Posts Tagged ‘திராவிட ஊழல்’

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (2)

திசெம்பர் 27, 2023

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (2)

 

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது: போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மற்றும் அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்[1]. பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் அளித்தார்[2]. அப்படியென்றால் கையும்-களவுமாக மாட்டிக் கொண்டார் என்றாகிறது. அவர் அளித்த புகாரின் படி சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்[3]. இதனையடுத்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் துவங்கியது மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. அதன் பிறகு, முறையாக துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்[4].

 

நிறுவனம் நடத்தி மோசடிகளில் ஈடுபட்டது: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்[5]. பிறகு மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற விவகாரங்கள் குறிப்பிடப் படவில்லை என்றாலும், நடந்தேரின. விசாரணையில், துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் [Periyar University Technology Entrepreneurship and Research Foundation (PUTER Foundation)] என்ற தனி நிறுவனத்தை துவக்கியது தெரியவந்துள்ளது[6]. பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கினார். இது தவிர, தங்கவேல் உள்பட 3 பேர் இணைந்து ‘அப்டெக்கான் போரம்’ என்ற மற்றொரு அமைப்பையும் தொடங்கி உள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்படும். இவர்கள் மூன்று பேரும் பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-இன் படி பொது ஊழியர்களாக கருதப்படுகிறார்கள்.

 

பாமக தொடர்ந்து இத்தகைய ஊழல்கள் பற்றி அறிக்கை வெளியிட்டு வருவது: முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கையில்[7], “பெரியார் பல்கலைக்கழகத்தை அதன் துணைவேந்தரும், கூட்டாளிகளும் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே அதில் புதிய நிறுவனத்தை தொடங்குவது சட்டவிரோதம். இதற்காகவே துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும்,” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது[8]. இருப்பினும், அரசியல் கலந்து விட்டது, அதில் திராவிடக் கட்சிகளின் பங்கு உள்ளது என்றால் அமுக்கித்தான் வாசிப்பார்கள்.

 

கைதானவர் உடனடியாக ஜாமீன் பெற்று வீடு திரும்பியவர்: பின்னர் நீதிபதி தினேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், துணை வேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி விடுவித்தார்[9]. இத்தனை புகார்கள் இருந்டாலும், ஜாமீன் எப்படி வழங்கப் பட்டடு என்பது தெரியவில்லை. இவர் வெளியே இருந்தால், ஆதாரங்கள் எல்லாவற்றையும் அழித்து விடமாட்டாரா, அத்தகைய பிரச்சினை இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. மேலும், சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 7 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், அனுமதியின்றி வெளியூருக்கு செல்லக்கூடாது என்றும், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்[10]. இவையெல்லாம் சாதாரண கன்டிசன்கள் தான்.

 

திராவிடத்துவத்தில்பெரியாரிஸத்தில் ஊழல், சொகுசு வாழ்க்கை, தற்கொலை, இறப்பு: மனித உயிர் மிகவும் அபூர்வமானது, புனிதமானது, அதனை எடுக்க-எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமையில்லை. என்னத்தான் நாத்திகம், பெரியாரிஸம் எல்லாம் பேசினாலும், வாழத்தான் அவர்களுக்கும் ஆசையுள்ளது, அதிலும், அனுபவித்து வாழவேண்டும் என்ற பேராசை உள்ளது. ஆகவே, உண்மையில் அவர்கள் இறப்பிற்கு அஞ்சினாலும், இறப்பதற்கு விரும்புவதில்லை. ஆத்மா, உயிர், மூச்சு, உயிர் உடலிலா, மூச்சிலா, மூளையிலா, இதயத்திலா என்றெல்லாம், மண்டையைக் குடைந்து கொள்ளாமல், வாழத்தான் இரும்புகிறார்கள். அந்நிலையில் ஊழலுக்கு பயப்படாதவர்கள், ஊழலில் சிக்கிவிடுவோம் என்று பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை. சாவுக்கே சாவு கொடுப்போம் என்ற ரீதியில் அளப்பவர்கள், ஊழலுக்கே ஊழல் கொடுத்து, ஊழல் செய்து, உழல வைத்து விடுவோம் என்று சொல்லாமலா இருப்பர்? இருப்பினும் கல்வி என்பதால், இனிமேலாவது, அதில் ஊழலை நீக்கி, சுத்தமாக்கி, ஒழுங்கான-ஒழுக்கமான படிப்பை போதித்தால், இனி உருவாகும் மாணவ-மாணவிகள் மக்களுக்கு, சமூகத்திற்கு, நாட்டிற்கு உகந்தவர்களாக இருப்பர். இதை மனத்தில் வைத்துக் கொண்டாவது, திராவிடத்துவவாதிகள், ஊழல் விற்பன்னர்கள் முதலியோர் திருந்த வேண்டும், தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சாவதை விட, ஒழுங்காக வாழலாம், மக்கள் பாராட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

27-12-2023


[1] தினமலர், ஊழல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது, மாற்றம் செய்த நாள்: டிச 26,2023 17:39.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3512935

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது.. 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!, By Vignesh Selvaraj Updated: Tuesday, December 26, 2023, 20:50 [IST].

[4] https://tamil.oneindia.com/news/salem/salem-periyar-university-vice-chancellor-jeganathan-arrested-569307.html

[5] தமிழ்.இந்து, நிறுவனம் நடத்தி முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது, செய்திப்பிரிவு, Published : 27 Dec 2023 05:19 AM, Last Updated : 27 Dec 2023 05:19 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1174506-salem-periyar-university-vice-chancellor-arrested-on-corruption.html

[7] நக்கீரன், பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 26/12/2023 | Edited on 26/12/2023

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/periyar-university-vice-chancellor-issue

[9] தமிழ்.நியூஸ்.18, முறைகேடு வழக்கில் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நிபந்தனை ஜாமின்!, FIRST PUBLISHED : DECEMBER 27, 2023, 9:49 AM IST, LAST UPDATED : DECEMBER 27, 2023, 9:49 AM IST.

[10] https://tamil.news18.com/tamil-nadu/conditional-bail-for-periyar-university-vice-chancellor-1286758.html

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (1)

திசெம்பர் 27, 2023

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (1)

 

பல்கலைக்கழக ஊழல்கள், கைதுகள் சகஜமாகி விட்டன: தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதும், துணைவேந்தர்கள் கைதாவது என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. கல்வி, கல்வித் துறை, அல்கலைக் கழகம் என்றெல்லாம் வரும்பொழுது, ஏதோ ஒரு கோவில், புனிதமான இடம் என்றெல்லாம் மதிப்பு, மரியாதை, கௌரவம் என்றெல்லாம் இருந்தது. ஆனால், இப்பொழுதோ, ஏதோ செல்லக் கூடாத இடத்திற்கு செல்கிறோமோ, போனால் பிரச்சினை வருமோ அல்லது இருக்கும் பிரச்சினை பெரிதாகி விடுமோ என்ற அச்சமான சிந்தனைகளும் வருகின்றன. தமிழகத்தில் கடந்த 50-70 ஆண்டுகளில் கல்வியில் சிறந்தவர்கள் பெயரில் எதாவது பல்கலைக் கழகம் இருக்கிறதோ இல்லையோ, வரிசையாக, அண்ணா, கருணாநிதி, பெரியார், எம்லிஆர், ஜெயலலிதா என்று முதலமைச்சர்கள் பெயரில் உள்ளன. பிறகு, காந்தி, ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி, அம்பேத்கர் என்றும் உள்ளன. இவ்வாறு தான், சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது[1]. இதன் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது[2].

 

தொடந்து துணைவேந்தர்கள் கைது செய்யப் படுவது: தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஊழல் என்பது புதிதல்ல, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இரண்டு முன்னாள் துணைவேந்தர்கள் 2018 ஆம் ஆண்டில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகத்தால் (டிவிஏசி) [Directorate of Vigilance and Anti-Corruption (DVAC).] கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பதிவு செய்யப்பட்டனர். அதே ஆண்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவிப் பேராசிரியர் பணியை முறைப்படுத்துவதற்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இங்கு, கடந்த 3 ஆண்டுகளில் 141 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பணிக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. கையூட்டு பெறப்பட்ட பணிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்திருந்தாலும் கூட, தகுதியற்ற பலர் தான் போலிச்சான்றிதழ் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர், இப்படி புகார்களும் செய்திகளும் வெளிவந்தன. பிப்ரவரி 28, 2016, ஓய்வு பெறும் நாளில், உதவி தாளாளர் சி. பெரியசாமி [Deputy Regitrar C Periyaswamy] சஸ்பென்ட் செய்யப்பட்டதாக, சுவாமிநாதன், துணைவேந்தர் [Dr S Swaminathan, Vice Chancellor] அறிவித்தது, திகிலடையச் செய்தது.

 

 2010 முதல் 2023 வரை பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்: 2013-15 காலத்தில் செலவிற்கு என்று ரூ. 35 லட்சம் எடுத்துக் கொண்டதாகவும், ஆனால், இதுவரை கணக்குக் கொடுக்கவில்லை என்று குற்றம் சொல்லப்பட்டது[3]. அவர் கணக்கு காட்டாவிட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அறிவித்தார். அவரது இடைக்கால நீக்கம் விலக்கிக் கொள்ளப் பட்டது என்ற செய்தி வந்தாலும், அந்த போலி ரசீதுகள் விவகாரம் என்னாயிற்று என்று சொல்லப்படவில்லை. போராட்டத்தாலும், முத்துச்செழியன், துணைவேந்தர் ஓய்வு பெற்றதால் அவர் மூன்று பேருக்க்கு வேலைமாற்றம் செய்ய பிறப்பித்த ஆணையை ரத்து செய்ததாலும், ஒப்புக் கொண்டு ரத்தானது என்று குறிப்பிட்டுள்ளது. “தி.இந்து” 2013 செய்தியை நவம்பர் 2016ல் திருத்தியுள்ள நிலையும் நிலைமை விளக்கப்படவில்லை[4]. உள்-மற்றும்-வெளி தணிகைக் குழுக்களின் அறிக்கைக்கள் கூட ஆவணங்கள் சரி பார்த்து மற்றும் கொடுத்த உரிய பதில்-விளக்கங்களை வைத்துத் தான் முடிவெடுப்பர், தமது, தணிக்கை-எதிர்ப்புகளை முடிவுக்கு எடுத்து வருவர். ஆனால், செய்திகள் பொது மக்களின் முன் வந்த பிறகு, காரணம் வெளியிடப்படாமல் இருப்பது, எதையோ மறைப்பதைப் போலத்தான் உள்ளது.

 

2021ல் பதவிக்கு வந்த ஜெகநாடன் மீது ஆரம்பத்திலிருந்தே புகார்: இந்த பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்[5]. வந்ததிலிருந்தே அவருக்கு கை அரித்துக் கொண்டே இருந்தது போலும்[6]. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது[7].  அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[8]. 2010லிருந்து நடக்கும் ஊழல் விவகாரங்களைக் கவனித்தால், இதுவும் அந்த வகையில் சேர்ந்து விடும் போலிருக்கிறது. சமீபத்தில் பணியாளர்கள் நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றாதது, பல்கலைக்கழக பேராசிரியர் ஆராய்ச்சி படிப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன[9].  இதற்கெல்லாம் காரணம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்து வரும் பல்கலைக்கழக துணைவேந்த ஜெகநாதன் என்பது வெளிப்படையாக இருந்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை[10]. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்து நல்ல சேவை செய்தால் சரி, இத்தகைய ஊழல் செய்தாலும், அதிகாரம் சிறந்து விடுகிறது போலும். ஏற்கனவே 12 வகையான முறைகேடுகள் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த, கடந்த ஜனவரி மாதம் 2023 தமிழக அரசு உயர்நிலை குழுவை அமைத்தது. அதன் பெயரில், உயர்நிலைக் குழுவினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தினர்.

 

ஒரே மாதிரியான செய்தி- தலைப்புகள் வேறு: பாலியல் விசாரணை கமிட்டி போல, இத்தகைய விசாரணை கமிட்டிகளும் பெயரளவில், ஏதோ விசாரணை செய்து, விவகாரங்களை அமுக்கத் தான் பார்க்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த இதே போன்ற விவகாரங்கள், செய்திகள், மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான முடிவுகளைத் தான் கவனிக்க முடிகிறது. இப்பொழுதும் அதே பாணியில் தான் செய்திகள் வெளிவந்துள்ளன. தலைப்புகள் தான், ஏதோ அவரவர்கள் பெரிதாக புலன் விசாரணை செய்து, எதையோ புதியதாகக் கண்டு பிடித்து விட்டால் போல, வகைவகையா போட்டு, அரைத்த மாவையே அரைத்துள்ளனர்:

Ø  துணைவேந்தர் அதிரடி கைது![11]

Ø  பெரியார் பல்கலைக் கழகம் துணைவேந்தர் அதிரடி கைது![12]

Ø  சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது![13]

Ø  துணைவேந்தர் அதிரடி கைது! காரணம் என்ன?[14],

Ø  பெரியார் பல்கலை. துணைவேந்தர் துணைவேந்தர் அதிரடி கைது! காரணம் என்ன?[15],

Ø  முறைகேட்டில் ஈடுபட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தர்… அதிரடியாக கைது செய்த காவல்துறை – பின்னணி என்ன ?[16],

Ø  அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து அரசு பணத்தை தவறாக செலவிட்டதாக புகார்… துணைவேந்தர் கைது![17],

Ø  அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து அரசு பணத்தை தவறாக செலவிட்டதாக புகார்… பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது![18]

Ø  முறைகேடு வழக்கில் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நிபந்தனை ஜாமின்![19],

Ø  சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமீனில் விடுவிப்பு, 

Ø  காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்![20],

 

© வேதபிரகாஷ்

27-12-2023


[1] தினத்தந்தி, சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமீனில் விடுவிப்பு,  டிசம்பர் 27, 8:25 am

[2] https://www.dailythanthi.com/News/State/salem-periyar-university-vice-chancellor-jagannathan-released-on-bail-for-7-days-1087524

[3] Salem Periyar University here has suspened its Deputy Regitrar C Periyaswamy on his retirement day on charges of misappropriation of funds to the tune of Rs 35, university sources said today.
Dr S Swaminathan, Vice Chancellor of the university said Periyaswamy used to withdraw amount from the university funds for making arrangements for examinations. But he has not provided accounts regarding the expenditure for the Rs 35 lakh he has withdran from 2013-15 till February 28. He was suspended on his retirement day. Unless proper accounts were given or reimburse the amount, crimial case will be booked against him, Swaminathan said.

Business Stanard, Deputy registrar suspendedPress Trust of India  |  Salem Last Updated at March 1, 2015 14:46 IST.

http://www.business-standard.com/article/pti-stories/deputy-registrar-suspended-115030100332_1.html

[4] The suspension of Head of the Physics Department and former Vice-Chancellor in-charge of Periyar University V. Krishnakumar has been revoked by the five-member Vice-Chancellor Convenor Committee (VCCC) on Friday.  He was placed under suspension by former Vice-Chancellor K. Muthuchelian in an order signed by him on September 6, the day before his last day in office as VC, following which there were protests condemning the suspension. On Friday, the VCCC members met on the varsity premises for their first sitting after the tenure of the former VC ended. The order that was signed by all members of the committee was handed over to Mr. Krishnakumar, after which he joined duty immediately. It stated that he had been reinstated to his original position. Members of the struggle committee, who organised the demonstrations, claimed that the VCCC members reportedly agreed to consider their other demand seeking cancellation of the transfer orders issued to three non-teaching staff by Mr. Muthuchelian towards the end of his tenure. They added that based on these developments they had decided to end their agitations on Friday.

The Hindu, Suspension of former V-C in-charge of Periyar University revokedSTAFF REPORTER, SALEM:, SEPTEMBER 14, 2013 09:37 IST;  UPDATED: NOVEMBER 11, 2016 05:47 IST.UPDATED: NOVEMBER 11, 2016 05:47 IST

http://www.thehindu.com/news/national/tamil-nadu/Suspension-of-former-V-C-in-charge-of-Periyar-University-revoked/article11868701.ece

[5] ஏபிபி.லைவ், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அதிரடி கைது! காரணம் என்ன?,,By: சதீஷ் குமார்,  Published at : 26 Dec 2023 05:58 PM (IST)| Updated at : 26 Dec 2023 06:24 PM (IST).

[6] https://tamil.abplive.com/news/tamil-nadu/vice-chancellor-of-salem-periyar-university-arrested-158048

[7] தினமணி, பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, By DIN  |   Published On : 26th December 2023 05:56 PM  |   Last Updated : 26th December 2023 07:59 PM.

[8] https://www.dinamani.com/tamilnadu/2023/dec/26/selam-periyar-university-vice-chancellor-arrested-4128966.html

[9] ஜெயாடிவி, அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து அரசு பணத்தை தவறாக செலவிட்டதாக புகார்சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, Dec 27 2023 10:43 AM.

[10] http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_238677.html

[11] தமிழ்.வெப்துனியா, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது, Written By Sinoj, Last Updated: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (18:22 IST).

[12]  https://tamil.webdunia.com/article/regional-tamil-news/salem-periyar-university-vice-chancellor-arrested-today-123122600075_1.html

[13] நியூஸ்.7.தமிழ், சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, by Web Editor, December 26, 2023.

[14] https://news7tamil.live/salem-periyar-university-vice-chancellor-arrested.html

[15] கலைஞர்.செய்திகள், முறைகேட்டில் ஈடுபட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தர்அதிரடியாக கைது செய்த காவல்துறைபின்னணி என்ன ?, KL Reshma, Updated on : 26 December 2023, 07:31 PM

[16] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/12/26/periyar-university-vice-chancellor-jagannathan-arrested-in-salem

[17] இ.டிவி.பாரத், காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்!, Last Updated: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:27 IST).

[18] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/periyar-university-vc-jeganathan-appear-in-police-station/tamil-nadu20231227144630270270512

[19] ஜீ.நியூஸ், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைதுமுழு பின்னணி என்ன?,     Written by – Sudharsan G | Last Updated : Dec 26, 2023, 07:35 PM IST

[20] https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-periyar-university-vice-chancellor-jaganathan-arrested-check-here-for-shocking-details-480000

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

நவம்பர் 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிசெலவினங்கள் மூலம் ஆரம்பித்த கல்விஊழல்: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி, நியமனம், செலவினங்கள் பற்றிய விவரங்கள்-விவகாரங்கள் திருப்தியற்ற நிலையிலே இருந்தது. பல ஆடிட் / தணிக்கைக் குழுக்களின் சோதனைகளில் பணம் சரியாக கையாளப் படவில்லை மற்றும் செலவினங்கள் முறையாக கணக்குகளில் கொண்டுவரவில்லை-வரப்படவில்லை என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்தன. பணம் வாங்கிக் கொண்டு, ஆயிரக்ககணக்கில் வேலை நியமனம் செய்யப்பட்டது முதல் பலவித ஊழல்களும் மலிந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எனச் சுமார் 12,000 பேர் பணியாற்றிவருகின்றனர்[1]. நிர்வாகக் குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம்[2]. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.

தமிழக அரசு கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: நிதி நெருக்கடி, நிதி முறைகேடுகள் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பல்கலைக்கழக நிர்வாகியாக தற்போதைய தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனாவை 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் தமிழக அரசு நியமனம் செய்து, அவா் உடனடியாகப் பொறுப்பேற்றார். பின்னா், தமிழக அரசு உயா் கல்வித் துறை மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சட்டப் பேரவையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் பல்வேறு கல்வி, நிதி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் எனச் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்[3].  தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கைக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரியவந்தது[4]

2023ல் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம் அறிவிப்பு ஆணை: மேலும், பல்கலைக்கழகத்தில் அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு[5], உயா் கல்வித் துறைக்கு அவா் அறிக்கை சமா்ப்பித்தார்[6].. அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 56 உதவிப் பேராசிரியா்கள் அடிப்படை கல்வித் தகுதி மற்றும் அரசு தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியாற்றி வந்ததாகக் கூறி[7], தமிழக அரசு உயா் கல்வித் துறை பரிந்துரையின்பேரில், அவா்களை பணி நீக்கம் செய்து பதிவாளா் (பொ) ஆா்.சிங்காரவேலு வியாழக்கிழமை 16-11-2023 உத்தரவு பிறப்பித்தார்[8]. பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கும்[9], வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்[10].

புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை: உலகெங்கும் அண்ணாமலையில் படித்தவர்கள் உள்ளனர். பண்டித மணி கதிரேசன் செட்டியார் போன்ற சிறந்த தமிழ் அறிஞர்கள் தலைமையில் தமிழ் ஆராய்ச்சி ஜொலித்தது. பல அறிய படைப்புகள் வெளிவந்தன. தண்டபாணி தேசிகர் ரங்காச்சாரி போன்றோர் இசைக்கல்லூரியை அலங்கரித்தனர். சர் சி பி ராமஸ்வாமி ஐயர் போன்றோர் துணைவேந்தர்களாக பணியாற்றினார். அந்த பல்கலைக்கா இந்த நிலைமை. பொது உடைமையாக்கி நாசப்படுத்தி விட்டார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போதிய தகுதி இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதைய உயர்க்கல்வித்துறை அமைச்சறின் ஆதரவு: இந்நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்[11]. விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுஜிசி விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எச்.டி படிப்பை முடித்திருக்க வேண்டும்[12]. ஆனால் அந்த தகுதிகள் எதுவும் இல்லாதவர்கள் உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி குறைவான பேராசிரியர்கள் குறித்து 2019ஆம் ஆண்டில் சிண்டிகேட் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது[13]. நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. இப்போது துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளார்[14]. இது வரவேற்கத்தக்கது. இதற்கு யாரும் பொறுப்பல்ல. 10 ஆண்டுகளாக அவர்கள் தகுதியை மீறி சலுகையை அனுபவித்து உள்ளார்கள். தகுதி குறைவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வருங்காலத்தில் தங்களின் தகுதிக்கேற்ற வகையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தால் அரசு அதனை பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்வி ஊழல்உருவானஉருவாக்கப் பட்ட நிலைவிதம்: ஊழலில் கல்வி, கல்வித்துறை, கல்வி பாடங்கள், கல்வி நெறிமுறை அல்லது கல்வியில் ஊழல் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தது. கல்வி தெய்வமாக, தெய்வீகமாகக்  கருதப் பட்டதால் அத்தகைய உரிய ஸ்தானம் கொடுக்கப் பட்டு மதிக்கப் பட்டது. இருந்தாலும் சமீப காலங்களில் கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டதால் அந்த விளைவின் உச்சத்தில், “கல்வி ஊழல்” நடந்து வருகிறது. விடுதலைக்குப் பிறகு அரசியல் நுழைவு, ஆளும் அரசியல்வாதிகளின் தாக்கத்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் சித்தாந்த வாதிகளின் திரிபுகளாலும் கல்வி பாடத்திட்டங்கள் புத்தகங்கள் மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விற்பனர்கள் என்று எல்லாமே அரசியலுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய “கல்வி ஊழல்” என்பது ஆரம்பிக்க வைக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

18-11-2023.


[1] தினமணி, அண்ணாமலைப் பல்கலை.யில் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம், By DIN  |   Published On : 17th November 2023 12:32 AM  |   Last Updated : 17th November 2023 12:32 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2023/nov/17/56-assistant-professors-sacked-in-annamalai-university-4107136.html

[3] விகடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ்பின்னணி என்ன?!, ஜெ.முருகன், Published: 17-11-2023 at 1 PMUpdated: 17-11-2023 at 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/higher-education-department-has-dismissed-56-professors-without-adequate-educational-qualification-in-annamalai-university

[5] தமிழ்.வெப்.துனியா, அண்ணாமலை பல்கலையின் 56 பேராசிரியர்கள் பணி நீக்கமா? பரபரப்பு தகவல்..!, Written By Mahendran Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:08 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/56-professors-dismiss-in-annamalai-university-123111600061_1.html

[7] தினமலர், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 58 பேர் டிஸ்மிஸ், பதிவு செய்த நாள்: நவ 16,2023 14:25

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3482745

[9] தினத்தந்தி, 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி, 16 Nov 2023 9:28 PM.

[10] https://www.dailythanthi.com/News/State/56-assistant-professors-sacked-chidambaram-annamalai-university-takes-action-1082995

[11] தமிழ்.சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. போராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் பொன்முடி பரபரப்பு விளக்கம்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 17 Nov 2023, 3:51 pm

[12] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-ponmudi-reveals-the-reason-why-annamalai-university-56-assistant-professors-dismissed/articleshow/105289709.cms

[13] தமிழ்.இந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை செய்திப்பிரிவு, Last Updated : 17 Nov, 2023 05:58 AM.

[14] https://www.hindutamil.in/news/tamilnadu/1154731-chidambaram-annamalai-university-sacks-56-assistant-professors.html

போன்–பே, கூகுள்-பே மூலம் எழை மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது திராவிட மாடலா, அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் திராவிட ஸ்டாக்குகளா?

செப்ரெம்பர் 28, 2023

போன்–பே, கூகுள்-பே மூலம் எழை மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது திராவிட மாடலா, அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் திராவிட ஸ்டாக்குகளா?

உதகை அரசு கல்லூரியில் எல்லாவித ஊழல்களும் மலிந்துள்ளது ஏன்?: நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு கலைக்கல்லூரி 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது[1]. இந்த கல்லூரியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்[2]. இக்கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்த நிலையில், சில பேராசிரியர்கள் பெண் பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகார் எழுந்தது[3]போலிச் சான்றிதழ், பாலியல் தொல்லை என அடுத்தடுத்த புகார்களில் சிக்கிய ஊட்டி அரசு கலைக் கல்லூரி, இப்போது மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது[4]. ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர்[5]. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை, துறை மாற்றம், மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்களில் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் லஞ்சம் பெறுவதாக கூகுள் பே ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது[6].

பழங்குடிகள் போன்ற மாணவர்களிடமே லஞ்சம் வாங்கும் மாடலை என்னவென்பது?: உயர்கல்விக்கான வசதி வாய்ப்புகளை, குறைவாகக்கொண்டிருக்கும் மலை மாவட்டமான நீலகிரியில், அரசுக் கல்லூரிகளை நம்பியே பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்[7]. அதிலும் குறிப்பாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஊட்டி அரசு கலைக் கல்லூரி, மாவட்டத்தின் முக்கிய கல்லூரியாக இருந்துவருகிறது[8]. பிறகு, “பாரதியார்” பெயரை வைத்துக் கொண்டாலும் சமத்துவம், சமநீதி, சமூகநீதி என்பதெல்லாம் கிடைக்காது போலும். பழங்குடிகள், தோட்டத் தொழிலாளர்கள் என வறுமையான பின்னணியைக்கொண்ட முதல் தலைமுறை மாணவ, மாணவிகள் அதிகம் பயின்றுவருகின்றனர். இந்தக் கல்லூரியின் முதல்வராக அருள் அந்தோணி கடந்த ஜூன் மாதம் 2022 பொறுப்பேற்றுக்கொண்டார்.‌ இந்த அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை, துறை மாறுதல், தங்கும் விடுதி வசதி போன்றவற்றுக்கு மாணவ, மாணவிகளிடம் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சிலர் ஆயிரக்கணக்கில் லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன[9]. அப்படியென்றால் அருள் அந்தோணி வந்தவுடன் அதிகமானதா என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், லஞ்சம் வாங்கியதற்கான ஆடியோ, ஸ்க்ரீன் ஷாட் எனச் சில ஆதாரங்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின[10].

வாட்ஸ்-அப், ஊடகம், லஞ்ச செய்தி பரவியது: இவற்றை அடிப்படையாகக்கொண்டு ஜூனியர் விகடன் இதழில் வாட்ஸ்அப் கூகுள் பே வழியே லஞ்சம்! – மாணவர்களிடம் பணம் பறித்த பேராசிரியர்கள்?’ என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். ஆனால், அதிலும் வியாபாரம் தான் மேலோங்குகிறது. அக்க்கட்டுரை “பிரீமியம்” காசு கொடுத்தால் தான் படிக்க முடியும் என்கிறார்கள். அப்படியென்றால், அதுவும் ஒருவித லஞ்சம் எனலாம். இந்த நிலையில், ஜூனியர் விகடன் கட்டுரையின் எதிரொலியாக, கல்லூரி கல்வி இயக்கத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி தலைமையில், ஊழல் புகார் குறித்து விசாரணை நடைபெற்றது, என்று அவ்வூடகம் பெருமைப் பட்டுக் கொள்கிறது. இந்த நிலையில், ஆதிதிராவிடர் மாணவர்களை அரசு தங்கும் விடுதியில் சேர்க்க, கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

மாணவர்கள் சொல்வது: இந்த வீடியோ குறித்துப் பேசிய கல்லூரி மாணவர்கள் சிலர், “நடப்பு கல்வியாண்டில் ஊட்டி கல்லூரியில் ஏகப்பட்ட ஊழல் நடந்திருக்கிறது[11]. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்திருக்கிறார்கள்[12]. பலருக்கு ரசீதும் கொடுக்கவில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கான ஹாஸ்டல் வசதிக்கு 10,000 ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்கள். ஒரு மாணவரிடம் 3,000 ரூபாய் கவரில் வாங்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்வர் மட்டுமல்ல, பேராசிரியர்கள் சிலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். முறையான விசாரணை நடத்தினால் பலரும் சிக்குவார்கள்” என்றனர். இந்த லஞ்சப் புகார் குறித்து ஊட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி, “மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கவரில் வாங்கினேன். லஞ்சம் எனச் சொல்கிறார்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, “கல்லூரியில் நடைபெறும் லஞ்சப் புகார் குறித்து ஏற்கெனவே விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

நடவடிக்கை எடுக்கப் பட்டது என்ன?: ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுக் கல்லூரியில், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் லஞ்சம் வாங்கியதாக அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் சர்ச்சையைக் கிளப்பின.  இக்கல்லூரியில் பணியாற்றும் தாவரவியல் பேராசிரியர் ரவி என்பவர், மாணவர்கள் வேறு துறைக்கு மாறி செல்ல 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது[13]. இது தொடர்பாக மாணவர்கள் அவருடன் பேசிய செல்போன் உரையாடல்கள் மற்றும் ஜி பே செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்[14]. ஆகவே, இனி வேறு வழியில்லை என்ற நிலையில், விசாரணை தொடர்ந்தது. விவகாரம் பெரிதாகாமல் இருக்க வேண்டும் என்பதால், இங்கேயே இதனை சரிகட்ட முயற்சி மேற்கொள்ளப் பட்டது போலும். சாதாரண வழி, “பணியிடை மாற்றம்,” சஸ்பெண்ட் முதலியன.

டெக்னோலாஜி வளர்ந்தால், ஊழலும் அதே போல வளர்கிறது:  மாணவர்களிடமே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டது[15]. கல்லூரியின் முதல்வரும், இணைப் பேராசிரியர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்[16]. இவையெல்லாம் வழக்கமான செய்திகளாகி விட்டன[17]. ஒருசில நாட்களில் மறக்கப்படும்[18]. இவர்களுக்கு எப்படித் தான் ஏழை மாணவர்களிட கூட லஞ்சம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று தெரியவில்லை. இதைப் பற்றி விசாரித்த பிறகு, செல்போன் மற்றும், பணபரிமாற்றம் முதலியவை மெய்ப்பிக்கப் பட்டன. தனால், மாணவர்களின் பணம் அவர்களுக்குச் சென்றுள்ளது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டது. ஆக, இத்தகைய “பே” போன்ற மின்பரிமாற்றங்களும் லஞ்சத்திற்கு உபயோகப் படும் மற்றும் நன்றாக மாட்டிக் கொள்வார்கள் என்றும் தெரிகிறது. இருப்பினும் மெத்தப் படித்த முதல்வர், பேராசிரியர் போன்ரோர் இத்தகைய கல்வி-ஊழல்களில் ஊறியிருப்பது, இதிலும் லஞ்சம் வாங்குவது எல்லாம், மிகப் பெரிய கோரமான குற்றங்களாகவே தெரிகின்றன.

© வேதபிரகாஷ்

28-09-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ வைரல்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை, By: பிரசாந்த் | Published at : 28 Sep 2023 11:34 AM (IST). Updated at : 28 Sep 2023 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/coimbatore/education-department-officials-investigating-the-video-of-ooty-government-arts-college-principal-asking-money-142521

[3] ஜீ.நியூஸ், Crime In Tamil Nadu | மாணவர்களிடம் 5000 – 20000 ரூபாய் வரை லஞ்சம் பெற்ற பேராசிரியர், Written by – Shiva Murugesan | Last Updated : Sep 22, 2023, 01:13 PM IST

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-professor-who-took-bribes-of-rs-5000-to-20000-from-college-students-464903

[5] விகடன், வாட்ஸ்அப், கூகுள் பே வழியே லஞ்சம்! – மாணவர்களிடம் பணம் பறித்த பேராசிரியர்கள்?, சதீஸ் ராமசாமி, கே.அருண், Published: 20 Sep 2023 12 AM; Updated: 20 Sep 2023 12 AM;

[6] https://www.vikatan.com/crime/money/professors-bribery-from-students

[7] தினமலர், மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக புகார் :அரசு கலை கல்லூரியில் விசாரணை, பதிவு செய்த நாள்: செப் 22,2023 22:46.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3438048

[9] விகடன், மாணவர்களை விடுதியில் சேர்க்க லஞ்சம் வாங்கினாரா ஊட்டி அரசுக் கல்லூரி முதல்வர்?- வீடியோவும் விளக்கமும், சதீஸ் ராமசாமி, கே.அருண், Published: 27-09-2023 at 7 PM; Updated: 27-09-2023  at 7 PM.

[10] https://www.vikatan.com/crime/ooty-arts-college-principal-video-controversy

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஹாஸ்டலில் சேர ரூ.10,000 லஞ்சம்.. பரவிய ஷாக் வீடியோ! உதகை அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!, By Vignesh Selvaraj Published: Thursday, September 28, 2023, 12:20 [IST]

[12] https://tamil.oneindia.com/news/nilgiris/government-college-principal-and-professor-suspended-for-getting-bribe-from-students-543133.html

[13] காமதேனு, மாணவர்களிடம் லஞ்சம்பேராசிரியர் மீது பரபரப்பு புகார்!, Updated on: 23 Sep 2023, 7:45 pm.

[14] https://kamadenu.hindutamil.in/crime-corner/bribe-complaint-on-government-college-professor

[15] நக்கீரன், மாணவர்களிடம் 10,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 28/09/2023 (12:21) | Edited on 28/09/2023 (12:37)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-principal-suspended-accepting-rs-10-bribe-students

[17] தமிழ்வெப்துனியா, லஞ்சம் பெற்ற புகாரில் கல்லூரி முதல்வர், பேராசிரியர் சஸ்பெண்ட், வியாழன், 28 செப்டம்பர் 2023, 14;!2 IST.

[18] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/college-principal-professor-suspended-on-bribe-complaint-123092800043_1.html

திருவள்ளுவர் பல்கலைக் கழகம் -டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகம் தோற்றமும், மறைவும் – தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

செப்ரெம்பர் 17, 2023

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

05-09-2023 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள் பற்றி விசாரணை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள், போராட்டங்கள் என்று நடந்து கொண்டிருப்பது[1]. அந்த திருவள்ளுவர் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது[2]. வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2015ல் நடந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்[3]. ஆனால், பல விவரங்கள் பொது மக்களிடமிருந்து மறைக்கப் படுகின்றன. இதில், பல்கலைக்கழகத்தில், 112 கோடி ரூபாய் அளவிற்கு நிதி நிர்வாக முறைகேடு நடந்ததாகவும், பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி, பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது மற்றும் பல்கலைக்கழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது[4]. அதன் அடிப்படையில் 05-09-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்[5]. விவரங்கள் என்னவென்று தெரியவில்லை. மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடம் விசாரணை நடத்தப்பட்டது[6]. இங்கும் விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை. பிடிஐ பாணியில் ஊடகங்களில் ஒருசில வரிகளில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

02-08-2023 – திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!:  02-08-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி ஊழியர்கள் மற்றும் உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் பறை இசைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[7]. பல்கலைக்கழகத்தில் லஞ்சம், முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தி 12 மாதங்களாகியும் இதுவரை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும், உடனடியாக அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தனர்[8].

டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்: அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா 2021 பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த கல்வியாண்டு முதலில் புதிய டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கப்பட்டது. ஆனால், மாநில சட்டமன்றத் தேர்தலின் காரணமாக இந்தத் திட்டம் தாமதமானது, பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்ததன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 05ஆம் நாள் இதற்கான சட்ட முன்வரைவினை உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர் எஸ். அன்பழகன் மார்ச் 01 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகள் வரும். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், இப்பல்கலைக்கழகம் மூடப்பட்டது: அப்போதைய அ.தி.மு.க அரசு. அந்த நேரம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த துரைமுருகன், “திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நான் கொண்டுவந்தது. அதை எந்தக் காரணத்துக்காகவும் பிரிக்கவிட மாட்டேன். புதிதாக வேண்டுமானால், பல்கலைக்கழகத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இம்மாவட்டங்களில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் பிரிக்கப் பட்டன. முழுமையாக செயல்படாமல் இருந்த இப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான சட்டமுன்வடிவானது ”2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்டம்” என்பதை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா பல்கலைக்கழகம் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அ.தி.மு.க தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும்விதமாக, துணை வேந்தரைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொறுப்புகளுமே காலியாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன[9].  பொது மக்கள், “பல்கலைக்கழகத்தைப் பிரித்ததில், தி.மு.வுக்குக் கோபமில்லை. ஜெயலலிதா பெயர் சூட்டியிருப்பதுதான் பிடிக்கவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக, கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இரண்டு கட்சிகளுக்குமான அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மூன்று மாவட்டங்களிலுள்ள கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விதான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்,’’ என்கிறனர்[10].

குற்றங்கள், சீரழிவுகள் டிவி-சீரியல் போன்று காண்பிக்கப் படுகின்றன: இவையெல்லாம் தனித்தனி செய்திகளாக இருந்தாலும், சம்பந்தம் இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் ஆரம்பிப்பது என்பது சாதாரணமான விசயம் கிடையாது, அதிலும் முதலமைச்சர் பெயரில் ஆரம்பித்து உடனே மூடு விழா செய்யப் படுவது, அதிலும் அசாதாரணமன விசயம் ஆகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செய்துள்ளது. அதிமுகவும் அதை பெரிதாக எதிர்த்ததாகத்தெரியவில்லை[11]. ஆனால், திமுக-அதிமுக கட்சிகளுக்குள் இருக்கும் விருப்பு-வெறுப்பு, போட்டி-பொறாமை முதலியவற்றிற்கும் மேலாக ஏதோ ஒன்று இருப்பது தெரிகிறது[12]. கல்வியை சக்காக வைத்துக் கொண்டு அரசியல் செய்து, பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மறைக்க முடியாது. திடீரென்று தமிழக்த்தில் எல்லா பல்கலைக்கழகங்களில் ஊழல் ஏற்பட்டுள்ளது,ஏற்படுகிறது, கைது, விசாரணை, வழக்கு என்றெல்லாம் நடந்து ஒண்டிருப்பதை கவனித்து வர முடிகிறது. பிறகு, இந்த நடவடிக்கைகளில்,செயல்பாடுகளில், பலநிலைகளில் செலவழிக்கப் பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி யார் கவலைப் படுவது? பொதுவாக மக்கள் அரசியலைக் கூட இன்று, டிவி-சீரியல் போன்று பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதில் நடக்கும் குற்றங்கள் முதலியவை பார்த்து-பார்த்து,கேட்டு-கேட்டு மரத்துப் போகிறது. அவை மறக்கவும் படுகின்றன.

© வேதபிரகாஷ்

17-09-2023


[1] தினத்தந்தி, முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை , செப்டம்பர் 5, 11:19 pm

[2] https://www.dailythanthi.com/News/State/higher-education-additional-secretary-inquiry-into-irregularities-1046282

[3] மாலைமலர், முறைகேடு நடந்ததாக புகார்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை, ByMaalaimalar .5 செப்டம்பர் 2023 1:32 PM.

[4] https://www.maalaimalar.com/news/state/allegation-of-malpractice-investigation-by-additional-secretary-department-of-higher-education-thiruvalluvar-university-658795

[5] தினமலர், திருவள்ளுவர் பல்கலை.,யில் ஊழல்: அதிகாரி விசாரணை, செப்டம்பர், 07,2023,09:13 IST

[6] https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=58971&cat=1

[7] இடிவி.பாரத், திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!,Published: Aug 3, 2023, 6:38 AM.

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/vellore/thiruvalluvar-university-teaching-and-non-teaching-staffs-protest-against-administration/tamil-nadu20230803063809297297569

[9] விகடன், பெயர் சர்ச்சையால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குகிறதா தி.மு.?! – என்ன நடக்கிறது?, லோகேஸ்வரன்.கோ, ச.வெங்கடேசன், Published:23 Jul 2021 5 PM; Updated:23 Jul 2021 5 PM.

[10] https://www.vikatan.com/government-and-politics/is-dmk-government-closing-jayalalitha-university

[11] The Fedearal, Closure of Jayalalithaa Univ, fallout of rivalry between Dravidian parties?, N Vinoth Kumar, 2 Sept 2021 6:55 PM  (Updated:2 Sept 2021 7:07 PM).

[12] https://thefederal.com/states/south/tamil-nadu/closure-of-jayalalithaa-univ-fallout-of-rivalry-between-dravidian-parties/

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

ஜூலை 26, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

3-R, RRR, பற்றி மலேசிய முதல்வர் உறுதியாக இருக்கிறார்: மலேசிய பிரதமர் [3-R, RRR, Religion, Race, Royalty] விசயங்களில் யாரும் மற்றவர்களை தாழ்வாகப் பேசக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார், அதை பலமுறை எடுத்தும் காட்டியுள்ளார். ஆகையால், துவேசப் பேச்சுகளுக்கு மலேசியாவில் இடமில்லை. அந்நிலையில், நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று இதுவரை பேசி வந்தவர்களுக்கு இனி மலேசியாவில் அவ்வாறு பேச முடியாத நிலை உருவாகியிருக்கிறது. மொழி என்று வைத்துக் கொண்டாலும், அதை வைத்து முன்னேற வழிவகுக்க வேண்டுமேயன்றி, மொழிவெறியாக்கி, அதனை மதம், சித்தாந்தம், அரசியல் இவற்றுடன் சேர்த்து பிரச்சினை உண்டாக்கலாகாது. என்ன வேண்டுமானாலும்பேசி, நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்தாக வேண்டும். இதனால், அத்தகைய சித்தாந்திகள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

அரசியல்வாதிகள் பிஜேபி-எதிர்ப்பை இந்துதுவேசமாக மாற்றுவது: தமிழகத்தை சேர்ந்த பாஜக எதிர்ப்பு நிலை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் தற்போது பெரும் சிக்கலை இந்தியாவில் எதிர்கொள்வது மட்டுமல்ல உலக தமிழர்கள் இடையேயும் எதிர்கொண்டு இருப்பது பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு பெரும்பாலான நிலைகளில் இந்துவிரோதமாகி, இந்து துவேசமாகி, வெறுப்புப் பேச்ச்களில் முகின்றன. இங்குதான் சட்டமீறல்களும் வருகின்றன. புகார்கள் கொடுக்கப் பட்டு வழக்குகள் பதிவான்றன.ஆனால், தங்களது அரசியல் ஆதிக்கம் மூலம், அப்படியே அமுக்கப் பட்டு, தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், இப்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. செக்யூலரிஸ அரசாங்கம் எனும்பொழுது, அவ்வாறு ஏன் இந்துமதத்திற்கு மட்டும் விரோதமாக பேசி வருகிறார்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தொடர்ச்சியாக வீரமணி, திண்டுக்கல் லியோனி அவரை தொடர்ந்து திருமாவளவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவேளையில் மலேஷிய தமிழர்கள் இடையே எதிர்ப்பை சந்தித்து இருப்பது அதன் பின்னணியில் என்ன என்ற தகவல்தான் தற்போது ஒட்டுமொத்த திராவிட ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

2019ல் திக- வீரமணி நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது: 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24 -ம் தேதி திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் மலேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது அப்போது தொடர்ச்சியாக இந்து மதத்தை விமர்சனம் செய்யும் வீரமணி மலேஷியாவில் கால் வைக்க கூடாது எனவும், அப்படி வைத்தால் மத மோதல் உண்டாகும் எந்த மதத்தையும் தவறாக பேசாத மலேஷிய மக்கள் வாழும் இடத்தில் வீரமணி வந்தால் ஒற்றுமை குறையும் என மலேசியா உள்துறை அமைச்சகத்தில் இந்து தர்ம சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட உடனடியாக வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை திராவிட சித்தாந்தம் பேசுவோருக்கு உண்டாக்கியது, இதையடுத்து மலேஷியா சென்ற திண்டுக்கல் லியோனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்ட நேரத்தை கடந்து உள்ளே வர  அவரை வாசலில் நிற்க வைத்து மலேஷியா தமிழர்கள் வெளுத்து வாங்கினர், தமிழ்நாட்டில் இருந்து வாய் கிழிய ஊருக்கு மேடை மேடையில் நின்று கொண்டு உபதேசம் செய்வது ஆனால் நேரில் பார்த்தால் உங்கள் லட்சணம் தெரிகிறது? குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் எதற்கு மலேஷியா வருகிறீர்கள் என வெளுத்து வாங்கினர்[1]. அந்த வீடியோ இணையத்தில் TNNEWS24 வெளியிட பெரும் பரபரப்பு தமிழகத்தில் உண்டானது இதையடுத்து திண்டுக்கல் லியோனி விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது தமிழக அரசியல் சூழல்[2].

2023ல் திருமாவின் பேச்சிற்கு பலத்த எதிர்ப்பு: இந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கம் ஓய்வதற்குள் சில நாட்கள் முன்னர் திருமாவளவன் மலேஷியாவில் பேச சென்று கடும் எதிர்ப்பை சந்தித்து வந்து இருக்கிறார் அதிலும் மதம் குறித்து திருமாவளவன் பேச நிறுத்துடா என கிளம்பிய எதிர்ப்பு பெரும் பின்னடைவை திருமாவளவனுக்கு கொடுத்து இருக்கிறது. திருமாவளவன் மேடையில் பேசும் போது “தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம்.” என்றார். “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்றும் அவர் கூறினார். அப்போது மதம் குறித்து திருமாவளவன் பேசியதற்கு அரங்கில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மேடையில் இருந்து பாதியில் கிளம்பினார் திருமாவளவன்.

திருமாவின் சனாதனம் புரிதல் தவறானது: அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தனது வீடியோ பேட்டியில், அருமையாக திருமாவளவனின் பேச்சைக் கண்டித்து விளக்கம் கொடுதுள்ளார். “அவருடைய கருத்தே தவறானது. வெறுப்பு பிரச்சாரம் கூடாது என்பது ஏற்கத்தக்கது. ஆனால் அதே வெறுப்புப் பேச்சை, கடல்கடந்து வந்து ஒருமதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய அரசியல்-கட்சி சித்தாந்தத்தை தமிழாராய்ச்சி மாநாட்டில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சனாதனம் என்றால் அவருக்குப் புரியவில்லை என்பது தான் எனது கருத்து. சனாதனம் என்பது நாங்கள் புரிந்து கொண்டது அனைவரும் சமம். அனைவருக்கும் பொதுவானது இப்பூமி.., எல்லோரும் இறைவனின் குழந்தைகள் தான். எல்லோரும் ஒரு தருமம், அறத்தின் அடிப்படையில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான்  நாங்கள் புரிந்து கொண்ட சனாதனம். நாங்கள் புரிந்து கொண்ட இந்து சமயம். பக்தி மார்க்கத்துடன் நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் இங்கு வந்து ஒரு தவறான கருத்தை, தவறான இடத்தில், தவறான நோக்கத்தில் முன்வைத்ததை நாங்கள் ஏற்கமுடியாது. அதற்கு இங்கு மலேசியாவிலேயே பெருங்கண்டனம் உருவாகியுள்ளது. அவர் தமிழ்நாட்டில் என்ன அரசியலையும் செய்து கொள்ளட்டும், ஆனால், இங்கு இனிமேல் வந்தால் அத்தகைய வெறுப்பு அரசியல் உமிழவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்….பாலியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள் அங்கெல்லாம் ஜாதியம் இல்லை. இந்தியாவில் அரசியல்வாதிகளால் தான் அது ஊக்குவிக்கப் படுகிறது. எனவே இந்திய அரசியலை இங்கே கொண்டு வரவேண்டாம் என்று விளக்கினார்.  மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லோருமே ஒன்றாக, ஒரே குடும்பம் போல, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றாம். இங்கு [தமிழக] அரசியல் மற்றும் மதம் ரீதியில் எந்த பிரசினையும் தேவையில்லை. அது அவருடைய கருத்தாக இருக்கலாம், ஆனால், எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு அவர் [ஒரு மதத்திற்கு எதிராகப்] பேசியிருக்கக் கூடாது.

முனைவர் ராஜேந்திரனின் விளக்கம்: இதே போல முனைவர் ராஜேந்திரனும் அருமையான விளக்கம் அளித்துள்ளார்[3]. “ஒரு நாட்டுக்கு செல்லும்போது அந்நாட்டின் பாரம்பரியம் என்ன, அங்குள்ள சிக்கல்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது தான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது. இந்த மாநாட்டில் பேசிய, 99.99 சதவீத வெளிநாட்டவர்கள் அதை கடைபிடித்தனர். ஆனால், ஒரு சிலர் மதத்தை தாழ்த்தி பேசுகின்றனர். மலேஷியாவை சேர்ந்த ஒருவர், எங்கள் மதத்தை பற்றி இழிவுபடுத்தி பேசுகின்றனர் என, காவல்துறையில் புகார் அளித்திருந்தால், அப்படி பேசியவர்கள் வீடு திரும்பியிருக்க முடியாது. மலேஷிய சிறையில் தான் இருந்திருக்க வேண்டும். மலேஷியாவில் மதம், நாடு, இனம் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு, இம்மியளவும் இடம் கொடுக்க மாட்டோம் என, பிரதமர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நண்பர்கள் அங்கே உள்ள அரசியல் குப்பைகளை வந்து இங்கே கொட்ட வேண்டாம். அனைவருக்கும் பொதுவான தமிழை எப்படி மேம்படுத்துவது பற்றி மட்டுமே பேச வேண்டும். மாறாக அரசியல், மதம் பற்றி பேசினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்,” இவ்வாறு அவர் பேசினார்[4].

அரசியல் தவித்திருந்தால் மாநாடு நன்றாக இருந்திருக்கும்: அன்று அரங்கத்தில் இருந்தவர்களுள் யாரும் புகார் அளிக்கவில்லை, அப்படி புகார் செய்திருந்தால், அவர்கள், [திருமாவளவன்] வீடு திரும்பியிருக்க முடியாது,…சிறையில் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் எடுத்துக் காட்டினார். மூன்று 3 R-களைத் தொடவே கூடாது, பிரதமர் இதன் மீது கைவைத்தால், இம்மி அளவு கூட இடம் கொடுக்க மாட்டேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார், நேற்றும் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இருந்த நண்பர்கள் பெரிய ஆட்களாக இருக்கலாம், பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால், அங்கிருந்து வந்து குப்பைகளை இங்கு கொட்டவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இங்கு தமிழை எவ்வாறு உயர்த்தலாம், பெரிய அளவில் எடுத்துச் செல்லலாம் என்பது பற்றி பேச வேண்டும். அதை விடுத்து அரசியல் பேசுவது அந்த அளவுக்கு பொருத்தமாக இருக்காது.. இப்படி தொடர்ச்சியாக மலேஷியா தமிழர்கள் இந்து மதம் குறித்து நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சனம் செய்யும் நபர்களை சுளுக்கு எடுத்து அனுப்புவதால் அவர்கள் “குட்டி மோடி ரசிகராக மாறி விட்டார்கள்” என்று TNNEWS24 குறிப்பிட்டாலும், அங்கிருப்பவர்களுக்கும் இந்து என்ற உணர்வு இருக்கத்தான் செய்யும். போதாத குறைக்கு இலங்கை தமிழர்களும் மோடிக்கு ஆதரவாக பேச தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் இருந்து இனி மலேஷியா பயணமே வேண்டாம் என முக்கிய அமைச்சரான இளம் வாரிசு தொடங்கி பலரும் முடிவு செய்து விட்டார்களாம் என்று TNNEWS24 கூறுகிறது.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] மலேசியா, மலேசியாவா வேண்டவே வேண்டாம் சாமி தெறித்து ஓடும் முக்கிய அமைச்சர்கள்…!, BY WEB TEAM,  JULY 25, 2023.

[2] https://www.tnnews24air.com/posts/Malaysia-dont-ask-for-Sami–important-latest-tamil-current-update

[3] தினமலர், தமிழக அரசியல் குப்பையை மலேஷியாவில் கொட்ட வேண்டாம் திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, மாற்றம் செய்த நாள்: ஜூலை 26,2023 05:48

,https://m.dinamalar.com/detail.php?id=3386470

[4] https://m.dinamalar.com/detail.php?id=3386470

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

உலகம் முழுவதும் பரவியஉலகத் தமிழ் மாநாடுபிரச்சினை: 21-07-2023 அன்று தொடங்கும் 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டுக்  குழுக் கூட்டம், மஇகா துணைத் தலைவர் எம். சரவணனுக்கு முதலில் அந்த நிகழ்வில் பேச இடமளிக்கப்படாததால், கிட்டத்தட்ட அடிதடியில் முடிந்தது[1]. Pakatan Harapan-MIC meeting என்பதே அரசியல் கூட்டணி என்று தெரிகிறது. பிரதமர் அன்வார் இப்ராகிமின் முக்கிய உரையைத் தொடர்ந்து சர்வதேச மாநாட்டில் அமைச்சர் மட்டுமே உரையாற்றுவார் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், சரவணனுக்கு ஏன் இடம் கொடுக்கக் கூடாது என்ற வாதம் எழுந்தது. அதனால் அப்பிரச்சினை ஏற்பட்டது[2]. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சிவகுமார் [Sivakumar Varatharaju Naidu] IATRன் தலைவராக நியமிக்கப் பட்டதற்கும் எதிர்ப்பு மொழிரீதியில் என்றும் வெளிப்பட்டது[3].  அதாவது அவர் தெலுங்கர், தமிழர் கிடையாது என்ற வாதம் வைக்கப் பட்டது. தமிழ் வல்லுனர்களுக்கு சிவகுமாரைத் தெரியாது, அவருக்கு தமிழ் இலக்கியம் முதலியனவும் தெரியாது என்றெல்லாம் விமர்சனம் செய்யப் பட்டது[4]. இவ்வகையான மொழிவெறி இக்காலத்திலும் இவர்களிடம் இருப்பது திகைப்பாகவே இருக்கிறது. இந்தியாவில் ந்தியரை, தென்னிந்தியரை ஏன் தமிழரைக் கூடப் பிரித்து வருகின்றனர் என்றால் அயல்நாட்டிலும் அத்தகைய பிரிவினைவாதங்கள் இக்குழுக்கள் வைப்பதை கவனிக்கலாம்.

பல இடங்களை தேசங்களைக் கடத்து வந்த மாநாடு: முன்னரே இம்மாநாடு எங்கு நடத்தப் பட வேண்டும் என்ற பெரிய பிரச்சினையும் இருந்தது. ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்றெல்லாம் விவாதிக்கப் பட்டு, சென்னை என்று நடந்தது[5]. போதாகறைக்கு, சென்னையில் ஜூலை 7 முதல் 9 வரை 11ம் உலகத் தமிழ் மாநாடு என்று நடந்து விட்டது[6]. ஒவ்வொரு நிலையிலும் சச்சரவு, முரண்பாடு, சண்டை, புகார் என்றெல்லாம் எழுந்து அடங்கி விட்டன. நிதி, நிதியுதவி, நிதி பற்றாகுறை என்றெல்லாம் காரணங்கள் குறிப்பிட்டாலும், அதனையும் மீறி எதுவோ செயல்படுவது தெரிந்தது. இருப்பினும், இப்பிரச்சினை கோலாலம்பூருக்கு சென்று அங்கு அரசியலாகவே மாறி விட்டது. அழைப்பிதழ் கொடுக்கும் விசயத்தில் கூட அரசியல் தான், பெரும்பாலான அழைக்கப் பட்டவர்கள் திக-திமுகவினர் தான். அவர்களது இணைதள போட்டோக்களே சான்றாக உள்ளன.  அரசியல் பிரச்சினை பெரிதாக்க வேண்டாம் என்ற ரீதியில் தான் தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வராமல், பிரதிநிதிகள் போல மற்றவர்களை அனுப்பியுள்ளனர். ஸ்டாலின் முதல் எடப்பாடி வரை வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர். அதிமுக சார்பில் வைகை செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதே போல வந்தவர்கள் மேடையில் பேசினர்.

தமிழ் என்று சொல்லிக் கொண்டே பிரிவினைவாதம் வளர்த்து சண்டைப்போட்டுக் கொள்ளும் கூட்டங்கள்: மொத்தத்தில், “தமிழர்” என்று சொல்லிக் கொள்வதில், அடையாளம் காணுவதில், இப்பொழுது, சில சித்தாந்திகள் எழுப்பும் பிரச்சினையான யார் திராவிடன், யார் தமிழன் போன்ற அர்த்தமில்லாத விசயங்களை இதிலும் நுழைப்பது போலிருக்கிறது. தமிழன் – திராவிடன் அடையாளங்களைத் தாண்டி அப்படி என்ன வேலை செய்கிறது என்பது ரகசியமாகத் தான் உள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில், “தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் கிடையாது,” என்று பேச ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், தமிழன் என்பதற்கு என்ன தகுதிகளை, சரத்துகளை வைப்பார்கள் என்று தெரியவில்லை. சென்னை மாநாட்டிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், சிலர் இரண்டிலும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்-தமிழ் தேசிய, தமிழ் இன, தமிழின தேசியவாத, சுயயாட்சி, சுய-உரிமை என்றெல்லாம் ஆந்தைகள் போல இருந்து, பச்சோந்திகளாக பேசி திரிகின்றனர். பிரிவினைவாதத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

21-07-2023 வெள்ளிக்கிழமை முதல் நாள்: கோலாலம்பூர், ஜூலை 21- மலேசியாவில் இன்று (21.7.2023) 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய நட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், மாநாட்டுப் பாடலுடன் கோலாலம்பூரில் எழுச்சியுடன் தொடங்கியது[7]. மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று (21.7.2023) முதல் 3 நாள்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (International Association for Tamil Research) 11ஆம் மாநாடு நடைபெற்றது[8]. ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள் மாநாட்டினை மலேசிய நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் 23-07-2023 அன்று தொடங்கி வைத்தார். பலருக்கு அழைப்பிதழ் பலவிதமாக அனுப்பப் பட்டது[9]. தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பொது நல செயற்பாட்டாளர்கள், கல்லூரி – பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றுகிறார்கள்[10].  முதல் நாளான 21.7.2023 அன்று தொடக்க விழாவில் மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணையக்  காலகட்டத்தில் தமிழ்மொழி என்ற கருப்பொருளை மையமாக வைத்து மாநாடு  நடைபெறுகிறது.

முன் வரிசையில் அல்லது முன்னணியில் அரசியல்வாதிகள்: தொடக்க விழா அரங்கில், அரசியல்வாதிகள் அதிகமாகவே இருந்தனர். அவர்கள், அவர்களாகவே வந்தனரா, வரவழைக்கப் பட்டனரா என்று தெரியவில்லை.

  1. திராவிடர் கழகம் கி.வீரமணி,
  2. தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்,
  3. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,
  4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரன்,
  5. இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மதுக்கூர் இராமலிங்கம்,
  6. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி (சி.பி.எம்.),
  7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன்,
  8. ‘நக்கீரன்’ கோபால்,
  9. தமிழ்த் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன்,
  10. கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் மற்றும்

கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர்.

பொது விவரங்கள்: மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தொடங்கியது. பியர்ல் இன்டர்நேசனல் விடுதியில், தங்கியவர் எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்ட பின்பு, பேருந்துகள் மூலம் அரங்கிற்கு சென்றனர். 9.45 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின – கடவுள் வாழ்த்து, மலேசிய நாட்டுப் பண்,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அடுத்து வரிசையாகச் சொற்பொழிவுகள் அரங்கேறின. மலேசியத் தமிழ் அறிஞர்களும், இந்தியத் தமிழ் அறிஞர்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் வரிசையாகச் சொற்பொழிவு ஆற்றினர். பகல் உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு எல்லாம் அங்கேயே ஏற்பாடு செய்து இருந்தனர். இது ஒரு பங்கேற்றவரின் விவரம். நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் 40 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றிய பிறகு, இன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை, ஆடல், பாடல்கள். 8 மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] Free Malaysia Today, Altercation at PH-MIC meeting over who’ll speak at world Tamil conference, K. Parkaran – 20 Jul 2023, 9:57 pm.

[2] https://www.freemalaysiatoday.com/category/nation/2023/07/20/altercation-at-ph-mic-meeting-over-wholl-speak-at-world-tamil-conference/

[3] Focus – Malaysia, Tamils disappointed as Sivakumar, a Telugu, is appointed International Tamil Conference chairman, By Contributor – Tamil Vaanan, 13/07/2023.

[4] https://focusmalaysia.my/tamils-disappointed-as-sivakumar-a-telugu-is-appointed-international-tamil-conference-chairman/

[5]  இவை பற்றியெல்லாம் எற்கெனவே விவரமாக முந்தைய பிளாக்குகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[6]  இதைப் பற்றியும் விவரமாக எனது முந்தைய பிளாக்குகளில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஊடகங்கள் இவ்விசயங்களில் மௌனமாக இருப்பது தான் ஆச்சரியமாக-திகைப்பாக இருக்கிறது.

[7] நியூஸ்.டி.எம், 11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் தொடங்கியது..!, By: Newstm Admin, Sat, 22 Jul 2023.

[8] https://newstm.in/tamilnadu/11th-world-tamil-conference-begins-in-malaysia/cid11656242.htm

[9] நியூஸ்.லங்காஶ்ரீ, மலேசியாவில் 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: பிரபலங்களுக்கு பறந்த அழைப்பு, Malaysia, Tamil,  By Nandhini..

[10] https://news.lankasri.com/article/11th-world-tamil-research-conference-in-malaysia-1687942005

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? – புதிர்கள், மர்மங்கள் முதலியன விலகுமா? (4)

மே 24, 2023

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? – புதிர்கள், மர்மங்கள் முதலியன விலகுமா? (4)

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை?: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய நாட்களில் 11– ஆவது உலகத்தமிழ் மாநாடு நடக்கவுள்ளது[1]. இதை திராவிடச் சிந்தனையாளர்கள் சீர்குலைக்க முயல்வதாக தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அவியனரசு குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:- “தமிழ்ப் பேரறிஞர் ஈழத்து தனிநாயகம் அடிகளின் சீரிய முயற்சியாலும் சாலை இளந்திரையன் போன்ற தமிழறிஞர்களின் ஒத்துழைப்பாலும்உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்கடந்த காலங்களில் முறையாகத் தமிழ் அறிஞர்களிடம் ஆய்வு கட்டுரைகளைப்  பெற்று, உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்க வைத்து தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வந்தது. அரசியல் கலப்பற்ற அந்நிறுவனத்தைத் சில வேளைகளில் திராவிட கட்சிகள் கையகப்படுத்த எண்ணி அதில் தோல்வி அடைந்தன.

தமிழுக்கு முன்திராவிடம்என்ற பொய்யான கருத்தியலை முன்வைத்தால் தமிழை சிறுமைப் படுத்துவதாகுமா?: அவியனரசு தொடர்ந்து கூறியது, “சென்னையில் நடை பெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரைக் கூட முறையாக அழைக்கவில்லை. அது போல் 1980–இல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது தனித் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அழைக்கப் பெற்றும் அவர் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்ட கசப்பான நிகழ்வுகளும் உண்டு. தமிழறிஞர் என்று திராவிட கட்சியினரால் சொல்லப்படும் சிலர் எப்போதும்தமிழ் பேரறிஞர்களாகதங்களை தாங்களே விளம்பரப் படுத்திகக் கொள்வார்கள். தமிழுக்கு முன்திராவிடம்என்ற பொய்யான கருத்தியலை முன்வைத்து தமிழை சிறுமைப் படுத்துவதே அவர்களின் தொடர்ச்சியான வேலையாக உள்ளது. அவ்வாறான நிகழ்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் உள்ளது அரசியலா?: அவியனரசு தொடர்ந்து கூறியது, “உலகத் தமிழாராச்சி நிறுவனத்தை கைப்பற்ற நினைத்த திராவிட கட்சிகளின் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. இச்சூழலில் எதிர்வரும் ஜூன் 16, 17, 18, 23 ஆகிய நாட்களில், 11–ஆவது உலகத் தமிழ் மாநாட்டை சிங்கப்பூரில் நடத்துவது என உலகத் தமிழாராச்சி நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டது. மாநாட்டில் திராவிட சிந்தனையாளர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்பதை அறிந்து கொண்ட தமிழ்நாட்டிலிருக்கும் திராவிட சிந்தனையாளர்கள் சிலர் 70 ஆண்டுகளாக இயங்கிவரும் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தை பிளந்து, அவர்கள் தாங்களே உலகத் தமிழ்மாநாட்டை தனியாக நடத்தப் போவதாக அறிவித்தனர்.

ஷார்ஜாசிங்கப்பூர்கோலாலம்பூர்: அவியனரசு தொடர்ந்து கூறியது, “முதலில் சிங்கப்பூர் என்றும் பின்னர் சென்னை என்றும் மாநாட்டு இடங்களையும் அறிவித்த நிலையில் இடையில் என்ன நடந்தனவோ தெரியவில்லை மீண்டும் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு தாங்களும் இணைந்து உலகத்தமிழ் மாநாட்டை நடத்த விரும்புவதாக உலகத் தமிழாராச்சி தலைவர் மலேசிய ஐயா. மாரிமுத்துவுக்கு மடல் எழுதினார்கள். இவர்களின் சூது திட்டத்தை அறிந்த உலகத் தமிழாராச்சி நிறுவனத் தலைவர் மலேசிய ஐயா மாரிமுத்து, மீண்டும் அவர்களை மாநாட்டு குழுவில் சேர்க்க முடியாது என மறுத்துவிட்டார். இப்போது உலகத் தமிழாராச்சி நிறுவனம் முற்றிலும் திராவிட கலப்பற்ற தூய தமிழர்களின் முழுகட்டுப்க்பாட்டில் வந்துள்ளது. மாநாட்டு குழுவில் குழப்பங்களைத் தோற்றுவிக்க நினைத்த தமிழ்ப் பகைவர்கள் புறக்ககணிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரத்தால் அரசு நடத்துவதை தமிழர் அறிவர்: அவியனரசு தொடர்ந்து கூறியது, தற்போதைய சூழலில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து வருகின்றனர். தமிழ் அமைப்புகளில் பிறமொழியாளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப் பட்டுவருகின்றனர். திராவிடக்  கட்சிகளின் 56 ஆண்டுக்கால ஆட்சியில், 1956 ஆம் ஆண்டு தமிழ்ஆட்சி மொழிச் சட்டத்தை இன்னமும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை, தமிழ் மொழியைப் பயிற்றுமொழியாக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற  வேண்டுமென்ற தமிழர்களின்க கோரிக்கையை ஏற்க மறுப்பது, உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க இயலாத திராவிடர்களின் கையறு நிலைபோன்ற  பொறுப்பற்ற உண்மையான அக்கறையற்ற போக்கோடு வெறும் ஆரவாரத்தாலும் விளம்பரத்தாலும் மட்டுமே அரசை நடத்தி வருகிற நிலைகளை உலகத் தமிழர்கள் அறிந்தே உள்ளனர்.

சித்தாந்த மோதல் எதில் ஆரம்பம்முடிவு: அவியனரசு தொடர்ந்து கூறியது, 11–ஆவது உலகத் தமிழ்மாநாட்டை மலேசியதலை நகர் கோலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர் நிலத்தையும் மொழியையும் பாதுகாக்கவும் உண்மையான தமிழ் ஆய்வு கட்டுரைகள் மூலம் அடுத்த உலகலாவிய வளர்ச்சிக்குரிய மொழி தமிழ் என்பதை நிறுவிடவும் தமிழராகிய நாம் பலரும், இந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குத் தமிழ்நாட்டில் இருந்து மெய்யான தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், தமிழ்தமிழர்நல இயக்கங்களின் தலைவர்கள் என அனைவரும் பெரும் திரளாக போய் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் வேண்டிக் கொள்கிறேன்,” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறியப் படதோர், உதிரிகள் ஆர்பாட்டம் செய்வது ஏன்?: தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி, அதன் தலைவர் அவியனரசு யாருக்கும் தெரிந்ததாக இல்லை. ப்பொழுது மாலைமுரசு வெளியிட்ட செய்தியிலிருந்து தான் தெரிகிறது. இவரது முகநூலிலிருந்து அறியப் படுவதாவது, இவர் ஒரு இந்திய-தேசியவிரோத கொள்கைக் கொண்ட சித்தாந்தியாகப் புலப்படுகிறது. முன்பு, பாமக போன்றவர் கூட தன்னுரிமை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மாநாடுகள் நடத்தியுள்ளனர்.பிறகு, சட்டரீதியிலான பிரச்சினை புரிந்து அடங்கி விட்டனர். அவ்வப்பொழுது, எங்கிருந்தோ ஆதரவு கிடைக்கிறது என்றால், தமிழ், தமிழ் தேசியம், வடவர், ஆரியர், வந்தேறி என்றெல்லாம் பேசிக் கொண்டு கலந்தள்ளிக் கொண்டிருப்பர். இப்பொழுது, “உலக தமிழ் மாநாட்டவர்” இவ்வாறு நடந்து கொண்டால், அதில் ஆராய்ச்சி, ஆய்வுத் தன்மை, உண்மைத் தன்மை முதலியவை நீர்த்து, குறைந்து, உணர்ச்சிப் பூவமான கூப்பாடுகள், அரைத்த மாவை அறைக்கும் ஆய்வுக் கட்டுரைகள் என்று “கட்-அன்ட்-பேஸ்ட்” வகையறாக்கள் தான் மிஞ்சும். “”அரசியல் கலப்பற்ற நிறுவனம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். நிச்சயமாக அரசியல் கட்சிகளின் ஆட்கள் தான் எல்லா நிறுவனங்களிலும் நியமிக்கப் பட்டுள்ளார்கள், வேலை செய்து வருகிறார்கள். “ரிடையர்ட்” / ஓய்வு பெற்ற பிறகும் வேலை செய்து வருகிறார்கள்.    

தமிழ் பேரறிஞர்களாகதங்களை தாங்களே விளம்பரப் படுத்திகக் கொள்வார்கள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். அதனால் தான் தமிழைக் காப்போம் என்று 1970லிருந்து கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், இன்று வரை ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. மேடைகளில் கத்திக் கொண்டும், மாநாடுகளில் ஜாலியாக மூன்று நாட்கள் காலத்தைக் கழித்தும், கிடைத்த லட்சங்கள்-கோடிகளை செலவழித்து, கமிஷன் அடிப்பதில் போட்டிகளும் நடக்கின்றன. அது இப்பொழுது வெளி வந்து விட்டது. “தமிழ் அமைப்புகளில் பிறமொழியாளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப் பட்டுவருகின்றனர்,” என்பதிலும் போலித்தனம் வெளிப்படுகிறது. இம்மாநாடுகளில் ப்பங்கு கொண்டவர்கள், பதவுகளில் உள்ளவர்களில் நிறைய பேர் தமிழர்களே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். “திராவிட கலப்பற்ற தூய தமிழர்……….” என்றெல்லாம் பேசுவதையும் கவனிக்கலாம். ஒருபக்கம் திராவிட இனம் என்றும், இன்னொருப் பக்கம் தமிழர் இனல் என்றும் உளறிக் கொண்டிருப்பர். இவர்களுக்கு விஞ்ஞான ரீதியில், மொழிவிய்ல், மானுடவியல் போன்றவையும் ஒழுங்காகத் தெரியாது, ஆராய்ச்சி நெறிமுறைகளும் தெரியாது. கூட்டமாக, வெறிபிடித்தது போல, வன்முறைகளுடன் செயல் பட்டுக் கொண்டிருந்தால், நிச்சயமாக மற்றவர் ஒதுங்கி விடுவார்கள். இவர்கள் தான் “குண்டு சட்டியில் குதிரை” ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

23-05-2023.


[1] மாலைமுரசு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21, 22 ஆகிய நாட்களில் 11– ஆவது உலகத்தமிழ் மாநாடு, சென்னை, 23-05-2023, பக்கம்.

இலக்குவனின் கடிதம் தொடர்கிறது……………………….

தமிழகத்தில் துணைவேந்தர் நியமன ஊழலும், திராவிடக் கட்சிகளும், கல்வி-படிப்புத் துறை தராதரமும், யோக்கியதையும்.

ஒக்ரோபர் 23, 2022

தமிழகத்தில் துணைவேந்தர் நியமன ஊழலும், திராவிடக் கட்சிகளும், கல்விபடிப்புத் துறை தராதரமும், யோக்கியதையும்.

2017 முதல் 2021 வரை திமுகதிமுக ஆட்சிகளும், கவர்னர்களும்: தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது குழப்பமான அரசியல் சூழ்நிலையில் 2017-ம் ஆண்டு தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்[1]. பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பின் பஞ்சாப் கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டார்[2]. இவர் ஆளுநராக இருந்த போது பல்வேறு சர்ச்சைகளிலும், குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் சூரப்பா உள்பட அவரின் துணைவேந்தர் நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின[3]. தமிழ்நாட்டு பல்கலைக் கழகத்திற்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரை நியமிப்பதா என கடும் எதிர்ப்புகள் எழுந்தன[4]. திக-திமுக போன்ற கட்சியினர் ஊடகங்கள் மூலம் பலவித எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். பலவிதமான அவதூருகளையும் கிளப்பி வந்தனர். “நக்கீரன்” ஒன்றே உதாராணத்திற்கு சொல்லலாம். 2021ம் ஆண்டு தமிழக புதிய கவர்னாக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறை ஊழல் விபச்சாத்தை விட மோசமானது: பல்கலைக்கழக ஊழல்கள் தமிழகத்திற்கோ, திராவிடக் கட்சிகளுக்கோ புதியதல்ல. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஊழலில் சிக்கியுள்ளன, பல் துணைவேந்தர்கள், தாளாளர்கள் ஊழலில் கைதாகியுள்ளனர், சிலர் மர்மமான நிலைகளில் இறந்துள்ளனர். ஆனால், ஊழல் ஒழிந்த பாடில்லை. துணைவேந்தர் நியமனம், அதிலிருந்து துணை-பேராசிரியர் நியமனம் முதலியவை எல்லாம் எப்படி லட்சங்கள் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்பதெல்லாம் பலமுறை ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஆனால், யாருக்கும் இதைப் பற்றி வெட்கப் படுவதோ, கவலைப் படுவதோ இல்லை. இதுவும் நடக்கிறது-அதுவும் நடக்கிறது என்று தான், காலம் போய் கொண்டே இருக்கிறது. படிப்பு-கல்வி, அவற்றின் தரம், நெறிமுறை என்றால் நினைப்பவர்களும் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சென்று விடுவார்கள். இத்தகைய ஊழல் விவகாரங்களை, அசிங்கங்களை, ஒதுக்கி விட்டு கடந்து செல்கிறார்கள். கல்வித்துறை ஊழல் விபச்சாத்தை விட மோசமானது என்பது தெரிந்த விவகாரம் ஆகிவிட்டது.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் முதல் மந்திரி பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது[5]. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித், அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்றும் தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்[6]. இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். ‘பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் கவர்னராக நான் நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழககவர்னராக அதாவது 20 பல்கலைக்கழகங்களின் வேந்தராக, 4 ஆண்டு காலம் இருந்துள்ளேன்[7]. எனது பதவிக் காலத்தில் சட்டப்படி 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன்[8]. தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்குள்ள கல்வித் துறையை ஒழுங்குபடுத்தியதற்காக தமிழக முதல்வ-மந்திரி மு.க.ஸ்டாலின் என்னைப் பாராட்டினார். அவரிடம் கேளுங்கள். அவரிடமிருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன். அதை யாராலும் தடுக்க முடியாது. நான் என் கடமையைச் செய்யவில்லை என்றால் நான் குற்றவாளியாக உணர்வேன். ஒரு கவர்னரின் பொறுப்பு, அனைவருக்கும் வழிகாட்டுவதும் பல்கலைக்கழகங்களைக் கவனிப்பதுமே. என்ன நடந்தாலும் என் கடமையைச் செய்வேன்’ என்று கூறியுள்ளார் .

துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் அது ஆளுநரையே சாரும் என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் கூறினார்[9]. முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கேபி.அன்பழகன் நேற்று அளித்த பேட்டி[10]: “பஞ்சாபில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை பெற்று நியமனம் செய்ததாக பேசி உள்ளார். துணை வேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் மட்டுமே கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார். ஆளுநரே தேர்வு செய்து அறிவிக்கிறார். இதில் அரசுக்கோ, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த எனக்கோ எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. அப்படி இருக்கிறபோது, தமிழகத்தில் தான் பணியாற்றிய காலத்தில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை பெற்றுக்கொண்டு துணைவேந்தரை நியமனம் செய்த நிலை இருந்தது என இன்றைய பஞ்சாப் ஆளுநர், பேசியது ஏற்ககூடியதாக இல்லை. பஞ்சாபில் அவர் துணைவேந்தரை நியமிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்த தவறு நடந்தாலும் அந்த காலகட்டத்தில் ஆளுநராக பணியாற்றிய அவரையே சார்ந்தது ஆகும்,”. இவ்வாறு அவர் கூறினார்.

கம்யூனிஸ்டுகளின் போலித்தனம்: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டின் ஆளுநராக 4 ஆண்டுகளுக்கு மேலாக பன்வாரிலால் புரோகித் பணியாற்றியுள்ளார்[11]. பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த காலத்தில் 27 துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கூறியுள்ளார்[12]. அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற உயர் பொறுப்பில் உள்ளவர் கூறும் புகாரை வெறும் செய்தியாக கடந்துவிட முடியாது. பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழக அரசு விசாரிக்க வேண்டும். தவறு நடந்திருந்தால் ஊழல் செய்து துணைவேந்தர் பதவிகளில் அமர்ந்துள்ளவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பணி நியமனம் ஊழல் முறைகேடுகளுக்கு இடம்தராத வகையில் அமைந்திட விதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கம்யூனிஸ்டுகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை, ஏனெனில், இவர்கள் சும்மா பேசிக் கொன்டுதான் இருப்பார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதும் தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1] தினமலர், தமிழக பல்கலை. துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை: மாஜி கவர்னர் குற்றச்சாட்டு, Updated : அக் 21, 2022  21:22 |  Added : அக் 21, 2022  20:48.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3151495

[3] நியூஸ்.17.தமிழ், தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை ; பன்வாரிலால் புரோஹித், by EZHILARASAN DOctober 22, 2022.

[4] https://news7tamil.live/in-tamil-nadu-the-post-of-vice-chancellor-sold-up-to-rs-50-crores-says-punjab-governor-banwarilal-purohit.html

[5] தினத்தந்தி, தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை விற்பனைபன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல், அக்டோபர் 22, 12:59 pm (Updated: அக்டோபர் 22, 1:07 pm).

[6] https://www.dailythanthi.com/News/India/vice-chancellors-post-in-tamil-nadu-for-sale-between-rs-40-crore-rs-50-crore-banwari-lal-purohit-shocking-information-820270

[7] தினமணி, தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை! முன்னாள் ஆளுநர் அதிர்ச்சித் தகவல்!!, By DIN  |   Published On : 22nd October 2022 10:36 AM  |   Last Updated : 22nd October 2022 10:36 AM.

[8] https://www.dinamani.com/india/2022/oct/22/in-tamil-nadu-a-vice-chancellors-post-was-sold-for-rs-40-to-rs-50-crore-banwarilal-purohit-3936820.html

[9] தினகரன், துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் ஆளுநரையே சாரும்: மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி, 2022-10-23@ 01:36:27

[10] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=808808

[11] தமிழ்.ஒன்.இந்தியா, துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்.. பற்றவைத்த பன்வாரிலால் புரோகித்.. விசாரணை தேவை.. முத்தரசன்!, By Yogeshwaran Moorthi Updated: Saturday, October 22, 2022, 17:10 [IST].

[12] https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-shoul-investigate-about-banwarilal-purohit-complaint-says-mutharasan-481764.html

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, திராவிட மாடல் கல்வித்துறையை அரசியலாக்கி சீர்கெடுக்கிறது! (4)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, திராவிட மாடல் கல்வித்துறையை அரசியலாக்கி சீர்கெடுக்கிறது! (4)

சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் அமர்த்தப் பட்ட ஊழல்: சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி, பேராசிரியர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்[1]. இவ்வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசியர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணிநியமன விதிமுறைகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[2]. ஒவ்வொரு பேராசியரின் ஆவணங்களும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் பணிநியமன ஆணைகள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதா எனவும், விருப்பத்தின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும்  நீதிபதி சுப்ரமணியம் தெரிவித்தார்[3]. ‘வகுப்பில் மாணவர்கள் பேராசிரியர்களை மதிப்பதில்லை எனும் பொது குற்றச்சாட்டு நிலவி வருகிறது. பேராசிரியர்களுக்கு தகுதியில்லை என்றால், அவர்களால் முறையாக வகுப்புகளை நடத்த முடியாது. அப்படியிருந்தால் அவர்களை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?’ என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கொரோனா காலத்தில் தொடரும் ஊழல்கள்: பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட தொலைதூர கல்வி மைய மாணவர்களுக்கு மே 15-ந் தேதி 2019 (இன்னும் இரண்டுநாட்கள்தான் உள்ளன) தேர்வுகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழும்பியிருக்கிறது[4]. இதற்குப் பின்னணியை ஆராய்ந்தபோதுதான் துணைவேந்தரின் புத்தக பிரிண்டிங் ஊழலும் அம்பலமாகிறது[5]. புத்தகங்கள் இல்லாமலேயே தேர்வுக்கு படித்து எப்படி தேர்ச்சி பெறமுடியும்? அப்படி தேர்ச்சிபெற்றவர் அரசுப்பணியில் எப்படி நேர்மையுடன் செயல்படுவார்? 2022ல் கேரளா மையங்களில் னினா-விடைத் தாள்கள் மாற்றப் பட்டு, மற்றவர்களை வைத்து எழுதுவிக்கச் செய்து, பாஸ் செய்ய ரூ. 3.5 கோடிகள் பெற்றதாக செய்திகள் வந்தன[6]. அதாவது, கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, ஆ:ள்மாறாட்டம் செய்து, அத்தகைய ஊழல்களை செய்துள்ளனர்[7].

2018 ஊழலை 2022ல் நக்கீரன் கிளறுவது ஏன்?: பாமக ராமதாஸ், வள்ளி ஊழலை தனது  அறிக்கையில் வெளியிய, அதை விகடன், “துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ்” என்று தலைப்பிட்டு வெளியிட்டது[8]. பிறகு, மேலும் விவரங்களை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டப் பிறகு, ஊடகங்கள் அதைப் பறிய செய்திகளை வெளியிட்டன[9]. நக்கீரனில் இப்பொழுது, இந்த விவரத்தை  அதிமுகவுடன் இணைத்து கதையை வெளியிட்டுள்ளது[10]. பழையக் கதையை, இப்பொழுது விவரிக்க முயன்றுள்ளது.  காளிமுத்து, ரவிச்சந்திரன், வள்ளி, சந்தில் பாலாஜி என்று புகைப் படங்களைப் போட்டு விவரிக்கின்றது. ஆனால், 25 பேருக்கும் மேலாக ஊழலில் சிக்கியுள்ள பல்கலை துணைவேந்தர்கள் பற்றியும் இதே மாதிரி கதைகள் எழுதலாமே? கோடிகளுக்கு அதிபதிகள் ஆகி, பல வீடுகள் வாங்கி, வியாபாரங்களில் முதலீடு செய்து ஜாலியாக காலம் தள்ளி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் மட்டும் ஊழல் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் தொடரத்தான் போகிறது. இதில் திராவிடக் கட்சிகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், தெளிவாகவும் செயல்படுகிறார்கள். பழைய-தொடர்ந்து வரும் சிஸ்டம் அப்படியே தான் இருக்கும். வேண்டுமானால், சில மாறுதல்களைச் செய்யலாம்.

மத்திய அரசு மோதல் கல்வித் துறையை சீரழிக்கும்: பெரியார், அண்ணா, கருணாநிதி சொன்னார்கள் என்று பாடங்களில் புகுத்தலாம். திராவிடியன் மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக, முழுமையாக, எல்லாப் பிரச்சினைகளையும் வைத்து, கடந்த 70 வருட திராவிடத்துவ தாக்கத்தை வைத்து, சமூகத்தை ஆராய்ந்தால், குற்றங்கள் தான் பலவிதங்களில் பெருகி வந்துள்ளன, வருகின்றன. கல்வித் துறை சீரழிவுகளே, மாணவ-மாணவியர் ஒழுங்கீன, சமூகவிரோத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது, திகைப்படையச் செய்கிறது. அடிப்பது, கொல்வது என்ற அளவுக்கு வந்து விட்டது. முதலில் இவற்றை சரிசெய்யப் பார்க்காமல், மத்திய அரசு மோதல் என்று வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளினால், எல்லாமே சீரழிந்து விடும். மத்திய அரசு நிதியுதவி, ஆதரவு, முதலியன எல்லா மாநிலங்களையும் இணைந்து வருவது. இந்தியாவில், பாரதத்தில் இந்தியர் ஒன்றாகத்தான் செயல்பட வேண்டும். அவ்வாறுதான் 5000 வருடங்களுக்கும்மேலாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது போல, சில மாநிலங்கள், அரசியல்வாதிகள் ஒற்றுமையில்லாமல் போகும் போது, வெளியிலிருந்து ஆபத்து வருகிறது. அதைத்தான், இந்த திராவிடன் மாடல் எல்லாம் செய்து வருகிறது.

  1. மாமூல், கையூட்டு, கமிஷன், லஞ்சம், கவனிப்பு, வந்து பார்க்கிறேன்…… இவற்றையெல்லாம் ஏன் இந்துத்துவ வாதி எதிர்ப்பதில்லை?
  2. திராவிட கட்சிகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், சரி, இந்துத்துவ வாதிகள், தூய்மை, நியாயம், தர்மம் பேசுபவர்கள் அப்படி இருக்கலாமா?
  3. ஶ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸர், மனத்தளவில் நினைக்கின்ற ஒரு சிறிய அதர்ம சிந்தனைக் கூட பெரிய பாவம் என்கிறார்! பிறகு, ஊழலைக் கொல்ல வேண்டாமோ?
  4. தூய நினைவுகள் தூய்மையாக்குகின்றன, அது உடலையும் கட்டுப் படுத்துகின்றன, அமைதி-ஆரோக்கியம், ஆயுள் கொடுக்கின்றன!
  5. உடல் என்றுமே தனக்கு ஒவ்வாததை வெளியேத் தள்ளி விடுகிறது – தூவாரங்கள் மூலம் அவை நடந்து கொண்டே இருக்கின்றன. ஊழல்கள் அகலுகின்றன!
  6. குடும்பம், சமூகம், ஊர், நகரம், நாடு..முதலியனற்றிலும் இருக்கின்ற ஒவ்வாத ஊழலை, எந்த விதத்தில் இருந்தாலும், நீக்கிவிட வேண்டும்.
  7. நோயாளிகள் சாகிறார்கள், பாலங்கள் விழுகின்றன, மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள், வாகனங்கள் எரிகின்றன இவையெல்லாமும் ஊழல்கள் தான்!
  8. மக்களைப் போலத்தான் ஆள்பவன் இருப்பான் (यथा प्रजा तथा राजा) எனும் போது, யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனஅறிந்து கொள்ளலாம்!
  9. தூய்மை என்று வாயினால் சொன்னால் மட்டும் போதாது, சொல்பவனின் எல்லா துவாரங்களும் தூய்மையாக இருக்க வேண்டும், இல்லை நாறிவிடும்!
  10. அசுத்தங்களில், அக்கிரமங்களில், அதர்மங்களில் அத்வைதம் எடுபடாது, துவைதம், விசிஷ்டாதுவைவதம் என்று தான் செல்ல வேண்டியிருக்கும்!

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2016-17-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது தான் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

[2] மாலைமலர், சட்ட பல்கலைக்கழக ஊழல்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பேராசிரியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு: பிப்ரவரி 02, 2019 13:47 IST

[3] https://www.maalaimalar.com/news/district/2019/02/02134734/1225775/Law-university-scam-HC-asks-staff-to-produce-affidavit.vpf

[4] நக்கீரன், படிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள்! பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்!, மனோசௌந்தர், Published on 13/05/2019 (18:35) | Edited on 13/05/2019 (18:41).

[5] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/16000-students-going-write-examination-without-book-periyar-university

[6] பாலிமர் செய்தி, மதுரை காமராஜர் பல்கலையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க ரூ.3.5 கோடி லஞ்சம் பெற்றதாக புகார், ஆகஸ்ட்.8, 2020, 51:16 மதியம்.

[7] https://www.polimernews.com/dnews/117208

[8] விகடன், துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ், அஸ்வினி.சி, Published:03 Aug 2018 12 PMUpdated:03 Aug 2018 12 PM

[9] https://www.vikatan.com/government-and-politics/politics/132887-ramadoss-about-mother-therasa-university-scam

[10] நக்கீரன், துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம், தோண்டத் தோண்ட ஊழல், மே. 4-6-2022, பக்கம்.30-32.