதால் அந்த விளைவின் உச்சத்தில், “கல்வி ஊழல்” நடந்து வருகிறது. விடுதலைக்குப் பிறகு அரசியல் நுழைவு, ஆளும் அரசியல்வாதிகளின் தாக்கத்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் சித்தாந்த வாதிகளின் திரிபுகளாலும் கல்வி பாடத்திட்டங்கள் புத்தகங்கள் மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விற்பனர்கள் என்று எல்லாமே அரசியலுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய “கல்வி ஊழல்” என்பது ஆரம்பிக்க வைக்கப்பட்டது.
[1] தினமணி, அண்ணாமலைப்பல்கலை.யில் 56 உதவிப்பேராசிரியா்கள்பணிநீக்கம், By DIN | Published On : 17th November 2023 12:32 AM | Last Updated : 17th November 2023 12:32 AM.
[5] தமிழ்.வெப்.துனியா, அண்ணாமலைபல்கலையின் 56 பேராசிரியர்கள்பணிநீக்கமா? பரபரப்புதகவல்..!, Written By Mahendran Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:08 IST).
சென்னைகல்லூரிமாணவர்களுக்குஇடையேமோதல்ஏன்: சென்னையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அடிக்கடி பேருந்து மற்றும் ரயில்களில் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே பெரம்பூர், பேசின் பிரிட்ஜ், கடற்கரை ரயில் நிலையங்களில் இரண்டு கல்லூரிகளின் மாணவர்கள் மோதிய வழக்குகளில் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். படிக்கும், படிக்க வருகின்ற மாணவர்கள் இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து 1970களிலிருந்து வருகிறது. மாணவர்களை ஒரு அளவுக்கு மீறி அரசியலில் ஈடுபட வைப்பதினாலும், கல்லூரி-பல்கலைக் கழகங்களில் அரசிய கட்சி சார்பு இயக்கங்கள், அமைப்புகள் வைத்து மாணவர்களைப் பிரிப்பதாலும், அவ்வாறே அவ்வளாகங்களில் தேர்தல்கள் நடத்துவதாலும் இத்தகைய விளைவுகள் ஏர்படுகின்றன. முதலில் கம்யூனிஸ்டு, பிறகு திராவிட கட்சிகள் இத்தகைய வேலைகளில் இறங்கின, சிறந்தன. பிறகு மற்ற கட்சிகளும் சேர்ந்து கொண்டன.
ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியவை குறைவதால் ஏற்படும் விளைவுகள்: இதனை, தீர ஆராயமல் அல்லது அறிந்தும் அறியாதது போல கடந்து செல்வதால் தான், வன்முறைகள் அதிகமாகின்றன, தொடர்கின்றன. ஒழுக்கம் இல்லாமை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது, பெற்றோர்களை மதிக்காமல் இருப்பது, மேனாட்டு நாகரிகம்-சினிமா பாணிகளில், வக்கிரம், சண்டை, அடிதடி, வன்முறை என்று இறங்குவது முதலியவை அச்சீர்கேடுகளின் அடையாளங்கள் மற்றும் விளைவுகளாகவும் இருக்கின்றன. ஆக, மாணவ-மாணவிகளிடம் பிரச்சினைகள் ஏற்படுவது உள் மற்றும் வெளிப்பிரச்சினைகள் என்று அடையாளம் காட்டலாம். பொதுவாக தார்மீக சிந்தனைகள் குறைவது, பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுக்காதது, அவர்கள் பேச்சு கேட்காதது, பல வழிகளில் அவர்களை ஏமாற்றுவது (ஹாஸ்டலில் படிக்கும் மாணவ-மாணவிகள்), பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காதது,………………என்ற விஷயங்களும் வருகின்றன.
மாணவிகளும்எல்லைகளைக்கடந்துநடந்துகொள்வது: போதாகுறைக்கு மாணவிகளும் சீர்கெட்டு அலைகின்றனர், வெளிப்படையாக சிகரெட் பிடிப்பது, குடிப்பது,மாணவர்களுடன் தொட்டுப் பேசுவது, கைக் கோர்த்துக் கொண்டு சுற்றுவது, என்றெல்லாம் சர்வசகஜமாக நடந்து வருகின்றன. பெற்றோர், உற்றோர், மற்றோர் பார்த்தால் துடித்து விடுவர், அந்த அளவுக்கு மாணவிகள் நடந்து கொள்கின்றனர். பெண்மை, பெண்கள் உரிமைகள் என்ற ரீதியிலும், மாணவிகள் ஆடை, நடவடிக்கை, நடப்பு, முதலிய விவகாரங்களில் எல்லைகளை மீறுகிறார்கள். கல்லூரி-பல்கலைக்கழகங்களில் படிக்கும் பொழுது, படிப்பு-சம்பந்தமாக என்றும் வெளியே சென்று வருகிறார்கள். அந்நிலைகளில் ஆசிரியர்களே வரம்பு மீறும் நிலைகள், வழக்குகளில் முடிந்துள்ளன. ஆனால், இங்கு பாதிப்பு மாணவிகளுக்குத் தான் அதிகம். இழந்ததை மீண்டும் பெற முடியாது.
மாநிலக்கல்லுாரிமாணவர்கள்பச்சையப்பன்கல்லுாரிமாணவர்களைதாக்கியது: அரக்கோணத்தில் இருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி சென்னை வந்த மின்சார ரயில், 9-10-2023 அன்று காலை 9:15 மணியளவில் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையம் வந்தது[1]. இதெல்லாம் தினமும் நடக்கும் நிகழ்ச்சி தான். அப்போது ரயிலில் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீரென மின்சார ரயிலில் இருந்து கீழே இறங்கினர்[2]. ஒரு பெட்டியில் இருந்த மாநிலக்கல்லுாரி மாணவர்கள் சிலர், அடுத்த பெட்டிக்கு சென்றனர்[3]. அங்கு இருந்த பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களை கண்டதும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டியின் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்[4]. இதெல்லாம் நிச்சயமாக பிறகு தெரிந்த விசயங்கள் தான்ச்ரெயிலில் ஏறும் பொழுதே, எந்தெந்த கல்லூரி என்று அடையாளப் படுத்த முடியாது. இதனையடுத்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பதிலுக்கு கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்[5]. இதனால், அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது[6]. ஆக, இவ்விரு கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே முன் விரொதம் இருக்கிறது என்று தெரிகிறது. பிறகு, அதை ஏன் தீர்க்கப் படவில்லை என்று தெரியவில்லை.
சக–பயணிகளைஅச்சுருத்தும்கல்லெறியும்பயங்கரவாதம்: சுமார் 40க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் பெரம்பூர் லோகோ நடைபாதையில் ஓடிச் சென்று தொடர்ந்து கற்களை வீசி எறிந்ததால் பொதுமக்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்[7]. ரெயில்வே டிராக்கில் இருக்கும் கற்கள் வீசப் பட்டன என்பதை கவனிக்க வேண்டும். இதில் கல்லூரி மாணவர்கள் சிலர் லேசாக காயங்களுடன் உயிர் தப்பினர்[8]. இதனால் ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பிற பயணியர் அச்சத்தில் அலறியடித்து பெட்டிக்குள் பதுங்கினர்[9]; உடனடியாக ரயிலில் பயணம் செய்த பொதுமக்கள் மின்சார ரயிலின் கதவுகளை மூட முயற்சி செய்தனர்[10]. ஆனால் கதவுகளை மூட முடியாததால் ரயில் பெட்டிக்குள் உள்ளே சென்று ஒளிந்து கொண்டனர். சிலர் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில நிமிடங்களில் ரயில் புறப்படவே, மாணவர்கள் கலைந்து சென்றனர். இதெல்லாம் சக பயணிகளுக்கு அளிக்கும் மிகப் பெரிய அச்சுருத்தல், பயங்கரவாத செயலும் ஆகும். இவர்களுக்கும், காஷ்மீரத்தில் கெல்லெறியும் ஜிஹாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை.
புகார் கொடுக்கப் படவில்லை-கொடுத்தார்கள் போன்ற முரண்பட்ட செய்திகள்: இது குறித்து யாரும் புகார் செய்யவில்லை என்று சில நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன.. சம்பவம் குறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்[11]. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்[12]. கடந்த அக்டோபர் 5ம் தேதி கடற்கரை ரயில் நிலையத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்ட சம்பவம் அடங்குவதற்குள், பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் மீண்டும் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் ரயில்வே போலீசார், உடனடியாக பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தகவல் கூறி அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசாரை உஷார் படுத்தினர்.
நல்வழிக்கல்விக்காகஎன்னசெய்யவேண்டும்?: கவுன்சிலிங்-ஆலோசனை, சேர்ப்பதற்கு மட்டும் வைத்துக் கொண்டு, பிறகு மறந்து விடுகின்றனர். ண்மையில் அவர்கள் தங்களுக்கு வருமானம் வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெற்றோர், உற்றோர், ஆசிரியர்க்கள், பெரியவர்களை விட இவர்களால் ஒழுக்கம் போதிக்க முடியுமா என்று தெரியவில்லை. இன்றைய காலகட்டங்களில் மாணவ-மாணவியர் பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் இருப்பதால், கவுன்சிலிங்-ஆலோசனை முறை கல்லூரிகளில் இருக்கவேண்டும். இது கல்லூரி சொந்தக்காரர்கள், முதலீடு செய்தவர்கள், தாளாளர், முதல்வர், படிப்புத்துறைகளின் தலைவர்கள், விரிவுரையாளர்கள் முதல், விடுதி பொறுப்பாளர், பியூன்கள், வேலையாட்கள், செக்யூரிட்டி வறை இருக்க வேண்டும். ஆனால், இதையும் கெடுக்க நிர்வாகித்தினர் முயலக் கூடாது. ஆகவே, –
ஆன்மீக வகுப்புகள் (Moral classes) மறுபடியும் நடத்தப் படவேண்டும்.
நீதி-நேர்மை-நியாயம் பற்றி வாரம் ஒரு வகுப்பு சேர்க்கப்பட வேண்டும்.
தர்மம், ஆன்மீகம், தெய்வ நம்பிக்கை முதலியவை போற்றப் படவேண்டும்.
இதில் செக்யூலரிஸம் என்ற போர்வையில் பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது.
நாத்திகம் பெயரில் மனங்களைக் கெடுக்கக் கூடாது.
சித்தாந்தங்கள் போர்வையில், மாணவ-மாணவியரின் மனப்பாங்கை சீரழிக்கக் கூடாது.