பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் சரித்திரம்–வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது – பிரச்சினை, பின்னணி என்ன? (1)
தொல்லியல் படிப்பிற்கு திடீர் மவுசு ஏன்?: கீழடி அகழாய்வுக்குப் பிறகு, தொல்லியல் திடீஎன்று பிரபலமாகி, எல்லோரையும் உசுப்பேற்றியுள்ளது போலிருக்கிறது. 2000 வரை 10-15 பேரே சேர்ந்து படிக்கும் துறைக்கு, இன்று அதிகமாகவே விண்ணப்பித்து வருகிறார்கள். வருடா வருடம் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. படிப்புப் பற்றியும் அதிக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன[1]. உதவித் தொகையுடன் படிக்கலா, அரசு அழைப்புப் போன்ற செய்திகளும் உண்டு[2]. இதுவரை தமிழ், வரலாறு, தொல்லியல் முதலான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவா்கள் மட்டுமே முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், வளா்ந்து வரும் தொழில்நுட்பம், பன்முகத் தன்மை வாய்ந்த தொல்லியல் போக்குகள் முதலியவற்றைக் கருத்தில்கொண்டு இனி முதுகலை, முதுநிலைஅறிவியல், முதுநிலை பொறியியலில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவா்களும் முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது[3]. இதையும் யாரும் எதிர்க்கவில்லை.
தொல்லியல் படிப்பிற்கு பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: பொறியியல் மாணவர்கள் எதற்கு இபடிப்பிற்கு வரவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை, எதிர்க்கவில்லை, தடுக்கவில்லை. இந்த தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் மாதம் ரூ.5,000 கல்வி உதவித் தொகையுடன் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரிவான தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் தொல்லியல் மட்டுமின்றி அருங்காட்சியகங்கள், சுற்றுலா மற்றும் கோயில்கள் உள்ளிட்ட மரபுசார் இடங்களின் பாதுகாப்பு மற்றும் கல்விப் புலத்திலும் சிறப்பாகச் செயல்படமுடியும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்[4]. ஒரு பக்கம் தமிழகத்தில் 1000 வருடங்களுக்கு முந்தைய கோவில்கள் எவ்வாறு கவனிப்பார் இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன மற்றும் இருக்கும் கோவில்களிலும் நாத்திகம்-சித்தாந்தம் பேசு அரசுகளால் சேதமடைந்து வருகின்றன என்பதும் தெரிந்த விசயமே. அந்நிலையில் புராதக சின்னங்கள், கோவில்கள், கட்டிடங்கள் இவற்றை பாதுகாக்க, புதிய படிப்புகளை, துறைகளை உண்டாகலாம். அதே போல எம்.ஏ-தொல்லியலுக்கும் ஐ.டி என்று பலதுறை பட்டயம் பெற்ற மாணவர்கள் எல்லாம் சேர்ந்து வருகிறார்கள். இது படிப்பிற்காக போட்டியா அல்லது வேலைக்காக போட்டியா என்று புரியவில்லை. ஏதோ அர்ச்சகர் வேலைக்கு போட்டி போன்று, ஒரு பிரமிப்பை உண்டாக்கி வருவது தெரிகிறது.
தொல்லியல் பட்டதாரிகள் சரித்திர வேலைக்கு விண்ணப்பிக்கலாகாதா?: இருப்பினும், அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள, இணையில்லாத கல்வி பட்டியல் குறித்த அரசாணையால், சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை படிப்பை முடித்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்[5]என்று செய்தி வந்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் வரையறைக்கு உட்பட்டு, எந்தெந்த படிப்புகள் எந்தெந்த படிப்புகளுக்கு இணையில்லாதவை என்பது குறித்து, பிப்ரவரி மாதம் 2024 வல்லுனர் குழு ஆலோசித்தது[6]. அந்தக்குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதில், தாவரவியல், வரலாற்று துறை படிப்புகளுக்கு இணையில்லாத படிப்புகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, சென்னை பல்கலையால் வழங்கப்படும் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் எம்.ஏ., பட்டம், எம்.ஏ., வரலாறு பட்டத்துக்கு இணையானது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் சரித்திரம்–வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது: இதனால், வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு, சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை பல்கலையில், எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்றவர்கள் கூறியதாவது: “தற்போது, ஆசிரியர் தேர்வாணையம் வரலாற்றுத்துறை பேராசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு, சென்னை பல்கலையில் எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்று, பிஎச்.டி., ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளோரும் விண்ணப்பிக்க முடியாத வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில தொல்லியல் துறைகளிலும், வரலாறு சார்ந்த கல்வித்துறையிலும், சென்னை பல்கலையில் படித்தோர் தான் அதிகளவில் சாதித்துள்ளனர்.”
தமிழக அரசு தவறான அரசாணையை வெளியிட்டுள்ளது:. “தமிழகத்தில் நடந்துள்ள பல்வேறு அகழாய்வுகளை அவர்களே திறம்பட செய்து, புதிய வரலாற்றுக்கு துணை புரிந்துள்ளனர். அதேபோல், நாணயம், கல்வெட்டு, சுவடிகள் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து, புதிய வரலாற்றை எழுதி உள்ளனர். தொல்லியல் துறை வேலைவாய்ப்புகளுக்கு வரலாற்று துறையினர் விண்ணப்பிக்கும் தகுதி பெற்றுள்ள நிலையில், வரலாற்றுத்துறை வேலைவாய்ப்புக்கு தொல்லியல் துறையினர் விண்ணப்பிக்க முடியாத வகையில், தமிழக அரசு தவறான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால், வரலாறு பாடத்திட்டத்தில் உள்ள பண்டைய வரலாறு, தொல்லியல் குறித்த பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்படுவதுடன், சென்னை பல்கலையில் படித்து அகழாய்வுகளை செய்து, பல வரலாற்று நுால்களை எழுதிய, தகுதியும் திறமையும் உள்ள நுாற்றுக்கணக்கான கல்வியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். இது, தொல்லியல் படிப்பை முடித்தோருக்கும், படிப்போருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், தஞ்சை தமிழ் பல்கலையில் தொல்லியல் படிப்பை முடித்தவர்கள், வரலாற்றுத் துறை பணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்படவில்லை. இது பாரபட்சமான அரசாணையாக உள்ளது. இதை மாற்றி, பழைய நடைமுறையை தொடர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொல்லியல் படிப்பின் முக்கியத்துவம்: வரலாற்றுத் தொன்மையை ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கு அடிப்படைத் தரவுகளாக இருப்பவை தொல்லியல் எச்சங்களே. அத்தகைய தொல்லியல் கல்வியை இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கற்பிக்கின்றன[7]. குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் முதுகலை, இளங்கலை, பட்டயப் படிப்புகளில் பண்டைய வரலாறு, தொல்லியல், கலாச்சாரம், தொல்லியல், அருங்காட்சியகவியல், பாதுகாப்புத் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை வழங்குகின்றன[8]. குறிப்பாக டெக்கான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 1939 முதல் பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல் பாடப்பிரிவுகளில் முதுகலை தொடங்கி முனைவர் பட்டம் வரை வழங்கிவருகிறது. மேலும், கணிணி வழியில் ஆய்வுகள், தொல்லியல் பொருட்களை வேதியியல் பகுப்பாய்வு செய்வது, புதைபடிவ ஆய்வியல், தொல்லுயிரியல் ஆய்வுகள், மகரந்தவியல் ஆய்வுகள் எனத் தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வகங்களுடன் மிகச் சிறந்த தொல்லியல் ஆய்வுக் கல்வியை வழங்குகிறது. புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களான சங்காலியா, வசந்த் சிண்டே, சாந்தி பப்பூ போன்ற ஆய்வாளர்களை நாட்டுக்கு வழங்கியது டெக்கான் பல்கலைக்கழகம்.
© வேதபிரகாஷ்
14-04-2024
[1] டமிழ்.ஏபிபி.லைவ், Archaeology Museology: தொல்லியல் படிப்புகளை உதவித் தொகையுடன் படிக்கலாம்: அரசு அழைப்பு– விவரம், By : மாய நிலா, PUBLISHED AT : 02 JUL 2023 05:12 PM (IST)| Updated at : 02 Jul 2023 05:12 PM (IST).
[2] https://tamil.abplive.com/education/tamil-nadu-institute-of-archaeology-and-museology-pgda-pgde-pdhmm-2023-2025-know-how-to-apply-126471
[3] தினமணி, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொல்லியல்பட்டயப் படிப்புக்கு 320 போ் விண்ணப்பம், Published on: 30 ஆகஸ்ட் 2020, 3:46 am; Updated on: 30 ஆகஸ்ட் 2020, 3:46 am.
[4]https://www.dinamani.com/tamilnadu/2020/Aug/29/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-320-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-3457057.html
[5] தினமலர், சென்னை பல்கலை தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்கு சிக்கல், UPDATED : ஏப் 10, 2024 03:34 AM; ADDED : ஏப் 10, 2024 03:34 AM.
[6] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-chennai-university-archeology-graduates-have-a-problem–/3596966
[7] தமிழ்.இந்து, 30+ பல்கலை.கள், 40+ கல்லூரிகள்… – ‘தொல்லியல்’ படிப்புகளில் தடம் பதிக்க விருப்பமா?, செய்திப்பிரிவு, Published : 18 Nov 2023 07:07 PM; Last Updated : 18 Nov 2023 07:07 PM. – இ. இனியன் | தொடர்புக்க்கு initnou@gmail.com
[8] https://www.hindutamil.in/news/education/1155300-there-are-30-plus-universities-fot-archaeology-courses.html